Jump to content

உறவினர் கடன் கேட்டால், 'இல்லை' என்று சொல்லவும் கற்றுக்கொள்ள வேண்டும்... ஏன்?


Recommended Posts

கடன்

கடன் வாங்குவதும் கொடுப்பதும் இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாதவை. "இன்று பொருளாதார மந்தநிலையால் பலர் வேலையிழந்து, பணத்தேவையில் தவித்து வருகிறார்கள். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், வங்கியிடமிருந்து நெருக்கடியைச் சந்திக்கிறார்கள். அத்தியாவசியத் தேவைகளுக்குப் பணமில்லாமல் தவிக்கும் நிலையில், மீண்டும் யாரிடம் கடன் வாங்கலாம் என்று தேடி அலைகிறார்கள்.

அவர்களில் ஒருவராக நம் நண்பரோ, உறவினரோ இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நாம் உதவி செய்ய முன்வந்தாலும், அவர்களுக்குக் கடன் கொடுப்பதற்கு முன்னர் நீங்கள் சில முக்கியமான அம்சங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்" என்கிறார் நிதி ஆலோசகர் பா.பத்மநாபன்.

1. நிதிநிலையை மதிப்பிடுங்கள்!

பொருளாதாரம் மந்தமடைந்துவரும் இந்த நாள்களில் வேலையிழப்பு, கடன் நெருக்கடி, சம்பளம் பெறுவதில் தாமதம் போன்றவை அதிகரித்துவருகின்றன. இதனால் தனிநபர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் கடன் கேட்பதும் அதிகரித்துவருகிறது.

உறவினர்கள், நண்பர்கள் கடனுதவி கேட்டால் அதை மறுப்பது கடினம். முதலில் உங்கள் செலவுகள் போக, கடன் கேட்பவர்களுக்கு எவ்வளவு தர முடியும் என்று கணக்குப்போட்டுப் பாருங்கள். அத்தியாவசியச் செலவுகளுக்குப் பணத்தை ஒதுக்கிய பிறகு மீதமுள்ள தொகை ஏதாவது இருந்தால் மட்டுமே கடன் தர வேண்டும். முக்கியமாக, கடன் கேட்கும் நண்பர்கள் அல்லது உறவினர்கள்மீது உங்களுக்கு முழு நம்பிக்கை இருந்தால் மட்டும் அவர்களுக்கு உதவுங்கள்.

கடனளிக்க உங்களுக்கு விருப்பமில்லை என்றால், 'என்னிடம் பணமில்லை' என்று சொல்வதில் தவறில்லை. உப்புச்சப்பில்லாத காரணங்களுக்காக நீங்கள் கடன் தர மாட்டீர்கள் என்பதை உணர்த்திவிட்டால், தேவையில்லாமல் உங்களிடம் கடன் கேட்டுத் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

2. முதலீடுகளைத் தொட வேண்டாம்!

நீங்கள் பண உதவி செய்யத் தயாராக இருந்தாலும், எந்தப் பணத்தை எடுத்துத் தருவது என்ற குழப்பம் அவ்வப்போது ஏற்படும். நம்மிடம் இருக்கும் உபரிப் பணத்தை மட்டுமே கடனாகத் தர வேண்டும். நீங்கள் செய்திருக்கும் முதலீட்டிலிருந்து பணத்தை எடுத்துத் தராதீர்கள். உதாரணமாக, சிலர் தங்க நகையை அடகு வைத்தோ, விற்றோகூடக் கடன் தருவார்கள். அப்படிச் செய்யவே கூடாது. இன்னும் சிலர் ஓய்வுக்காலத்துக்கோ, குழந்தைகளின் எதிர்காலத்துக்கோ செய்து வைத்திருக்கும் முதலீட்டிலிருந்து பணத்தை எடுத்துத் தருவார்கள். அந்த முதலீட்டில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டால்கூட நீங்கள் நினைத்ததை அடைய முடியாது.உங்கள் சேமிப்புக் கணக்கில் பணம் இருந்தால் அதை எடுத்துத் தரலாம்.

