Jump to content

புத்தனை தெரியும்... புத்தன் பொண்டாட்டியை எத்தனை பேருக்கு தெரியும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை புத்தனையும் துல்பனையும் கானவில்லை

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Kapithan said:

ஞானம் என்பது அறிவின் மேம்பட்ட, மிக உயர்ந்த நிலை.

அறிவுள்ளோர் எல்லாம் ஞானிகளல்ல. ஆனால் ஞானிகள் எல்லோரும் அறிவார்ந்தவர்கள் என்கிறேன்.


 

அறிவின் மேம்பட்ட மிக உயர்ந்த நிலை ஞானம் என்றால், அந்த ஞானத்தைப் பெறுவதற்கும் அறிவின் உச்ச நிலையை நாட வேண்டும் என்று சொல்கிறீர்கள்.

எந்த ஒரு மனிதனும் அறிவின் உச்ச எல்லையைத் தொட முடியாது.  அப்படித் தொட்டவர்கள் யாரும் இல்லை இந்த வையகத்தில்.

அரச மரத்தடியிலோ, காட்டிலோ அல்லது வீட்டிலோ யாரும் தவத்தினால் ஞானத்தைப் பெற முடியாது.  

புத்தர் அறிவாளி அல்ல.

புத்தர் அறிவின் உச்ச எல்லையைத் தொட்டவரும் இல்லை.

புத்தருக்கு ஞானம், அதாவது அறிவு, கிடைத்திருந்தால், பிறரின் மூலம் அவர் அடைந்திருக்க வேண்டும். 

அல்லது இறைவன் புறத்தில் இருந்து கிடைத்திருக்க வேண்டும்.

இயேசு என்பவர் ஞானியா?  ஒருபோதும் இல்லை.

முகம்மது நபி ஞானியா? அப்படியும் இல்லை.

ஞானி, ஞானம், ஞானம் அடைதல், அறிவின் உச்ச நிலை போன்ற சொல்லாடல்கள் - இந்து, புத்த மதங்களைத் தழுவியவை.   

 

 

Link to comment
Share on other sites

17 hours ago, மாங்குயில் said:

மிகவும் எளிதில் சொல்வதானால் - ஞானம் என்றால், அறிவு.

அறிவும் ஞானமும் ஒன்றல்ல, அவை வேறானது. ஊர்வன, பறப்பன, நடப்பன இவை அனைத்துக்கும் அறிவுண்டு, இந்த அறிவு இயற்கையால் வழங்கப்பட்டது. மனிதன் மட்டுமே தனக்குத் தரப்பட்ட அறிவை பல பிரிவுகளாக வகுத்துக்கொண்டான்.

ஞானம், இது மனிதர்களால் மட்டுமே பெறக்கூடியது. தற்கு வைராக்கியம், விவேகம், மனவடக்கம், புலனடக்கம், தியாகம், அமைதி, சமாதானம், பொறுமை,அகிம்சை, போன்ற குணங்கள் தேவை. இவற்றைக் கொண்டவர்களே ஞானத்தை அடையவும் ஏனையவர்களுக்கு வழிகாட்டவும் இயலும். 

On 2/4/2020 at 2:21 AM, மாங்குயில் said:

புத்தர் உண்மையிலேயே, ஞானோதயம்  அடைந்தாரா?

இப்படி, சில சிங்கள சகோதரர்களிடம் நான் விவாதித்தபோது, அவர்கள் எனக்கு அடிக்க வந்து விட்டார்கள்.

இங்கு நாங்கள் யாழ்கள உறவுகளாக இணைந்து இருந்தாலும் எங்கள்  ஒவ்வொருவருடைய அறிவும் சிந்தனையும் செயற்பாடும் வேறுவேறானவை என்பதனை, வெளிவரும் கருத்துக்கள் எடுத்தியம்புகின்றன. இதுபோலவே உலகமக்களும், புத்தர் பெருமானின் போதனைகளையும், உபதேசங்களையும் எடுத்துக் கொள்ளுவதைப் பொறுத்தே அவரும் விமர்ச்சிக்கப் படுகிறார். அவரை முகமூடியாக அணிந்து பிற இனத்தவரை அழிவுக்கு உள்ளாக்கும் சிங்கள இனத்தின் மூலமாகவே நாங்கள் புத்தர்பெருமானையும் அறிந்துகொள்ளும் நிலமை உள்ளதால், எங்களில் பலருக்கு அந்தப் பெருமானின் மேல் வெறுப்பேற்படுகிறது.

