Jump to content

உளப்பலத்தால் உழைத்தவன் கரும்புலி மேஜர் குமுதன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உளப்பலத்தால் உழைத்தவன் கரும்புலி மேஜர் குமுதன்.

Last updated Feb 1, 2020

Slide123-207x335.jpg

 

அந்த நிகழ்வுகளில் இருந்து குமுதனின் நினைவுகளை பிரிக்க முடியாததாய் இருந்தது. இப்போதெல்லாம் அவனது சுவாசம் அந்த நினைவுகளைத் தழுவியதாகவே வந்து போனது. அதே நினைவுகள் தான் குமுதனின் கண்களையும் நெஞ்சையும் நினைத்துக் கொண்டிருந்தன.

வெட்டையும் திட்டுத்திட்டாக வளர்ந்திருக்கும் சிறு பற்றைகளும் நிறைந்து பரந்து விரிந்த அந்தப் பிரதேசத்தின் நெஞ்சைக் கிழிப்பதைப்போல் கிளிநொச்சி நகரினை நோக்கி இராணுவம் முன்னேறிக்கொண்டிருந்தது.

பெரிய இராணுவ நகர்வை எதிர்த்து நேருக்குநேர் சமரிட்டுக் கொண்டிருந்த எமது தாக்குதல் அணியின் ஒரு பிளட்டூன் அணித்தலைவனாக குமுதனும் நின்று சமதிட்டுக் கொண்டிருந்தான்.

ஒவ்வொரு அங்குல நிலத்தையும் இராணுவ பாதங்கள் மிதிக்கின்றபோதும் அவனிற்குள்ளேயே எரிந்த ஆவேச நெருப்பால் கண்ணிலும் குரலிலும் இடையிடையே பொறி பறந்தது.

இதே தாக்குதல் அணியுடன் சற்று நாட்களுக்கு முன் அலம்பில் பகுதியில் தரையிறங்கிய சிறப்புப்படையினரை எதிர்த்துச் சண்டையிட்டு இராணுவம் நினைத்து வந்த இலக்கை எட்டவிடாது தடுத்ததில் பங்கெடுத்தவன் குமுதன்.

தாக்குதல் அணியின் பிளட்டூன் உதவி அணித்தலைவராக நின்றாலும் சண்டை உக்கிரம் அடைந்து சென்றபோது ஒரு பகுதி முழுவதற்குமான கட்டளைகளை அவனே வழங்க வேண்டியிருந்தது.

அதிகப்பேர் விழுப்புண்பட்டு வீரச்சாவடைந்து போனமையாலும் அணியின் ஆட்தொகையில் பெரும் சரிவு ஏற்பட்டிருந்தது. இந்த இறுக்கம் நிறைந்த சூழலிலும் இருக்கும் உறுப்பினர்களை ஒழுங்குபடுத்தி எதிரி முன்னேறாதவாறு மறிப்புப் போட்டு விட்டு காயக்காரரையும் வீரந்நாவடைந்தோரையும் பின்னுக்கு அனுப்பினான்.

இதுவரைக்கும் தன் தோள்பட்டையில் பாய்ந்திருக்கும் குண்டைப் பற்றியோ அல்லது அவனின் மேல்சட்டையையும் மீறிப் பாய்கின்ற குருதியைப் பற்றியோ கவனிக்கவில்லை. அவனது சிந்தனையும் செயல்களும் இராணுவத்தின் நோக்கத்தை எப்படியும் முறியடித்துவிட வேண்டுமே என்று துடித்துக்கொண்டிருந்தன.

அதுபோன்றதொரு துடிப்பு நெஞ்சில் கனன்று கொண்டிருக்கவே சத்ஜய எதிர்ச்சமர்க்களத்திலும் அவன் சுழன்று கொண்டிருந்தான். “அண்ணை எங்களிற்குக் கிட்டவா டாங்கி வந்திட்டுது” குமுதனுக்குப் பக்கவாட்டாக இருந்த காவலரணில் இருந்தவன் நிலமையை குமுதனிற்குத் தெரியப்படுத்தினான்.