உறவினருக்கு கொடுக்கும் கடன்... கவனிக்க 7 அம்சங்கள்!

> 'இல்லை' என்று சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்!

நம் அன்புக்குரியவர்களிடம் 'இல்லை' என்று சொல்வது சற்று கடினமானதுதான். ஆனால், உதவி செய்யும் அளவுக்குப் போதிய பணம் இல்லையென்றாலோ, நமது வேலை நிலையற்றதாக இருக்கிறது என்றாலோ கடன் தருவதைத் தவிர்த்துவிடுங்கள்.

கடன் கேட்பவரின் தேவை முக்கியமானதாகவோ, அவசரத்துக்குத் தேவைப்படுவதாகவோ இருந்தால் மட்டும் கடன் கொடுங்கள். அவர் கார் வாங்கவோ, கிரெடிட் கார்டு பாக்கியைக் கட்டுதற்கோ கடன் வழங்காதீர்கள். மேலும், கடன் வாங்கியவர் அதே தேவைக்காக மீண்டும் கடன் கேட்டாலும் தர வேண்டாம். நிதியைச் சரியாகத் திட்டமிடாததால்தான் அவர் மீண்டும் கடன் பெறுகிறார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

கடனளிக்க உங்களுக்கு விருப்பமில்லை என்றால், 'என்னிடம் பணமில்லை' என்று சொல்வதில் தவறில்லை. உப்புச்சப்பில்லாத காரணங்களுக்காக நீங்கள் கடன் தர மாட்டீர்கள் என்பதை உணர்த்திவிட்டால், தேவையில்லாமல் உங்களிடம் கடன் கேட்டுத் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

> திருப்பிக் கேட்க வெட்கப்பட வேண்டாம்!

உறவினர்களிடம் கடன் கொடுத்தால், அதைத் திருப்பிக் கேட்கப் பெரும்பாலானோர் கூச்சப்படுவது வழக்கம். அவர்களிடம் வழங்கிய கடனை எப்படித் திருப்பிக் கேட்பது என்று தெரியாமல் தவிப்போம்.

என்னதான் நெருங்கிய உறவினராக, நன்கு பழகிய நண்பராக இருந்தாலும், 'எப்போது பணத்தைத் திருப்பித் தருவீர்கள்?' என்று கேட்டு, உறுதிமொழியைப் பெற்றுக்கொண்டு கொடுங்கள். அவர் சொல்லும் காலத்துக்குள் பணத்தைத் தரவில்லையென்றால் உங்கள் நிதி நிலையையும், உங்கள் நிதித் திட்டத்தையும் சொல்லி பணத்தைத் திருப்பித் தரும்படி கோபப்படாமல், ஆனால் உறுதியாகக் கேளுங்கள்.

சில நேரங்களில் சிறு தொகையைக் கடனாக வழங்கினால் அதை நாம் மறந்துவிடுவோம். கடன் பெற்றவரும் அது சிறு தொகை என்பதால் மறந்துவிடுவார். எனவே, தொகை சிறிதோ பெரிதோ நீங்கள் தந்த கடனை எழுதி வைத்துக் கொள்வதோ, போனில் ரிமைண்டர் செட் செய்து வைத்துக்கொள்வதோ அவசியம்.

> கடன் வாங்கி, கடன் கொடுக்காதீர்கள்!

உங்கள் நண்பரோ, உறவினரோ அவசரமாகக் கடன் கேட்டு வந்து நின்றால், இன்னொருவரிடம் கடன் வாங்கி அதை அவர்களுக்குக் கொடுக்காதீர்கள். கடன் செலுத்தக் கடன் வாங்குவது எப்படிப் பிரச்னையை உருவாக்குமோ, அதேபோலத்தான் கடன் கொடுக்கக் கடன் வாங்குவதும்.

