Jump to content

இனவாதமாக மாறும் கொரோனா வைரஸ் அச்சம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதமாக மாறும் கொரோனா வைரஸ் அச்சம்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2020 பெப்ரவரி 05

சீனாவில் பெருமளவில் பரவி, தற்போது ஏனைய சில நாடுகளுக்கும் பரவி வரும் கொரோனா வைரஸ், உலக சுகாதார அமைப்பால் 2019-CoV என உத்தியோகபூர்வமாக அழைக்கப்படுகிறது.   

இந்த நோயைப் பற்றி, தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பாரியதோர் ஊடகப் பரபரப்பு உருவாகி இருக்கிறது. இதில் நன்மையைப் போலவே, தீமையும் இருப்பதாகவே தெரிகிறது.  

இலங்கையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய ஊடகங்களில், கடந்த நாள்களில், இந்த நோயைப் பற்றிய செய்திகளும் கட்டுரைகளும் பெருமளவில் வெளியாகியிருந்தன.   

சீ.என்.என், பி.பி.சி, அல் ஜெசீரா, டி.டபிள்யூ, சனல் நியூஸ் ஏசியா, ஏ.பி.சி, என்.எச்.கே, பிரான்ஸ் 24 போன்ற, சகல சர்வதேச ஊடகங்களும் இந்த நோயைப் பற்றிய செய்திகளுக்கு, ஏனைய உலகச் செய்திகளுக்கு வழங்குவதை விடக் கூடுதலான முக்கியத்துவம் கொடுப்பதையும் அதற்காக நீண்ட நேரம் ஒதுக்குவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.  

143 கோடி மக்கள் வாழும் சீனாவில், கடந்த இரு மாத காலத்தில், சுமார் 400 பேர் தான் 2019-CoV நோயால் உயிரிழந்துள்ளனர். சுமார், இரண்டு கோடி மக்கள் வாழும் இலங்கையில், சில காலங்களில், ஒரு மாத காலத்துக்குள், இதை விடக் கூடுதலான மக்கள், டெங்கு நோயால் மரணித்துள்ளார்கள்.   

2019-CoV நோயால் உயிரிழப்போரின் மரண விகிதாசாரம் 15 எனக் கூறப்படுகிறது. அதாவது, 100 பேரை அந்த நோய் தாக்கினால், அவர்களில், உயிரிழப்போரின் எண்ணிக்கை, சுமார் 15 ஆகும் என்பதாகும்.   

எனினும், நேற்றுவரை சீனாவில் 2019-CoV நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 20,000 க்குச் சற்றுக் கூடுதலாக இருக்க, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 425 ஆக இருந்தது. அதாவது, மரண விகிதாசாரம் இரண்டாகத்தான் இருக்கிறது.  

ஆபிரிக்க நாடுகளான லைபீரியா, சியரா லியோன், கீனி ஆகிய நாடுகளில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பரவிய ‘எபோலா’ நோயின் மரண விகிதாசாரம் 50 முதல் 90 வரையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.   

ஆயினும், டெங்கு நோய்க்கும் எபோலா நோய்க்கும் அச்சமடையாத உலகம், புதிய 2019-CoV நோயைக் கண்டு நடுங்குகிறது.  

இதற்கு முக்கியக் காரணம், டெங்கு, எபோலா நோய்களைப் போலல்லாது, புதிய வைரஸ் நோய் காற்றால் பரவுவதே ஆகும். அதாவது, நோயுள்ள ஒருவர் இருக்கும் இடத்தில் நடமாடும் அனைவரும், அவரது சுவாசத்தால் பாதிக்கப்படுவார்கள் என்பதல்ல; நோயாளியின் தும்மல், இருமல் போன்றவற்றால் அந்த நோயை ஏற்படுத்தும் வைரஸ் பரவலாம் என்பதே ஆகும்.   

அதேவேளை, சீனாவின் சனத் தொகையோடு ஒப்பிடுகையில், நோயால் பாதிக்கப்பட்டவர்களினதும் இறந்தவர்களினதும் எண்ணிக்கை மிகச் சிறியதாக இருந்த போதிலும், நோய் பரவிய வேகம், உலகம் முழுவதிலுமுள்ள சுகாதார அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.  