மரஞ்செடிகளைப் போல உருமாற்றம் செய்து நகர்ந்துகொண்டிருந்த கவசவாகனங்கள் சிறுபற்றைகளை நெரித்து பெரிய புகைமண்டலங்களை உருவாக்கியபடி காவலரணிற்கு மிக அண்மையாக வந்து நின்றது. “அங்காலப் பக்கத்தால் டாங்கிகள் வந்து முட்டிட்டானாம். நீங்கள் அங்க போய் அதை மறியுங்கோ கவனம் மறைப்பெடுத்துப்போங்கோ.”

குமுதன் சொல்லி முடிக்கின்ற போது அவனது கட்டளைக்காகவே காத்திருந்த இரண்டு டாங்கி எதிர்ப்பு வீரர்களின் கண்களிலும் வேகம் பிறப்பெடுத்தது. சண்டை எல்லா இடங்களிலும் பெரும் முழக்கமிட்டு தொடர்ந்து கொண்டிருந்தது.

இரண்டு கவச எதிர்ப்புப் போராளிகளும் அந்த டாங்கிகளை தடுத்து நிறுத்துவதற்காக போராடிக்கொண்டிருந்தார்கள்.

ஆனாலும் எதிரியின் சூட்டுவலுவினால் அந்தப் பிரதேசம் முழுவதும் வலைகளாக ரவைகள் பொழியப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த வலைப்பின்னலிற்குள்ளேயே இரண்டு கவச எதிர்ப்புப் போராளிகளும் சிக்கிக்கொண்டனர்.

குமுதன் இறுதியாகப் பார்த்து விடைகொடுத்தனுப்பிய இரண்டு இளைய வீரர்களுமே வித்துடல்களைக்கூட பார்க்கமுடியாதளவு உடல் சிதைந்துபோய் இருந்தார்கள்.

அந்த நிகழ்வைக் கண்ட பின்னர் குமுதனது கண்கள் அதையே சொந்தமாகக் கொண்டன. கண்களால் கண்டு பதிந்து கொண்ட அந்த நிகழ்வுகளை எண்ணுகின்ற போதெல்லாம் நெஞ்சு பெரிதாக வலிக்கிறது.

மற்றவனின் துன்பத்தைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாத அவனிற்கு அவனது நெஞ்சில் ஆழமாகப் பதிந்த நிகழ்வுகள் ஆறாத தழும்புகளாய் இருந்தன.

அந்தப் பெருஞ்சமர் ஓய்ந்த போதும் குமுதனின் மனம் ஓயவில்லை. தனியொரு நெஞ்சிற்குள் மட்டும் எத்தனையோ சமர் அரங்குகள் திறக்கப்பட்டன.

முடிவிலாது குமுறிக்கொண்டிருந்த குமுதனின் கண்களில் புதியதான வடிவம் ஒன்றின் வாசல் முளைவிட்டது. குமுதன் தனக்குள்ளேயே எரிந்துகொண்டிருக்கும் பெரிய இலட்சிய நெருப்போடுதான் “கரும்புலிகள்” அணியிற்குள் தன்னை இணைத்துக் கொண்டான்.

அங்கு அவனை எதிர்கொள்ளவிருந்த சவால்களோ ஏராளம்.

“இனியென்னன்று குமுதன் அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கப்போகிறான். சாதாரண மனித வலுவுடையவர்களே செய்ய சிரமப்படும் அந்தக் கரும்புலிகள் அணிப்பயிற்சியை குமுதன் செய்து முடிப்பானா?”

ஆச்சரியத்தால் உயர்ந்த புருவங்களை உயர வைத்தபடியே அதிசயிக்க வைத்தான்.

ஒரு போராளி தன்னைக் கரும்புலி அணியில் சேர்த்துக் கொள்ளப்போகிறான் என்றால் அவனைப் பற்றிய அடிப்படையான சில தகுதிகளைப் பரிசோதிப்பதுண்டு. அதுபோலவே குமுதனும் தன்னைக் கரும்புலிகள் அணியில் சேர்த்துக்கொண்டபோது அவனைப்பற்றிய தகுதிகளும் பார்க்கப்பட்டது.