நம் அன்புக்குரியவர்கள் நிதிப் பிரச்னையில் சிக்கித் தவிப்பதைப் பார்க்க சங்கடமாகத்தான் இருக்கும். ஆனால், உங்களுக்குச் சிக்கல் இல்லாமல் அவர்களுக்கு உதவ முடியுமா என்று யோசிப்பதுதான் புத்திசாலித்தனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடன் கொடுத்து வாங்கிக்கட்டிக்கொண்டதில் நல்லானுபவம் எனக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் உங்களை ஏமாற்றுவார்கள் ? நீங்கள் யாருக்குக் கடன் கொடுப்பீர்களோ அவர்கள்தான் உங்களை ஏமாற்றுவர். 

யாருக்கு கடன் கொடுப்பீர்கள் ? உறவினர், நண்பர்கள். ஆகவே இவர்களால்தான் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள்.

ஏனென்றால் முன்பின் தெரியாதோருக்கு கடன் கொடுக்க மாட்டீர்களல்லவா ?

 

 

Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கடன் கொடுத்து வாங்கிக்கட்டிக்கொண்டதில் நல்லானுபவம் எனக்கு.

என்னையும் உங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

என்னையும் உங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

நான் இதில் அதிகம் எழுதாததுக்குக் காரணம் கடன் குடுத்தது பற்றியே எழுத நிறைய இருக்கு எனக்கு. அதுக்கு ஒரு தனித்த திரிதான் திறக்கவேணும்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ähnliches Foto

இன்று (31.01.2020)... நான், வேலை செய்யும் இடத்தில்... 
கடன் கேட்ட ஒருவரின் கதையை கேளுங்கள்.

எனது வேலையிடத்துக்கு... தினமும், 
பல வேறு ஐரோப்பிய  நாடுகளை சேர்ந்தவர்கள் வருவார்கள்.
அதில்... தொடர்ந்து, வருபவர்களையும், புதிதாக வருபவர்களையும்...
அவர்களின்... முக, நடை, பாவனைகளில்... உடனே கண்டு பிடித்து விடுவேன்.   

இன்று(31.01.2020)... புதிதாக ஒரு  "றுமேனிய" நாட்டவர் வந்து,
தனக்கு, காசு... மிகவும் கஸ்ரமாக உள்ளது. 
100 € கடனாக... தரும் படியும், அதனை... அடுத்த வருடம் (2021)
திரும்பத் தருவேன் என்று,  கேட்ட  போது.... 

அந்த,  ரூமேனியா நாட்டு ... உத்தமனின்,  நம்பிக்கையை..  மனதில் வியந்தேன். :)

அதற்கு... நான் கொடுத்த பதில் என்னவாக இருக்கும்...
என்பதை, உங்கள் ஊகத்திற்கே... விட்டு விடுகின்றேன்.  ✍️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழ் சிறி said:

Ähnliches Foto

இன்று (31.01.2020)... நான், வேலை செய்யும் இடத்தில்... 
கடன் கேட்ட ஒருவரின் கதையை கேளுங்கள்.

எனது வேலையிடத்துக்கு... தினமும், 
பல வேறு ஐரோப்பிய  நாடுகளை சேர்ந்தவர்கள் வருவார்கள்.
அதில்... தொடர்ந்து, வருபவர்களையும், புதிதாக வருபவர்களையும்...
அவர்களின்... முக, நடை, பாவனைகளில்... உடனே கண்டு பிடித்து விடுவேன்.   

இன்று(31.01.2020)... புதிதாக ஒரு  "றுமேனிய" நாட்டவர் வந்து,
தனக்கு, காசு... மிகவும் கஸ்ரமாக உள்ளது. 
100 € கடனாக... தரும் படியும், அதனை... அடுத்த வருடம் (2021)
திரும்பத் தருவேன் என்று,  கேட்ட  போது.... 

