Jump to content

விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையில் இருந்து விலகுகிறோம் – இன்பராசா அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையில் இருந்து விலகுகிறோம் – இன்பராசா அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையுடன் தாம் இணைந்து செயற்படப்போவதில்லை என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் நிர்வாகக்குழு, ஆலோசனைக் குழு, செயற்குழு கூடி முடிவு ஒன்றினை எடுத்துள்ளார்கள்.

கடந்த ஜனவரி 11ஆம் திகதி உருவாக்கப்பட்ட போராளிகள் ஒன்றிணைவோம் என்று வவுனியாவில் போராளிகள் கட்சிகள் ஒன்றிணைவு நடைபெற்றுள்ளது. புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியும் கலந்து கொண்டிருந்தது. எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு போராளின் கட்சிகள் ஒன்று கூடி தேர்தலில் களமிறங்குவதாக அறிவித்துள்ளார்கள்.

இந்தக் குழு தலைமைத்துவம் இல்லாத ஒரு கூட்டுக்குழுவாக கூட்டுத் தலைமையாக நிர்வாகத்தில் இருக்கவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. முக்கிய நோக்கமாக போராளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பொதுத்தேர்தலில் பயணிக்க வேண்டும் என்ற நோக்கோடு உருவாக்கப்பட்டது.

இதனை விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை என்று சொல்லி உருவாக்கினார்கள். அதில் விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை என்ற கட்சிதான் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்பின்னரே நாங்கள் இந்த கூட்டில் இருந்து விலகிக்கொள்வதாக முடிவெடுத்துள்ளோம்.

இனிவரும் காலம் நடக்கப்போகும் பொதுத் தேர்தலில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் தனித்துவமாக நின்று போட்டியிடுவதற்கு புலம்பெயர் தேசத்தில் உள்ள அமைப்புக்கள் அனைவரும் சிந்தித்து கட்சிக்கு உதவிக்கரம் நீட்டவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/விடுதலைப்-புலிகள்-மக்கள்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.....

ஆமா ஓட்டு போடும் உரிமைகளற்ற புலம்பெயர் தேச அமைப்புக்கள் இதில் செய்வதற்கு என்ன உள்ளது?  அட பணமா

Link to comment
Share on other sites

6 hours ago, தமிழ் சிறி said:

தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.

காசு எப்பிடி கலெக்ட் பண்ணறது என்று பிளான் பண்ணிட்டார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.