Jump to content

புத்தனை தெரியும்... புத்தன் பொண்டாட்டியை எத்தனை பேருக்கு தெரியும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை புத்தனையும் துல்பனையும் கானவில்லை

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Kapithan said:

ஞானம் என்பது அறிவின் மேம்பட்ட, மிக உயர்ந்த நிலை.

அறிவுள்ளோர் எல்லாம் ஞானிகளல்ல. ஆனால் ஞானிகள் எல்லோரும் அறிவார்ந்தவர்கள் என்கிறேன்.


 

அறிவின் மேம்பட்ட மிக உயர்ந்த நிலை ஞானம் என்றால், அந்த ஞானத்தைப் பெறுவதற்கும் அறிவின் உச்ச நிலையை நாட வேண்டும் என்று சொல்கிறீர்கள்.

எந்த ஒரு மனிதனும் அறிவின் உச்ச எல்லையைத் தொட முடியாது.  அப்படித் தொட்டவர்கள் யாரும் இல்லை இந்த வையகத்தில்.

அரச மரத்தடியிலோ, காட்டிலோ அல்லது வீட்டிலோ யாரும் தவத்தினால் ஞானத்தைப் பெற முடியாது.  

புத்தர் அறிவாளி அல்ல.

புத்தர் அறிவின் உச்ச எல்லையைத் தொட்டவரும் இல்லை.

புத்தருக்கு ஞானம், அதாவது அறிவு, கிடைத்திருந்தால், பிறரின் மூலம் அவர் அடைந்திருக்க வேண்டும். 

அல்லது இறைவன் புறத்தில் இருந்து கிடைத்திருக்க வேண்டும்.

இயேசு என்பவர் ஞானியா?  ஒருபோதும் இல்லை.

முகம்மது நபி ஞானியா? அப்படியும் இல்லை.

ஞானி, ஞானம், ஞானம் அடைதல், அறிவின் உச்ச நிலை போன்ற சொல்லாடல்கள் - இந்து, புத்த மதங்களைத் தழுவியவை.   

 

 

Link to comment
Share on other sites

17 hours ago, மாங்குயில் said:

மிகவும் எளிதில் சொல்வதானால் - ஞானம் என்றால், அறிவு.

அறிவும் ஞானமும் ஒன்றல்ல, அவை வேறானது. ஊர்வன, பறப்பன, நடப்பன இவை அனைத்துக்கும் அறிவுண்டு, இந்த அறிவு இயற்கையால் வழங்கப்பட்டது. மனிதன் மட்டுமே தனக்குத் தரப்பட்ட அறிவை பல பிரிவுகளாக வகுத்துக்கொண்டான்.

ஞானம், இது மனிதர்களால் மட்டுமே பெறக்கூடியது. தற்கு வைராக்கியம், விவேகம், மனவடக்கம், புலனடக்கம், தியாகம், அமைதி, சமாதானம், பொறுமை,அகிம்சை, போன்ற குணங்கள் தேவை. இவற்றைக் கொண்டவர்களே ஞானத்தை அடையவும் ஏனையவர்களுக்கு வழிகாட்டவும் இயலும். 

On 2/4/2020 at 2:21 AM, மாங்குயில் said:

புத்தர் உண்மையிலேயே, ஞானோதயம்  அடைந்தாரா?

இப்படி, சில சிங்கள சகோதரர்களிடம் நான் விவாதித்தபோது, அவர்கள் எனக்கு அடிக்க வந்து விட்டார்கள்.

இங்கு நாங்கள் யாழ்கள உறவுகளாக இணைந்து இருந்தாலும் எங்கள்  ஒவ்வொருவருடைய அறிவும் சிந்தனையும் செயற்பாடும் வேறுவேறானவை என்பதனை, வெளிவரும் கருத்துக்கள் எடுத்தியம்புகின்றன. இதுபோலவே உலகமக்களும், புத்தர் பெருமானின் போதனைகளையும், உபதேசங்களையும் எடுத்துக் கொள்ளுவதைப் பொறுத்தே அவரும் விமர்ச்சிக்கப் படுகிறார். அவரை முகமூடியாக அணிந்து பிற இனத்தவரை அழிவுக்கு உள்ளாக்கும் சிங்கள இனத்தின் மூலமாகவே நாங்கள் புத்தர்பெருமானையும் அறிந்துகொள்ளும் நிலமை உள்ளதால், எங்களில் பலருக்கு அந்தப் பெருமானின் மேல் வெறுப்பேற்படுகிறது.

