Jump to content

இராணுவ சோதனைச் சாவடிகள் இராணுவ மயமாக்கலின் ஆரம்பமாக இருக்கக் கூடாது: சித்தார்த்தன்


Recommended Posts

இராணுவ சோதனைச் சாவடிகள் இராணுவ மயமாக்கலின் ஆரம்பமாக இருக்கக் கூடாது: சித்தார்த்தன்

 

by : Dhackshala

புதிய அரசாங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ சோதனைச் சாவடிகள் இராணுவ மயமாக்கலின் ஆரம்பமாக இருந்தால், அது பாதகமான விடயமாகவே இருக்கும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “புதிய அரசாங்கத்தில் நாம் எதிர்பார்த்ததை போலவே பல்வேறு செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. தேர்தலை மையப்படுத்தியோ அல்லது தேர்தலிற்கு பின்னரோ மாற்றங்கள் ஏற்படலாம். ஜனாதிபதி கோட்டாவை பொறுத்தவரை மாற்றங்கள் ஏற்படும் என்று கருதாவிட்டாலும் மாற்றம் வரவேண்டும் என்று விரும்புகிறோம்.

தற்போது குற்றச்செயல்கள் கூடுதலாக இருக்கின்றன. எனவே இங்கு உருவாக்கப்பட்டுள்ள இராணுவ சோதனைச் சாவடிகள் மற்றும் நடவடிக்கைகள் தேவை என்ற அபிப்பிராயம் சில மக்கள் மத்தியிலே இருக்கிறது.

பொதுவாக இது ஒரு இராணுவ மயமாக்கலின் ஆரம்பமாக இருந்தால், அது பாதகமான விடயமாகவே இருக்கும். மக்களின் பாதுகாப்பு என்பது முக்கிய விடயம். அது பொலிஸ் துறையின் கண்காணிப்பாக இருந்தால் சிறப்பாக இருக்கும்” என மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/இராணுவ-சோதனைச்-சாவடிகள்/

Link to comment
Share on other sites

18 minutes ago, nunavilan said:

இராணுவ சோதனைச் சாவடிகள் இராணுவ மயமாக்கலின் ஆரம்பமாக இருக்கக் கூடாது: சித்தார்த்தன்

அதை எதிர்க்க வேண்டிய நீங்கள், இலக்கிய மன்றப் பேச்சாளர் போல உப்புடி அறிக்கை விட்டா எப்பிடி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குற்றவாளி ஆட்சியிலிருந்தால் குற்றங்கள் அதிகரிக்காமல் வேறு எதை எதிர்பார்த்தீர்கள்? என்று சொன்னீர்கள் என்றால் நாங்களும் உங்களுக்கு குத்துவோமில்ல.  

Link to comment
Share on other sites

அங்கு நிறைய கஞ்சா கடத்தல் நடக்குதாம்। அதை பிடிக்கத்தான் சோதனை முகாம்கள் அமைத்ததாக ராணுவம் கூறுகிறது। நான் கூறவில்லை। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்போர் அழிக்கப்பட்டு, உவையளின்ர முகாம்கள் வந்த பிறகுதான் உந்தக் கண்ணறாவியளின்ர பெயருகளை கேள்விப்படுகிறோம். தமிழினத்தின் இருப்பை அழிப்பதற்கு, எதிரி பாவிக்கும் ஒரு ஆயுதம். அதை தெரியாமல் எங்கட சிலதும் வாளோடும், கஞ்சாவோடும் அலையுது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாட்சி இருக்கேக்கை ஆமி அது இது ஒண்டுமில்லைத்தானே எண்டு சொல்லி தாங்கள் கெட்டிக்காரர் எண்டு நிலை நிறுத்துவினம்.
தமிழர்ரை பிரச்சனை வேறை விதமாய் பரிமாணம் அடையப்போகுது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.