சீனாவில் நூற்றுக் கணக்கான விமான நிலையங்கள் இருக்கின்றன. அவற்றின் ஊடாக, நாளாந்தம் பல்லாயிரக் கணக்கானவர்கள் அந்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். உலகின் சகல நாடுகளும், சீனாவுடன் வர்த்தக உறவுகளைப் பேணி வருகின்றன. எனவே, நோய் பரவும் வழிகளும் அதிகமாக இருக்கின்றன.  

சீனா ஒரு வல்லரசு; சுகாதாரத் துறையில் மிகவும் முன்னேறிய நாடு. அந்நாடே நோய் பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுவதாக இருந்தால், நிலைமையின் பாரதூரத் தன்மையை ஊகித்துக் கொள்ளலாம்.   

அந்த வல்லரசே தடுமாறும் போது, உலக ஊடகங்களுக்கு அது பாரியதொரு செய்தியாக மாறுவதையும் புரிந்து கொள்ளலாம்.   

உலக அரசியலில், சீனா மிகவும் முக்கியமான நாடொன்றாகும். அந்நாட்டின் செய்திகள், மிக விரைவாகவும் முக்கியத்துவத்துடனும் உலக ஊடகங்களில் இடம் பெறுவதற்கு அதுவும் ஒரு காரணமாகும்.  

புதிய வைரஸ் நோயைப் பற்றி, ஊடகப் பரபரப்பால் ஏற்படக்கூடிய நன்மை என்னவென்றால், அதனால் உலகெங்கும் மக்கள் அறிவூட்டப்படுகிறார்கள்; எச்சரிக்கப்படுகிறார்கள்; நோய்த்தடுப்பு முறைகளைப் பற்றிய மக்களின் ஆர்வம் அதிகரிக்கிறது.   

ஆனால், மக்கள் அளவுக்கு அதிகமாக அச்சப்படுவது, இந்த ஊடகப் பரபரப்பின் தீய அம்சமாகும். இலங்கையில் மருத்துவர்கள், இப்போதைக்கு முகக்கவசங்கள் அவசியமில்லை என்று கூறும் போதும், மக்கள் முண்டியடித்துக் கொண்டு முகக்கவசங்களை விலைக்கு வாங்க முற்பட்டதால், அவற்றின் விலை ஒரு வாரத்துக்குள், சுமார் 10 மடங்காக அதிகரித்தது. இறுதியில், அரசாங்கம் அவற்றுக்குக் கட்டுப்பாட்டு விலையையும் விதிக்க நேரிட்டது.  

இந்த அச்சம் எவ்வாறானதெனில், கண்டியில் பாடசாலையொன்றின் மாணவி, திடீரென மயக்கமுற்று விழுந்த போது, அம்மாணவிக்கு உதவ ஆசிரியர்களும் சகமாணவிகளும் அஞ்சியதாகவும் இறுதியில் அம்பியுலன்ஸ் வண்டி அழைக்கப்பட்டாலும் அம்மாணவியை அதில் ஏற்ற, பாடசாலையில் எவரும் முன்வரவில்லை எனவும் கூறப்பட்டது.   

அம்மாணவி, காலையில் சாப்பிடாமல் பாடசாலைக்கு வந்தமையாலேயே மயக்கமுற்றதாக, மருத்துவர்கள் பின்னர் கண்டுபிடித்துள்ளனர்.  

கடந்த வாரம், கொழும்பில் உலக வர்த்தக மய்யத்தில் இடம்பெற்ற மற்றொரு சம்பவத்தில், ஒருவர் திடீரென மயக்கமுற்று கீழே விழுந்த போதும், பலர் அவருக்கு உதவத் தயங்கியதாகச் செய்திகள் கூறின. ஆனால், அவரையும் கொரோனா வைரஸ் தாக்கி இருக்கவில்லை. இது, ஊடகப் பரபரப்பின் விளைவாகும்.   

சீனாவில், கொரோனா வைரஸால் நோயுற்ற ஒருவர், மரத்தை வெட்டிச் சாய்த்ததைப் போல் கீழே விழும் காட்சியை, தொலைக்காட்சி மூலம் இலங்கையில் பலர் கண்டனர்.  

