Jump to content

திருக்கேதீஸ்வர அலங்கார வளைவை தற்காலிகமாக அமைக்க அனுமதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கேதீஸ்வர அலங்கார வளைவை தற்காலிகமாக அமைக்க அனுமதி

மன்னார் திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு  தொடர்பான வழக்கானது நேற்றைய தினம் மன்னார் மேல் நீதிமன்ற நீதவான் எம்.சஹாப்தீன் தலைமையில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

IMG_6517.jpg

 குறித்த விசாரணையின் போது மாந்தை கோவில் நிர்வாகத்தினரும் திருக்கேதீஸ்வர நிர்வாகத்தினரும் இணக்கப்பாடு ஒன்றிற்கு வந்ததற்கு அமைவாக வருகின்ற சிவராத்திரியை முன்னிட்டு எதிர்வரும்  19ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி மாலை வரை குறித்த பகுதியில் தற்காலிக அலங்கார வளைவு அமைப்பதற்கான அனுமதியை மன்னார் மேல் நீதிமன்றம் நேற்றைய தினம் வியாழக்கிழமை  வழங்கியுள்ளது. 

IMG_6519.jpg

திருக்கேதீஸ்வரம் பகுதியில்  அலங்கார வளைவு அமைத்த போது  கடந்த வருடம்  உள்ளக ரீதியில் இரண்டு மதங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பான வழக்கு மன்னார் மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளப்பட்டது. 

IMG_6518.jpg

கடந்த தவணையின் போது சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சிவராத்திரியை முன்னிட்டு தற்காலிக வளைவு அமைப்பதற்கான அனுமதி வழங்குமாறு கோரப்பட்டிருந்ததன் அடிப்படையில் குறித்த விடயம் தொடர்பாக விசேட அவதானம் செலுத்திய மேல் நீதிமன்றம் நேற்றைய தினம் நல்லிணக்க அடிப்படையில் இரு நிர்வாகத்தினரின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தற்காலிகமாகக் குறித்த வளைவை அமைப்பதற்கான அனுமதியை வழங்கியிருந்தது.

IMG_6520.jpg

அதே நேரம் குறித்த அலங்காரவளைவு தொடர்பான  பூர்வாங்க ஆட்சேபனை தொடர்பாகக் கட்டளை வழங்குவதற்காகக்  குறித்த வழக்கானது  இம்மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச சபை சார்பாகக் குறித்த வழக்கில் முன்னிலையாகிய சட்டத்தரணி எஸ்.டினேஸன் தெரிவித்துள்ளார்.

 

https://www.virakesari.lk/article/75088

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

என் அறிவுக்கு எட்டவில்லை அந்த வளைவு ஓர் அடையாளம் திருக்கேதீஸ்வரம் முன்னாள் வத்திக்கான் இல்லையே அவர்கள் சரித்திரம் தொடங்க முதலே பாடல் பெற்ற தலம் 

Link to comment
Share on other sites

இத்தகைய இணகங்கள்மூலம் திருகேதீஸ்வர பிரச்சினைக்கு முடிவுகாளும் முயற்சியில் முன்னுதாரணமான வெற்றிபெற்றுள்ள மாந்தை தேவாலய பங்கு தந்தைக்கும் திருகேதீர்வர அறங்காவலர்களுக்கும் நன்றிகளும் நல் வாழ்த்துக்களும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மார்த்தாண்டன் said:

என் அறிவுக்கு எட்டவில்லை அந்த வளைவு ஓர் அடையாளம் திருக்கேதீஸ்வரம் முன்னாள் வத்திக்கான் இல்லையே அவர்கள் சரித்திரம் தொடங்க முதலே பாடல் பெற்ற தலம் 

என்ன சண்டை போடலாம் என்கிறீர்களா ? 

Link to comment
Share on other sites

9 hours ago, Kapithan said:

என்ன சண்டை போடலாம் என்கிறீர்களா ? 

