Jump to content

இது உண்மையாக இருக்குமா????


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சங்கத் தமிழ் இலக்கியத்தில் இப்படி ஒரு பாட்டு வருகிறதா ??
ஒட்டக்கூத்தர் பாடலை ஒத்ததாக இருந்தாலும் இப்பாடலில் வரும் ராசா என்பது அக்காலத்தில் பயன்பாட்டில் இல்லை என்கிறார் பாஸ்கரன் ரங்கநாதன் என்னும் தமிழறிஞர்.

"தட்டையான் மூக்குடையான்
வெட்டுவான் விடமாவான்
கட்டுடல் மேனியவன்
காயமற்று வீற்றிருக்க
மற்றவன் கொற்றவன்
வித்துடல் ஆகி நிற்க
சாசில்லை மேசில்லை
கோரானான் வை ராசா
என் செய்வாய் என் ராசா?"

இதன் அர்த்தம்

"தட்டை மூக்குடையவன்(சீனன்) விஷமுள்ள பாம்பினை வெட்டுவான். அப்போது நோய் எதிர்ப்பு அதிகமுள்ள கட்டுடல் கொண்டவர்களைத் தவிர ஏனையோர் எல்லோரும் இறந்து கிடப்பார்கள். அது சார்ஸ் (SAR) வைரசும் இல்லை, மேர்ஸ் (MERS) வைரசும் இல்லை, ஆனால் அது கொரோனா வைரசே. அப்போது நீ என்ன செய்ய முடியும் மன்னனே?"

இப்போது பரவும் நோயை ரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரேயே கண்டுபிடித்து எச்சரித்த நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.

*இத்தகவலின் உண்மைத்தன்மையை, ஆய்வாளர்கள் யாரேனும் விளக்கவும்* நன்றி
நன்றி sriskantharaja

இது உண்மையான தகவலாகக் கூட இருக்கலாம். ஏனெனில் கொரோனா வைரஸ் புதிதாகத் தோன்றியது என்று யாரும் கூறவில்லையே.😀

 

 

இதை வற்சப் குழுமத்தில் சிறீஸ்கந்தராஜா என்பவர் பதிந்திருந்தார்.

Link to comment
Share on other sites

இந்த செய்தியைத்தான் சில நிமிடங்களுக்கு முன்பு திண்ணையில் பதிந்திருந்தேன் சுமே அக்கா.

எனக்கும் அதே கேள்விதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தமிழினி said:

இந்த செய்தியைத்தான் சில நிமிடங்களுக்கு முன்பு திண்ணையில் பதிந்திருந்தேன் சுமே அக்கா.

எனக்கும் அதே கேள்விதான்.

நான் கவனிக்கவில்லை தமிழினி. வற்சப் குழுமத்தில் வந்தது. எனது முகநூலிலும் பதிந்துவிட்டுப் பார்க்கிறேன்  இது பலரிடம் பரவியிருக்கு.😀

Link to comment
Share on other sites

2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

"தட்டையான் மூக்குடையான்
வெட்டுவான் விடமாவான்
கட்டுடல் மேனியவன்
காயமற்று வீற்றிருக்க
மற்றவன் கொற்றவன்
வித்துடல் ஆகி நிற்க
சாசில்லை மேசில்லை
கோரானான் வை ராசா
என் செய்வாய் என் ராசா?"

இதன் அர்த்தம்

"தட்டை மூக்குடையவன்(சீனன்) விஷமுள்ள பாம்பினை வெட்டுவான். அப்போது நோய் எதிர்ப்பு அதிகமுள்ள கட்டுடல் கொண்டவர்களைத் தவிர ஏனையோர் எல்லோரும் இறந்து கிடப்பார்கள். அது சார்ஸ் (SAR) வைரசும் இல்லை, மேர்ஸ் (MERS) வைரசும் இல்லை, ஆனால் அது கொரோனா வைரசே. அப்போது நீ என்ன செய்ய முடியும் மன்னனே?"

