Jump to content

கொழும்புக்குப் பொருத்தமான தமிழ் வேட்பாளர் யார்?


Recommended Posts

கொழும்புக்குப் பொருத்தமான தமிழ் வேட்பாளர் யார்?

நம்நாட்டின் வடக்கு , கிழக்கு மாகாணங்களில் இலங்கைத் தமிழர் செறிந்து வாழும் பகுதிகளில் மட்டுமே தமிழ்க் கட்சிகள் செயற்பாட்டுத் தளத்தை நிறுவியிருந்தன மலையககக் கட்சிகள் கொழும்பு உட்பட இந்திய வம்சாவழித் தமிழ்ர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தமது அரசியல் செய்பாட்டுத் தளத்தை நிறுவிக் கொண்டன.

இலங்கைத் தமிழரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் இந்தியத் தமிழர் பகுதிகளில் அரசியல் நடவடிக்கையில் இடையீடு செய்வதில்லை அதுபோன்றே மலையகக் கட்சிகளும் இலங்கைத்தமிழர் பகுதிகளில் அரைசியல் தலையீடுகளைச் செய்வதில்லை. இலங்கைத் தமிழர் ஓரளவுக்குச் செறிந்து வாழும் கொழும்பில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது வரையிலும் அரசியல் செயற்பாட்டுத்தளத்தை தேர்தலை இலக்கு வைத்து செய்ததில்லை.

ஆனால் இந்த எழுதப்படாத ஒப்பந்தமும் புரிதலும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுடன் முடிவுக்கு வந்துவிடும். இந்தப் புரிதல் அரிசயலில் கல்லெறிந்தவர் மனோகனேசன்தான். மட்டக்களப்பில் தனக்கான அமைப்பாளரை அவர் நியமித்து அதை ஆரம்பித்து வைத்தார். அப்படியே இந்தியத் தமிழர் புறக்கணிக்கப்படுவதாக வடக்கில் எழுந்த கருத்தியல் அலை கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தாக்கம் செழுத்தாமலும் இல்லை.

கொழும்பை மட்டுமே மனோ நம்பியிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை கடந்த அனைத்துப் பாராளுமன்றத் தேர்தல்களும் நிரூபித்து நிற்கின்றன. அத்துடன் மணோ ஒரு சாதாரண அரசியல்வாதி மட்டுமே. அவர் மக்களின் அரசியல் சிந்தனையில் தாக்கம்செழுத்தும் அல்லது மாற்றத்தை உண்டுபண்ணும் நபரும் கிடையாது அந்தளவுக்கு கணதியான அறிவுஜீவியும் கிடையாது அதுவே அவரது தோல்வியை அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் உறுதி செய்யப் போகின்றது. ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் களமிறங்கும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் களமிறங்குவதற்கு உள்ளும் புறமும் இருக்கின்ற சில தடைகள் பற்றியும் அலச வேண்டிய தேவை இருக்கின்றது. அதாவது கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனதுபிரதிநிதித்துவத்தை முதல் முறையாகப் பெறுவதாக இருந்தால் அதன் பிரதான வேட்பாளர் சக்திமிக்கவராகவும் தலைமைத்துவப் பண்புமிக்கவராகவும் நிச்சயம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வீ.தவராசாதான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆனால் கே.வி.தவராசா கொழும்பை மையப்படுத்தி அரசியலில் குதித்தால் மணோகனேசன் புத்திசாலியாக இருந்தால் எடுக்க வேண்டிய இரண்டு முடிவுகள், ஒன்று ஒதுங்கிக் கொள்வது அல்லது தவராசாவின் வெற்றிக்குத் துணை நிற்பது. ஆயினும் மனோ புத்திசாலி அல்ல அவர் திரும்பவும் யானைச் சின்னத்துக்குள் தன்னைப் புதைத்தே வெளிப்படுவார். அது தவராசாவுக்கு குறிப்பிடத் தக்க சவாலாக அமையும் ஆனாலும் அந்தச் சவாலை இலகுவாகச் சமாளிக்கும் தலைமைத்துவ ஆற்றல் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவுக்கு வெகுவாக இருக்கின்றது. அவரது வெற்றிக்குத் தடையாக அந்தச் சவால் இருக்கப் போவதில்லை. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைக்குள் அல்லது தமிழரசுக் கட்சிக்குள் இருந்து எழுகின்ற சவாலை தவராசா எப்படிச் சமாளிக்கப் போகின்றார் என்பதில்தான் பல முக்கிய விடயங்கள் தங்கியிருக்கின்றன.