நிறைய பேருக்கு இப்ப அதான்‌ வேணும்..... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மார்த்தாண்டன் said:

என் அறிவுக்கு எட்டவில்லை அந்த வளைவு ஓர் அடையாளம் திருக்கேதீஸ்வரம் முன்னாள் வத்திக்கான் இல்லையே அவர்கள் சரித்திரம் தொடங்க முதலே பாடல் பெற்ற தலம் 

சரியாக..  சொன்னீர்கள், மார்த்தாண்டான்.
பிறகு... ஏன், மற்றவர்களுக்கு...  வயிறு வலிக்கின்றது. 

அன்று... வந்தாரை  வாழ வைத்த, தமிழன்.  
இன்று....  வந்தவரிடம், பிச்சை எடுக்க வேண்டி, இருக்கு.

அதுக்கு... வக்காலத்து வாங்க, 
இன்னும் ஒரு கோஸ்ட்டி  இருப்பது,
தமிழனின்...  அவமானம்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Dash said:

நிறைய பேருக்கு இப்ப அதான்‌ வேணும்..... 

மிஞ்சி இருந்த கோவணமும் காணாமல் போய்க்கொண்டு இருக்கிற நேரத்தில கூட இருக்கிறவனோடதான் எப்பவும் உரஞ்சிறது. 

நாங்கள் சிங்களத்திடம்  அடிமையாய் இருக்கிறதுக்குத்தான் பொருத்தமான இனம்.

Link to comment
Share on other sites

5 hours ago, Kapithan said:

மிஞ்சி இருந்த கோவணமும் காணாமல் போய்க்கொண்டு இருக்கிற நேரத்தில கூட இருக்கிறவனோடதான் எப்பவும் உரஞ்சிறது. 

நாங்கள் சிங்களத்திடம்  அடிமையாய் இருக்கிறதுக்குத்தான் பொருத்தமான இனம்.

இதுக்கு பின்னால் இருந்து இயக்குவது சிங்களவன் இல்லை .... ஆனால் வடக்கு மாகாணத்தை கைப்பற்ற நினைக்கும் வடக்கு அடாவடி மினிஸ்ட்ரின் ஆக்கள்.

Link to comment
Share on other sites

நண்பர்களே இதில் எதிர்வாதம் செய்ய வரவில்லை முதலில் அந்த இடத்தின் பெயர் மாந்தை சந்தி ( மாதோட்டம் சந்தி)அதில் முதல் இருந்த எரிபொருள் நிலையத்துக்கு எதிரே மடு திரும்ப காட்டும் அடையாளமாக இருந்த ஒரு சிலை தான் இராணுவ முகாம்விஸ்தரிப்புக்காக எதிரே மாற்றபட்டது இப்போது சரித்திரம் திரிபாக்கபட்ட நிலை இங்கே எழுதும் யாரும் பிறந்தாலும் அதை பார்த்திருக்க வாய்ப்பில்லை நிறைய ஆதாரங்கள் உண்டு (தாண்டிகுளமுகாம்) ஆரம்பபுள்ளி தெரிந்தவர் சொல்வார்கள் நெல் கடத்தல் நாடகம்

Link to comment
Share on other sites

இந்துக்களுக்கு மட்டும்தான் மத சகிப்பு தன்மை உண்டு என்னாலும் நிஐ ஆதாரங்கள் எழுதமுடியும் ஆனால் ஓட்டகத்துக்கு இடம் கொடுத்த கூடாரம் ஆவது மட்டும் நிஐம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, மார்த்தாண்டன் said:

இந்துக்களுக்கு மட்டும்தான் மத சகிப்பு தன்மை உண்டு என்னாலும் நிஐ ஆதாரங்கள் எழுதமுடியும் ஆனால் ஓட்டகத்துக்கு இடம் கொடுத்த கூடாரம் ஆவது மட்டும் நிஐம் 

