Jump to content

அறிவித்தல்: யாழ் இணையம் 22 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்


Recommended Posts

அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,


எதிர்வரும் 30.03.2020 அன்று யாழ் இணையம் தனது 22 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது.

யாழ் இணையம் 22 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

எனினும் இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 22 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.

எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.

யாழ் களம் 22 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் வெகுவிரைவில் தயாராகும். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் இரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.

விதிமுறைகள்:

  1. யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம்.
  2. ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும்.
  3. கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு  உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
  4. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம்.
  5. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம்.
  6. ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும்.
  7. ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும்.

"நாமார்க்கும் குடியல்லோம்"

நன்றி

 யாழ் இணைய நிர்வாகம்

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதற்குக் கிட்டத்தட்ட  இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதற்குக் கிட்டத்தட்ட  இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கே.

Quote

யாழ் களம் 22 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் வெகுவிரைவில் தயாராகும். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் இரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வருட ஆக்கங்களையே இன்னமும் படித்து முடிக்கவில்லை😳 ஒரு வருடம் ஓடிப்போனதே தெரியவில்லை! இந்த வருடம் சுடச்சுட படிக்க ரெடி!😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

கடந்த வருட ஆக்கங்களையே இன்னமும் படித்து முடிக்கவில்லை😳 ஒரு வருடம் ஓடிப்போனதே தெரியவில்லை! இந்த வருடம் சுடச்சுட படிக்க ரெடி!😁

இப்பதான் பார்த்தேன். சென்றவருடம் காஞ்சனாவை கூட நீங்கள் கண்டுகொள்ளவில்லை கிருபன் ஜீ .....ஐ யாம் சோ சாட் .....!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

இப்பதான் பார்த்தேன். சென்றவருடம் காஞ்சனாவை கூட நீங்கள் கண்டுகொள்ளவில்லை கிருபன் ஜீ .....ஐ யாம் சோ சாட் .....!   🤔

கடந்த வருடத்து ஆக்கங்களையும் இந்த வருடத்து ஆக்கங்களையும் ஒன்று சேர்த்து எப்படியும் படித்துவிடுவேன்! 

காஞ்சனை என்ற பெயரே பரிமளம் மாதிரி ஒரு அம்மாமியாக இருப்பதால் கண்ணில் தட்டுப்படவில்லை! ஒரு ஹம்சிகா, ஷ்ரேயா, ஷமரா என்று இருந்திருந்தால் அல்லது ரத்தி என்றாவது வைத்திருந்தால் சுடச்சுடப் படித்திருப்பேன்😁😬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

கடந்த வருடத்து ஆக்கங்களையும் இந்த வருடத்து ஆக்கங்களையும் ஒன்று சேர்த்து எப்படியும் படித்துவிடுவேன்! 

காஞ்சனை என்ற பெயரே பரிமளம் மாதிரி ஒரு அம்மாமியாக இருப்பதால் கண்ணில் தட்டுப்படவில்லை! ஒரு ஹம்சிகா, ஷ்ரேயா, ஷமரா என்று இருந்திருந்தால் அல்லது த்தி என்றாவது வைத்திருந்தால் சுடச்சுடப் படித்திருப்பேன்😁😬

கிருபன் ஜீ .... த்தி  என்ற பெயர் எழுதும் போது, ஒரு எழுத்துப் பிழை விட்டுள்ளீர்கள். :grin:
என்றாலும்... உங்கள் "மைண்ட் வாய்ஸ்சை"  திருத்தி வாசித்து விட்டோம்.   🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

கடந்த வருடத்து ஆக்கங்களையும் இந்த வருடத்து ஆக்கங்களையும் ஒன்று சேர்த்து எப்படியும் படித்துவிடுவேன்! 

காஞ்சனை என்ற பெயரே பரிமளம் மாதிரி ஒரு அம்மாமியாக இருப்பதால் கண்ணில் தட்டுப்படவில்லை! ஒரு ஹம்சிகா, ஷ்ரேயா, ஷமரா என்று இருந்திருந்தால் அல்லது ரத்தி என்றாவது வைத்திருந்தால் சுடச்சுடப் படித்திருப்பேன்😁😬

அடுத்து ஒரு கதை எழுதுவதாக இருந்தால் அதில் ஒரு பாத்திரம் ரத்தியாக இருக்கும் என்பதை அன்புடன் கூறிக் கொள்கின்றேன்........!