ஒரு போராளி கரும்புலிகள் அணியில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டுமாயின் அவர் இரண்டு வருடங்கள் இயக்கம் வழங்கிய பணிகளைச் சரிவரச் செய்து முடித்திருக்க வேண்டும்.

குமுதனைப் பொறுத்தவரை ஐந்து வருடங்களுக்கு மேலாக இயக்கம் வழங்கிய கடமைகளை இயக்கம் எதிர்பார்த்தது போல செய்து முடித்தவன். எனவே அதில் அவனிற்குத் தடையிருக்கவில்லை.

குறிக்கப்பட்ட நேரத்திற்குள் குறித்த வில பயிற்சிகளை செய்துமுடிக்கும் உடற்தகுதி பெற்றவரா என்ற கேள்விக்கும் அவன் இதுவரை பெற்ற பயிற்சிகள் விடைபகர்ந்தன. குமுதன் இயக்கத்திற்கு வந்ததிலிருந்து எந்தப்பயிற்சியிலும் விட்டுக் கொடுத்ததில்லை. எப்படியான பயிற்சி என்றாலும் செய்து முடிக்கக்கூடியவன். இதுவரை 50 கலிபர் பயிற்சி, சிறப்பு அதிரடிப் படைப் பயிற்சி போன்றன பெற்றிருக்கிறான். எனவே அதிலும் சிக்கல் இருக்கவில்லை. ஆனால் அடுத்து வந்த மருத்துவ பரிசோதனைதான் நிறையப்போரிற்கு அதிர்ச்சி தருவதாக இருந்தது. இதுவரையும் தனக்குள்ளேயே மறைத்து வைத்திருந்த நோய் அப்போதுதான் வெளித்தெரிய வந்தது. ஆனால் இதுவரை எந்த சந்தர்ப்பத்திலும் அவன் தன் நோயினை வெளிக்காட்டியதே இல்லை.

குமுதனிற்குள் இருக்கும் இதய நோயையும் தொய்வு நோயையும் மருத்துவ பரிசோதனை மூலம் அறிந்துகொண்ட போது, அவனைக் கரும்புலிகள் அணியில் சேர்த்துக்கொள்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.

குமுதனோ விடுகிறபாடில்லை. ஒரேபிடியாகத் தன்னைக் கரும்புலிகள் அணியில் இணைத்துக்கொள்ளுமாறு வேண்டினான். “அண்ணை தேர்வுப் பயிற்சி வரைக்கும் எண்டாலும் விடுங்கோ, நான் அதில என்னால முடியுமென்று நிரூபிச்சுக் காட்டுறன்” என்று கெஞ்சலான குரலில் உறுதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான் அவனது இலட்சிய தாகம் முழுவதையும் தனது குரலிலே பரவவிட்டான்.

அவனின் உறுதி குலையாத தன்மை வீணாகவில்லை. தேர்வுப் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டது. அதில் குமுதனும் ஒருவனாக இருந்தான்.

தேர்வுப் பயிற்சி நிறைவுறும் போது அனைத்துப் பயிற்சிகளிலும் சித்தி பெற்று தனது இலட்சியத்திற்கு நோய் இடையூறு இல்லை என நிரூபித்தான்.

இப்படித் தேசத்திற்காக தான் வரித்துக் கொண்ட கொள்கையில் உறுதியான குமுதன் தான் இப்போ ஆனையிறவுப் பெருந்தளத்தினுள் நுழைந்த கரும்புலிகள் அணியிற்கு தலைமைதாங்கி இலக்கை நெருங்கிக்கொண்டிருந்தான். இன்னும் சில விநாடிகளைக் காலம் வேகமாக விழுங்கிக்கொள்ளுமாயின் அங்கே இருளாய், அமைதியாய் நிலைத்திருக்கும் சூழ்நிலை மாறி புதிய சமர்க்களம் உருவாகும்.