அந்த,  ரூமேனியா நாட்டு ... உத்தமனின்,  நம்பிக்கையை..  மனதில் வியந்தேன். :)

அதற்கு... நான் கொடுத்த பதில் என்னவாக இருக்கும்...
என்பதை, உங்கள் ஊகத்திற்கே... விட்டு விடுகின்றேன்.  ✍️

எனக்குத் தலை வெடித்துவிடும்போல் உள்ளது. யாராவது உதவி செய்யுங்கள் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

எனக்குத் தலை வெடித்துவிடும்போல் உள்ளது. யாராவது உதவி செய்யுங்கள் 🙏

கபிதனுக்கே.... தலை, வெடிக்குது என்றால்,
நிலைமை... படு மோசம் என்று அர்த்தம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

அதற்கு... நான் கொடுத்த பதில் என்னவாக இருக்கும்...
என்பதை, உங்கள் ஊகத்திற்கே... விட்டு விடுகின்றேன்.  ✍️

களிசானைப் பின்பக்கமாக இறக்கிக் காட்டி கருந்துளைக்குள் (black hole 🕳) தேடி எடுக்கச் சொல்லியிருப்பீர்கள்😂🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் நல்ல அனுபவம் இருக்கிறது இதில்......,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/1/2020 at 5:27 AM, தமிழ் சிறி said:

கபிதனுக்கே.... தலை, வெடிக்குது என்றால்,
நிலைமை... படு மோசம் என்று அர்த்தம். :grin:

அடேய் மாங்கா எனக்கு இந்தவருடம் பென்சன்டா என்று சொல்லி இருக்கலாம் என பட்சி சொல்லுது 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎31‎/‎2020 at 11:12 PM, தமிழ் சிறி said:

Ähnliches Foto

இன்று (31.01.2020)... நான், வேலை செய்யும் இடத்தில்... 
கடன் கேட்ட ஒருவரின் கதையை கேளுங்கள்.

எனது வேலையிடத்துக்கு... தினமும், 
பல வேறு ஐரோப்பிய  நாடுகளை சேர்ந்தவர்கள் வருவார்கள்.
அதில்... தொடர்ந்து, வருபவர்களையும், புதிதாக வருபவர்களையும்...
அவர்களின்... முக, நடை, பாவனைகளில்... உடனே கண்டு பிடித்து விடுவேன்.   

இன்று(31.01.2020)... புதிதாக ஒரு  "றுமேனிய" நாட்டவர் வந்து,
தனக்கு, காசு... மிகவும் கஸ்ரமாக உள்ளது. 
100 € கடனாக... தரும் படியும், அதனை... அடுத்த வருடம் (2021)
திரும்பத் தருவேன் என்று,  கேட்ட  போது.... 

அந்த,  ரூமேனியா நாட்டு ... உத்தமனின்,  நம்பிக்கையை..  மனதில் வியந்தேன். :)

அதற்கு... நான் கொடுத்த பதில் என்னவாக இருக்கும்...
என்பதை, உங்கள் ஊகத்திற்கே... விட்டு விடுகின்றேன்.  ✍️

பெப் 30ம் திகதி  வா தாறன் என்று இருப்பியள் 😀
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடன் குடுக்கிறவனை விட கடன் வாங்கினவன் தான் தைரியசாலி. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கடன் குடுக்கிறவனை விட கடன் வாங்கினவன் தான் தைரியசாலி. 😎

100% சரியான கூற்று. 

அதுச் சரி நீங்கள் தைரியசாலியா அல்லது  அசகாய சூரரா ?😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

100% சரியான கூற்று. 

அதுச் சரி நீங்கள் தைரியசாலியா அல்லது  அசகாய சூரரா ?😉

அய்க்...உப்பிடி றால் போட்டு சுறா புடிக்கிற ஆக்களை எத்தினை பேரை பாத்திருப்பன்?😀

அதுவும் என்னட்டை? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/1/2020 at 12:53 AM, Kapithan said:

எனக்குத் தலை வெடித்துவிடும்போல் உள்ளது. யாராவது உதவி செய்யுங்கள் 🙏

 

On 2/1/2020 at 5:33 PM, கிருபன் said:

களிசானைப் பின்பக்கமாக இறக்கிக் காட்டி கருந்துளைக்குள் (black hole 🕳) தேடி எடுக்கச் சொல்லியிருப்பீர்கள்😂🤣🤣