கஞ்சா விற்கும் காஞ்சனா ......ஒரு கிளுகிளுப்பில் வைத்தது.......!   😂

ரத்திக்கு வரும் அஞ்சல்கள் கிருபனிடம் அனுப்பி வைக்கப்படும்.....!    😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

கிருபன் ஜீ .... த்தி  என்ற பெயர் எழுதும் போது, ஒரு எழுத்துப் பிழை விட்டுள்ளீர்கள். :grin:
என்றாலும்... உங்கள் "மைண்ட் வாய்ஸ்சை"  திருத்தி வாசித்து விட்டோம்.   🤣

ரத்தி   நிறம் மாறத பூக்கள் படத்தின்ரை பாதிப்பு 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

அடுத்து ஒரு கதை எழுதுவதாக இருந்தால் அதில் ஒரு பாத்திரம் ரத்தியாக இருக்கும் என்பதை அன்புடன் கூறிக் கொள்கின்றேன்........!

கஞ்சா விற்கும் காஞ்சனா ......ஒரு கிளுகிளுப்பில் வைத்தது.......!   😂

ரத்திக்கு வரும் அஞ்சல்கள் கிருபனிடம் அனுப்பி வைக்கப்படும்.....!    😁

ரத்தி என்றும் வைக்கலாம் ரத்தீ 🔥 என்றும் வைக்கலாம்!!!😜

எப்பவுமே அருகில் உள்ளவையின் அருமை தெரியாது. அதனால்தான் தினமும் வரும் யாழில் வருபவை ஆறுதலாகப் படிக்கலாம் என்று வெளியே உள்ளவற்றைத் தேடித் தேடி படிப்பது😁. இந்த மனநிலையை மாற்ற முயற்சிக்கின்றேன்😎

gettyimages-493656728.jpg

 

 

46 minutes ago, குமாரசாமி said:

ரத்தி   நிறம் மாறத பூக்கள் படத்தின்ரை பாதிப்பு 😎

கு.சா. ஐயாதான் கற்பூரம் மாதிரிக் கப்பெண்டு பிடிச்சிட்டார்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

ரத்தி என்றும் வைக்கலாம் ரத்தீ 🔥 என்றும் வைக்கலாம்!!!😜

எப்பவுமே அருகில் உள்ளவையின் அருமை தெரியாது. அதனால்தான் தினமும் வரும் யாழில் வருபவை ஆறுதலாகப் படிக்கலாம் என்று வெளியே உள்ளவற்றைத் தேடித் தேடி படிப்பது😁. இந்த மனநிலையை மாற்ற முயற்சிக்கின்றேன்😎

gettyimages-493656728.jpg

 

 

கு.சா. ஐயாதான் கற்பூரம் மாதிரிக் கப்பெண்டு பிடிச்சிட்டார்!

 

அவவின் பெயர்கூட " ரத்தி அக்னீ ஹோத்ரிதான்"   😁

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

அவவின் பெயர்கூட " ரத்தி அக்னீ ஹோத்ரிதான்"   😁

ஏன் சுவி அவர்களே! அவவின் பெயரை "ரத்தி அகினீ கோத்ரிதான்" என்று தமிழ் சொல்லைப் பாவித்து எழுதினால்....! தமிழுக்கு இழுக்காகுமா அல்லது பொருந்தாதா...??  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1.jpg

எல்லோருக்கும் ஒரு ரசனை..!

ஆனால் எனக்கு இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம்/பார்க்கும்போதெல்லாம் கல்லூரி நாட்களில் கிராமத்திலிருந்து என் ஐயா அனுப்பும் காசை மிச்சப்படுத்தி வாங்கிய இதே மாதிரியான "அய்வா(AIWA) காசட் ரெக்கார்டர்" தான் நினைவுக்கு வரும்..!

இப்பொழுதும் வீட்டில் 'பனாசோனிக் 443' வைத்திருக்கிறேன். பழையவை என்றும் மறப்பதில்லை..என்றும் பசுமையான நினைவுகளுடன்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ட பெயரை வைத்து கொமடி ,கீமடி பண்ணேலையே 😠

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2020 at 2:06 PM, Paanch said:

ஏன் சுவி அவர்களே! அவவின் பெயரை "ரத்தி அகினீ கோத்ரிதான்" என்று தமிழ் சொல்லைப் பாவித்து எழுதினால்....! தமிழுக்கு இழுக்காகுமா அல்லது பொருந்தாதா...??  