17 hours ago, Maruthankerny said:

அதைத்தான் புத்தன் செய்தான் ....
எங்கிருந்து வந்தோம் .. எங்கு போகப்போகிறோம்?
என்று தெரியாமல் இருந்த மனிதர்கள் நூறு புனைகதைகளை 
வடித்து வந்தார்கள் சொர்க்கம் நரகம் என்று நம்பி வந்தார்கள் 
எதுவுமே வெளியில் இல்லை  எல்லாமே உனக்குள்ளேயே இருக்கிறது 
என்று உலகுக்கு சொன்னான் ..

இவ்வுலகத்தில் தோன்றிய உயிர்கள் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை. உலகிலுள்ள நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து மூலப்பொருட்களிலிருந்தே உயிர்கள் உருவாகின்றன. இந்த மூலங்களால் இணைந்து உருவாக்கிய உயிர்கள் திரும்பவும் அந்தந்த மூலங்களாகப் பிரிந்து செல்வதையே நாங்கள் இறப்பு என்கிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Paanch said:

அறிவும் ஞானமும் ஒன்றல்ல, அவை வேறானது. ஊர்வன, பறப்பன, நடப்பன இவை அனைத்துக்கும் அறிவுண்டு, இந்த அறிவு இயற்கையால் வழங்கப்பட்டது. மனிதன் மட்டுமே தனக்குத் தரப்பட்ட அறிவை பல பிரிவுகளாக வகுத்துக்கொண்டான்

 

 

 

 

இறைவனின் படைப்புக்களில், உயிர் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் அறிவு/ஞானம் உண்டு.  

மனிதன் மாத்திரம், அறிவு விடயத்தில் வித்தியாசமாகப் படைக்கப்பட்டிருக்கிறான்.

ஒரு விடயத்தைப் பற்றிய ஞானத்தை, கல்வியினால் அல்லது அனுபவத்தினால் மனிதன் பெற்றுக்கொள்ள முடியும்.

பிற ஜீவராசிகளுக்கு மேலதிக கல்வி, ஞானம் இல்லை.

அவைகளுக்கு கொடுக்கப்பட்ட அறிவு மட்டுந்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மாங்குயில் said:


 

அறிவின் மேம்பட்ட மிக உயர்ந்த நிலை ஞானம் என்றால், அந்த ஞானத்தைப் பெறுவதற்கும் அறிவின் உச்ச நிலையை நாட வேண்டும் என்று சொல்கிறீர்கள்.

எந்த ஒரு மனிதனும் அறிவின் உச்ச எல்லையைத் தொட முடியாது.  அப்படித் தொட்டவர்கள் யாரும் இல்லை இந்த வையகத்தில்.

அரச மரத்தடியிலோ, காட்டிலோ அல்லது வீட்டிலோ யாரும் தவத்தினால் ஞானத்தைப் பெற முடியாது.  

புத்தர் அறிவாளி அல்ல.

புத்தர் அறிவின் உச்ச எல்லையைத் தொட்டவரும் இல்லை.

புத்தருக்கு ஞானம், அதாவது அறிவு, கிடைத்திருந்தால், பிறரின் மூலம் அவர் அடைந்திருக்க வேண்டும். 

அல்லது இறைவன் புறத்தில் இருந்து கிடைத்திருக்க வேண்டும்.

இயேசு என்பவர் ஞானியா?  ஒருபோதும் இல்லை.

முகம்மது நபி ஞானியா? அப்படியும் இல்லை.

ஞானி, ஞானம், ஞானம் அடைதல், அறிவின் உச்ச நிலை போன்ற சொல்லாடல்கள் - இந்து, புத்த மதங்களைத் தழுவியவை.   