எனக்கென்னவோ நீங்கள் திட்டமிட்டே இங்கே பிரச்சனையை  எழுப்புவதாகப் படுகிறது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கருத்து என்னவென்றால் எவருக்கும் பிரச்சனை இல்லை வளைவை இனிமேல் வைக்கவேண்டாம் என்பதே ஆனால் வளைவைப்பற்றிய அனைத்து விடையங்களும் ஆவணப்படுத்தப்பட்டு எதிர்வரும் காலங்களில் கத்தோலிக்க மதத்தினரைச்சேர்ந்தவர்களது சந்ததியினர் இப்படி ஒரு பிரச்சனை இருந்தது அதை எமது கடந்தகால கிருஸ்தவர்கள் எப்படிக்கையாண்டார்கள் என்பதைத் தெரியும்வண்ணமாகப் பாதுகாக்கவேண்டும். 

தவிர மடுமாதா கோவிலுக்குச் செல்பவர்களில் சைவசமயத்தவர்களும் அதிகமாகும் உலகத்தில் சைவசமயத்தவர்கள்தான் தங்களது கடவுளர்களை நம்பாது எதுக்கும் இருந்துவிட்டுப்போகட்டும் என்பதுபோல்  பக்கத்துத் தெருவில் எந்தச்சமயக் கோவிலாக இருந்தாலும் ஒரு கும்புடு போட்டு நேத்திவைச்சு நெய்விளக்கோ மெழுகுதிரியோ கொழுத்துவினம் அட சைவக்காரா உனது கடவுளிலேயே உனக்கு நம்பிக்கை இல்லாமல்தானே இன்னுமொரு கடவுளையும் கும்புடுகிறாய். 

மதங்கள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் அன்பையும் போதிக்கிறது எனக்கூறிக்கொண்டு கலவரத்தை உண்டாக்கினால் அது மதம் இல்லை. அதனால்தாணோ மதம் என்று பெயர்வைத்தார்களோ

Link to comment
Share on other sites

37 minutes ago, Kapithan said:

எனக்கென்னவோ நீங்கள் திட்டமிட்டே இங்கே பிரச்சனையை  எழுப்புவதாகப் படுகிறது. 

 

எனக்கும் தான், சைவ தமிழருக்கும் கத்தோலிக்க தமிழருக்கும் மதன்பிரச்சனை எப்போதுமே இருந்ததில்லை, ஆனால் இவரின் எழுத்துக்களை பார்த்தால் பிரச்சனியை கிளப்ப  வேண்டும் என்றே எழுதுவது போல் உள்ளது.

4 minutes ago, Elugnajiru said:

என்னுடைய கருத்து என்னவென்றால் எவருக்கும் பிரச்சனை இல்லை வளைவை இனிமேல் வைக்கவேண்டாம் என்பதே ஆனால் வளைவைப்பற்றிய அனைத்து விடையங்களும் ஆவணப்படுத்தப்பட்டு எதிர்வரும் காலங்களில் கத்தோலிக்க மதத்தினரைச்சேர்ந்தவர்களது சந்ததியினர் இப்படி ஒரு பிரச்சனை இருந்தது அதை எமது கடந்தகால கிருஸ்தவர்கள் எப்படிக்கையாண்டார்கள் என்பதைத் தெரியும்வண்ணமாகப் பாதுகாக்கவேண்டும். 

தவிர மடுமாதா கோவிலுக்குச் செல்பவர்களில் சைவசமயத்தவர்களும் அதிகமாகும் உலகத்தில் சைவசமயத்தவர்கள்தான் தங்களது கடவுளர்களை நம்பாது எதுக்கும் இருந்துவிட்டுப்போகட்டும் என்பதுபோல்  பக்கத்துத் தெருவில் எந்தச்சமயக் கோவிலாக இருந்தாலும் ஒரு கும்புடு போட்டு நேத்திவைச்சு நெய்விளக்கோ மெழுகுதிரியோ கொழுத்துவினம் அட சைவக்காரா உனது கடவுளிலேயே உனக்கு நம்பிக்கை இல்லாமல்தானே இன்னுமொரு கடவுளையும் கும்புடுகிறாய். 

