Jump to content

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது உறுதி – கருணா


Recommended Posts

Karuna-Amman.jpg

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது உறுதி என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

குறித்த கட்சியின் கலாசார பிரிவின் ஏற்பாட்டில் பொங்கல் விழா மட்டக்களப்பு களுதாவளை ஈஸ்வரன் ஆலய முன்றலில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

இதையடுத்து, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்துவது குறித்து நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அனைத்துக் கட்சிக் கூட்டங்களின் போது கலந்துரையாடியதாக தெரிவித்தமை தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பில் பல விடயங்கள் உரையாடப்பட்டன. அதிலே கல்முனை விடயம் தொடர்பாக நான் அவரிடம் எடுத்துக் கூறியிருந்தேன்.

அதனைத் தரமுயர்த்தித் தருவதாக மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதி அளித்திருந்தார். அவர் அளித்த வாக்குறுதிகளை அனைத்துக் கட்சிகள் மத்தியில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார் .

இந்த விடயம் தொடர்பாக இன்று காலை பொதுநிர்வாக உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிடம் பிரதமரின் தகவலைக் கொடுத்து அதற்கான வேலைத் திட்டங்களை ஆரம்பிக்குமாறு கேட்டுள்ளேன். எனவே இந்த வேலைத் திட்டங்கள் அனைத்தும் விரைவாக நடைபெறும் என்பதை தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/கல்முனை-வடக்கு-தமிழ்-பிர-2/

Link to comment
Share on other sites

14 hours ago, Rajesh said:

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது உறுதி என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இந்த நல்ல விஷயத்தையாவது கருணா சாதித்து காட்டட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே ஆகட்டும் அம்மான் 

Link to comment
Share on other sites

ரஜனி அரசியலுக்கு வந்து தமிழ் நாட்டின் முதலமைச்சரானாலும் ... இந்த் கல்முனை தொகுதி தரமுயர்த்தல் மட்டும் நடவாது.....சும்மா ஓரமாயிருந்து கத்தி விட்டு போக வேண்டியது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் வெல்ல வேண்டும் கட்டாய தேவை. சாவா வாழ்வா? போராட்டம் இவருக்கும் சிங்களவனுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கின் உதயம் மூலம் கிழக்கை சிங்கப்பூராக்கிட்டு.. இப்ப கல்முனைக்கு திரும்பி விட்டார்.. சிங்களத்திகள் கட்டிப்பிடி கிரான் குத்தியன் முரளிதரன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.