அறிவு, ஞானம் இரண்டும் ஒன்றல்ல என்கின்ற அறிவு எனக்கு உள்ளபோதும் அதனை தெளிவுற உரைக்கக்கூடிய ஞானம் எனக்கு இல்லாத காரணத்தால் இந்த ஞானம்-அறிவு தொடர்பான கருத்தாடலில்(மட்டும்) இருந்து விலகுகிறேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, சுவைப்பிரியன் said:

எங்கடை புத்தனையும் துல்பனையும் கானவில்லை

இன்னும் அவை இரண்டுபேரும் மழை வேண்டித் தவமிருக்கினமோ தெரியாது அங்கே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5 நிமிஷம் மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தில், 
அட.... 3 நிமிஷம் நாம் சுவாசிக்கும் சுவாசத்தை உற்றுநோக்க திரணியற்ற சராசரி மனிதன் 
புத்தனை கோழை , அறிவற்றவன் என்று பேசுவது வெறும் பேச்சு.
இப்படியான வரிகள் நீங்கள் சிங்களவரை எதிரிகளாக பார்ப்பதால் தான் வருகிறது என்பது என்னுடைய கணிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kapithan said:

அறிவு, ஞானம் இரண்டும் ஒன்றல்ல என்கின்ற அறிவு எனக்கு உள்ளபோதும் அதனை தெளிவுற உரைக்கக்கூடிய ஞானம் எனக்கு இல்லாத காரணத்தால் இந்த ஞானம்-அறிவு தொடர்பான கருத்தாடலில்(மட்டும்) இருந்து விலகுகிறேன்.

நன்றி.



 

அறிவு, ஞானம் இரண்டும் ஒன்றல்ல என்கின்ற அறிவு உங்களுக்கு இருக்கிறது என்று ஒத்துக் கொள்கிறீர்கள்தானே!

உங்களுக்கு இருக்கும் அறிவைக்கொண்டுதானே,  அறிவு, ஞானம் இரண்டும் ஒன்றல்ல என்ற தீர்மானத்திற்கு வருகிறீர்கள்.

உங்களுக்கு இருக்கும் அறிவைக்கொண்டு,  'ஞானம்' என்பதை விபரிக்கலாமே!

அண்ணே,   உலகில் ஞானிகள் என்று சொல்பவர்கள் யாரும் கிடையாது.

உங்களுக்கு முடிந்தால், 'ஞானி' என்று சொல்லக் கூடியவர்கள் இப்போது உலகில் யாரும் இருந்தால் காட்டுங்கள்.

அவர் எந்த மதத்தவராயிருந்தாலும் பரவாயில்லை.

அப்படி யாரையும் உங்களுக்கு காட்ட முடியாது.  

இறந்துபோனவர்களைத்தான் காட்டலாம்.

இறந்தவர்களிடம் போய், அவர் 'ஞானியா' இல்லையா என்று பரிசோதிக்க முடியாதுதானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் என்ன சொன்னாலும் ஒரு பெண்ணை நேருக்கு நேர் பார்த்து நான் துறவறம் போகப் போறேன் என்று சொல்ல முடியாத ஆம்பிளை நிட் சயமாய் கோழை தான் .

 

On ‎2‎/‎3‎/‎2020 at 9:39 PM, nedukkalapoovan said:

Image may contain: 1 person

புத்தனாவது சுலபம், ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது?🌺🌸

புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க போகிறார்.

மனைவி கேட்கிறாள்: “என்னை விட்டுப் போனது பரவாயில்லை. ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே! நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனைக் காலமும் மிக நோகடித்து விட்டது. ஏன் என்னை காயப்படுத்தினீர்கள்?”

புத்தர் அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் பயந்தது அவளை அல்ல தன்னைத் தான் என்கிறார்.

மனைவி மகனின், முகம் பார்த்தால் தான் உறுதி குலைந்து அங்கேயே தங்கி விடுவேன் என பயந்ததாய் கூறுகிறார்.
அடுத்து அவர் மனைவி மிகச்செறிவான ஒரு கேள்வி கேட்கிறாள்.

அது இது தான்: “நீங்கள் இந்த அரண்மனையை விட்டு போகாமல் இங்கேயே தங்கி இருந்தால் ஞானம் பெற்றிருக்க முடியாதா?”