அவருக்குக் கட்சிக்குள் இருக்கும் முதன்மையான சவால் சட்டத்தரணி சுமந்திரன்தான். ஏனெனில் தவராசா கட்சிக்குள் அரசியல் ரீதியில் ஒரு பாராளுமன்றப் பிரதிநிதியாக வந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கண்ணும் கருத்துமாக இருப்பவர் சுமந்திரன்தான். அடுத்த தேர்தலில் கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிடுவது தொடர்பான முடிவுகளை எட்டுவதற்கு ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் சுமந்திரனது வாதம் பொதுமைப்படுத்தியதாக நிச்சயம் அமையும்.

கூட்டமைப்பு கொழும்பில் தேர்தலில் போட்டியிட்டால் கொழும்புத் தமிழ்ப் பிரதிநித்துவம் கிடைக்காது என்ற வாதத்தை நிச்சயம் வலியுறுத்தத் தவற மாட்டார். ஏனெனில் மனோகணேசன் ஒரு போதும் சுமந்திரனுக்குச் சவாலாக வரப்போவதில்லை அதனால் மனோ அவருக்குப் பொருட்டே கிடையாது. தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்படும் என்ற அச்சத்தை விதைத்து தவராசாவை போட்டியிடாமல் தவிர்ந்துகொள்ளச் செய்வதே அவரது இலக்காக இருக்கும். ஒரு சென்சிட்டிவ்வான விடயத்தைக் கொண்டுதான் தவராசாவைத் தனக்கு நிகரான போட்டித்தளத்தில் இருந்து ஒதுக்க முடியும் என்பதை சுமந்திரன் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றார். தவராசா மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய இடமும் இதுதான்.

எனது அவதானத்தின் படி தமிழ் மக்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய மிகச் சிறந்த அடுத்த தெரிவாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாதான் இருக்கின்றார். அதற்கடுத்த இடத்தில் சட்டத்தரணி காண்டீபன் இருக்கின்றார். இவர்கள் கொண்டிருக்கும் தலைமைத்துவப் பண்பு என்பு மக்கள்மயப்பட்டது மக்களுக்கானது. தமிழர்களுக்கான சரியான தலைமைத்துவத்தை நிறுவவிடாது போடப்படும் தடைகளில் இருந்து வெளிப்படத்துடிப்பவர் சுமந்திரன்தான் என்பது மறைக்கப்பட்ட விடயமுமல்ல.

ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் தழிரசுக் கட்சியினதும் தலைவராக சுமந்திரன்தான் வரவேண்டும் என்பது ரணில் விக்ரமசிங்கவின் அலாதியான விருப்பம். அந்த விருப்பம் இலங்கைச் சூழலில் தீர்மாணிக்கப்பட்டதுமல்ல அது குறித்து அலசுவது இக்கட்டுரையின் நோக்கமுமல்ல. ஆனால் தமிழ் மக்களின் ஏகத் தலைவராக சுமந்திரனைக் கொண்டு வந்து நிறுத்த எடுக்கப்படும் முயற்சிகள் மிகவும் அபாயகரமானவை என்பதைத் தமிழ் மக்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது மக்களை உண்மையாக நேசிக்கும் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

இதே நேரத்தில் சுமந்திரன் மிகச் சிறந்த மனித உரிமைகளுக்கான குரல் என்பதிலும் அந்தக் குரல் நியாயமாக பல இடங்களில் ஒலித்தது என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. மக்களுக்கான தலைமைத்துவம் என்றும் அடுத்த தலைவர் யார் என்றும் கேள்வி வருகின்ற போது அதற்குச் சுமந்திரன் சரிப்பட்டு வரமாட்டார் என்பதுதான் எனது அவதானம்.

