Jump to content

இலங்­கையில் பாலியல் தொழில் சட்ட ரீதி­யாக்­கப்­ப­டுமா?


Recommended Posts

உலகின் மிகப்ப;ழை;மையான தொழிலாகக் கருதப்படும் பாலியல் தொழில், பல நாடுகளில் சட்ட;ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும், மற்றும் சில நாடுகளில் வரையறுக்கப்பட்ட வகையில் சட்ட ரீதியாக்கப்பட்டுள்ளது. நமது அயல்நாடான இந்தியாவில் இத்தொழில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அதேநேரம், பாலியல் தொழிலுக்கு பெயர் பெற்ற, சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்த்துள்ள மற்றும் அதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்டும் ஆசிய நாடான தாய்லாந்தில் அது சட்ட விரோதமானதாகவே கருதப்படுகிறது.

இலங்கையைப் பொறுத்த வரையில், பாலியல் தொழிலானது சட்டவாக்க கட்டுரை 360(சி) பிரிவின்படி, சட்டவிரோதமான தடை செய்யப்பட்ட தொழிலாகவே கருதப்படுகிறது. இத்தொழில் அயல்நாடுகளில் உள்ளதைவிட இலங்கையில் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கிறது. எனினும் ஏறத்தாழ 40,000 பெண்கள் இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், 30,000ற்கும் மேற்பட்ட பாலியல் வன்முறைகள் பதிவுசெய்யப்படுவதாகவும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

அதேநேரம் ஐக்கியநாடுகள் அபிவிருத்திக்கூட்டம், ஐக்கியநாடுகள் சனத்தொகை நிதியம் என்பன வேறு சில நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய ஆய்வின் பிரகாரம் தயாரித்துள்ள 210 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், சீனா, மியன்மார், கம்போடியா ஆகிய நாடுகளில் பாலியல் தொழிலாளர்கள் பொலிஸ் மற்றும் இராணுவத்தால் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. அநேகமான ஆசிய நாடுகள் பாலியல் தொழிலை தடை செய்துள்ளதால், பாலியல் தொழிலாளர்கள், சட்டத்துக்கு புறம்பான வகையிலும், தலைமறைவாகவுமே இத்தொழிலில் ஈடுபடுவதால், எயிட்ஸ் மற்றும் வேறு பால்வினைத் தொற்றுகளுக்கும் அவர்கள் தள்ளப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் பொதுவாக பாலியல் தொழிலாளர்கள் விபசார விடுதிகள், நடன கிளப்புகள், உடல் பிடிப்பு நிலையங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், உல்லாச விடுதிகள் என்பவற்றை மையமாகக் கொண்டு இயங்குகின்றனர். பின்தங்கிய இடங்களில் சேரிப்புற வீடுகள், விடுதிகள், ஒதுக்குப்புறங்கள் என்பவற்றையும் இவர்கள் தமது தொழிலுக்காகக் பயன்படுத்துகின்றனர்.

வறுமை, ஏமாற்றங்கள், கணவரால் மற்றும் குடும்பத்தால் கைவிடப்பட்ட நிலை போன்ற பல்வேறு காரணங்களால் பெண்கள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டுள்ள போதிலும், வசதி வாய்ப்புகளுக்காகவும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும், உல்லாசத்துக்காகவும், இத்தொழிலில் ஈடுபடும் பெண்களும் உள்ளனர்.

கிராமப்புறங்களிலும், பின்தங்கிய பகுதிகளிலுமிருந்து கொழும்பு போன்ற பெருநகரங்களுக்கு வறுமையின் நிமித்தம் தொழில் தேடி வரும் பெண்களும், தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளால் தமது வறுமையை சமாளிப்பதற்கும், குடும்பத்தை கொண்டு நடத்துவதற்கும் இத்தொழிலில் ஈடுபடுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதேநேரம் metropolitan Cities எனப்படும் கொழும்பு போன்ற பெருநகரங்களில் படித்த, தொழில் செய்யும், வசதியான இளம்பெண்கள் கூட உல்லாசத்துக்காகவும், மேலதிக வருமானத்துக்காவும் இத்தொழிலில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சிக்குரிய உண்மையாகும்.

போர்காலப்பகுதியில் கணவர்மாரை இழந்த பல பெண்கள், தமது குழந்தைகளை காப்பாற்றுவதற்கும் குடும்ப வறுமையை போக்குவதற்கும் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட துரதிஷ்டவசமான நிலையும் பல இடங்களில் இடம்பெற்றிருக்கின்றன. கணவரால் கைவிடப்பட்ட திருமணமான பெண்கள் மாத்திரமன்றி, திருமணமாகாத இளம் பெண்கள் கூட தமது குடும்ப சூழ்நிலைகள், வறுமை காரணமாக இத்தொழிலில் ஈடுபடுகின்றனர்.


1.PNG

 


கணவரை இழந்த பெண்ணொருவர் தனது 6 பிள்ளைகளை பராமரிப்பதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகக் கூறுகிறார். சாதாரண தொழில் மூலம் கிடைக்கும் மாத வருமானத்தில் தனது பிள்ளைகளையும் பராமரித்து, நாளாந்த செலவை ஈடுகட்ட முடியாததால், எவரது உதவிகளும் அற்ற நிலையில் இத்தொழிலில் ஈடுபட தான் நிர்பந்திக்கப்பட்டதாக கூறுகிறார். தம்மிடம் வரும் ஆண்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ள தாம், சமூகத்தில் உள்ள ஏனையவர்களின் கீழ்த்தரமான பார்வைக்கும், இழிசொற்களுக்கும ஆளாகியிருப்பது வேதனைக்குரிய விடயமென்றாலும், குடும்ப சூழ்நிலை காரணமாக தம்மால் இத்தொழிலிருந்து மீண்டு வர முடியாத நிலையில் இருப்பதாகக் கூறுகிறார்.

