Jump to content

இது உண்மையாக இருக்குமா????


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நான் இதை பற்றி உங்களிடம் கேட்க வேணும் என்று வரும் போது நீங்களே எழுதி இருக்கிறீர்கள் 😄
 

இவரது பதிவுகளை நான் ஏற்கனவே வாசித்து இருக்கிறேன் 

உதை  கேட்பதற்காகவே இன்னொரு ஐடி கிரியேட் பண்ணி வரோணுமா 😃
 

அட எனக்கு விளங்கல்லையே. இவரா அவர்?????😀

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதுதான் அவர் ஐடி இன்று  கூட ஏசியிருக்கான் பாருக்களன்  இதனை பகிர்ந்தவர்களுக்கும் காவித்திரிந்தவர்களுக்கும் 

 

 

எனக்கென்றால் இந்த ஐடியா எமது இலங்கைத் தமிழர்களுக்கு வரவே வராது. யாரோ இந்தியத் தமிழரின் பதிவில் இருந்து இவர் Suhir Sathya கொப்பி அடித்ததாகத்தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/31/2020 at 8:33 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சங்கத் தமிழ் இலக்கியத்தில் இப்படி ஒரு பாட்டு வருகிறதா ??
ஒட்டக்கூத்தர் பாடலை ஒத்ததாக இருந்தாலும் இப்பாடலில் வரும் ராசா என்பது அக்காலத்தில் பயன்பாட்டில் இல்லை என்கிறார் பாஸ்கரன் ரங்கநாதன் என்னும் தமிழறிஞர்.

"தட்டையான் மூக்குடையான்
வெட்டுவான் விடமாவான்
கட்டுடல் மேனியவன்
காயமற்று வீற்றிருக்க
மற்றவன் கொற்றவன்
வித்துடல் ஆகி நிற்க
சாசில்லை மேசில்லை
கோரானான் வை ராசா
என் செய்வாய் என் ராசா?"

இதன் அர்த்தம்

"தட்டை மூக்குடையவன்(சீனன்) விஷமுள்ள பாம்பினை வெட்டுவான். அப்போது நோய் எதிர்ப்பு அதிகமுள்ள கட்டுடல் கொண்டவர்களைத் தவிர ஏனையோர் எல்லோரும் இறந்து கிடப்பார்கள். அது சார்ஸ் (SAR) வைரசும் இல்லை, மேர்ஸ் (MERS) வைரசும் இல்லை, ஆனால் அது கொரோனா வைரசே. அப்போது நீ என்ன செய்ய முடியும் மன்னனே?"

இப்போது பரவும் நோயை ரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரேயே கண்டுபிடித்து எச்சரித்த நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.

*இத்தகவலின் உண்மைத்தன்மையை, ஆய்வாளர்கள் யாரேனும் விளக்கவும்* நன்றி
நன்றி sriskantharaja

இது உண்மையான தகவலாகக் கூட இருக்கலாம். ஏனெனில் கொரோனா வைரஸ் புதிதாகத் தோன்றியது என்று யாரும் கூறவில்லையே.😀

 

 

இதை வற்சப் குழுமத்தில் சிறீஸ்கந்தராஜா என்பவர் பதிந்திருந்தார்.

Image may contain: one or more people, text that says 'அரசன் என்ற சொல்லே ராஜன் ஆனது ராஜ ராஜ சோழன் தமிழ் பெயரே அரசன் = ராசன் = ராசா = ராஜா'

பழங்காலத்தில் சித்தர்களே அந்தந்த பகுதியை வழிநடத்தி ( ஆட்சிசெய்து) வந்தனர் ‌

மாதம் இருமுறை அப்பகுதியில் உள்ள ஊர்களுக்கு வருகைதந்து , பொதுவான ஒரு இடத்தில் ( நீர்நிலைகளான ஆற்றங்கரை அல்லது குலக்கறைக்கு அருகாமையில் உள்ள அரசமரத்தடியில் ) அமர்ந்து, சுற்றுவட்டார ஊர் மக்கள் கூடியிருக்க, அவர்களுக்கான தீர்வை வழங்குவார்கள்.

சித்தர்கள், அறிவியல், மருத்துவம் , மொழி, கலைகள் , மற்றும் மக்களின் வாழ்வியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவர்.

இவ்வாறு , அரசமரத்தடியில் இருந்து மக்களை ஆட்சி செய்ததால், அவர் அமர்ந்திருந்த அரசமரத்தின் பெயராலேயே #அரசன் என்று அழைக்கப்பட்டார்னர் ( சித்த மரபு வழக்கொழிந்த பின்பு , ஞானம் + செல்வம் இரண்டின் தத்துவார்த்த உருவகமாக சித்தர்களை குறிக்கும் விநாயகர் சிலைகள் அரசமரத்தடியில் வைக்கப்பட்டு , சித்தர்களின் நினைவாக மக்கள் போற்றி வழிபட்டனர் என்பது தனிக்கதை ).

அரசன் என்ற சொல்லின் , முதல் எழுத்தான #அ ஒலி மறைந்து. அடுத்த எழுத்து #ரா என்று நெடில் பெற்று #ராசன் ஆனது. இதையே ராசா என்றும்,
பிறகு வடமொழிச் சொல் கலந்து #ராஜா என்றும் ஆனது.

