Jump to content

திக்சிகா வழிகாட்டிய பாதையில் உறுதியோடு பயணிப்போம் – பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திக்சிகா வழிகாட்டிய பாதையில் உறுதியோடு பயணிப்போம் – பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பு!

AdminJanuary 31, 2020
FB_IMG_1580466932234.jpg?fit=576%2C1024

தமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் மாவீரர் நாள் நிகழ்வு எழுச்சியுடன் இடம்பெறுவதற்கு திக்சி காத்திரமான பங்கு வகித்தவராவார்.

Thiksika the leader of Tamil Youth Organisation (UK), has died after being afflicted with cancer. Our thoughts are with her family and fellow activists.

பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பு.


எமது பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு நாங்கள் ஆறாத்துயரம் அடைந்துள்ளோம்.

எங்களுடன் கூடிக்குலாவிய எங்கள் நண்பியின் பிரிவுத் துயரத்தில் உறைந்திருக்கும் குடும்பத்தினரின் ஆறாத்துயரில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கின்றோம். தனது சிறு வயதிலிருந்தே தாயகம் நோக்கிய செயற்பாடுகளில் முழுவீச்சாக செயற்பட்டார், புதிய புதிய சிந்தனைகளில் தமிழ் மக்களின் துயரங்களை அனைத்துலகத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற சிந்தனை அவர் மனதில் வேரூன்றி நின்றது.

பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பை முன்னேற்றப் பாடுபடுகின்ற தூண்களில் ஒருவராக இருந்தவர் திக்சிகா. அவரின் ஒருங்கிணைப்பில் பல வேலைத்திட்டங்களைத் திட்டமிட்டுக்கொண்டிருக்கும் பொழுது புற்றுநோய் என்னும் கொடிய நோய் அவரை எங்களிடமிருந்து பறித்துச் சென்றுள்ளது.

தமிழ்ச் சமூகத்தினரிடையே இந்தப் புற்றுநோய் பெருமளவில் பரவிக்காணப்படுகின்றது. இன்று எம்மவர்களிடையே இதனைப் பற்றிய விழிப்புணர்வுகளும் இது தொடர்பான கருத்தரங்குகளும் இன்றியமையாத தேவையாக உள்ளன.

தமிழ் மருத்துவ அமைப்புகள் இதற்கான திட்டமிடல்களை முன்னெடுக்க வேண்டுமென இவ்வேளையில் தாழ்மையாக வேண்டுகின்றோம்.

திக்சியின் இழப்புத் தமிழீழம் நோக்கிப் பயணிக்கும் எங்களுக்குப் பேரிழப்பாக அமைந்துள்ள போதும், திக்சிகா வழிகாட்டிய பாதையில் பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பினராகிய நாங்கள் எங்கள் இலட்சியத்தை வென்றெடுக்கும் பணிகளில் மிகுந்த உத்வேகத்துடன் செயற்படுவோமென உறுதியெடுத்துக் கொள்கின்றோம்.

பிரிவுத் துயரோடும் இலட்சிய உறுதியோடும் 
தமிழ் இளையோர் அமைப்பு 
பிரித்தானியா.

அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்குத் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
 

http://www.errimalai.com/?p=49166

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடியல்ல!...இனி மேல் யார் ,யார் எல்லாம் எங்களுக்கு பாதை காட்ட வருவீனமோ தெரியாது:unsure:
தங்கையின் ஆத்மா சாந்தியடையட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

முடியல்ல!...இனி மேல் யார் ,யார் எல்லாம் எங்களுக்கு பாதை காட்ட வருவீனமோ தெரியாது

ஏனிந்த வெறுப்பு ?

இந்த இளவயதில் பொறுப்பாளராக இருந்து தன்னால் முடிந்த தாயக  பயணத்தில் பங்காற்றியவர் மேல் .....................எனிவே தங்கை திக்சிவாகுக்கு கண்ணீர் அஞ்சலிகள் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் பிரிவால் துயருற்றிக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கின்றேன். அன்னாரின் ஆத்ம சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

தமிழ்ச் சமூகத்தினரிடையே இந்தப் புற்றுநோய் பெருமளவில் பரவிக்காணப்படுகின்றது. இன்று எம்மவர்களிடையே இதனைப் பற்றிய விழிப்புணர்வுகளும் இது தொடர்பான கருத்தரங்குகளும் இன்றியமையாத தேவையாக உள்ளன.