17 hours ago, Maruthankerny said:

அதைத்தான் புத்தன் செய்தான் ....
எங்கிருந்து வந்தோம் .. எங்கு போகப்போகிறோம்?
என்று தெரியாமல் இருந்த மனிதர்கள் நூறு புனைகதைகளை 
வடித்து வந்தார்கள் சொர்க்கம் நரகம் என்று நம்பி வந்தார்கள் 
எதுவுமே வெளியில் இல்லை  எல்லாமே உனக்குள்ளேயே இருக்கிறது 
என்று உலகுக்கு சொன்னான் ..

இவ்வுலகத்தில் தோன்றிய உயிர்கள் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை. உலகிலுள்ள நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து மூலப்பொருட்களிலிருந்தே உயிர்கள் உருவாகின்றன. இந்த மூலங்களால் இணைந்து உருவாக்கிய உயிர்கள் திரும்பவும் அந்தந்த மூலங்களாகப் பிரிந்து செல்வதையே நாங்கள் இறப்பு என்கிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Paanch said:

அறிவும் ஞானமும் ஒன்றல்ல, அவை வேறானது. ஊர்வன, பறப்பன, நடப்பன இவை அனைத்துக்கும் அறிவுண்டு, இந்த அறிவு இயற்கையால் வழங்கப்பட்டது. மனிதன் மட்டுமே தனக்குத் தரப்பட்ட அறிவை பல பிரிவுகளாக வகுத்துக்கொண்டான்

 

 

 

 

இறைவனின் படைப்புக்களில், உயிர் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் அறிவு/ஞானம் உண்டு.  

மனிதன் மாத்திரம், அறிவு விடயத்தில் வித்தியாசமாகப் படைக்கப்பட்டிருக்கிறான்.

ஒரு விடயத்தைப் பற்றிய ஞானத்தை, கல்வியினால் அல்லது அனுபவத்தினால் மனிதன் பெற்றுக்கொள்ள முடியும்.

பிற ஜீவராசிகளுக்கு மேலதிக கல்வி, ஞானம் இல்லை.

அவைகளுக்கு கொடுக்கப்பட்ட அறிவு மட்டுந்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மாங்குயில் said:


 

அறிவின் மேம்பட்ட மிக உயர்ந்த நிலை ஞானம் என்றால், அந்த ஞானத்தைப் பெறுவதற்கும் அறிவின் உச்ச நிலையை நாட வேண்டும் என்று சொல்கிறீர்கள்.

எந்த ஒரு மனிதனும் அறிவின் உச்ச எல்லையைத் தொட முடியாது.  அப்படித் தொட்டவர்கள் யாரும் இல்லை இந்த வையகத்தில்.

அரச மரத்தடியிலோ, காட்டிலோ அல்லது வீட்டிலோ யாரும் தவத்தினால் ஞானத்தைப் பெற முடியாது.  

புத்தர் அறிவாளி அல்ல.

புத்தர் அறிவின் உச்ச எல்லையைத் தொட்டவரும் இல்லை.

புத்தருக்கு ஞானம், அதாவது அறிவு, கிடைத்திருந்தால், பிறரின் மூலம் அவர் அடைந்திருக்க வேண்டும். 

அல்லது இறைவன் புறத்தில் இருந்து கிடைத்திருக்க வேண்டும்.

இயேசு என்பவர் ஞானியா?  ஒருபோதும் இல்லை.

முகம்மது நபி ஞானியா? அப்படியும் இல்லை.

ஞானி, ஞானம், ஞானம் அடைதல், அறிவின் உச்ச நிலை போன்ற சொல்லாடல்கள் - இந்து, புத்த மதங்களைத் தழுவியவை.   

