Jump to content

உயிர் கொல்லி கொரொனா : அடிக்கடி கைகளை கழுவுவதே ஒரே வழி


Recommended Posts

சீனாவின் ஹுபே மாகாணத்திலுள்ள வுஹான் நகரில் ஆரம்பித்த உயிர்கொல்லி கொரோனா வைரஸ் தாக்கம் இன்று முழு உலகத்துக்கும் ஓர் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச மருத்துவ அமைப்புக்கள் திணறிக் கொண்டிருக்கின்றன. எப்படி இதிலிருந்து மீண்டு வருவது என்பதே இன்று உலக வாழ் மக்கள் மத்தியில் பாரிய சவாலாகமாறியிருக்கின்றது.

வுஹான் நகரில் நபரொருவர் ஒருநாள் காலையில் எழுந்தபோது மூச்சு விடுவதற்கு கஷ்டப்பட்டிருக்கின்றார். அவர் ஒரு வைத்தியரிடம் சென்று தன்னைப் பரிசோதித்திருக்கின்றார். அப்போது அவரை பரிசோதித்த வைத்தியர்கள் குறித்த நபரின் உடலில் தொற்றியிருக்கின்ற வைரஸ் குறித்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அப்போதிருந்து பரவிய இந்த உயிர்கொல்லி வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளதுடன் மக்களின் உயிருக்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

இதுவரை 18 நாடுகளுக்கு இந்த கொரோனா வைரஸ் பரவியுள்ளது;

10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 213 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அனைவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள். இலங்கையிலும் ஒரு சீனப்பெண் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி கண்டுபிடிக்கப்பட்டு ஐ.டி.எச். வைத்தியசாலையில் தனியறையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் தற்போது குணமடைந்து வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்திருக்கின்றார்.

முதலில் இந்த உயிர்கொல்லி வைரஸ் எவ்வாறு வெளியில் வருகின்றது என்பதைப் பார்க்க வேண்டும். பொதுவாகவே விலங்குகளில் இவ்வாறான வைரஸ்கள் இருக்கின்றன. அவை மனித உடலுக்குள் செல்வதால் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதுவரை விலங்குகளிலிருந்து ஏழு உயிர்கொல்லி வைரஸ்கள் மனிதனுக்கு பரவியிருக்கின்றன. முக்கியமாக 2000ஆம் ஆண்டுகளில் பரவிய சார்ஸ் வைரஸ் மிகக் கொடியதாகக் காணப்பட்டது. அதன் பின்னர் சிகா, இன்புளுவென்சா போன்ற வைரஸ்கள் விலங்குகளிலிருந்து மனிதனுக்கு பரவியிருந்தன.

மத்திய கிழக்கில் ஒட்டகத்திலிருந்து மேர்ஸ் என்ற வைரஸ் பரவியிருந்தது. அந்தவகையிலேயே விலங்கிவி ருந்து தற்போது மற்றுமொரு வைரஸ் மனிதனுக்கு பரவியிருக்கின்றது. இந்த வைரஸ் தற்போது ஒரு மனிதனின் உடலிலிருந்து மற்றுமொரு உடலுக்கு பரவிக்கொண்டு செல்கின்றது. இந்த விலங் குகளின் வைரஸ்கள் எவ்வாறு வெளியே வருகின்றன என்பதும் ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது. அதாவது பல வழிகளில் இந்த வைரஸ்கள் தொற்றலாம். இம்முறை இந்த கொரோனா வைரஸானது சீன வுஹான் நகரில் ஒரு நபர் பாம்பை  உண்டதால், அதிலிருந்து இந்த வைரஸ் பரவியிருப்பதாக நம்பப்படுகின்றது. எனினும், இதுவரை இந்த வைரஸ் மனித உடலுக்கு எவ்வாறு பரவியது என்பது தொடர்பான துல்லியமான தகவல்கள் வெளிவரவில்லை என்பதே யதார்த்தமாகும்.