இந்த நோயால் பாதிக்கப்பட்ட சகலரும், அவ்வாறு திடீர் திடீரென கீழே விழவில்லை; விழுவதும் இல்லை. ஆனால், அந்தச் செய்தியோடு காண்பிக்கப்பட்ட காட்சியைப் பார்த்த பலர், கொரோனா நோயாளிகள் இவ்வாறுதான் திடீர் திடீரென விழுவதாக விளங்கிக் கொண்டார்கள் போலும்.   

எனவே தான், மேற்படி இருவருக்கும் உதவ எவரும் முன்வரவில்லை. உண்மையிலேயே, கொரோனா வைரஸால் நோயுற்றோர், அனேகமாக முதலில், காய்ச்சலினாலேயே பாதிக்கப்பட்டுள்ளனர்.  

image_2519bd29e0.jpg

இந்த அச்சம், இப்போது பல நாடுகளில், சீனர்களைப் பற்றிய அச்சமாக மாறியிருக்கிறது. அதனால், சீனர்களுக்கு எதிரான இனவாத வெறுப்பு, பல நாடுகளில் பரவியிருப்பதாகச் சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையிலும் சில உணவுவிடுதிகளில் ‘சீனர்கள் வர வேண்டாம்’ என அறிவிப்புச் செய்யப்பட்டிருந்த படங்களை, ஊடகங்கள் சில நாள்களுக்கு முன்னர் வெளியிட்டு இருந்தன.  

இலங்கையில், பல ஹோட்டல்களிலும் வாடகை வாகனங்களிலும் சீனர்களுக்கு இடம் மறுக்கப்படுவதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் கவலை வெளியிட்டு இருந்தது.  

உண்மையிலேயே, இலங்கையில் அச்சப்படுவதற்கு ஏதாவது காரணம் இருப்பதாகத் தெரியவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே, விமான நிலையத்தில் நோய்த் தடுப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.  

 இந்த வைரஸ், ஒருவரது உடலில் புகுந்தால், இரண்டு வாரங்களுக்குள் நோயின் அறிகுறிகள் வௌிப்படுவதால், அதற்கு முன்னர் வைரஸோடு எவராவது சீனாவிலிருந்தோ வேறு நாடொன்றில் இருந்தோ வந்திருந்தாலும், அவர் இப்போது நோயின் அறிகுறிகளை வௌிக்காட்டியிருக்க வேண்டும்.  

அவ்வாறு, சீனப் பெண் ஒருவர் மட்டுமே கொரோனா நோய் அறிகுறிகளை வௌிப்படுத்தி இருந்தார். அவர் ஒருவர் மட்டுமே, இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 2019-CoV நோயாளியாவார். அவரும் இப்போது குணமாகி, கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில், மேலதிக மேற்பார்வைக்காகத் தங்கியிருக்கிறார்.   

அதேவேளை, இலங்கையில் தொழில் புரியும் சீனர்கள், அண்மையில் சீனாவுக்குச் செல்லவில்லை என்றும், சீனப் புத்தாண்டுக்காகச் சென்றவர்கள், இப்போதைக்குத் திரும்பி வரமாட்டார்கள் என்றும், சீனத் தூதுவர், திங்கட்கிழமை (03) கூறினார்.  

வூஹானிலிருந்து கடந்த வார இறுதியில் அழைத்து வரப்பட்ட இலங்கை மாணவர்கள் 33 பேரையும், வைரஸ் தாக்கி இருக்கவில்லை என்றே கூறப்படுகிறது. வூஹானிலிருந்து வந்தவர்களை நோய் தாக்காவிட்டால், இங்கு அச்சப்படுவதற்குக் காரணங்கள் இருப்பதாகக் கூற முடியாது.  

ஆனால், சீனர்கள் என்றால் பலருக்கும் அச்சம் தான். இந்த நிலைமை, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி போன்ற பல நாடுகளில், சீனர்களுக்கு எதிரான இனவாத வெறுப்பாக மாறியுள்ளது. சீனர்கள் மட்டுமல்லாது, அவர்களது நிறத்திலும்  சாயலிலுமான கொரிய, வியட்நாம் மக்களும் அந்நாடுகளில் இனவாத அச்சுறுத்தல்களுக்கு இலக்காகி இருக்கிறார்கள்.   

எனவே, இந்த விடயத்தில் மலேசியப் பிரதமர் மஹதீர் முஹம்மதும் கனடியப் பிரதமர் ஜஸ்டின் டுரூடோவும் தமது நாட்டு மக்களை எச்சரித்துள்ளனர்.  