அறிவு, ஞானம் இரண்டும் ஒன்றல்ல என்கின்ற அறிவு எனக்கு உள்ளபோதும் அதனை தெளிவுற உரைக்கக்கூடிய ஞானம் எனக்கு இல்லாத காரணத்தால் இந்த ஞானம்-அறிவு தொடர்பான கருத்தாடலில்(மட்டும்) இருந்து விலகுகிறேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, சுவைப்பிரியன் said:

எங்கடை புத்தனையும் துல்பனையும் கானவில்லை

இன்னும் அவை இரண்டுபேரும் மழை வேண்டித் தவமிருக்கினமோ தெரியாது அங்கே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5 நிமிஷம் மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தில், 
அட.... 3 நிமிஷம் நாம் சுவாசிக்கும் சுவாசத்தை உற்றுநோக்க திரணியற்ற சராசரி மனிதன் 
புத்தனை கோழை , அறிவற்றவன் என்று பேசுவது வெறும் பேச்சு.
இப்படியான வரிகள் நீங்கள் சிங்களவரை எதிரிகளாக பார்ப்பதால் தான் வருகிறது என்பது என்னுடைய கணிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kapithan said:

அறிவு, ஞானம் இரண்டும் ஒன்றல்ல என்கின்ற அறிவு எனக்கு உள்ளபோதும் அதனை தெளிவுற உரைக்கக்கூடிய ஞானம் எனக்கு இல்லாத காரணத்தால் இந்த ஞானம்-அறிவு தொடர்பான கருத்தாடலில்(மட்டும்) இருந்து விலகுகிறேன்.

நன்றி.



 

அறிவு, ஞானம் இரண்டும் ஒன்றல்ல என்கின்ற அறிவு உங்களுக்கு இருக்கிறது என்று ஒத்துக் கொள்கிறீர்கள்தானே!

உங்களுக்கு இருக்கும் அறிவைக்கொண்டுதானே,  அறிவு, ஞானம் இரண்டும் ஒன்றல்ல என்ற தீர்மானத்திற்கு வருகிறீர்கள்.

உங்களுக்கு இருக்கும் அறிவைக்கொண்டு,  'ஞானம்' என்பதை விபரிக்கலாமே!

அண்ணே,   உலகில் ஞானிகள் என்று சொல்பவர்கள் யாரும் கிடையாது.

உங்களுக்கு முடிந்தால், 'ஞானி' என்று சொல்லக் கூடியவர்கள் இப்போது உலகில் யாரும் இருந்தால் காட்டுங்கள்.

அவர் எந்த மதத்தவராயிருந்தாலும் பரவாயில்லை.

அப்படி யாரையும் உங்களுக்கு காட்ட முடியாது.  

இறந்துபோனவர்களைத்தான் காட்டலாம்.

இறந்தவர்களிடம் போய், அவர் 'ஞானியா' இல்லையா என்று பரிசோதிக்க முடியாதுதானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் என்ன சொன்னாலும் ஒரு பெண்ணை நேருக்கு நேர் பார்த்து நான் துறவறம் போகப் போறேன் என்று சொல்ல முடியாத ஆம்பிளை நிட் சயமாய் கோழை தான் .

 

On ‎2‎/‎3‎/‎2020 at 9:39 PM, nedukkalapoovan said:

Image may contain: 1 person

புத்தனாவது சுலபம், ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது?🌺🌸

புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க போகிறார்.

மனைவி கேட்கிறாள்: “என்னை விட்டுப் போனது பரவாயில்லை. ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே! நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனைக் காலமும் மிக நோகடித்து விட்டது. ஏன் என்னை காயப்படுத்தினீர்கள்?”

புத்தர் அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் பயந்தது அவளை அல்ல தன்னைத் தான் என்கிறார்.

மனைவி மகனின், முகம் பார்த்தால் தான் உறுதி குலைந்து அங்கேயே தங்கி விடுவேன் என பயந்ததாய் கூறுகிறார்.
அடுத்து அவர் மனைவி மிகச்செறிவான ஒரு கேள்வி கேட்கிறாள்.

அது இது தான்: “நீங்கள் இந்த அரண்மனையை விட்டு போகாமல் இங்கேயே தங்கி இருந்தால் ஞானம் பெற்றிருக்க முடியாதா?”