எவ்வாறு வந்தது?
சீனாவின் ஹுபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் கடலுணவு சந்தையொன்று காணப்படுவதாகவும் அதில் காட்டு விலகினங்கள் விற்கப்படுவதாகவும் அதிலிருந்தே குறித்த நபர் பாம்பை வாங்கிவந்து உண்டதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.   இந்த கொரோனா வைரஸ் பரவலை யடுத்து வுஹான் நகரம் முழுமையாக மூடப்பட்டிருக்கின்றது. அங்கிருந்து யாரும் வெளியே செல்லவோ அல்லது உள்நுழையவோ முடியாது.

இந்த நிலையிலேயே உலக நாடுகள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கின்றன. இதற்கான தடுப்பூசியைத் தயாரிக்கும் தீவிர முயற்சியில் உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச சுகாதார நிறுவனங்கள் கடுமையாக ஈடுபட்டுள்ளன. எனினும் அது இலகுவான விடயமல்ல என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வுஹான் நகர் மூடப்பட்டுள்ளதால் அந்த நகரிலுள்ள வெளிநாட்டு மாணவர்கள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளனர். வுஹான் நகரிலுள்ள பல்கலைக்கழகங்களில் பல வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இலங்கை மாணவர்களும் அங்கு கல்வி கற்கின்றனர். இந்த நிலையில், இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் வுஹான் நகரிலுள்ள தமது மாணவர்களை அழைத்து வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இது தொடர்பில் சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன. எனினும், அது மிகவும் சிரமமான விடயமாகவே காணப்படுகின்றது. பல நாடுகள் சீனாவுக்கான விமானப் பயணங்களையும் ரத்து செய்து வருகின்றன.

இலங்கை அரசாங்கத்தால் இன்னும் வுஹான் நகரிலிருந்து ஒரு மாணவரைக்கூட அழைத்துவர முடியவில்லை. எனினும் இதற்கான தீவிர முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

வயது முதிர்ந்தவர்கள்
இந்த வைரஸானது வயது முதிர்ந்தவர்களையும் ஏலவே ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களையுமே அதிகளவில் தாக்குவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. தற்போது சீனாவில் உயிரிழந்திருக்கின்ற 213 பேரில் அதிகமானோர் வயது முதிர்ந்தவர்களாகவும் ஏலவே ஏதாவது நோயினால் பாதிக்கப்பட்டவர்களாகவுமே இருந்துள்ளனர்.

திணறும் நிலை
உலக நாடுகள் இந்த விடயம் தொடர்பில் என்ன செய்வது என்பது தெரியாமல் திணறும் சூழலில் இதிலிருந்து மனிதர்கள் தம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்கான வழிமுறைகளை சர்வதேச சுகாதார அமைப்பும் உள்நாட்டில் சுகாதார அமைச்சும் வெளியிட்டு வருகின்றன. குறித்த ஆலோசனைகளையும் வழிமுறைகளையும் பின்பற்றினால் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களில் தொடர்ச்சியாக மக்கள் தமது கைகளை சவர்க்காரமிட்டு கழுவுமாறு பிரதானமாக வலியுறுத்தியிருக்கின்றது. கைகள் அசுத்தமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவற்றை அடிக்கடி கழுவிக்கொண்டிருக்குமாறு சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது. மிக முக்கியமாக தும்மல், இருமல் வந்தால் உடனடியாக கைகளைக் கழுவ வேண்டும் என சுட்டிக்காட்டப்படுகின்றது. ஒரு நோயாளியைப் பராமரிப்பவர் அடிக்கடி கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும். அத்துடன் உணவு சமைப்பதற்கு முன்னரும் சமைத்த பின்னரும் உணவு உண்பதற்கு முன்னரும் கைகளை சுத்தமாக கழுவிக்கொள்வது அவசியம் என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.