மதங்கள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் அன்பையும் போதிக்கிறது எனக்கூறிக்கொண்டு கலவரத்தை உண்டாக்கினால் அது மதம் இல்லை. அதனால்தாணோ மதம் என்று பெயர்வைத்தார்களோ

இந்த பிரச்சனை மொட்டு கட்சி, வீணை கட்சி மற்றும் வடக்கின் அடாவ்டி அமைச்சரின் துணையுடன் சைவத்தமிழரும் கத்தொலிக்கப்தமிழரும் மோதிக்கொள்ள வைத்த முயற்சியே இது.

Link to comment
Share on other sites

நண்பரகளே நான் எதுவுமே திட்டமிடவில்லை ஆனால்திசை திருப்பும் நோக்கம் புரிகிறது புற்றீசல்கள் போல் முளைத்து அவைகளை ஆதாரமாக காட்டும் தந்திரம் மதம் பரப்பும் நுணுக்கத்தை யாரும் புரியாமல் செய்வது ஓர் கலை நான் எழுதியது மாதோட்டம் சந்தி என்ற அர்த்தம் மட்டுமே யாரையும் காயப்படுத்த அல்ல இதை திசை திருப்பும் அனைவருக்கும் சமர்ப்பணம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் காலத்தில் எம்மினத்துக்கு நீதி தர மறுத்த சிங்களவனுக்கெதிராக  

மத வேறுபாடென்றால் என்னவென்று தெரியாமல் ஒற்றுமையாய்  போராடிய எம்மினம் 

இன்று எமக்குள்ளேயே முட்டிமோதி  , நாங்கள் வேறு மதம் அவர்கள் வேறு மதம் என்று அதே சிங்களவனின் நீதிமன்ற படியேறி   பிரிவினை கோருகின்றன .

தமிழன் என்பவன் ஒரு குப்பை, அந்த குப்பைகளிருந்துகூட தீபங்கள் ஏற்றலாம் என்று அவர் அதீத நம்பிக்கை கொண்டிருந்தார்   ,

முடியாமல் போனதால்தான் அவரே எரிந்துபோனார்.

போராட்ட காலங்களுக்கு முன்பிருந்ததைபோல குப்பைகள் மறுபடியும் நாற்றம் வீசுகின்றன, பல்கலைகழக பகடி வதை,வாள்வெட்டு, தெரு சண்டிதனம், சாதி மோதல்,கஞ்சா பாலியல் வக்கிரம்  என்று...

இப்போ யாழில் கருத்து சொல்லும் பலர் இறந்து  நூறு வருடங்களின் பின்னர் மீண்டும் பிறந்து வந்தாலும் இதேபோலதான் தமிழர் தாயக நிலமைகள் இருக்கும்.

அப்போதும் இதே யாழ்களம் இருந்தால்  இதே விரக்தியுடன் யாரும் பேசி கொண்டிருப்பார்கள்.

ஈழ தமிழர்கள், குறிப்பாக வடபகுதி தமிழர்கள் ஒரு துப்புகெட்ட இனம், இந்த இனத்தை கட்டி மேய்க்க இனி யாரும் பிறக்கபோவதில்லை.

Link to comment
Share on other sites

13 hours ago, தமிழ் சிறி said:

சரியாக..  சொன்னீர்கள், மார்த்தாண்டான்.
பிறகு... ஏன், மற்றவர்களுக்கு...  வயிறு வலிக்கின்றது. 

அன்று... வந்தாரை  வாழ வைத்த, தமிழன்.  
இன்று....  வந்தவரிடம், பிச்சை எடுக்க வேண்டி, இருக்கு.