இப்போது பரவும் நோயை ரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரேயே கண்டுபிடித்து எச்சரித்த நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.

இந்த உலகத்தில், பிரபஞ்சத்தில் இல்லாத ஒன்றை யாருமே கண்டதுமில்லை, கண்டுபிடித்ததும் இல்லை. இருப்பதை அறியாதவர்களுக்கு அறியத்தந்த ஆற்றல் உடையவர்களுள் தமிழர்களும் உள்ளனர் என்பதை உறுதிப்படுத்த இப்பாடலும் ஒரு சாட்சியாக உள்ளது.  

பி.கு

இந்த வைரசு ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வெளிப்பட்டதாக இருந்திருக்குமேயானால் அது இத்தனை விரைவாக உலகில் பரவி மக்களை நடுங்கவைத்திராது. அடக்கி வாசிக்கப்பட்டிருக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Paanch said:

இந்த உலகத்தில், பிரபஞ்சத்தில் இல்லாத ஒன்றை யாருமே கண்டதுமில்லை, கண்டுபிடித்ததும் இல்லை. இருப்பதை அறியாதவர்களுக்கு அறியத்தந்த ஆற்றல் உடையவர்களுள் தமிழர்களும் உள்ளனர் என்பதை உறுதிப்படுத்த இப்பாடலும் ஒரு சாட்சியாக உள்ளது.  

பி.கு

இந்த வைரசு ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வெளிப்பட்டதாக இருந்திருக்குமேயானால் அது இத்தனை விரைவாக உலகில் பரவி மக்களை நடுங்கவைத்திராது. அடக்கி வாசிக்கப்பட்டிருக்கும்.

சரியாக... சொன்னீர்கள், பாஞ்ச் அண்ணை.
அதற்கு... ஒரு மூன்றாம் நபர், சீனாவிலிருந்தே... வந்திருக்கின்றா என்பதை,
கீழே...உள்ள இணைப்பில்,  சந்தேகிக்கின்றார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொட்டையான், முதல்மொழிவன்

கெட்டான், கெடுகேடு வாயால்

சுட்டான் வடை.

கொடுங்கோலான் வை அரசை விட

கொடியான் முதல் மொழிவன் கதை.

இதுவும் ஒரு சங்கபாடல்தான். 

இதன் அர்த்தம்

தமிழர் முதல் மொழிகளில் ஒன்றாகிய தமிழை பேசுபவர்களாய் இருந்தாலும், நாடற்ற மொட்டை பயல்களாய் இருப்பார்கள். ஏனெனில், அவர்கள் கேடு கெட்டு போனதுக்கு காரணமே வாயால் வடைசுடும் பழக்கமே.

கொடுக்கோலன் போன்ற வைரசை ( வை அரசு, என்றால் பேசும் அரசு எனப் பிழையாக பொருள் கொள்ள கூடாது - பென்சிலினிக்கு முதலே நுணுயிர் கொல்லி பற்றி பாடியவர்கள் நாம் -காலக்கொடுமை 🤪) விட கொடியது முதல் மொழி பேசும் தமிழர்கள் விடும் கதை (புருடா) 😂

 

Link to comment
Share on other sites

45 minutes ago, goshan_che said:

மொட்டையான், முதல்மொழிவன்

கெட்டான், கெடுகேடு வாயால்

சுட்டான் வடை.

கொடுங்கோலான் வை அரசை விட

கொடியான் முதல் மொழிவன் கதை.

இதுவும் ஒரு சங்கபாடல்தான். 

இதன் அர்த்தம்

தமிழர் முதல் மொழிகளில் ஒன்றாகிய தமிழை பேசுபவர்களாய் இருந்தாலும், நாடற்ற மொட்டை பயல்களாய் இருப்பார்கள். ஏனெனில், அவர்கள் கேடு கெட்டு போனதுக்கு காரணமே வாயால் வடைசுடும் பழக்கமே.