கைகளைக் கழுவுங்கள்
இதேவேளை, இந்தக் கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகின்றது என்பது தொடர்பாக இலங்கை சமுதாய வைத்திய நிபுணர் ஆர். கேசவன் கேசரிக்கு கருத்து பகிர்கையில்,

இந்த கொரோனா வைரஸ் மனிதனில் இருந்து மனிதனுக்குப் பரவும் அபாயம் உள்ளது. இது எவ்வாறு ஓர் உடலிலிருந்து இன்னோர் உடலுக்குப் பரவுகின்றது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஒருவர் தும்மும் போது அல்லது இருமும் போது அவரின் வாயிலிருந்து உமிழ்நீர் வெளிவரும். அந்த உமிழ்நீர் கண்களுக்குப் புலப் படுவதில்லை. எனவே அந்த உமிழ்நீர் அருகில் இருக்கின்ற மேசைகள், கதிரைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களில் படியலாம். அது தவிர ஒருவர் ஒரு கட்டிடத்தின் மாடிப் படிகளில் ஏறும்போதோ அல்லது இறங்கும் போதோ தும்மினால் அந்தப் படிக்கட்டுகளில் அவரின் உமிழ்நீர் படியலாம். அச்சமயத்தில் வேறு யாராவது அந்தப் படியில் கை வைத்தால் அல்லது மேசைகள், கதிரைகள் உள்ளிட்ட பொருட்களில் கை வைக்கும்போது அந்த உமிழ்நீர் அவரின் கைகளில் படியும். அவர் அந்த கைகளை தனது வாய், மூக்கில் வைக்கும்போது இந்த வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் இருக்கின்றது. அத்துடன், பொதுப் போக்குவரத்தின்போதும், ஒன்றுகூடல்களில் போதும் இந்த நிலைமை ஏற்படலாம். எனவே இவை தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியது அவசியமாகிறது.

மிக முக்கியமாக கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டு கழுவிக்கொண்டிருப்பது மிக அவசியமாகும். வெளியேசென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியவுடன் உடனடியாக கைகளைக் கழுவ வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டாம் என்று நாம் கூறவில்லை. ஆனால், முகக்கவசம் அணிவதை விட கைகளை அடிக்கடி கழுவுவதே பாதுகாப்பான முறையாக இருக்கும்.

காய்ச்சல், சளி, இருமல், தும்மல், மூச்செடுப்பதற்கு சிரமம் ஆகியவையே இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகளாக இருக்கின்றன. எனவே, இவை தொடர்பான நிலைமை ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடவேண்டும். இந்த கொரோனா வைரஸ் உடலுக்குள் சென்றதும் நுரையீரலை தாக்குகின்றது. அதனைத் தொடர்ந்து நிமோனியா நிலை ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும் அபாயத்தைத் தோற்றுவிக்கின்றது. கடந்த காலங்களில் ஏற்பட்ட வைரஸ்களுடன் ஒப்பிடுகையில் இந்த கொரோனா வைரஸினால் உயிரிழப்பு என்பது  ஐந்து வீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
வயது முதிர்ந்தவர்கள், ஏலவே ஏதாவது நோய்த்தாக்கம் இருக்கின்றவர்கள் கவனமாக இருக்க வேண்டும். எப்படியும் அடிக்கடி கைகளைச் சுத்தமாகக் கழுவுவதன் மூலம் இந்த தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். எனவே, கைகளைக் கழுவுவதே இங்கு முக்கியமானதாகும்” என்றும் குறிப்பிட்டார்.