முக்கியமான ஒன்று பூனைக்கு மணி கட்டுவது போல் காலம் பிந்தி யோசிக்கினம்  நெடுக்கரின் ராடான் வாய்வு சம்பந்தப்பட்ட ஆக்கத்தை யாழில் தேடவேண்டி உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர்களின் மரபணுக்கள் பரிசோதிக்கப்பட்டு.. எம் இனத்தை தாக்கும் புற்றுநோய்களுக்குரிய ஜீன்கள் கண்டறியப்படின்.. எதிர்காலத்தில் எம் சந்ததிகளை புற்றுநோய் தாக்கத்தில் இருந்தும் வலுவாக பாதுக்காக்கும் பொறிமுறையை நடைமுறைப்படுத்தலாம்.

ஆனால்.. எமது வெட்டிக் கெளரவங்களும்.. ஏட்டுச்சுரக்காய் படிப்புகளும்.. எமது இனத்துக்கு என்று தான் உதவி இருக்குது..???! 

தாய் மண்ணை நீங்கி வாழினும்.. தாய் மண்ணின் விடுதலையின் தேவையை உணர்ந்து வளர்ந்து வாழ்ந்து உழைத்த அன்புத் தங்கைக்கு கண்ணீரஞ்சலிகள்.

புலம்பெயர் இளையோர் சமூகம்.. இவரின் பாதையில் தடம் மாறாமல் பயணிக்கும் என்று நம்புவோமாக. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக இளம் வயதில், மரணம். மிகவும் சோகமானது.
அன்னாரின் மறைவுக்கு.... ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்வி. திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்கள் “தேசத்தின் இளஞ்சுடர்”என மதிப்பளிப்பு

On Feb 2, 2020

செல்வி. திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்கள் “தேசத்தின் இளஞ்சுடர்”என மதிப்பளிப்பு

இளையோர் அமைப்பின் பிரித்தானியாப் பொறுப்பாளர் செல்வி. திக்சிகா சிறிபாலகிருஸ்ணன்  அவர்கள், கடந்த 30.01.2020 அன்று உடல்நலம் பாதிப்படைந்த நிலையில் சாவடைந்தார் என்ற செய்தி எம் நெஞ்சங்களில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WhatsApp-Image-2020-01-30-at-16.51.41-1.தமிழீழ விடுதலை நோக்கிய எமது செயற்பாட்டில் சிறுவயதில் இருந்தே தன்னை ஈடுபடுத்துவதில்  ஆர்வமிக்கவராக இருந்து, 2004ஆம் ஆண்டு இளையோர் அமைப்பின் உதவியாளராக செயற்பட்டு 2005ஆம் ஆண்டு செயற்பாட்டாளராக இணைத்துக்கொண்டவர்.

போராட்டத்தின் தேவையை உணர்ந்து விடுதலைசார் கருத்துருவாக்க விழிப்புணர்வுகளை நாடகங்கள், எழுச்சிநடனங்கள், எழுத்துருவாக்கங்கள் என பல்துறை வடிவங்களில் வெளிப்படுத்தி, எமது மக்களுக்கு மட்டுமல்லாது வேற்றின மக்களுக்கும் எடுத்துச்செல்வதில் பெரும்பங்காற்றியிருந்தார்.

தமிழீழ மண்ணில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழின அழிப்பை அனைத்துலக சமூகத்திடம் கொண்டுசெல்ல பல்வேறு வேலைத்திட்டங்களைத் திட்டமிட்டு செயலாற்றி, அதை பல் மொழிகளில் சமூகவலைத்தளங்கள் ஊடாகப் பரப்புரைகளை மேற்கொண்டதுடன் இளையோர் ஆதரவுத் தளத்தையும் வலுப்படுத்த இரவு, பகல் பாராது அயராது உழைத்தவராவார்.

இவரது ஆற்றலும், ஆளுமையும், தாயகப்பற்றுறுதியும் எப்போதுமே திடமானவை. 2009 ஆம் ஆண்டில் தாயகத்தில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கமைவாக இளையோரின் தேவையை நன்குணர்ந்து புலம்பெயர் போராட்டங்கள் அனைத்திலும் பங்குபற்றியது மட்டுமல்லாது அதனை பொறுப்புடனும் செயற்படுத்தியிருந்தார்.