கொடுக்கோலன் போன்ற வைரசை ( வை அரசு, என்றால் பேசும் அரசு எனப் பிழையாக பொருள் கொள்ள கூடாது - பென்சிலினிக்கு முதலே நுணுயிர் கொல்லி பற்றி பாடியவர்கள் நாம் -காலக்கொடுமை 🤪) விட கொடியது முதல் மொழி பேசும் தமிழர்கள் விடும் கதை (புருடா) 😂

 

இந்த பதிவை பார்த்த உடன் என்ன எழுதலாம் என்று  யோசித்து கொண்டு இருக்கும் போது எனது எண்ணங்களை கவிதையாக வடித்த தங்களுகு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சங்கத் தமிழ் இலக்கியத்தில் இப்படி ஒரு பாட்டு வருகிறதா ??
ஒட்டக்கூத்தர் பாடலை ஒத்ததாக இருந்தாலும் இப்பாடலில் வரும் ராசா என்பது அக்காலத்தில் பயன்பாட்டில் இல்லை என்கிறார் பாஸ்கரன் ரங்கநாதன் என்னும் தமிழறிஞர்.

"தட்டையான் மூக்குடையான்
வெட்டுவான் விடமாவான்
கட்டுடல் மேனியவன்
காயமற்று வீற்றிருக்க
மற்றவன் கொற்றவன்
வித்துடல் ஆகி நிற்க
சாசில்லை மேசில்லை
கோரானான் வை ராசா
என் செய்வாய் என் ராசா?"

இதன் அர்த்தம்

"தட்டை மூக்குடையவன்(சீனன்) விஷமுள்ள பாம்பினை வெட்டுவான். அப்போது நோய் எதிர்ப்பு அதிகமுள்ள கட்டுடல் கொண்டவர்களைத் தவிர ஏனையோர் எல்லோரும் இறந்து கிடப்பார்கள். அது சார்ஸ் (SAR) வைரசும் இல்லை, மேர்ஸ் (MERS) வைரசும் இல்லை, ஆனால் அது கொரோனா வைரசே. அப்போது நீ என்ன செய்ய முடியும் மன்னனே?"

இப்போது பரவும் நோயை ரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரேயே கண்டுபிடித்து எச்சரித்த நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.

*இத்தகவலின் உண்மைத்தன்மையை, ஆய்வாளர்கள் யாரேனும் விளக்கவும்* நன்றி
நன்றி sriskantharaja

இது உண்மையான தகவலாகக் கூட இருக்கலாம். ஏனெனில் கொரோனா வைரஸ் புதிதாகத் தோன்றியது என்று யாரும் கூறவில்லையே.😀

 

 

இதை வற்சப் குழுமத்தில் சிறீஸ்கந்தராஜா என்பவர் பதிந்திருந்தார்.

இதனை ஒரு கிழமைக்கு முன் மு.பு  பார்த்தேன்...நான் நினைக்கிறேன் இது  இலங்கையை சேர்ந்த டொக்டர் ஒருவரது சொந்த ஆக்கம் என்று😂 ...யாழிலும் அவரை பின் தொடர்பவர்கள் சிலர் இருக்கிறார்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"இராசா""இராசாத்தி" என்பது காலம் காலமாக பழக்கத்தில் இருந்து வரும் சொல்தான். நாட்டார் பாடல்கள், கிராமக்கூத்துகள்,தாலாட்டுகள் போன்ற எல்லாவற்றிலும் அது சகஜமாக இடம்பெறும்......!    😁

அரிச்சந்திர மகாராசா, விக்கிரமாதித்த மகாராசா,காத்தவராசன் மகாராசா போன்றவை.......! 

ஒப்பாரிகளில் கூட புருஷன் செத்தாலும் சரி, புள்ள செத்தாலும் சரி, அப்பன் செத்தாலும் சரி "என்ன  பெத்த ராசா" என்றுதான் தொடங்குவார்கள்......!

