Jump to content

பணியிடங்களில் மனித சக்தியை குறைக்கும் "Robotic Process Automation".. ஒரு பார்வை


Recommended Posts

தொழில்துறை உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் மனித சக்தியை குறைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் Robotic Process Automation பற்றி பார்ப்போம்.
Robotic Process Automation என்பது மென்பொருள் அல்லது செயற்கை நுண்ணறிவு தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்டது. இது வணிக செயல்முறை ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தின் ஒரு வடிவம்.


மனிதன் டு மெஷின்:
சுருக்கமாக சொன்னால் உதாரணத்திற்கு 10 பேர் செய்த வேலையே, இந்த தொழில்நுட்பம் மூலம் மெஷினை செய்ய வைக்கலாம். இந்த தொழில்நுட்பம் சரியாக இயங்குகிறதா என்பதை கண்காணிக்க குறைவான நபர்கள் பணியமர்த்தப்பட்டால் போதுமானது.


ரோபோக்கள் இல்லை:

Robotic Process Automation என்பது நாம் பணியாளர்களை கொண்டு கையால் செய்ய வைக்கும் வேலைகளை, ஆட்டோமேட்டட் முறையில் செய்வது. இந்த தொழில்நுட்பத்தில் Robotic என்ற வார்த்தையை பார்த்து மனிதர்களுக்கு பதில் ரோபோக்கள் வேலை செய்யுமோ என்று நினைத்து கொள்ள வேண்டாம். Robotic என்ற வார்த்தைக்கு executor என பொருள் கொள்ளலாம். அதாவது கட்டளையை நிறைவேற்றுபவர்.

மென்பொருள்:
இது ஒரு வகையான மென்பொருள் தான். இதை வைத்து மேனுவலாக செய்யும் வேலைகளை எப்படி ஆட்டோமேட் செய்கிறார்கள் என்பதை பற்றி பார்ப்போம். சிறிய அளவிலான மாற்றம் கூட இல்லாமல் வழக்கமாக செய்யும் பணிகளை இதன் மூலம் ஆட்டோமேட் செய்யலாம்.

 

டிக்கெட் மெஷின்:
உதாரணத்திற்கு ரயில் நிலையங்களை எடுத்து கொள்ளுங்கள். முன்பெல்லாம் Counter-க்கு சென்று வரிசையில் நின்று டிக்கெட்டுகளை எடுப்போம். ஆனால் இப்போது பல ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள டிக்கெட் மெஷின்களில் உரிய பணத்தை உள்ளே செலுத்திவிட்டால், அதுவே டிக்கெட்டுகளை நமக்கு தந்து விடுகிறது.


பணம் எடுக்க, போட..:
அதே போல சில வங்கிகளில் பணம் எடுப்பது மற்றும் டெபாசிட் செய்வது என முக்கிய இரு வேலைகளுக்கும் மெஷின்கள் வைக்கப்பட்டு விட்டன. பணம் எடுப்பதற்கு ஏடிஎம் மெஷின்களும், பணம் போடுவதற்கு கேஷ் டெபாசிட் மெஷின்களும் உள்ளது. முன்பு இந்த வேலைகளை கவனிக்க இருந்த மனித சக்தி இப்போது இல்லை.

 

தவறுக்கு வாய்ப்பு குறைவு:
அதே போல் மனிதர்கள் செய்யும் வேலையில் தவறுகள் நிகழ்வது இயல்பு. ஆனால் Robotic Process Automation-ல் பெரும்பாலும் தவறுகள் நிகழாது. தவறுகள் நிகழும் வாய்ப்பும் குறைவு. சிந்திக்க தேவை இல்லாத திரும்ப, திரும்ப செய்யும் வகையிலான வேலைகளை Automation செய்யலாம்.


வல்லுநர்கள் முக்கிய பங்கு:
சில நிறுவனங்களில் தெளிவாக வரையறுக்கப்பட்ட செயல்முறைகள் இல்லாத காரணத்தால் சமயத்தில் RPA தோல்வியடைய வாய்ப்பு ஏற்படுகிறது. அந்த தருணத்தில் பணிகள் மற்றும் செயல்முறைகளை அடையாளம் காண, அதற்கு முன்னுரிமை அளிக்க வணிக செயல்முறை வல்லுநர்கள் உதவி முக்கிய பங்கு வகிப்பார்கள்.

 

பிரபலமான மூன்று:
Robotic Process Automation-ஐ பொறுத்தவரை பல மென்பொருள் கருவிகள் இருந்தாலும் Blue Prism, UiPath, Automation Anywhere இந்த மூன்றே மிக பிரபலமானவை மற்றும் அதிகம் பயன்படுத்த கூடியவையாக உள்ளன.

 

https://www.polimernews.com/dnews/98739/பணியிடங்களில்-மனித-சக்தியைகுறைக்கும்-"Robotic-Process-Automation"..-ஒருபார்வை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.