அந்த ஓரிரு கண நேரத்திற்காகவே காலமும், கரும்புலியணி வீரர்களின் கால்களும் முன்னோக்கி வேகமாக நிதானமுடன் நகர்ந்து கொண்டிருந்தன. நினைவுகள் மட்டும் பின்னோக்கி விரையத் தொடங்கின.

கரும்புலிகள் பயிற்சி முடிய தாண்டிக்குளம் சண்டைக்குச் சென்று, அங்கு விழுப்புண் பட்டமையால் தாக்குதலில் பங்குபெறாது பின்னிற்கு வந்ததும் பின் விழுப்புண் குணமடைய மணவாளன்பட்டமுறிப்புச் சண்டையிற்குச் சென்றது என்று எல்லா நிகழ்விலும் நினைவுகள் தடம் பதிக்கத் தொடங்கியது.

அதிலும் மணவாளன்பட்டமுறிப்புத் தாக்குதல் வந்ததும் நினைவுகள் அதைவிட்டு நகரவேயில்லை.

எதிரி கைப்பற்றி வைத்திருக்கும் இராணுவ பிரதேசத்துக்குள் தான் அவர்களிற்கான இலக்கு. அதுவும் அதியுயர் பாதுகாப்பு வலயம் எனக் கருதி அங்கேயே அந்த உலங்கு வானூர்தி தரையிறங்கி ஏறியது. அந்த உலங்குவானூர்தியைத் தாக்கி அழிப்பதே தாக்குதல் அணியின் நோக்கமாகவிருந்தது.

கொமாண்டோப் பாணியில் சென்று இலக்கைத் தாக்குவது – அது சாத்தியப்படாவிட்டால் கரும்புலித்தாக்குதல் மூலமாவது அந்த இலக்கை அழித்து விட வேண்டும் என்பதற்காகவே கரும்புலிவீரர்கள் அந்தத் தாக்குதலுக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தார்கள்.

அதுவோ மிகவும் வித்தியாசமான இலக்கு. முன்திட்டமிடலோ மாதிரிப் பயிற்சியோ இல்லாது இலக்கைச் சென்றடைந்து அதைப்பார்த்து அங்கு நிலவும் களச்சூழலுக்கேற்ப அணித்தலைவரே முடிவெடுத்துச் செயற்பட வேண்டும். அதனால் அந்தக் கரும்புலிகள் அணியிற்கு குமுதனே தலைமை தாங்கிச் சென்றிருந்தான்.

தலைவரிற்கு குமுதனின் வழிநடத்தலில் அதிக நம்பிக்கையிருந்தது. ஏனென்றால் குமுதன் மெய்ப்பாதுகாப்புப் பணியேற்று தலைவருடன் நெருங்கி நின்ற நாட்களில் எல்லாம் அவனது ஒவ்வொரு அசைவையும் தலைவர் நேரே கவனித்தார்.

அப்போது அவனிற்குள் இருக்கும் வழி நடத்தும் ஆற்றலை தலைவர் நன்கு அறிந்திருந்தார். எனவேதான் இத்தாக்குதல் அணியை அவன் தலைமையிலேயே அனுப்பிவைத்தார். இலக்கினை நோக்கி கரும்புலிகள் அணி நகர ஆரம்பித்த கொஞ்ச நேரத்திற்குள் எல்லாம் வானம் பிரிந்து விட்டதைப்போல் மழை வாரிப் பொழிந்து கொண்டிருந்தது.

உடையோடு சேர்ந்து நனைந்து போயிருக்கும் உடலுக்குள்ளால் ஊசிபோல உள்நுழையும் குளிர் உடலின் ஒவ்வொரு கலத்தையும் நடுங்க வைத்தது.

தரையில் சாய்ந்து கொள்ளவோ, இருக்கவோ முடியாது. ஒரே சேறும் தண்ணீரும் நிறைந்திருந்தன. பேணிகளிலும் பைகளிலும் அடைக்கப்பட்ட உணவுகளைத் தவிர வேறொரு சூடான உணவுவகைகளும் இல்லை. இவ்வாறு சிக்கல் நிறைந்த சூழலில்தான் குமுதனிற்குள் மறைந்திருந்த அந்த நோய் வெளியே வரத் தொடங்கியது.