அந்தவகையில், பொதுமக்கள் தொடர்ச்சியாக சவர்க்காரமிட்டு கைகளை கழுவுவதற்கு பழகிக்கொள்ள வேண்டும். ஏதாவது பொருட்களில் கைகளை வைத்தால் உடனடியாக சவர்க்காரமிட்டு கைகளைக் கழுவுவது அவசியமாகின்றது. அதனூடாக இதிலிருந்து மனிதர்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இது தொடர்பாக இலங்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில்ஜாசிங்க கேசரியுடன் தகவல் பகிர்கையில்,

பொறுப்புடன் செயற்படுங்கள்
''முழு உலகத்துக்குமே நெருக்கடியான நேரம். இலங்கைக்கும் ஒரு வகையில் நெருக்கடியான நேரமாகவே உள்ளது. ஆனாலும், கொரோனா வைரஸ் தொடர்பில் அநாவசிய பயம் கொள்ள வேண்டாம். எனினும், நாம் தயாராக இருக்க வேண்டும். இது பரவுவதைத் தடுப்பதற்கு நாம் உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும். நாம் இலங்கைக்குள் இந்த வைரஸ் வருவதை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

பலாலி விமான நிலையத்திலும் இது நடைபெறுகின்றது. துறைமுகங்களிலும் கவனம் செலுத்தப்படுகின்றது. துறைமுகங்கள் ஊடாக வருகின்ற வெளிநாட்டவர்கள் குறித்தும் பரிசோதனை செய்யப்படுகின்றது.

விமான நிலையத்திலிருந்து வெளியேறும் வெளிநாட்டவர்கள் எங்கே பயணிக்கின்றனர் என்பது தொடர்பான விபரங்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம். சுகாதார பரிசோதகர்கள் அவர்களைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். சீன நாட்டவர்கள் அதிகம் பணியாற்றுகின்ற இடங்களைச் சென்று பார்வையிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை வைத்திய ஆய்வு நிறுவனம் நொவேல் கொரோனா 2019 என்ற வைரஸ் பரிசோதனை முறையை உருவாக்கியுள்ளது. எமது பிராந்தியததில் கொழும்பிலும் இந்தியாவின் புனே நகரில் மட்டுமே இந்த முறைமை உள்ளது என்று குறிப்பிட்டார்.

எனவே, பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியமாகின்றது. எப்போதும் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி சவர்க்காரமிட்டு கைகளைக் கழுவுவது முக்கியம். அடிக்கடி கைகளால் முகத்தைத் தொட்டுக்கொண்டிருக்க வேண்டாம். உலக சுகாதார அமைப்பும் ஏனைய அமைப்புக்களும் இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பது தொடர்பாக தீவிரமாக உழைத்து வருகின்றன.  எனினும், அதற்கு குறிப்பிட்ட காலப்பகுதி அவசியம் என சுட்டிக்காட்டப்படுகின்றது. 

எப்படியிருப்பினும் விரைவாக இதற்கான தடுப்பூசிகண்டுபிடிக்கப்பட்டுவிடும் என உலகம் நம்புகின்றது.

அதுவரை இந்த வைரஸ் பரவாமல் பார்த்துக்கொள்வதே மிக முக்கியமானது. வைத்திய நிபுணர்கள் கூறுவதைப்போன்று பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் சரியாகப் பின்பற்ற வேண்டும். மிக முக்கியமாக இறைச்சி உணவுகளை நன்றாக அவித்து சமைத்து உண்ணுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இல்லாவிடின் அவற்றில் உள்ள வைரஸ்கள்  மனிதனின் உடலை தாக்கும் அபாயம் உள்ளது. மக்கள் தமது பாதுகாப்புக்கு முகக்கவசத்தை அணியலாம். ஆனால், அதனைவிட எப்போதும் கைகளைச் சுத்தமாக வைத்திருத்தல் அவசியமாகின்றது. குறுகிய இடைவெளியில் இருந்து இருவர் பேசிக்கொள்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது. குறைந்தபட்சம் ஒருமீற்றர் இடைவெளி பேணப்படுவது அவசியம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

நெருக்கடியான இந்த காலகட்டத்தில் மக்கள் தமது உடல்நல பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தினதும் எமது நாட்டின் சுகாதார அமைச்சினதும் மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவசியமாகும். அதனூடாக இந்த அபாயகரமான உயிர்கொல்லி கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்க்க முடியும். எனவே, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

https://www.virakesari.lk/article/74733

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.