 

On 2/2/2020 at 6:28 PM, தனிக்காட்டு ராஜா said:

அடேய் மாங்கா எனக்கு இந்தவருடம் பென்சன்டா என்று சொல்லி இருக்கலாம் என பட்சி சொல்லுது 😃

 

8 hours ago, ரதி said:

பெப் 30ம் திகதி  வா தாறன் என்று இருப்பியள் 😀
 

Bildergebnis für 1000 euro schein"

என்னிடம் 1000 € தாள்  காசாக தான்.... இருக்குது,
அடுத்த முறை வரும் போது.. மாத்தி தாறன் என்று சொன்னவுடன்...
மேலும், கீழும் பார்த்து விட்டு... ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டார். :grin:

பிற்குறிப்பு: 1000 € காசு புழக்கத்தில் இல்லை என்பது...  குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் நிறையபேர் பொய் சொல்லி காசு வாங்கி இருக்கிறார்கள் 
அவர்கள் சொல்வது பொய் என்று தெரிந்தும் நான் கொடுத்து இருக்கிறேன் 
அவர்களுக்கு சரியாக பொய் சொல்ல தெரியவில்லை என்றுதான் கவலைபட்டு இருக்கிறேன்.

என்னிடம் இருந்து போகும் எதுவும் திரும்பி வரவேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை 
என்னால் முடிந்ததை கொடுத்துக்கொண்டே இருக்கிறேன் ....
எனது நிலமையும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டுதான் இருக்கிறது 
எதிர்காலம் பற்றி அதிகமாக நான் கவலை கொள்ளவது கிடையாது ... இப்போது சிலகாலமாக 
அறுவடை அதிகமாக இருக்குமே என்பதால் ஒரு பகுதியை முதலீடு செய்து வருகிறேன் 

எனது தனிப்பட்ட எண்ணம் அனுபவம் 
கொடுத்து யாரும் ஏழையாக மாட்டார்கள் என்பதுதான் 
கொடுக்க கொடுக்க உங்கள் வருமானம் எதோ ஒருவகையில் கூடிக்கொண்டுதான் இருக்கும். 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இதில் கருத்தெழுதிய எத்தனை பேரிடம் கடனட்டை உள்ளது..?? வீட்டுக்கடன் உள்ளது.. யுனியில் படிக்கும் உங்கள் பிள்ளை மீது கடன் உள்ளது.. ??

சொந்த உறவினர்களுக்கு கடன்கொடுத்து உதவுவதை தவிர்ப்பது பற்றி கதைக்கின்ற போது... வெறும் வாக்குறுதிகளை நம்பி உங்களுக்கு கடன் தரும் நிறுவனங்கள் கதை எழுத ஆரம்பித்தால்...??!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nedukkalapoovan said:

இதில் கருத்தெழுதிய எத்தனை பேரிடம் கடனட்டை உள்ளது..?? வீட்டுக்கடன் உள்ளது.. யுனியில் படிக்கும் உங்கள் பிள்ளை மீது கடன் உள்ளது.. ??

சொந்த உறவினர்களுக்கு கடன்கொடுத்து உதவுவதை தவிர்ப்பது பற்றி கதைக்கின்ற போது... வெறும் வாக்குறுதிகளை நம்பி உங்களுக்கு கடன் தரும் நிறுவனங்கள் கதை எழுத ஆரம்பித்தால்...??!

roflphotos-dot-com-photo-comments-20191231172736.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nedukkalapoovan said:

இதில் கருத்தெழுதிய எத்தனை பேரிடம் கடனட்டை உள்ளது..?? வீட்டுக்கடன் உள்ளது.. யுனியில் படிக்கும் உங்கள் பிள்ளை மீது கடன் உள்ளது.. ??