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%புலம் பெயர் தமிழர் வரலாற்றில் செல்வி. திக்சிகா அவர்களின்  விடுதலைச் செயற்பாடுகள் தமிழீழ வரலாற்றில் இடம்பெறும் என்பது திண்ணம். இன்று இளையோர் அமைப்பால் தொடரப்படுகின்ற தாயக விடுதலைப் பணிகளுக்கு இவரின் பங்களிப்பு ஒரு எடுத்துக்காட்டாகவே அமைகின்றது. நோய் வருத்தியபோதும் தளராமல் ஓய்வின்றி, தாயகவிடுதலைக் கனவோடு பணியாற்றிய இளையவளை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்களின்  துன்பத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன், அவர்களுக்கு எமது ஆறுதலையும்  தெரிவித்துக்கொள்கின்றோம். செல்வி. திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் இனப்பற்று, விடுதலைப்பற்று, எம் தேசத்துக்கு அவர் வழங்கிய உயரிய பங்களிப்பிற்காக “தேசத்தின் இளஞ்சுடர்” என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்.
 

https://www.thaarakam.com/news/111597

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் செல்வி திக்சிகா  அவர்களுக்கு அஞ்சலிகள்.

தாயகத்தின் விடுதலைக்காக உழைத்தவர்களுக்கு அவர்களுக்கு உரிய கெளரவம் கொடுக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்த அனைத்துலகச் செயலகம் இன்று யாரால் யாரின் தேவைகளுக்காக இயங்குகின்றது அல்லது இயக்கப்படுகின்றது. 2009 ற்குப்பின்னர் பகுதிகளாகப்பிரிந்த தாயகப்பற்றாளர்களில் அவர்கள் சாகவடைந்தால் ஒரு பகுதியினருக்கு மட்டுமே மதிப்பளிக்கப்படுகின்றது. சரி அதெல்லாம் விட்டுவிடலாம்.

என்றுமே எமது மதிப்பிற்குரிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களும் அவருடன் தளபதிகள் பலரும் இறுதிப் போரில் வீரச்சாவடைந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அவர்களின் வீரச்சாவினை இந்த அனைத்துலகத் தொடர்பகம் மறைப்பதன் காரணம் என்ன? அவர்களுக்கான உரிய மரியாதையை இதுவரை செய்யாததும் அந்த இயக்கத்தின் பெயரினை தமது சுயநலன்களுக்காகப் பாவிப்பதும் எந்த வகையில் சரியாக அமையும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விதுரன் said:

எமது மதிப்பிற்குரிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களும் அவருடன் தளபதிகள் பலரும் இறுதிப் போரில் வீரச்சாவடைந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அவர்களின் வீரச்சாவினை இந்த அனைத்துலகத் தொடர்பகம் மறைப்பதன் காரணம் என்ன?

தொக்கு நிற்கும் கேள்விகளுக்கு நாங்களே விடை சொல்லி.. அதுக்கு மறைப்பு என்று சொல்லிக் கொள்வேண்டிய தேவை என்ன..?!

தேசிய தலைவருக்கு உள்ள மதிப்பை அனைத்துலகச் செயலகம் தான் வழங்கனுன்னு இல்லை. அது மக்கள் மனங்களில் எப்போதும் உள்ளதே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விதுரன் said:

முதலில் செல்வி திக்சிகா  அவர்களுக்கு அஞ்சலிகள்.

தாயகத்தின் விடுதலைக்காக உழைத்தவர்களுக்கு அவர்களுக்கு உரிய கெளரவம் கொடுக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்த அனைத்துலகச் செயலகம் இன்று யாரால் யாரின் தேவைகளுக்காக இயங்குகின்றது அல்லது இயக்கப்படுகின்றது. 2009 ற்குப்பின்னர் பகுதிகளாகப்பிரிந்த தாயகப்பற்றாளர்களில் அவர்கள் சாகவடைந்தால் ஒரு பகுதியினருக்கு மட்டுமே மதிப்பளிக்கப்படுகின்றது. சரி அதெல்லாம் விட்டுவிடலாம்.

என்றுமே எமது மதிப்பிற்குரிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களும் அவருடன் தளபதிகள் பலரும் இறுதிப் போரில் வீரச்சாவடைந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அவர்களின் வீரச்சாவினை இந்த அனைத்துலகத் தொடர்பகம் மறைப்பதன் காரணம் என்ன? அவர்களுக்கான உரிய மரியாதையை இதுவரை செய்யாததும் அந்த இயக்கத்தின் பெயரினை தமது சுயநலன்களுக்காகப் பாவிப்பதும் எந்த வகையில் சரியாக அமையும்?

விடுதலைப் புலிகளே பல மாவீரர்களின் வீரச்சாவுகளை அறிவிக்கவில்லை.

அனைத்துலக தொடர்பகத்துடன் இயங்குபவர்களுக்கு அவர்களால் மதிப்பளிக்கப்படுகிறது...

 

Link to comment
Share on other sites

எங்கள் பிள்ளை திக்சிகாவின் சிறுவயது மரணம் துயர் தருகிறது.  தலை பணிந்து அஞ்சலிக்கிறேன். 