அதுக்காக ராசாவில்  வரும்  "ரா" என்பதும்  "சா" என்பதும்... ச ரி க ம ப த நி  ச...  சுர வரிசையில் வரும் ரி மற்றும் ச வரிசையில் வருவதால் இது சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததாகவும் இருக்கலாம் ஆராய்ச்சி செய்தால் அதுக்கு நான் பொறுப்பல்ல..... அப்புறம் எனக்கு ஜுரம் வந்திடும்......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

"இராசா""இராசாத்தி" என்பது காலம் காலமாக பழக்கத்தில் இருந்து வரும் சொல்தான். நாட்டார் பாடல்கள், கிராமக்கூத்துகள்,தாலாட்டுகள் போன்ற எல்லாவற்றிலும் அது சகஜமாக இடம்பெறும்......!    😁

அரிச்சந்திர மகாராசா, விக்கிரமாதித்த மகாராசா,காத்தவராசன் மகாராசா போன்றவை.......! 

ஒப்பாரிகளில் கூட புருஷன் செத்தாலும் சரி, புள்ள செத்தாலும் சரி, அப்பன் செத்தாலும் சரி "என்ன  பெத்த ராசா" என்றுதான் தொடங்குவார்கள்......!

அதுக்காக ராசாவில்  வரும்  "ரா" என்பதும்  "சா" என்பதும்... ச ரி க ம ப த நி  ச...  சுர வரிசையில் வரும் ரி மற்றும் ச வரிசையில் வருவதால் இது சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததாகவும் இருக்கலாம் ஆராய்ச்சி செய்தால் அதுக்கு நான் பொறுப்பல்ல..... அப்புறம் எனக்கு ஜுரம் வந்திடும்......!

இதுக்காக சுர வரிசை வரை போக வேண்டியதில்லை அண்ணா. 

ராஜ்ஜியம் என்ற சொல், ராஜ்புத் வம்சம், ராஜதர்மா, எல்லாமே ராஜ என்பது வடமொழி சொல்லாகுமோ என்ற ஐயத்தையே ஏற்படுத்துகிறது.

விக்சனரியை கேட்டால் இது, ஹிந்தி, ரஸ்ய, ஸ்லாவிக் மொழிச் சொல் என்கிறது

https://en.m.wiktionary.org/wiki/raja

திருக்குறள், நாலடியார் எல்லாம் அரசு, அரசன், கோன் என்ற பதங்களை பயன்படுத்துகிறனவே ஒழிய ராஜா, ராஜ்ஜியம் என்றில்லையே?

நாட்டார்பாடல்களில் மொழிக்கலப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். களை புடுங்க கொஞ்சம் தெலுங்கு உழைப்பாளிகள் வந்து சேர்ந்தாலே, எதுகை மோனைக்காக அவர்கள் சொற்களும் பாடலில் சேரக்கூடும்.

வாய்வழிப் பாடல்களான நாட்டார் பாடலில் தேடுவதை விட, எமது பண்டைய இலக்கியங்களில் ராஜா எனும் சொல் உளதா என பார்ப்பதே பொருத்தமானதாகும்.

Link to comment
Share on other sites

முட்டாள்தனமான நம்பிக்கை உள்ளவர்களை வைத்துப் பிழைப்பவர்கள் இப்படியும் முகநூல் வழியாக பரப்புரை செய்கின்றனர். 😀

Quote

சீனாவில் நாகப்பாம்பு சாப்பிட்டவரிலிருந்துதான் இந்த வைரசே பரவியது. இதை அகத்தியர் கூட ஒலைச்சுவடிகளில் சித்தர் பாடலாக எழுதி வைத்துள்ளார்.