அடுத்த தேர்தலில் தவராசா கொழும்பு மாவட்டத்தில் இறங்கினால் கூட்டமைப்பு நிச்சயம் தனக்கான ஒற்றைப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ளும். தவராசா வெற்றிபெற்றால் மனோ நிச்சயம் தோற்றே ஆக வேண்டும்.

ஒரு தலைவனுக்குள்ள முக்கிய பண்பு தனது மக்கள் பகிரங்க அழுத்தத்துக்கு முகங்கொடுத்து அச்சங்கொண்டு ஒதுங்கி நிங்கும் போது எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது நலன்களைக் கருத்தில் கொள்ளாமல் களத்தில் மூர்க்கத்துடனும் தெளிவுடனும் குதித்து அவதாகமாகச் செயற்படுவது யுத்த காலத்தில் இருந்து அதன் பிற்பட்ட காலத்திலும் பயங்கரவாதக் காட்சிகள் அரங்கேறியபோதும் தவராசா வெளிப்பட்டு நின்ற விதம் மிகவும் முக்கியமானது. தனக்கான நலன் எதையுமே கருத்தில் கொள்ளாமல் அவர் மனிதம்கொண்ட பேரியக்கமாக மக்களுக்காகக் காரியமாற்றினார். எனவே தவராசாவை முன்கொண்டு செல்வது மக்களின் கடமையும் பொறுப்புமாகும்.

தேர்தல் அரசியல் என்று வருகின்ற போது அதைச் சமாளிக்கும் அல்லது அதைக் கையாளும் குறுக்குப் புத்தி தவராசாவுக்கு இல்லாமல் இருப்பது மட்டுமே அடுத்த மாபெரும் சவால். ஏனெனில் இப்போதை நம்நாட்டு தேர்தல் அரசியல் கணவான் அரசியல் கிடையாது. எனவே இதை எதிர்கொள்வதுக்குத் தகுந்த தேர்தல் அரசியல் வல்லுநர்களின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்றுக் கொள்ளும் போது தவராசா வெற்றி பெறுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடும்.

வாக்குகளைச் சேகரிக்கும் உபாயங்கள், ஊடகங்களைக் கையாளவும் சமூக ஊடகங்களைக் கையாளவும் தனித்துவமான திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் இலக்கியவாதிகள், கலைஞர்கள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள், இளைஞர் யுவதிகள் என்று அனைத்துத் தரப்பையும் மையப்படுத்திய தேர்தல் அரசியலுக்கான திட்டமிடல் திறம்ப மேற்கொள்ளப்பட வேண்டும். அதில் துறைசார்ந்த அனுபவசாலிகளின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு பொது வேலைத்திட்டத்தை வகுக்க வேண்டும்.

தேரதல் அறிவிக்கப்படும் வரை காத்திராமல் இப்போதே அதற்கான செய்பாட்டுத் தளத்தை நிறுவிட வேண்டிய அவசியமும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வீ.தவராசாவுக்கு இருக்கின்றது. அதே போன்று வடக்கை மையப்படுத்திய தேர்தல் அரசியலில் சட்டத்தரணி காண்டீபன் தனது வெற்றியை எவ்வகையிலாவது உறுதிப்படுத்திட வேண்டியதும் அவசியமாகும் இது குறித்து பிரிதொரு கட்டுரையில் அலசலாம்.