சொந்த உறவினர்களுக்கு கடன்கொடுத்து உதவுவதை தவிர்ப்பது பற்றி கதைக்கின்ற போது... வெறும் வாக்குறுதிகளை நம்பி உங்களுக்கு கடன் தரும் நிறுவனங்கள் கதை எழுத ஆரம்பித்தால்...??!

சொல்ல விரும்புவதை தெளிவாக கூறலாமே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

சொல்ல விரும்புவதை தெளிவாக கூறலாமே ?

தலைப்பே சொல்கிறது.

கடன் வாங்கிறவன் உறவினன். கடன் கொடுக்கிறவன் அவன் உறவு. கடனை திருப்பி தராவிட்டாலும்.. கொண்டு போனது உறவினன் தானே.. என்று சிந்திந்துப் பாருங்கள்.. இது சிம்பிளாத் தெரியும். 

கடன் கொடுக்கக் கூடிய தகுதி இருக்கிற படியால் தானே கொடுக்கிறீர்கள்.. இதுவே கடன் வாங்குபவனின் பார்வை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

தலைப்பே சொல்கிறது.

கடன் வாங்கிறவன் உறவினன். கடன் கொடுக்கிறவன் அவன் உறவு. கடனை திருப்பி தராவிட்டாலும்.. கொண்டு போனது உறவினன் தானே.. என்று சிந்திந்துப் பாருங்கள்.. இது சிம்பிளாத் தெரியும். 

கடன் கொடுக்கக் கூடிய தகுதி இருக்கிற படியால் தானே கொடுக்கிறீர்கள்.. இதுவே கடன் வாங்குபவனின் பார்வை. 

கடன் கொடுப்பது அல்ல விடயம்.

கடனாளியால் ஏமற்றப்பட்டுவிட்டோம் என்கின்ற உணர்வும் அதனால் உணரப்ப்டும் வேதனையும் அதன்பின்னர் ஏற்படும் கோபமும் தான் உரையாடலின் சாரம் என நினைக்கிறேன். 

பணம் உள்ளவர்களில் எத்தனைபேர் உதவுகிறார்கள். அவர்களுக்கு உழைப்பின் மகிமை தெரிந்ததனால் பணத்தை மிகவும் கவனமாகக் கையாளுகிறார்கள்.

ஆனால் சேமிப்பற்றவர்கள், மனிதரின் தேவையுணர்ந்து நம்பிக்கையடிப்படையில் உதவும்போதும் அதன் பின் ஏமாற்றப்படும்போது ஏற்படும் உணர்வும் சொல்லி மாளாது. 

இவர்களுக்காகத்தான் " பாத்திரம்(தகுதி) அறிந்து பிச்சை(உதவு/தானம்)யிடு" என்றும்

"ஆற்றில் போட்டாலும் அளந்து போடு" என   நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளதாக நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

On ‎1‎/‎31‎/‎2020 at 3:40 PM, ampanai said:

> 'இல்லை' என்று சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்!

நம் அன்புக்குரியவர்களிடம் 'இல்லை' என்று சொல்வது சற்று கடினமானதுதான். ஆனால், உதவி செய்யும் அளவுக்குப் போதிய பணம் இல்லையென்றாலோ, நமது வேலை நிலையற்றதாக இருக்கிறது என்றாலோ கடன் தருவதைத் தவிர்த்துவிடுங்கள்.

ஆம், இல்லை என்று மனத்தை நோகாக்காமால் செல்வது ஒரு கலை. அதில் பலரும் தோல்வி அடைந்த நிலையில் இருப்பார்கள். அதாவது, 'இல்லை' என்று சொல்ல தைரியமும் இல்லை அதை அழகாக சொல்லும் அணுகுமுறையும் பலருக்கும் தெரியாது.  

Link to comment
Share on other sites

Here's how you can effectively say no:
  1. Say it. Don't beat around the bush or offer weak excuses or hem and haw. ...
  2. Be assertive and courteous. ...
  3. Understand peoples' tactics. ...
  4. Set boundaries. ...
  5. Put the question back on the person asking. ...
  6. Be firm. ...
  7. Be selfish.

Image result for how to say no

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.