“சர்ப்பமுண்டு சர்வநோயுண்டு
கர்ப்பமறியா கன்னியும்
வாயு பகவான் பகைகொண்டு
பித்தம் சித்தம் சிதைகொள்வாள்”

இதன் அர்த்தம் சர்ப்பம் சாப்பிட்டால் உலகத்திலிருக்கும் நோயெல்லாம் (சர்வ) ஒன்றுசேர்ந்து தாக்கியதுபோல கர்ப்பமே தரிக்காத இளவயதினரைக்கூட தாக்கி நுரையீரல் (வாயு) பாதிக்கப்பட்டு, பிறகு பித்தம் அதாவது கல்லீரல் பாதிக்கப்பட்டு பிறகு மூளை (சித்தம்) பாதிக்கப்பட்டு ( இப்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இறப்பவர்களும் இறுதியாக வலிப்பு வந்து இறப்பதை வீடியோவில் பார்க்கலாம்) சிதை கொள்வாள். அதாவது இறப்பார்கள்.

கொரோனா வைரஸ் என்ற பெயரே துரோணர், குரோனர் என்பதிலிருந்துதான் வந்ததென்று எத்தனை பேருக்குத் தெரியும்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

இதுக்காக சுர வரிசை வரை போக வேண்டியதில்லை அண்ணா. 😃😂

ராஜ்ஜியம் என்ற சொல், ராஜ்புத் வம்சம், ராஜதர்மா, எல்லாமே ராஜ என்பது வடமொழி சொல்லாகுமோ என்ற ஐயத்தையே ஏற்படுத்துகிறது.

விக்சனரியை கேட்டால் இது, ஹிந்தி, ரஸ்ய, ஸ்லாவிக் மொழிச் சொல் என்கிறது

https://en.m.wiktionary.org/wiki/raja

திருக்குறள், நாலடியார் எல்லாம் அரசு, அரசன், கோன் என்ற பதங்களை பயன்படுத்துகிறனவே ஒழிய ராஜா, ராஜ்ஜியம் என்றில்லையே?

நாட்டார்பாடல்களில் மொழிக்கலப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். களை புடுங்க கொஞ்சம் தெலுங்கு உழைப்பாளிகள் வந்து சேர்ந்தாலே, எதுகை மோனைக்காக அவர்கள் சொற்களும் பாடலில் சேரக்கூடும்.

வாய்வழிப் பாடல்களான நாட்டார் பாடலில் தேடுவதை விட, எமது பண்டைய இலக்கியங்களில் ராஜா எனும் சொல் உளதா என பார்ப்பதே பொருத்தமானதாகும்.

ராஜ்ஜியம் என்ற சொல், ராஜ்புத் வம்சம், ராஜதர்மா,

மேலே உள்ள சொற்கள் தமிழ்ச் சொற்கள் அல்ல. வடமொழியா அல்லது வேறா என்று தெரியவில்லை.  சுவி அண்ணா கூறுவது என்னவென்றால் புலவர்கள் பாடிய பாடல்களுக்கும் நாட்டார் பாடல்களுக்கும் பாரிய வேறுபாடு உண்டு என்பதுதான்.

பேச்சுவழக்கில் வேற்றுமொழிச் சொல் நீங்கள் கூறுவதுபோல் தமிழுடன் கலந்திருக்கலாம்.

அதாவது ராசா 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

இந்த பதிவை பார்த்த உடன் என்ன எழுதலாம் என்று  யோசித்து கொண்டு இருக்கும் போது எனது எண்ணங்களை கவிதையாக வடித்த தங்களுகு நன்றி

விட்டா மானே, தேனே எல்லாம் இடைல போடச்சொல்லுவியள் போல 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, இணையவன் said:

முட்டாள்தனமான நம்பிக்கை உள்ளவர்களை வைத்துப் பிழைப்பவர்கள் இப்படியும் முகநூல் வழியாக பரப்புரை செய்கின்றனர். 😀

எனது முகநூல் நண்பன் அப்துல் முபாரக்கை வச்சி செய்வான் அவன் தனது ஐடியில் கொழுத்தி போட்டதுதான் இது  கனபேர் பகிர்ந்து இதை உன்மையாக்கி கொன்டு இருக்கிறார்கள்  இணையவன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைரஸ்  (virus) எனும் சொல் லத்தீன்  இல் நேரடியாக middle ஆங்கிலச் இற்கு வந்ததாக, virus என்ற சொல்லின் சொல்லிணக்கணம் இருக்கிறது.