மக்களுக்கான நியாயமான குரல் நிச்சயம் உரத்து ஒலிக்க வேண்டிய கட்டாயங்கள் நிறைந்த காலகட்டத்தில் சிறுபான்மை மக்கள் இருப்பதை நாம் அனைவரும் அவதானத்தில் இருத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு காரர் எழுதிய கட்டுரை போல் உள்ளது. :rolleyes: :)
என்ன செய்வது, தங்களுக்கு தாங்களே... முதுகு சொறிந்து  கொண்டு, 
சந்தோசப் பட வேண்டியதுதான். :grin:

Link to comment
Share on other sites

வடகிழக்குத் தேர்தலில் வேட்பாளராகும் மனோகணேசனின் முடிவும் கொழும்புத் தேர்தலில் வேட்பாளரகும் கூட்டமைப்பின் ஆலோசனையும் அபத்தமானவை. எனது ஆட்சேபனையை மனோகணேசனிடம் அழுத்தமாக தெரிவித்துள்ளேன்.  

கூட்டமைப்பும் கொழும்பில் போட்டியிடும் தனது முடிவைக் கைவிடவேண்டும்.

 

Link to comment
Share on other sites

மனோ கணேசன் வடகிழக்குத் தேர்தலில் போட்டியிடுவதை வரவேற்கிறேன். போட்டி இல்லாவிட்டால் தமிழ் கூட்டமைப்பு தமிழர் தலையில் மிளகாய் அரைப்பதை நிறுத்த மாட்டார்கள். அவர்கள் தலைமையிலிருந்து கொள்கை வரை மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமானால் மனோ கணேசன் போன்ற திடமான அரசியல்வாதி வட கிழக்கில் போட்டியிட வேண்டும்.

Link to comment
Share on other sites

சிங்கள அரசின் தவறுகளைச் சிங்களவர்நடுவே துணிவோடு சொல்லக்கூடிய ஒருவராகவும், முசுலீம்களின் அடாவடித்தனங்களை வெளிப்படையாகவே விமர்ச்சிப்பவராகவும் இருப்பவர்களில் மனோகணேசனும் ஒருவர்.

தமிழரைக் கொன்றொழித்து அவர்கள் இருப்பையே அழித்துவரும் சிங்களத்தின் அரசியலோடு இணங்கியே அரசியல் செய்யவேண்டும் என்றும், தமிழர் காணிகளை வசப்படுத்தி அவர்களை ஒடுக்கி அடாவடித்தனம் செய்துவரும் முசுலீம்களை சகோதரர்களாக மதிக்கவேண்டும் என்றும், தங்கள் சொந்த நலன்களையே முன்னிறுத்தி அரசியல் பிழைப்பு நடாத்தும் சில கட்சிகள் இணைந்துள்ள இன்றைய தமிழர் கூட்டணியும், மற்றும்  கூட்டணியின் பெரியண்ணனான தமிழரசுக்கட்சியும், தமிழ் மக்கள் தலையில் மிளகாய் அரைத்து வருவதை இப்போதும் புரிந்து கொள்ளாவிட்டால், எப்போதுமே தமிழர்களுக்கு விடிவில்லை..

இந்தக் கட்டுரையை எழுதி வெளியிட்ட முசுடீன் இசுமாயீல் ஒரு நேர்மையான மனிதரும் அல்ல.

 

முஸ்டீன் இஸ்மாயீல்

இவரைக் கண்ட இடத்தில் கைது பண்ணும்படி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் ஊடாக கிழக்குப் பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அலுவலகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

50655417_1077956842392230_31070520385428

இவர் பற்றிய தகவல்களை அறிந்தவர்கள் அல்லது இவரது இருப்பிடம் பற்றிய தகவல் அறிந்தவர்கள் sdig.ep@police.lk. மின்னஞ்சலுக்கு அறிவிக்கலாம் அல்லது கிழக்குப் பகுதியில் உள்ளஎந்தவொரு பொலிஸ் நிலையத்துக்கும் அறிவிக்கலாம்.

அல்லது 119 க்கு அழைத்து தகவல் தர முடியும்.

இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்துவதிலும் இவர் பிராதான சதிகாரராக இனங்காணப்பட்டுள்ளார்.

puttalamtoday.com/

Link to comment
Share on other sites

4 hours ago, இணையவன் said:

மனோ கணேசன் வடகிழக்குத் தேர்தலில் போட்டியிடுவதை வரவேற்கிறேன். போட்டி இல்லாவிட்டால் தமிழ் கூட்டமைப்பு தமிழர் தலையில் மிளகாய் அரைப்பதை நிறுத்த மாட்டார்கள். அவர்கள் தலைமையிலிருந்து கொள்கை வரை மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமானால் மனோ கணேசன் போன்ற திடமான அரசியல்வாதி வட கிழக்கில் போட்டியிட வேண்டும்.

இணையவன்  நண்பர் மனோகூட்டஐபோது வடகிழக்கில்  கணேசன் அடுத்த பாராளுமன்றத்தில் இருப்பது அவசியம் என நினைப்பதால்தான் அவரை வடகிழக்கில் கூட்டமைப்போடு மோத வேண்டாமென வலியுறுத்துகிறேன். மனோ வடகிழக்கில் சில ஆயிரம் வக்குகளை பிரிப்பாரே அன்றி வெற்றிபெறும் வாய்ப்பு இல்லை. தமிழரின் ப்ரதி நிதித்துவம் குறையக்கூடும்.  வடகிழக்கில்  கூட்டமைப்பை பகைத்தால்  கொழும்பில் மனோ கணேசன் வெற்றிபெறுவது சிரமம்.

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தவராசாவுக்கு தேசியப் பட்டியல் ஆசனம்.!

25E56955-8FE3-4144-A4DB-645EB5DB7225.png

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியின் சார்பாக பிரபல சட்டத்தரணி கே.வி.தவராசாவை தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டத்தின்போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.     தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தேசியப் பட்டியலில் முதலிடத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் பெயரை இடவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் தொடர்பில் கட்சியின் தலைமைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது.

https://jaffnazone.com/news/16160

Link to comment
Share on other sites

On ‎2‎/‎5‎/‎2020 at 10:23 PM, nunavilan said:

கொழும்புக்குப் பொருத்தமான தமிழ் வேட்பாளர் யார்?

"நாங்கள் தான்", சகல கட்சிக்களும் 'ஒற்றுமையாக' இந்த விடயத்தில் உள்ளன.

அன்று வெள்ளையர்கள் பிரித்து ஆண்டார்கள். இன்றும், நாம் பிரிந்தே நிக்கின்றோம்.

எமது மத்தியில் கட்சிகள் அதிகரித்து விட்டன. காரணம், நானும் தலைவனாகலாம் என்ற நப்பாசை. 

  

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 2/5/2020 at 8:05 PM, தமிழ் சிறி said:

கூட்டமைப்பு காரர் எழுதிய கட்டுரை போல் உள்ளது. :rolleyes: :)
என்ன செய்வது, தங்களுக்கு தாங்களே... முதுகு சொறிந்து  கொண்டு, 
சந்தோசப் பட வேண்டியதுதான். :grin:

கூட்டமைப்பு காரர் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் கிடைக்கும் பணத்தையும், அதனிலும் மேலாக புலம்பெயர்ந்த ஆதரவாளரின் கோடிகளில் கிடைக்கும் சொகுசையும் அனுபவித்து சந்தோசம் அடைவதாக அல்லவா பலரும் குறைப்படுகிறார்கள்? வெறுமனே முதுகு சொறிந்து சந்தோசப்படுபவர்கள் பற்றி இனியும் நேரத்தையும் யாழ்களத்தையும் வீணாக்க போகிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, கற்பகதரு said:

கூட்டமைப்பு காரர் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் கிடைக்கும் பணத்தையும், அதனிலும் மேலாக புலம்பெயர்ந்த ஆதரவாளரின் கோடிகளில் கிடைக்கும் சொகுசையும் அனுபவித்து சந்தோசம் அடைவதாக அல்லவா பலரும் குறைப்படுகிறார்கள்? வெறுமனே முதுகு சொறிந்து சந்தோசப்படுபவர்கள் பற்றி இனியும் நேரத்தையும் யாழ்களத்தையும் வீணாக்க போகிறீர்களா?

நமக்கும்...... பொழுது போகவேணுமெல்லோ.... 😜 :grin:  🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.