Jump to content

அடுத்த தேர்தலில் கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை!


Recommended Posts

அடுத்த தேர்தலில் கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை!

 

      by : Jeyachandran Vithushan

jail-prison.jpg

சிறையில் உள்ள கைதிகளுக்கும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை வழங்குமாறு தேர்தல் கண்காணிப்பாளர்கள் கோரியுள்ளனர்.

சுதந்திர மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான அமைப்பான கஃபே மற்றும் மனித உரிமைகள் மத்திய நிலையம் ஆகியன இந்த கோரிக்கையினை எழுத்து மூலமான கடிதத்தை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ள.

ஒருவர் சிறையில் இருப்பதால் அவருக்குள்ள வாக்களிக்கும் உரிமையை பறிக்க முடியாது என்று தேர்தல் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உலகில் உள்ள பல நாடுகளில், கைதிகளுக்கும் தேர்தலில் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இதேபோன்ற முறையை இலங்கையிலும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் தற்போது இலங்கையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் உள்ளனர் என்றும் அவர்களில் பலருக்கு வாக்குரிமை உள்ளதாகவும் குறித்த இரு அமைப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன.

http://athavannews.com/voting-rights-sought-for-prisoners-at-next-election/

Link to comment
Share on other sites

22 minutes ago, nunavilan said:

சிறையில் உள்ள கைதிகளுக்கும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை வழங்குமாறு தேர்தல் கண்காணிப்பாளர்கள் கோரியுள்ளனர்.

இதுவரைக்கும் கொடுக்காதது அக்கிரமம்

அரசில் உள்ளவர்கள் சார்பா கள்ளவாக்கு போட வசதியான இடம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் கையிக்கை இருந்துகொண்டு அவர்களுக்கு எதிராய் வாக்களிக்க முடியுமோ? கைதிகளின்  உயிரே ஆட்சியாளர் கையிற்தானே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.