 


2.PNG

 

அதேபோல தன்னுடைய கணரது வருமானம், பிள்ளைளையும் குடும்பத்தையும் சமாளிக்கப் போதுமாதாக இல்லையாதலால், அவ;ருக்குத் தெரிந்தே இத்;தொ;ழிலில் ஈடுடுதாக 4 பிள்ளைகளின் தாயா;ரான மற்றொரு பெண் கூறுகிறார். மண்வீட்டில் கணவர் மற்;றும் பிள்;ளை;ளுடன் வசிக்கும் இவர், தமக்கு வீடொன்றை பெற்றுத் தருதற்கு யாராவது உதவு;வார்களா எனவும் கோரிக்கை விடுக்;கிறார்.


3.PNG

 

இந்நிலையில் வாய்பேச முடியாத மற்றுமொரு பெண், கணவரது துன்புறுத்தல்களுக்கும், சித்திரவதைகளுக்கும் ஆளான நிலையில், தமது 3 பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக இத்தொழிலில் ஈடுபட்டு வருவதாக, கண்ணீர்மல்க கண்களைத் துடைத்தபடி செய்கை மூலம் காண்பித்தார்.

திருமணமான பெண்கள் மாத்திரமன்றி, தமது காதலரால் ஏமாற்றப்பட்ட அல்லது தொழில் நிமித்தம் அழைத்துச் செல்லப்பட்டு முகவர்களால் ஏமாற்றப்பட்ட அல்லது பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட அல்லது பல்வேறு எதிர்பாராத துர்பாக்கிய சம்பவங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்ட இளம் பெண்கள் கூட செய்வதறியாத நிலையிலும், தமது வாழ்வாதாரத்துக்கான பணத்தை தேடிக்கொள்வதற்காகவும் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
இது இவ்வாறு இருக்கையில், கொழும்பு போன்ற பெருநகரங்களில் படித்த, உயர்ந்த நிறுவனங்களில் தொழில் செய்யும் இளம் பெண்கள் சிலர் கூட, உல்லாசத்துக்காகவும், மேலதிக வருமானத்துக்காகவும், தமது ஆடம்பர வாழ்க்கைக்கான செலவுகளை ஈடுகட்டுவதற்காகவும், ஒரு பொழுதுபோக்கான விடயம் போல இத்தொழிலில் ஈடுபடுகின்றனர். தமது அலுவலக தொழில் நேரம் முடிந்த பின்னரும், வார இறுதி விடுமுறை நாட்களிலும் தமக்கான பெரும் பணக்கார வாடிக்கையாளர்களை தேடிக்கொள்ளும் இவர்கள், நடன கிளப்புகள், சொகுசு ஹோட்டல்கள், நட்சத்திர விடுதிகளில் அவர்களுடன் பொழுதைக் கழிப்பதன் மூலமாக ஆயிரக்கணக்கான ரூபாய்களை மாத்திரமல்ல சிலவேளைகளில் லட்சங்களில் கூட வருமானத்தை பெற்றுக்கொள்கின்றனர். இதனை அவர்கள் தமது சுகபோக வாழ்க்கைக்கும், ஆடம்பரத்துக்கும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இலங்கையில் பாலியல் தொழிலாளர்கள் ஏராளமாக உள்ள நிலையில், கலாசார மற்றும் மத அம்rசங்களின் அடிப்படையில் அவர்கள் கண்டனம் செய்யப்பட்டாலும், அவர்களது இருப்பை யாராலும் மறுக்க முடியாது.

இலங்கையில் பாலியல் தொழில் சட்டவிரோதமான நடவடிக்கையாக கருதப்படும் நிலையில், கைது செய்யப்படும் பாலியல் தொழிலாளர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதோடு சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள். எனவே இத்தொழிலை சட்ட ரீதியாக்குமாறும், பாலியல் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி, இத்தொழிலுக்கு அங்கீகாரத்தை வழங்குமாறும், சில நிறுவனங்களால் பல்வேறு கோரிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும், இலங்கையில் பாலியல் தொழில் இது வரை அங்கீகரிக்கப்படவில்லை என்பதே உண்மை.
பாலியல் தொழில் காரணமாக, எயிட்ஸ் மற்றும் பால்வினைத் தொற்றுகள் பரவி வரும் நிலையில் அது சமூகத்தில் அபாயகரமான விளைவுகளை யும் ஏற்படுத்தியுள்ளது.

அதுமாத்திரமன்றி ஆசிய கண்டத்தில், தொன்மையான கலாசார பாரம்பரியத்தைத் கொண்ட இலங்கையில் எமது மதம், ஒழுக்கநெறிகள், கட்டுக்கோப்புகளுக்கு அமைய அது கலாசார சீரழிவுகளையும், எதிர்கால இளம் சந்ததியினர் மத்தியில் பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தும்.

இந்நிலையில் பாலியல் தொழில் இலங்கையில் சட்டரீதியாக்கப்படுமா, மற்றும் பாலியல் தொழிலாளர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுமா என்பது வினா மாத்திரமல்ல, விவாதத்திற் குரிய ஒரு விடயமுமாகும்.

கௌரி பிருந்தன்

https://www.virakesari.lk/article/74023

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.