குமுதனால் ஒரு மூச்சைக்கூட சிரமம் இன்றி விடமுடியவில்லை. ஒவ்வொரு மூச்சையும் உள் இழுத்து வெளிவிடுவதற்கு ஒரு போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. குந்தியிருந்தான். குனிந்து நின்றான். கைகளை தலைக்கு மேல் உயர்த்தினான். இப்படி ஒவ்வொரு மூச்சுக்கும் சிரமப்பட்டாலும் தனக்கு இந்த நேரம் வந்த நோய் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்று பெரும் சிரமத்தின் மத்தியிலும் அதைத் தனக்குள்ளேயே மறைக்க முயன்றான்.

இந்த நேரத்தில் தன்னைப் பற்றியோ தனது வருத்தத்தைப் பற்றியோ சிந்திப்பவனாக இல்லை. அவனது நெஞ்சிற்குள் கதைத்ததெல்லாம் அந்த இலக்கை எப்படியும் அழித்துவிட வேண்டும் என்பதே.

இத்தனை சிரமங்களையும் பொருட்படுத்தாது இலக்கை அழித்துவிட வேண்டும் என்பதை மட்டுமே சுமந்து அந்த இலக்கை அழித்துவிட்டு வரும்வரையும் தனது நோயினைப்பற்றி யாருடனும் கதைக்கவேயில்லை. பின் மெல்ல மெல்ல கதை தெரியவந்தபோது அவனது உறுதியும் தாயகப்பற்றும் பளிச்சென்று வெளித்தெரிந்தது.

ஆனையிறவு தளத்திற்குள் தாக்குதல் ஆரம்பிக்கும் நேரம்வரை காத்திருந்த கரும்புலிகளை அதற்கான நேரம் அண்மிக்கக் குமுதனின் கட்டளையோடு தாக்குதல் ஆரம்பமானது.

இடியும் மின்னலும் தரையில் இருந்து பிறப்பெடுப்பதைப்போல சத்தமும் தீச்சுவாலைகளும் மண்ணில் எல்லா முனைகளிலும் இருந்தும் எழுந்தது.

அமைதியும் இருளும் கருக்கலைய ஆனையிறவுப் படைத்தளத்தின் மையத்தளம் புதிய சமரரங்கமாய் கருவுற்றிருந்தது.

கண்ணிற்குத் தெரியும் கறுப்பு உருவங்கள் எல்லாம் தங்கள் எதிரிகள் என்று இருட்டில் எல்லா இடங்களிலும் இராணுவம் சுட்டுக்கொண்டிருந்தது.

தாக்குதல் ஆரம்பித்த சில கணங்களுக்குள் கரும்புலிகள் அணி அவர்களிற்கு வழங்கப்பட்ட இலக்குகளை அழித்துவிட்டு திட்டத்தின்படி பின்வாங்கிக்கொண்டிருந்தார்கள்.

இந்த வேளையில்தான் குமுதன் விழுப்புண் அடைகிறான். அவன் விழுப்புண் அடைந்தாலும் நிதானத்தை இன்னும் இழந்துவிடவில்லை. களநிலைமைகளுக்கு ஏற்றதுபோல் கட்டளைகளை வழங்கிக்கொண்டிருந்தான்.

இப்போதெல்லாம் குமுதன் இன்னும் ஒரு தோழனின் கைத்தாங்கலிலேயே பின்னிற்கு நகர்ந்து கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் குமுதனைக் கைத்தாங்கலாகத் தூக்கி வந்த தோழனும் விழுப்புண் அடைந்துவிடுகிறான்.

குமுதனிற்கு தெரியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் நினைவிழந்து விடப்போகிறேன் என்று. இறுதியாக் கழிகின்ற ஒவ்வொரு கணத்திலும் தனது சிறு அசைவைக்கூட தேசத்திற்கு பயனுள்ளதாகச் செய்துவிட வேண்டுமெனத் துடித்துக் கொண்டிருந்தான்.