நண்பர் nedukkalapoovan   சொல்வதுபோல நமது இளையவர்களை பரவலாக  புற்றுநோய் தாக்குவது உண்மையாயின் அது எல்லோராலும் உடனடியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். அரை நூற்றாண்டுக்கும் மேலான ஆய்வுகள் இலங்கை தமிழர் குறிப்பாக யாழ் தமிழர் மத்தியில் தற்கொலை விகிதம் மிக மிக உயர் மட்டத்தில் இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. இத்தகைய விடயங்களையிட்டு ஒரு இனமாக நாம் தீவிர கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகும்.  

Link to comment
Share on other sites

இளவயதில் மறைந்தாலும் தாயக விடுதலைக்கான அவரின் செயற்பாடுகள் போற்றுதற்குரியது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎1‎/‎2020 at 7:40 PM, பெருமாள் said:

ஏனிந்த வெறுப்பு ?

இந்த இளவயதில் பொறுப்பாளராக இருந்து தன்னால் முடிந்த தாயக  பயணத்தில் பங்காற்றியவர் மேல் .....................எனிவே தங்கை திக்சிவாகுக்கு கண்ணீர் அஞ்சலிகள் .

 

எனக்கு இந்த பெண் மீது எந்த வித கோபமோ ,வெறுப்போ  இல்லை ..இந்த தலையங்கம் சரியில்லை 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nedukkalapoovan said:

தொக்கு நிற்கும் கேள்விகளுக்கு நாங்களே விடை சொல்லி.. அதுக்கு மறைப்பு என்று சொல்லிக் கொள்வேண்டிய தேவை என்ன..?!

தேசிய தலைவருக்கு உள்ள மதிப்பை அனைத்துலகச் செயலகம் தான் வழங்கனுன்னு இல்லை. அது மக்கள் மனங்களில் எப்போதும் உள்ளதே. 

நெடுக்காலபோவன் தலைவருக்கும் ஈழப் போரட்டத்திற்காக தங்கள் உயிரை ஆகுதியாக்கியவர்களுக்கும் நான் நீங்கள் ஏன் இன்னமும் பல தனிநபர்களும் உரிய மரியாதையைும் கெளரவத்தையும் வழங்கித் தான் வருகின்றோம். தனி நபர்களைத் தாண்டி சமூகத்தினை வழி நடத்த என்று பல்வேறு அமைப்புகள் உள்ளன. 2009 ற்கு முற்பட்ட காலத்தில் தாயகத்தில் இருந்து இவைகள் ஒழுங்கமைக்கப்பட்டு சரியான முறையில் அனைத்தும் நெறிப்படுத்தப்பட்டன. 2009ற்குப்பின்னர் தான் தோன்றித் தனமாக சுயலாபங்களுக்காக ஒரு சமூகத்தினை இவர்கள் ஏமாற்றுவதை இனியும் தொடர்ந்து அனுமதிக்கப் போகின்றோமா?

21 hours ago, MEERA said:

விடுதலைப் புலிகளே பல மாவீரர்களின் வீரச்சாவுகளை அறிவிக்கவில்லை.

அனைத்துலக தொடர்பகத்துடன் இயங்குபவர்களுக்கு அவர்களால் மதிப்பளிக்கப்படுகிறது...

 

ஆம் விடுதலைப்புலிகளால் செய்யப்பட்ட சில தாக்குதல்களுக்கு உரிமை கோரப்பட்டதுமில்லை. அப்படி உரிமை கோரப்படாத தாக்குதலில் தங்களை ஆகுதியாக்கியவர்களின் பெயர்கள் வெளிப்படுத்தப்பட்டதுமில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் குடும்பத்திற்குக்கூட பல காலத்தின் பின் வீரச்சாவு என சொல்லப்பட்டதேயொழிய எங்கு வீரச்சாவடைந்தார்கள் என்ற தகவல் சொல்லப்பட்டதில்லை. ஆனால் பெயர்கள் வெளிப்படுத்தப்படாதபோதும் அவர்களுக்கு பெயரின்றி நினைவு நடுகற்கள் மாவீரர் துயிலுமில்லங்களில் நடப்பட்டு உரிய மரியாதை செய்யப்பட்டது.

இங்கு எனது கேள்வி தலைவர் வீரச்சாவு என்று தெரிந்தும் ஏன் இந்தச் சுமூகத்தினை தொடரந்து ஏமாற்றுகின்றார்கள் என்பதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விதுரன் said:

இங்கு எனது கேள்வி தலைவர் வீரச்சாவு என்று தெரிந்தும் ஏன் இந்தச் சுமூகத்தினை தொடரந்து ஏமாற்றுகின்றார்கள் என்பதே.

மன உளவியல் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.