லத்தீன் உள்ள வைரஸ் எனும் சொல்லின் அர்த்தம் பாணித்த்தன்மையான விடம் (slimy liquid poison or seerum of  poison), முக்கியமாக பாம்பின் விடத்தையே லத்தீன் virus என்று பெயரிட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எனது முகநூல் நண்பன் அப்துல் முபாரக்கை வச்சி செய்வான் அவன் தனது ஐடியில் கொழுத்தி போட்டதுதான் இது  கனபேர் பகிர்ந்து இதை உன்மையாக்கி கொன்டு இருக்கிறார்கள்  இணையவன் 

உண்மையாய் உங்கட நண்பரா எழுதி இருந்தார்? ...பாராட்டுக்கள் அவருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எனது முகநூல் நண்பன் அப்துல் முபாரக்கை வச்சி செய்வான் அவன் தனது ஐடியில் கொழுத்தி போட்டதுதான் இது  கனபேர் பகிர்ந்து இதை உன்மையாக்கி கொன்டு இருக்கிறார்கள்  இணையவன் 

சட்டப்படி😂

அப்துல் முபாரக் செம்ம என்டெடைனர் - அவரின் பதிவுகளையும் பின்னோட்டங்களையும் பார்த்தாலே பாதி வயசு குறைஞ்சிடும்.

எமது மக்கள் எவ்வளவு அப்பிராணிகள், ஒரு வகையில் யோசித்தால் பாவமாயும் இருக்கிறது.

அறியாமை + அளவு கடந்த இன/மொழிப்பாசம் - எதை வேண்டுமானாலும் சொல்லி நம்பவைக்காலாம் என்றாக்குகிறது.

ஆனால் இந்த விடயங்களில்தான் இப்படி - ஒரு நல்ல விடயத்துக்கு 10 ரூபா கேட்டால், ஆயிரம் குறுக்கு கேள்வி கேப்பார்கள் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kadancha said:

வைரஸ்  (virus) எனும் சொல் லத்தீன்  இல் நேரடியாக middle ஆங்கிலச் இற்கு வந்ததாக, virus என்ற சொல்லின் சொல்லிணக்கணம் இருக்கிறது.

லத்தீன் உள்ள வைரஸ் எனும் சொல்லின் அர்த்தம் பாணித்த்தன்மையான விடம் (slimy liquid poison or seerum of  poison), முக்கியமாக பாம்பின் விடத்தையே லத்தீன் virus என்று பெயரிட்டுள்ளது.

venum என்றும் சொல்வார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரதி said:

உண்மையாய் உங்கட நண்பரா எழுதி இருந்தார்? ...பாராட்டுக்கள் அவருக்கு

பல விடயங்களை கற்பனைகளாக்கி எழுதுவான் அவன் அதிகம் எழுதுவது அப்துல் முபாறக் என்ன செய்தி சொல்கிறாறோ அதற்கு மாறாக ஏதாவது எழுதி விடுவான் அது மிக பிரபலமாக பல செயார்களை தாண்டும் , தாண்டி விடும் 

Link to comment
Share on other sites

On 2/2/2020 at 10:01 PM, தனிக்காட்டு ராஜா said:

பல விடயங்களை கற்பனைகளாக்கி எழுதுவான் அவன் அதிகம் எழுதுவது அப்துல் முபாறக் என்ன செய்தி சொல்கிறாறோ அதற்கு மாறாக ஏதாவது எழுதி விடுவான் அது மிக பிரபலமாக பல செயார்களை தாண்டும் , தாண்டி விடும் 

அவரோட id கிடைக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரானொ வைரஸ் என்பது சாதாரண தடிமன் வைரசுக்களின் வகை தான். இந்த ஒரு வகை தொற்றுக்கு தொற்று சிறிய அளவில்.. மாறல் அடைவதால்.. பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த...உடல் அதனை எதிர்ப்பதில் சிக்கல் படுகிறதே தவிர... கொரானொ வைரஸ் என்பது புதிய ஒன்றல்ல. 