அதுக்கு... வக்காலத்து வாங்க, 
இன்னும் ஒரு கோஸ்ட்டி  இருப்பது,
தமிழனின்...  அவமானம்.    

நன்றி தமிழ் சிறி என் ஆதங்கம் புரிந்த உங்கள் எழுத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, மார்த்தாண்டன் said:

நண்பரகளே நான் எதுவுமே திட்டமிடவில்லை ஆனால்திசை திருப்பும் நோக்கம் புரிகிறது புற்றீசல்கள் போல் முளைத்து அவைகளை ஆதாரமாக காட்டும் தந்திரம் மதம் பரப்பும் நுணுக்கத்தை யாரும் புரியாமல் செய்வது ஓர் கலை நான் எழுதியது மாதோட்டம் சந்தி என்ற அர்த்தம் மட்டுமே யாரையும் காயப்படுத்த அல்ல இதை திசை திருப்பும் அனைவருக்கும் சமர்ப்பணம் 

ஐயா பெரியவரே, 

இங்கு நாங்கள் ஏற்கனவே நொந்து நூலாகிக் கிடக்கிறோம். திரும்பவும் இதனைக் கிளறி புண்ணாக்க வேண்டாம். 

இந்தப் பிரச்சனையை அந்தப் பிரதேசத்திற்குரிய மக்களே பேசித்தீர்த்துக் கொள்ளட்டும்.

யாழ் களம் முன்னர் இருந்ததுபோல் ஏராளமானோர் இப்போது வருவதில்லை. மீதமிருக்கும் கொஞ்சப் பேரையும் வெறுத்து ஒதுங்கிப் போக வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

சரியாக..  சொன்னீர்கள், மார்த்தாண்டான்.
பிறகு... ஏன், மற்றவர்களுக்கு...  வயிறு வலிக்கின்றது. 

அன்று... வந்தாரை  வாழ வைத்த, தமிழன்.  
இன்று....  வந்தவரிடம், பிச்சை எடுக்க வேண்டி, இருக்கு.

அதுக்கு... வக்காலத்து வாங்க, 
இன்னும் ஒரு கோஸ்ட்டி  இருப்பது,
தமிழனின்...  அவமானம்.    

ஐயா தமிழ் சிறி அவர்களே,

எப்படியும் உங்களுக்கு 65 வயதிற்கும் மேலிருக்கும் என்பது எனது கணிப்பு. 

தவறா ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

பிரபாகரன் காலத்தில் எம்மினத்துக்கு நீதி தர மறுத்த சிங்களவனுக்கெதிராக  

மத வேறுபாடென்றால் என்னவென்று தெரியாமல் ஒற்றுமையாய்  போராடிய எம்மினம் 

இன்று எமக்குள்ளேயே முட்டிமோதி  , நாங்கள் வேறு மதம் அவர்கள் வேறு மதம் என்று அதே சிங்களவனின் நீதிமன்ற படியேறி   பிரிவினை கோருகின்றன .

தமிழன் என்பவன் ஒரு குப்பை, அந்த குப்பைகளிருந்துகூட தீபங்கள் ஏற்றலாம் என்று அவர் அதீத நம்பிக்கை கொண்டிருந்தார்   ,

முடியாமல் போனதால்தான் அவரே எரிந்துபோனார்.

போராட்ட காலங்களுக்கு முன்பிருந்ததைபோல குப்பைகள் மறுபடியும் நாற்றம் வீசுகின்றன, பல்கலைகழக பகடி வதை,வாள்வெட்டு, தெரு சண்டிதனம், சாதி மோதல்,கஞ்சா பாலியல் வக்கிரம்  என்று...

இப்போ யாழில் கருத்து சொல்லும் பலர் இறந்து  நூறு வருடங்களின் பின்னர் மீண்டும் பிறந்து வந்தாலும் இதேபோலதான் தமிழர் தாயக நிலமைகள் இருக்கும்.