புத்தர் சொல்கிறார்: “தாராளமாக. அதற்கு நான் மலை, காடு, ஆசிரமங்கள் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை தான். ஆனால் இங்கிருந்து ஓடிப் போகும் போது நான் அதை அறிந்திருக்கவில்லை. உண்மையில் எங்கிருந்தாலும் எனக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கும். இடம் பொருட்டே அல்ல”

புத்தனின் வாழ்க்கையை போற்றும் யாரும் அவர் மனைவி யசோதராவைப் பற்றிப் பேசுவது இல்லை.

புத்தர் போனது போல் யசோதரா ஒரு நள்ளிரவில் வெளியேறி இருந்தால் இந்த உலகம் ஒப்புக் கொண்டிருக்குமா... ஓடுகாலி என்றிருக்கும்.
சரி, புத்தர் போன பின்பும்தான் என்ன செய்தது... அவளை வாழாவெட்டி என்றது.

அப்படி ஒன்றும் வயதாகிவிடாத அழகு மங்கை. ஒற்றைக் குழந்தை ராகுலன். விடுமா ஆண்வர்க்கம்.?

சாதாரணமாய் இருந்தாலே விடாது. உரிமையாய் ஒரு ராஜ்ஜியம் வேறு.

எவ்வளவு போராடியிருப்பாள்.?புத்தர் போனதும் தன் தலையை மழித்துக் கொண்டாள். தன் ஆடை அலங்கோலமாக்கிக் கொண்டாள். ஒற்றைப் பிள்ளையின் "அப்பா எங்கே" எனும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமலேயே பதின்வயது வரை வளர்க்கப் போராடினாள்.

எல்லாவற்றையும் துறந்து எத்தொல்லையும் இல்லாமல் துறவியானான் புத்தன்.
எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு, எல்லாத் துயரையும் அனுபவித்தபடி துறவியாய் வாழ்ந்தாள் யசோதரா.

எது கடினம் .? சொல்லுங்கள் யார் துறவி இப்போது.!!!

(முகநூல் வழி)

எனக்கு இந்த பதிவை  நெடுக்கர் கொண்டு வந்து இணைத்தது  ஆச்சரியம் அழிக்கிறது ... கல்யாணம் கட்டின பிறகு எப்படி எல்லாம் மாறுகிறார்கள் 
 

On ‎2‎/‎4‎/‎2020 at 1:31 AM, மாங்குயில் said:


யசோதரா துறவியாய் வாழ்ந்தாள் என்று யார்  உங்களுக்குத் சொன்னது?

 

அவவும் யாருடன் படுத்தா என்று கதை கட்டப் போறீங்களா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரதி said:


 

அவவும் யாருடன் படுத்தா என்று கதை கட்டப் போறீங்களா?

 


 

யசோதரா மட்டுமல்ல, புத்தர் கூட துறவியாக வாழ்ந்தார் என்று நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறது.

எல்லாவற்றையும் விட்டு விட்டு, காட்டில் போய் மரத்தினடியில் குந்தியிருந்து தவம் செய்வதால், ஒருவரின் ஆசாபாசங்கள் அகன்று போவதில்லை.

உடல் ஆசை, உள்ளத்தில் ஏற்படும் வருடல்கள் போன்றவற்றில் இருந்து விடுபட்டு, எந்த மனிதனாலும் வாழ முடியாது.

மனிதன் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறான்.  தனது மனித இயல்பிலிருந்து  ஒருபோதும் அவன் மாற முடியாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாங்குயில்,  ரதி, 
நமக்கு தெரியாத அல்லது புரியாத விடயங்களை எல்லாம் அப்படி ஒன்றுமே இல்லை, இருக்க முடியாது  என்று நினைப்பது அறியாமை. 
தெரியாததை தெரியாது என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்தால் தான் உண்மையை தேடும் ஆர்வமும், அந்த தேடலும் நமக்குள் நிகழும்.
இதை தான் நம் முன்னோர்கள் அழகாக "கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு" என்று கூறியுள்ளார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Sasi_varnam said:

மாங்குயில்,  ரதி, 
நமக்கு தெரியாத அல்லது புரியாத விடயங்களை எல்லாம் அப்படி ஒன்றுமே இல்லை, இருக்க முடியாது  என்று நினைப்பது அறியாமை. 
தெரியாததை தெரியாது என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்தால் தான் உண்மையை தேடும் ஆர்வமும், அந்த தேடலும் நமக்குள் நிகழும்.
இதை தான் நம் முன்னோர்கள் அழகாக "கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு" என்று கூறியுள்ளார்கள். 