இந்த மாறல் அடைதல் இதற்கு எதிரான ஒரு திடமான வக்சீனை அறிமுகப்படுத்துவதில் தாமதத்தை தருகிறது.

மற்றும் படி பொதுவாக வைரஸ் நோய்களுக்கு மருந்துகள் இல்லை. அவை இயற்கையாக எமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியால் அழிக்கப்பட இடமளிப்பதே மீண்டும் தொற்றுக்கள் ஏற்படாமல் இருக்க வழிவகுக்கும்.

இந்த கொரானொ வைரஸின் தாக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு என்பது நடைமுறையில் உள்ள எயிட்ஸ் வைரஸால் வரும் இழப்பை விட மிகக் குறைவு. இதில் உள்ள ஒரே சிக்கல்.. இது இலகுவாக ஆளுக்கு ஆள் பரவக்கூடியதாக இருப்பது மட்டுமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tamilselvan_0 said:

அவரோட id கிடைக்குமா?

இதுதான் அவர் ஐடி இன்று  கூட ஏசியிருக்கான் பாருக்களன்  இதனை பகிர்ந்தவர்களுக்கும் காவித்திரிந்தவர்களுக்கும் 

Suhir Sathya

On 2/1/2020 at 11:06 PM, ரதி said:

உண்மையாய் உங்கட நண்பரா எழுதி இருந்தார்? ...பாராட்டுக்கள் அவருக்கு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதுதான் அவர் ஐடி இன்று  கூட ஏசியிருக்கான் பாருக்களன்  இதனை பகிர்ந்தவர்களுக்கும் காவித்திரிந்தவர்களுக்கும் 

Suhir Sathya

 

நான் இதை பற்றி உங்களிடம் கேட்க வேணும் என்று வரும் போது நீங்களே எழுதி இருக்கிறீர்கள் 😄
 

இவரது பதிவுகளை நான் ஏற்கனவே வாசித்து இருக்கிறேன் 

14 hours ago, tamilselvan_0 said:

அவரோட id கிடைக்குமா?

உதை  கேட்பதற்காகவே இன்னொரு ஐடி கிரியேட் பண்ணி வரோணுமா 😃
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

இந்த மாறல் அடைதல் இதற்கு எதிரான ஒரு திடமான வக்சீனை அறிமுகப்படுத்துவதில் தாமதத்தை தருகிறது

இம்பீரியல் கல்லூரியின் மருத்துவதுறை கண்டுபிடித்துள்ளார்களாம். எனினும் trials முடிய கோடைகாலம் ஆகிவிடும். அதுவரை ஆயுர்வேத சூரணங்களையும், தைலங்களையும் விற்பவர்களிடம் ஏமாந்துகொண்டிருக்கவேண்டியதுதான்!

Professor Shattock added: “We have successfully generated our novel coronavirus vaccine candidate in the lab – just 14 days from getting the genetic sequence to generating the candidate in the lab. This will go into the first animal experiments on Monday [10th February].

"If this work is successful, and if we secure further funding, the vaccine could enter into clinical studies (with human participants) in early Summer.”

https://www.imperial.ac.uk/news/195055/imperial-researchers-race-develop-coronavirus-vaccine/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, கிருபன் said:

இம்பீரியல் கல்லூரியின் மருத்துவதுறை கண்டுபிடித்துள்ளார்களாம். எனினும் trials முடிய கோடைகாலம் ஆகிவிடும். 

Professor Shattock added: “We have successfully generated our novel coronavirus vaccine candidate in the lab – just 14 days from getting the genetic sequence to generating the candidate in the lab. This will go into the first animal experiments on Monday [10th February].

"If this work is successful, and if we secure further funding, the vaccine could enter into clinical studies (with human participants) in early Summer.”

https://www.imperial.ac.uk/news/195055/imperial-researchers-race-develop-coronavirus-vaccine/

தகவலுக்கு நன்றி. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.