புத்தர் சொல்கிறார்: “தாராளமாக. அதற்கு நான் மலை, காடு, ஆசிரமங்கள் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை தான். ஆனால் இங்கிருந்து ஓடிப் போகும் போது நான் அதை அறிந்திருக்கவில்லை. உண்மையில் எங்கிருந்தாலும் எனக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கும். இடம் பொருட்டே அல்ல”

புத்தனின் வாழ்க்கையை போற்றும் யாரும் அவர் மனைவி யசோதராவைப் பற்றிப் பேசுவது இல்லை.

புத்தர் போனது போல் யசோதரா ஒரு நள்ளிரவில் வெளியேறி இருந்தால் இந்த உலகம் ஒப்புக் கொண்டிருக்குமா... ஓடுகாலி என்றிருக்கும்.
சரி, புத்தர் போன பின்பும்தான் என்ன செய்தது... அவளை வாழாவெட்டி என்றது.

அப்படி ஒன்றும் வயதாகிவிடாத அழகு மங்கை. ஒற்றைக் குழந்தை ராகுலன். விடுமா ஆண்வர்க்கம்.?

சாதாரணமாய் இருந்தாலே விடாது. உரிமையாய் ஒரு ராஜ்ஜியம் வேறு.

எவ்வளவு போராடியிருப்பாள்.?புத்தர் போனதும் தன் தலையை மழித்துக் கொண்டாள். தன் ஆடை அலங்கோலமாக்கிக் கொண்டாள். ஒற்றைப் பிள்ளையின் "அப்பா எங்கே" எனும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமலேயே பதின்வயது வரை வளர்க்கப் போராடினாள்.

எல்லாவற்றையும் துறந்து எத்தொல்லையும் இல்லாமல் துறவியானான் புத்தன்.
எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு, எல்லாத் துயரையும் அனுபவித்தபடி துறவியாய் வாழ்ந்தாள் யசோதரா.

எது கடினம் .? சொல்லுங்கள் யார் துறவி இப்போது.!!!

(முகநூல் வழி)

எனக்கு இந்த பதிவை  நெடுக்கர் கொண்டு வந்து இணைத்தது  ஆச்சரியம் அழிக்கிறது ... கல்யாணம் கட்டின பிறகு எப்படி எல்லாம் மாறுகிறார்கள் 
 

On ‎2‎/‎4‎/‎2020 at 1:31 AM, மாங்குயில் said:


யசோதரா துறவியாய் வாழ்ந்தாள் என்று யார்  உங்களுக்குத் சொன்னது?

 

அவவும் யாருடன் படுத்தா என்று கதை கட்டப் போறீங்களா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரதி said:


 

அவவும் யாருடன் படுத்தா என்று கதை கட்டப் போறீங்களா?

 


 

யசோதரா மட்டுமல்ல, புத்தர் கூட துறவியாக வாழ்ந்தார் என்று நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறது.

எல்லாவற்றையும் விட்டு விட்டு, காட்டில் போய் மரத்தினடியில் குந்தியிருந்து தவம் செய்வதால், ஒருவரின் ஆசாபாசங்கள் அகன்று போவதில்லை.

உடல் ஆசை, உள்ளத்தில் ஏற்படும் வருடல்கள் போன்றவற்றில் இருந்து விடுபட்டு, எந்த மனிதனாலும் வாழ முடியாது.

மனிதன் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறான்.  தனது மனித இயல்பிலிருந்து  ஒருபோதும் அவன் மாற முடியாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாங்குயில்,  ரதி, 
நமக்கு தெரியாத அல்லது புரியாத விடயங்களை எல்லாம் அப்படி ஒன்றுமே இல்லை, இருக்க முடியாது  என்று நினைப்பது அறியாமை. 
தெரியாததை தெரியாது என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்தால் தான் உண்மையை தேடும் ஆர்வமும், அந்த தேடலும் நமக்குள் நிகழும்.
இதை தான் நம் முன்னோர்கள் அழகாக "கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு" என்று கூறியுள்ளார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Sasi_varnam said:

மாங்குயில்,  ரதி, 
நமக்கு தெரியாத அல்லது புரியாத விடயங்களை எல்லாம் அப்படி ஒன்றுமே இல்லை, இருக்க முடியாது  என்று நினைப்பது அறியாமை. 
தெரியாததை தெரியாது என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்தால் தான் உண்மையை தேடும் ஆர்வமும், அந்த தேடலும் நமக்குள் நிகழும்.
இதை தான் நம் முன்னோர்கள் அழகாக "கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு" என்று கூறியுள்ளார்கள். 