இறுதியாக அவனை பிரிந்துவிடத்துடிக்கும் மூச்சுக்காற்றையும் நினைவுகளையும் தக்கவைத்தபடி அவனிற்கான ஒவ்வொரு பணியையும் செய்து முடித்தான்.

அணிகள் அனைத்தையும் பின்வாங்குவதற்கேற்ற ஒழுங்குகளைச் செய்துவிட்டு விழுப்புண் பட்டாலும் பின்னிற்கு குமுதனையும் தூக்கிச் செல்வதற்காக நின்ற தோழனைப்பார்த்து “மச்சான் இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் சாஜ்சரை இழுக்கப்போறன்இ நீ கட்டாயம் வெளியில போய் இஞ்ச நடந்ததை சொல்ல வேண்டும். எத்தின இலக்கை அழிச்சனாங்கள்இ இன்னும் எத்தின இலக்கு இருக்குதெண்டு சொல்லு. அது இன்னொரு சண்டைக்கு உதவும்.”

அடுத்த சில மணித்துளிகளில் தனது சாவைத் தானே தீர்மானிக்கப்போகும் அந்த வீரன் சொல்லிய சேதி இது. எப்படி அவனால் முடிந்தது. எதிரிகளின் இடைவிடாத தாக்குதலுக்கு மத்தியிலும் தன் களமாடிய தோழர்களை இழந்துவிட்ட நிலையிலும் ஏற்கனவே பலவீனமான அவனது உடல் விழுப்புண் அடைந்து வேதனையால் சோர்ந்து விட்ட போதும் எதைப்பற்றியுமே சிந்திக்காது அந்த இறுதிக்கணத்திலும் அனது அணியைப் பற்றியும், தனக்கு வழங்கப்பட்ட கட்டளைகளைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்கும் அவன்;

இதுவரை காலமும் இயக்க வாழ்வில் ஒவ்வொரு மணித்துளியையும் எவ்வளவு பயனுடையதாக செலவு செய்திருப்பான் என்பதை எடுத்துக்காட்டியது. எவ்வளவு தூரம் எமது தாயகத்தில் பற்றுவைத்து உழைத்திருப்பான். குமுதன் கூறியனுப்பிய சேதிகளைச் சொல்லி விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே முகாமைவிட்டு பல சிரமங்களையும் பொருட்படுத்தாது வெளியேறிய தோழன் குமுதன் சொல்லிவிட்ட சேதிகளைச் சொன்ன போது குமுதன் காவியமாகிவிட்டான்.

அவன் சொல்லிவிட்ட சேதிகளே இன்னுமொரு தாக்குதலுக்கு பக்கபலமாக அமைந்துவிட்டது என்று எண்ணுகிறபோதெல்லாம் அந்த இளைய வீரனின் முகமே கண்ணுக்குள் தெரியும்.

அவன் என்றென்றைக்கும் வாழுகின்ற வரலாறு.

வீரப் போரிற்கு குமுதன் தோள்கொடுத்த களங்கள்:

கரும்புலியாகும் முன்:

  • ஆகாய கடல்வெளிப் பெருஞ்சமர்
  • மின்னல் இராணுவ நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதல்.
  • “ஓயாத அலைகள் 01” இல் அலம்பில் பகுதியில் தரையிறங்கிய விசேட அதிரடிப் படையினர் மீதான தாக்குதல்.
  • சத்ஜய 1, சத்ஜய 2 போன்ற இராணுவ நடவடிக்கைகளிற்கு எதிர் நடவடிக்கை.

கரும்புலியாகிய பின்:

  • தாண்டிக்குளம் இராணுவத்தளம் மீதான தாக்குதல்.
  • மணவாளன்பட்ட முறிப்பில் உலங்கு வானூர்தி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்.

இவர்பெற்ற சிறப்புப் பயிற்சிகள்:

  • 50 கலிபர் கனரக ஆயுதப் பயிற்சி
  • 203 பயிற்சி
  • மெய்ப்பாதுகாவலர் பயிற்சி
  • கரும்புலி அணிக்குரிய சிறப்புப் பயிற்சி.

– விடுதலைப்புலிகள் இதழ்

 

https://www.thaarakam.com/news/111447

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.