Jump to content

வவுனியாவில் காணாமல் போன உறவுகளினால் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி


Recommended Posts

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.


DSC_2404_1.JPG

 

காலை 11 மணியளவில் வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கு நீதிகோரி ஆரம்பமாகிய இப்பேரணி பஜார் வீதியின் ஊடாக வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியை அடைந்து மீண்டும் பழைய பஸ் நிலையத்தை வந்தடைந்திருந்தது.


DSC_2408.JPG

இதன் போது எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், ஜனாதிபதியின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம், வேண்டாம் வேண்டாம் ஓ.எம்.பி வேண்டாம் போன்ற கோசங்களை எழுப்பியவாறும், இலங்கையில் ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு நீதியா, கணவன்மாரை கையளித்த சின்னஞ்சிறு உறவுகளை எண்ணிப்பார் என்ற பதாதைகளையும் தாங்கியவாறு இப்பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.


DSC_2402.JPG

 

இதன் போது வன்னிப்பாராளுமன்ற சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், தமிழ் தேசிய முன்னணியின் முக்கியஸ்தர் சுகாஸ், மற்றும் ஐந்து மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


DSC_2390_1.JPG

https://www.virakesari.lk/article/74524

 

 

Link to comment
Share on other sites

இவர்களது தளராத முயற்சி வெற்றிபெற வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.