சசி நான் என்ன எழுதி இருக்கிறேன் என்று வாசித்து விட்டா பதில் எழுதி உள்ளீர்கள்?... நான் புத்தர் காட்டில் போய் துறவறம் பூண்டார் என்பதை நம்புகிறேன்... ஆனால், அதை அவர் தைரியமாய் அவருடைய மனைவிக்கு சொல்லிப் போட்டு போயிருக்க வேண்டும்....மனைவியின் முகத்தை பார்த்து சொல்ல முடியாமல் ஒழித்து ஓடியவர் என்னைப் பொறுத்த வரை கோழை....புத்தரையும் பார்க்க யசோதரை எவ்வளவோ மேல் ....கும்பிடுவது என்றால் அவவை தான் கும்பிட வேண்டும் 
 

10 hours ago, மாங்குயில் said:


 

யசோதரா மட்டுமல்ல, புத்தர் கூட துறவியாக வாழ்ந்தார் என்று நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறது.

எல்லாவற்றையும் விட்டு விட்டு, காட்டில் போய் மரத்தினடியில் குந்தியிருந்து தவம் செய்வதால், ஒருவரின் ஆசாபாசங்கள் அகன்று போவதில்லை.

உடல் ஆசை, உள்ளத்தில் ஏற்படும் வருடல்கள் போன்றவற்றில் இருந்து விடுபட்டு, எந்த மனிதனாலும் வாழ முடியாது.

மனிதன் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறான்.  தனது மனித இயல்பிலிருந்து  ஒருபோதும் அவன் மாற முடியாது.

 

உங்கட கருத்தை பார்க்க உங்களுக்கே சிரிப்பாய் தெரியவில்லை....எத்தனையோ பெண்கள் கன்னியாஸ்திரிகளாய் போய் மத சேவை செய்யவில்லை ...எல்லாம் மனத்தை கட்டுப்படுத்துவதில் தான் இருக்கு...புத்தர் மனதை கட்டுப்படுத்த காட்டுக்கு போனார்...யசோதரை வீட்டில் இருந்தே மனதை கட்டுப்படுத்தினார்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, ரதி said:


 

உங்கட கருத்தை பார்க்க உங்களுக்கே சிரிப்பாய் தெரியவில்லை....எத்தனையோ பெண்கள் கன்னியாஸ்திரிகளாய் போய் மத சேவை செய்யவில்லை ...எல்லாம் மனத்தை கட்டுப்படுத்துவதில் தான் இருக்கு...புத்தர் மனதை கட்டுப்படுத்த காட்டுக்கு போனார்...யசோதரை வீட்டில் இருந்தே மனதை கட்டுப்படுத்தினார்
 


 

எல்லா ஆசைகளும் சேர்த்துத்தான், இறைவன் மனிதனைப் படைத்திருக்கிறான்.  

மனிதனின் மனதை ஓரளவுக்குத்தான் கட்டுப்படுத்த முடியும்.

கன்னியாஸ்திரிகள் தங்களது மனங்களை கட்டுப்படுத்திக்கொண்டு, தங்களது ஆசைகளை நிராசை ஆக்கிக் கொள்வதில்லை.

அவர்களுக்கு ஏற்படும் நெருடல்கள், உடல் இச்சைகளினால் எந்தளவு தூரம் அவஸ்தைப்படுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

நெருடல்கள், உடல் இச்சைகளை ஏதோ ஒருவகையில் அவர்களும் ஏதோ ஒருவிதத்தில் அடைந்து கொள்கிறார்கள்.

புத்த பிக்குகளும் அவ்வாறே.

துறவறம் என்பது, மனிதனாகவே ஏற்படுத்திக்கொண்ட ஒரு சாபக் கேடு.


 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.