Résultat de recherche d'images pour "vadivelu gift memes"

ஏன் .......நல்லாத்தானே போய்ட்டிருக்கு .......!   😁

Link to comment
Share on other sites

On 2/8/2020 at 7:34 PM, suvy said:

Résultat de recherche d'images pour "vadivelu gift memes"

ஏன் .......நல்லாத்தானே போய்ட்டிருக்கு .......!   😁

247 எழுத்துக்களைக் கொண்டதுதானே தமிழ்..... அதற்கு மேலாக நானும் தமிழ் எழுத்தென்று சில வடமொழி எழுத்துக்களும் கூத்தாடுகின்றதாம், ஏனென்று தெரியவில்லை என்கிறார் வைகைப்புயல் வடிவேலு அவர்களும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Paanch said:

247 எழுத்துக்களைக் கொண்டதுதானே தமிழ்..... அதற்கு மேலாக நானும் தமிழ் எழுத்தென்று சில வடமொழி எழுத்துக்களும் கூத்தாடுகின்றதாம், ஏனென்று தெரியவில்லை என்கிறார் வைகைப்புயல் வடிவேலு அவர்களும். 

"தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்" பாஞ்ச் ..... கொஞ்சம் மாறத்தான் வேண்டும்.......!   😁

Link to comment
Share on other sites

3 minutes ago, suvy said:

"தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்" பாஞ்ச் ..... கொஞ்சம் மாறத்தான் வேண்டும்.......!   😁

யாழ்களத்திற்கு  22 வயதாகிறது கல்யாணம் கட்டிவைத்திருந்தால் ஐந்தாறு பெத்திருக்கும். அதற்கும் பழக்கத்திற்கும் என்ன தொடர்பு...??? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2020 at 11:57 AM, Paanch said:

யாழ்களத்திற்கு  22 வயதாகிறது கல்யாணம் கட்டிவைத்திருந்தால் ஐந்தாறு பெத்திருக்கும். அதற்கும் பழக்கத்திற்கும் என்ன தொடர்பு...??? 

நீங்கள் இப்ப என்ன சொல்ல வாறீங்கள் பாஞ்ச்,   யாழ் களத்தில் எல்லோரும் ஆண் மட்டுறுத்தினராகவே இருக்கின்றனர்......ஓரிரு பெண் மட்டுறுத்தினர்களும் இருந்தால் நல்லா இருக்கும் என்று நினைக்கிறீங்கள் போல ........!   😂

Link to comment
Share on other sites

22 hours ago, suvy said:

நீங்கள் இப்ப என்ன சொல்ல வாறீங்கள் பாஞ்ச்,   யாழ் களத்தில் எல்லோரும் ஆண் மட்டுறுத்தினராகவே இருக்கின்றனர்......ஓரிரு பெண் மட்டுறுத்தினர்களும் இருந்தால் நல்லா இருக்கும் என்று நினைக்கிறீங்கள் போல ........!   😂

அதாவது.... வடமொழி தமிழை ஆட்டிப்படைப்பதுபோல் யாழ்களத்தையும் ஆடவைத்துத் தாளம்போட எண்ணமா...💃🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே ......அதே ......நீங்கள் கற்பூரம்........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்மூடி திறந்த மாதிரி இருக்கு அதற்கு; 1 வருடம் கடந்துவிடடதா?

 

ஏதாவது கிறுக்கவேண்டுமே....... 🤔🤔😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/8/2020 at 6:15 PM, ரதி said:

என்ட பெயரை வைத்து கொமடி ,கீமடி பண்ணேலையே 😠

 

சீச்சீ கடலை மட்டும் தான் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள 22 வது அகவை சிறப்புப் பகுதியில் 30.03.2020 இக்குப் பின் ஆக்கங்களை பதிவோர்  ஒரு மாதகாலத்துள் ஆக்கங்களைப் பதியவேண்டும் என்று ஒரு காலவரையறை வைத்தால் என்ன ???

Link to comment
Share on other sites

வணக்கம்,

யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்  சிறப்புப் பகுதிக்கான இணைப்பு முகப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பதியப்படும் ஆக்கங்கள் அதிக பார்வைக்கு செல்லும் வாய்ப்புள்ளது.

பல யாழ் கள உறுப்பினர்கள் தமது சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகுக. கடந்த வருடங்களைப் போன்று இவ்வருடமும் அதிகமான சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பிக்குமாறு சகல கள உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.

இதுவரை " யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும்  ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

குறிப்பு: இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவுபெறும்.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

சக கள உறுப்பினர்கள்,  பதியப்பட்ட ஆக்கங்களுக்கான கருத்துக்களைப் பதிந்தும், விருப்பப் புள்ளிகளை இட்டும் சுய ஆக்கங்களை வரவேற்குமாறு வேண்டுகின்றோம்.

நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.