அப்போதும் இதே யாழ்களம் இருந்தால்  இதே விரக்தியுடன் யாரும் பேசி கொண்டிருப்பார்கள்.

ஈழ தமிழர்கள், குறிப்பாக வடபகுதி தமிழர்கள் ஒரு துப்புகெட்ட இனம், இந்த இனத்தை கட்டி மேய்க்க இனி யாரும் பிறக்கபோவதில்லை.

இராச இராச சோழனுக்குப் பின் ஆயிரம் வருடங்கள் கழித்து வந்த பிரபாகரனாலேயே திருத்த முடியாத இனம் பிறகெப்போ திருந்தும் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Elugnajiru said:

மதங்கள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் அன்பையும் போதிக்கிறது எனக்கூறிக்கொண்டு கலவரத்தை உண்டாக்கினால் அது மதம் இல்லை. அதனால்தாணோ மதம் என்று பெயர்வைத்தார்களோ

உண்மை தான்  மதம் கொண்டது மதம்.

Link to comment
Share on other sites

18 hours ago, தமிழ் சிறி said:

பிறகு... ஏன், மற்றவர்களுக்கு...  வயிறு வலிக்கின்றது. 

அன்று... வந்தாரை  வாழ வைத்த, தமிழன்.  
இன்று....  வந்தவரிடம், பிச்சை எடுக்க வேண்டி, இருக்கு.

அதுக்கு... வக்காலத்து வாங்க, 
இன்னும் ஒரு கோஸ்ட்டி  இருப்பது,
தமிழனின்...  அவமானம்.    

அதிகம் கவலைப்படாதீர்கள் தமிழ் சிறி. இன்னும் ஒரு ஐம்பது வருடத்தின் பின் இப்படி கவலைப்படும் தேவையே இருக்காது.

அதற்கு காரணம் இந்த வாழத்தகாத ஈழத்தமிழினம் மறைந்து போய்விடும்.

***

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

அதிகம் கவலைப்படாதீர்கள் தமிழ் சிறி. இன்னும் ஒரு ஐம்பது வருடத்தின் பின் இப்படி கவலைப்படும் தேவையே இருக்காது.

அதற்கு காரணம் இந்த வாழத்தகாத ஈழத்தமிழினம் மறைந்து போய்விடும்.

***

கற்பனை செய்யவே கடினமாக உள்ளது. ஆனாலும் உண்மையை ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கற்பகதரு said:

அதிகம் கவலைப்படாதீர்கள் தமிழ் சிறி. இன்னும் ஒரு ஐம்பது வருடத்தின் பின் இப்படி கவலைப்படும் தேவையே இருக்காது.

அதற்கு காரணம் இந்த வாழத்தகாத ஈழத்தமிழினம் மறைந்து போய்விடும்.

***


 

இந்த வருட தேர்தலின்பின்,  வட, கிழக்கு முற்றாக ஆக்கிரமிக்கப்படும்.

50 வருடம் செல்ல தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மார்த்தாண்டன் said:

ஆனால்திசை திருப்பும் நோக்கம் புரிகிறது புற்றீசல்கள் போல் முளைத்து அவைகளை ஆதாரமாக காட்டும் தந்திரம் மதம் பரப்பும் நுணுக்கத்தை யாரும் புரியாமல் செய்வது ஓர் கலை

இன்று தமிழர் தாயகத்தில் விகாரைகள் முளைத்ததை சொல்கிறீர்கள் போலுள்ளது. சிங்களவன் பவுத்தத்தை தூண்டி ஜனாதிபதியானதை பின்பற்றி   இவர்களும் மீன் பிடிக்க குட்டையை குழப்புகிறார்கள். இவர்களுக்கு பதிலிடாமல் கடந்துபோனால் மூடிக்கொண்டு போய்விடுவார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.