சசி நான் என்ன எழுதி இருக்கிறேன் என்று வாசித்து விட்டா பதில் எழுதி உள்ளீர்கள்?... நான் புத்தர் காட்டில் போய் துறவறம் பூண்டார் என்பதை நம்புகிறேன்... ஆனால், அதை அவர் தைரியமாய் அவருடைய மனைவிக்கு சொல்லிப் போட்டு போயிருக்க வேண்டும்....மனைவியின் முகத்தை பார்த்து சொல்ல முடியாமல் ஒழித்து ஓடியவர் என்னைப் பொறுத்த வரை கோழை....புத்தரையும் பார்க்க யசோதரை எவ்வளவோ மேல் ....கும்பிடுவது என்றால் அவவை தான் கும்பிட வேண்டும் 
 

10 hours ago, மாங்குயில் said:


 

யசோதரா மட்டுமல்ல, புத்தர் கூட துறவியாக வாழ்ந்தார் என்று நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறது.

எல்லாவற்றையும் விட்டு விட்டு, காட்டில் போய் மரத்தினடியில் குந்தியிருந்து தவம் செய்வதால், ஒருவரின் ஆசாபாசங்கள் அகன்று போவதில்லை.

உடல் ஆசை, உள்ளத்தில் ஏற்படும் வருடல்கள் போன்றவற்றில் இருந்து விடுபட்டு, எந்த மனிதனாலும் வாழ முடியாது.

மனிதன் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறான்.  தனது மனித இயல்பிலிருந்து  ஒருபோதும் அவன் மாற முடியாது.

 

உங்கட கருத்தை பார்க்க உங்களுக்கே சிரிப்பாய் தெரியவில்லை....எத்தனையோ பெண்கள் கன்னியாஸ்திரிகளாய் போய் மத சேவை செய்யவில்லை ...எல்லாம் மனத்தை கட்டுப்படுத்துவதில் தான் இருக்கு...புத்தர் மனதை கட்டுப்படுத்த காட்டுக்கு போனார்...யசோதரை வீட்டில் இருந்தே மனதை கட்டுப்படுத்தினார்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, ரதி said:


 

உங்கட கருத்தை பார்க்க உங்களுக்கே சிரிப்பாய் தெரியவில்லை....எத்தனையோ பெண்கள் கன்னியாஸ்திரிகளாய் போய் மத சேவை செய்யவில்லை ...எல்லாம் மனத்தை கட்டுப்படுத்துவதில் தான் இருக்கு...புத்தர் மனதை கட்டுப்படுத்த காட்டுக்கு போனார்...யசோதரை வீட்டில் இருந்தே மனதை கட்டுப்படுத்தினார்
 


 

எல்லா ஆசைகளும் சேர்த்துத்தான், இறைவன் மனிதனைப் படைத்திருக்கிறான்.  

மனிதனின் மனதை ஓரளவுக்குத்தான் கட்டுப்படுத்த முடியும்.

கன்னியாஸ்திரிகள் தங்களது மனங்களை கட்டுப்படுத்திக்கொண்டு, தங்களது ஆசைகளை நிராசை ஆக்கிக் கொள்வதில்லை.

அவர்களுக்கு ஏற்படும் நெருடல்கள், உடல் இச்சைகளினால் எந்தளவு தூரம் அவஸ்தைப்படுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

நெருடல்கள், உடல் இச்சைகளை ஏதோ ஒருவகையில் அவர்களும் ஏதோ ஒருவிதத்தில் அடைந்து கொள்கிறார்கள்.

புத்த பிக்குகளும் அவ்வாறே.

துறவறம் என்பது, மனிதனாகவே ஏற்படுத்திக்கொண்ட ஒரு சாபக் கேடு.


 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.