விந்தை என்வென்றால், இந்த நோயால், வூஹான் மாநில மக்களை ஆரம்பத்தில், சீனாவில் ஏனைய மாநிலங்களின் மக்களே ஒதுக்கினர்.   

பின்னர், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மக்கள், அனைத்துச் சீனர்களையும் ஒதுக்கினர். அதையடுத்து, ஐரோப்பிய, அமெரிக்கக் கண்டங்களிலுள்ள நாடுகளின் மக்கள், சீனர்களையும் தென்கிழக்காசிய மக்களையும் ஒதுக்க ஆரம்பித்தார்கள்.   

இது உண்மையான அச்சமல்ல; வெறும் இனவாதமே என்பதையும் இந்த இனவாதத்துக்கு அடித்தளமே இல்லை என்பதையும் புரிந்துகொள்வது கடினமானது அல்ல!    

கொரோனா வைரஸ் புதியதல்ல...

‘கொரோனா வைரஸ்’ என்பது, தற்போது சீனாவில் பரவியிருக்கும் நோயின் பெயரல்ல. அதற்கு 2019-CoV என்றே, உலக சுகாதார நிறுவனம் தற்காலிகமாகப் பெயரிட்டுள்ளது. சிலவேளை இதே பெயர் தொடரவும் கூடும்.  

கொரோனா வைரஸ் என்பது, 1960ஆம் ஆண்டு, அதாவது 60 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டு பிடிக்கப்பட்ட ஒருவகை வைரஸாகும்.   

தற்போது, சீனாவில் பெருமளவில் பரவியிருக்கும் நோயை தோற்றுவிப்பது இந்த வைரஸின் ஒரு வகையாகும். எனவே, கொரோனா வைரஸை, உலகின் பல பாகங்களில், குறிப்பாக, சீனாவிலும் மத்திய கிழக்கிலும் மக்கள் நீண்ட காலமாக அறிந்துள்ளனர்.  

ஜப்பான் போன்ற நாடுகளில், சுனாமியை பல தசாப்தங்களுக்கு முன்னரே, மக்கள் அறிந்திருந்த போதிலும், இலங்கையில் பெரும்பாலானவர்கள் அதன் பெயரை, 2004ஆம் ஆண்டு, ஆழிப்பேரலை எம்மைத் தாக்கும் வரை அறிந்திருக்கவில்லை.   

அதேபோல், கொரோனா வைரஸை, வேறு பல நாடுகளில் மக்கள் அறிந்திருந்த போதிலும், அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு சீனப் பெண், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட போதே, நாம் அதைப் பற்றி ஆர்வத்தோடும் அச்சத்தோடும் படிக்கின்றோம்.  

கொரோனா வைரஸானது, பாலூட்டிகளிலும் பறவைகளிலும் நோய்களை ஏற்படுத்தும் ஒரு வகை வைரஸாகும். மனிதனில், அது சுவாச நோய்களைத் தோற்றுவிக்கும்.   

அது, சிலவேளை சாதாரண தடிமல் போன்ற நோயாகவும் இருக்கலாம்; அல்லது, ‘சார்ஸ்’, ‘மேர்ஸ்’ போன்ற, ஏற்கெனவே சீனாவிலும் மத்திய கிழக்கிலும் பரவிய நோய்களைப் போன்ற பயங்கர நோய்களாகவும் இருக்கலாம். தற்போது பரவி வரும் நோயும், இவை போன்றதொரு பயங்கர நோயாகும்.  

மாடுகள், பன்றிகள் போன்ற கால்நடைகளை கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ் தாக்கினால், அவற்றுக்கு வயிற்றோட்டம் ஏற்படும். கோழிகளிலும் அவை, சுவாச நோய்களைத் தோற்றுவிக்கும்.   

இதுவரை, கொரோனா வைரஸின் எந்தவொரு வகைக்கும் மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை என, உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.  

லத்தீன் சொல்லான ‘கொரோனா’, தமிழில் ‘கிரீடம்’ என்ற பொருளைத் தருகிறது. குறித்த வைரஸ், கிரீடத்தை போன்ற வடிவத்தைக் கொண்டமையாலேயே அந்தப் பெயர் அதற்கு சூட்டப்பட்டுள்ளது.  