அதவாது
அரசன் = ராசன் = ராசா = ராஜா

இப்படி இந்த மண்ணை ஆண்ட சித்த அரசர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், 4000 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியை தலைநகரமாக கொண்டு பரதகண்டத்தை ஆண்ட சித்த பேரரசர் #வீட்டிணன் எனும் #விஷ்ணு ( இவர் ஒரு விண்ணாய்வு சித்தர்)

பரத கண்டத்தை ( தெற்காசியா முழுமைக்கும்)
ஆண்ட பரத அரசனான விஷ்ணு சித்தரே,
#பரத_அரசன் என்றும் அதுவே #பரத_ராசன் என்றும், பிறகு மறுவி #வரத_ராஜ பெருமாள் ஆனார்.
திருவரங்கம் சயன கோலம் , அவர் படுத்துக்கொண்டு விண்னை ஆய்வு செய்யும் விண்ணாய்வு சித்தர் கோலம்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோலம், அவரின் அரசர் கோலம்.

பிற்காலத்தில் கோட்டை கொத்தளங்களுடன் நாட்டை ஆட்சிபுரிந்த அரசர்கள் அனைவருக்கும், சித்த அரசர்களின் பெயரை அடியொற்றியே அரசன் என்று அழைக்கப்பட்டனர்.

இதே வரிசையில்,
தஞ்சையை ஆண்ட ராஜ ராஜ சோழன் என்பது
அரசர்களுக்கெல்லாம் அரசன் என்று பொருள்படும் பேரரசன் ஆவார்.
இது தமிழ் பெயரே தவிர , வடமொழிச்சொல் அல்ல.

Link to comment
Share on other sites

1 hour ago, Maruthankerny said:

பழங்காலத்தில் சித்தர்களே அந்தந்த பகுதியை வழிநடத்தி ( ஆட்சிசெய்து) வந்தனர் ‌

மாதம் இருமுறை அப்பகுதியில் உள்ள ஊர்களுக்கு வருகைதந்து , பொதுவான ஒரு இடத்தில் ( நீர்நிலைகளான ஆற்றங்கரை அல்லது குலக்கறைக்கு அருகாமையில் உள்ள அரசமரத்தடியில் ) அமர்ந்து, சுற்றுவட்டார ஊர் மக்கள் கூடியிருக்க, அவர்களுக்கான தீர்வை வழங்குவார்கள்.

இந்த விளக்கத்தை எங்கிருந்து பெற்றீர்கள்? தொல்காப்பியம் போன்ற பழைமையான ஆவணங்கள் எவற்றிலாவது இவ்வாறான விளக்கம் தரப்பட்டு உள்ளதா? அரச மரத்துக்கு ஏன் அரச மரம் என்று பெயர் வந்தது? அரசன் அமர்ந்திருக்க நிழல் தந்த மரம் என்ற காரணமா? ராஜா, ராசாவாகி, பின்னர் ராசன், அரசன் என்று ஆகியிருக்கலாம் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அட எனக்கு விளங்கல்லையே. இவரா அவர்?????😀

எனக்கென்றால் இந்த ஐடியா எமது இலங்கைத் தமிழர்களுக்கு வரவே வராது. யாரோ இந்தியத் தமிழரின் பதிவில் இருந்து இவர் Suhir Sathya கொப்பி அடித்ததாகத்தான் இருக்கும்.

சுமோ நீங்கள் ஒரு எழுத்தாளர். இலங்கையை சேர்ந்தவர் ...நீங்களே இப்படி சொல்லலாமா?... அவர் மட்டுவை சேர்ந்தவர்...அவர்களது எழுத்து நடை , பேச்சு வழக்கு கொஞ்சம் முஸ்லீம்களது  நடை சார்ந்து இருக்கும்...இதை உண்மையாகவே அந்த தம்பி தான் எழுதினார்...அதை வாசித்து விட்டு  உண்மையாகவே அந்தப் பாட்டு சிலப்பதிகாரத்தில் இருக்குதாக்கும் என்று நினைத்தேன்....அவர் எழுதினவுடனேயே பலர் அந்தப் பாட்டை மட்டும் எடுத்து தங்களுடைய  மு.பு பதிந்தார்கள்...அதில் படித்தவர்கள் ,படிக்காதவர்கள் , பெரிய எழுத்தாளர்கள் ,ஏன் இந்தியர்கள் கூட அதில் இருந்தார்கள்...நீங்கள் அவரது  மு.பு போய் பார்க்கலாம் திறந்து தான் இருக்கு.


அவர் இந்த பதிவை எழுத   காரணம் அப்துல் மஜித் என்பவர் குரோணா வைரஸ் பற்றி குரானில் சொல்லி இருக்கு என்று பதிவு போட்டு இருந்தார்....அவருக்கான நக்கல் பதிவு தான் இந்த சத்யா என்பவர் எழுதியது..


எப்பவும் நாங்கள் மட்டுமே திறம் என்று நினைக்க கூடாது 😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.