1960களின் ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் ஒருவகை, கோழிகளைத் தாக்கியது. மேலும், இரண்டு வகைகள், மனிதர்களைப் பாதித்தன.   

மனிதர்களைப் பாதித்த வைரஸ்களால், தடிமல் போன்ற இரண்டு வகையிலான சுவாச நோய்கள் ஏற்பட்டன. அவற்றுக்கு, உலக சுகாதார அதிகாரிகள் 229E என்றும் OC43 என்றும் பெயரிட்டனர்.  

2003ஆம் ஆண்டு, மனிதர்களைப் பாதிக்கும் மற்றொரு வகை கொரோனா வைரஸ், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. SARS-CoV என்றழைக்கப்பட்ட அந்த வைரஸாலும் சுவாச நோய்கள் ஏற்பட்டு, பெரும் எண்ணிக்கையில் மக்கள் உயிரிழந்தனர்.   

2004 ஆம் ஆண்டு HCoV NL63 என்ற வைரஸும், 2005 ஆம் ஆண்டு HKU1 என்ற வைரஸும், 2012 ஆம் ஆண்டு மத்திய கிழக்கில் MERS-CoV என்ற கொரோனா வைரஸும் கண்டு பிடிக்கப்பட்டன.   
கடந்த வருடம் டிசெம்பர் மாதம், 2019-CoV கண்டு பிடிக்கப்பட்டவை எல்லாம் கொரோனா வைரஸ்களே ஆகும்.  

சீனர்களின் உணவுப் பழக்கங்களே இவற்றுக்குக் காரணம் எனப் பலர் கூறுகின்றனர். ஆனால், சீன மக்களின் தற்போதைய உணவு பழக்கங்கள், 1960 ஆண்டுக்கு முன்னரும் இருந்தன.   

அதேவேளை, 2012 ஆம் ஆண்டு ‘மேர்ஸ்’ நோய், மத்திய கிழக்கு நாடுகளிலேயே உருவாகிப் பரவின. எனவே, சீனர்களின் உணவு பழக்கங்களை மட்டும் குறை கூற முடியாது.   

ஆனால், வெளவாலின் மூலமாகவே இந்த வைரஸ், முதன் முதலில் மனிதனுக்குப் பரவியது என்றும் சீனர்கள் வெளவால் இறைச்சியைச் சாப்பிடுவதால், அவர்களின் உணவுப் பழக்கத்துக்கும் இந்த வைரஸுக்கும் தொடர்பு இல்லை என்று அறுதியிட்டுக் கூறவும் முடியாது. எதுவாக இருந்தாலும், விஞ்ஞான பூர்வமாக இந்த விடயம், இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.  

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சிலர் இந்தப் பிரச்சினையை அரசியல் மயமாக்க முயல்கிறார்கள். 33 இலங்கை மாணவர்கள், சீனாவிலிருந்து அழைத்துவரப்பட்டமையும் அரசியலாக்கப்பட்டு வருகிறது.   

இந்தியா, ஏற்கெனவே இரண்டு விமானங்களை அனுப்பி, 647 இந்தியர்களைச் சீனாவிலிருந்து அழைத்து வந்துள்ளது. பல ஐரோப்பிய நாடுகளும் தமது பிரஜைகளை அழைத்து வந்துள்ளன.  

பாராட்டப்பட வேண்டியவர்கள், தமது தேசத்தவர்களை அழைத்து வரச் சென்ற விமானங்களின் ஆளணியினரே ஆவார்.   

வூஹானிலேயே பல இலட்சம் மக்கள் நோயால் பாதிக்கப்படாமல் இருக்க, பாதிக்கப்பட்ட சில ஆயிரம் மக்களை நினைத்து, உலகமே அச்சம் கொண்டுள்ள நிலையிலும், வாழ்நாளில் ஒரு நாளேனும் சீனாவுக்குச் செல்லாத பிரான்ஸில் வாழும் சீன வம்சாவழி மக்களைக் கண்டு, சில பிரான்ஸூக்காரர்கள் தலைதெறிக்க ஓடும் நிலையில், அந்த விமான ஊழியர்கள் வூஹானுக்குச் செல்லத் துணிந்தமை, பாராட்டுக்குரியது தான்.     
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இனவாதமாக-மாறும்-கொரோனா-வைரஸ்-அச்சம்/91-245023

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.