Jump to content

திருக்கேதீஸ்வர அலங்கார வளைவை தற்காலிகமாக அமைக்க அனுமதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மார்த்தாண்டன் said:

பிக்குவின் கேள்வி புத்த கிராமத்தில் உனக்கென்ன வேலை அந்த நியாயம் இப்போ புரியுது 

இந்தக்கேள்வியை வெளிநாடுகளில் இருந்து மதவாதம் பேசும் நம்மவரைப்பார்த்துஅந்நாட்டவரும்  கேட்க வேண்டும்.   

ஒற்றுமையாக முன்னேற வேண்டும் என விரும்பினால் சுயலாபத்திற்காக சிறிய செய்தியை ஊதிப்பெருப்பிக்கும் இத்தலைப்பிற்கு பதிலிடாமல் நகர்ந்து போவதே மேல் இல்லையேல் நமது நேரம் வீணாவதோடு சுயநலமிகளின்நோக்கம் நிறைவேறுவதோடு நமக்குள்ளே தேவையற்ற பிரிவினைகள் ஏற்பட வழி ஏற்படும். 

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply
13 hours ago, மார்த்தாண்டன் said:

உண்மை அதன் உறுதியான மத உணர்வு அப்பாவிஇந்துக்களுக்கு இல்லையோ?? என்ன செய்வது 70 களுக்கு பிறகு வந்த சுருபங்கள் எல்லாம் ஆக்கிரமிப்பு சின்னங்களாகி இப்போது ஒரு ஞாபகம் வந்து தொலைக்குது பிக்குவின் கேள்வி புத்த கிராமத்தில் உனக்கென்ன வேலை அந்த நியாயம் இப்போ புரியுது 

70 களுக்கு முதல் போர்த்துகேயர் முதல் பிரிட்டிஷ்காரர் வரை கொண்டு வந்த சுருபங்கள் ஆக்கிரமிப்பு சின்னங்கங்கள் இல்லையா?

2 hours ago, satan said:

இந்தக்கேள்வியை வெளிநாடுகளில் இருந்து மதவாதம் பேசும் நம்மவரைப்பார்த்துஅந்நாட்டவரும்  கேட்க வேண்டும்.   

முள்ளிவாய்க்கால் அவலத்தின் போது எம்மவர்கள் கனடாவின் அதிவேக பெருந்தெருக்களிலும் லண்டனில் லண்டன் பாலத்திலும் சாகசம் காட்டியதை பார்த்து அந்நாட்டவர்கள் கேட்டார்களே, இல்லையா? நியாயம் தானே?

Link to comment
Share on other sites

5 hours ago, satan said:

இந்தக்கேள்வியை வெளிநாடுகளில் இருந்து மதவாதம் பேசும் நம்மவரைப்பார்த்துஅந்நாட்டவரும்  கேட்க வேண்டும்.   

 

கேட்ட்டாலும் ஒரு பிரயோசனமும் இல்லை। மன்னாரில் 5 % இந்துக்கள்தான் இருக்கிறார்கள்। இந்துக்கள் இல்லாத இடமெல்லாம் கோவில் காட்டுகிறார்கள்। இதுதான் இங்குள்ள பிரச்சினை। இங்கு மத நல்லிணக்கம் எண்ட பேச்சுக்கே இடமில்லை என்கின்ற நிலைமைதான்।இது அங்குள்ள இந்துக்களால் உருவானது இல்லை , வந்தேறு குடிகளால் உருவான பிரச்சினை। எப்படி இருந்தாலும் திருக்கேதீஸ்வரம் என்பது இப்போது கத்தோலிக்கர் , இந்துக்கள் , பவுத்தர்கள் எல்லோரினதும் புனித பூமியாக மாற்றப்பட்டுள்ளது। அங்கு போனவர்களுக்கு உண்மை வெளிப்படும்। எனவே என்னதான் விதண்டாவாதம் எழுதினாலும் இதுதான் உண்மை।  

Link to comment
Share on other sites

சத்தியமாக புரியவில்லை எனக்கு எல்லோரும் என்ன சொல்லவருகிறீரகள் ?? 5% என்றால் நியாயம் கிடைக்க கூடாதா?? ஏன் உலகநியாயங்கள் உங்கள் வீட்டுக்குள் ?? திருக்கேதீஸ்வரம் இனி வத்திக்கான் என்று அழைக்கபடும் எல்லோரும் அங்கே பிறந்த ஞானபிரகாசர்கள் இப்போதேல்லாம் அநியாயம் கதைப்பவரகள் தலைவரகள் கலியுகம் பிறந்து விட்டது 

Link to comment
Share on other sites

15 hours ago, மார்த்தாண்டன் said:

சத்தியமாக புரியவில்லை எனக்கு எல்லோரும் என்ன சொல்லவருகிறீரகள் ?? 5% என்றால் நியாயம் கிடைக்க கூடாதா?? ஏன் உலகநியாயங்கள் உங்கள் வீட்டுக்குள் ?? திருக்கேதீஸ்வரம் இனி வத்திக்கான் என்று அழைக்கபடும் எல்லோரும் அங்கே பிறந்த ஞானபிரகாசர்கள் இப்போதேல்லாம் அநியாயம் கதைப்பவரகள் தலைவரகள் கலியுகம் பிறந்து விட்டது 

புரியும் புரியும்।  எல்லாம் இன்னும் சில நாளாக புரியும் அத்துடன் நியாயமும் கிடைக்கும்। மண்டவளை இப்பதான் காரியத்தில் இறங்கி இருக்கிறார்। இவர்தான் தொல்பொருள் திணைக்களத்தின் பொறுப்புவாய்ந்த அதிகாரி। அதன்  பின்னர் புரியும் அங்கு திருக்கேதீஸ்வரத்தில் வாழ்ந்தவர்கள் தமிழ் பவுத்தர்களா சிங்கள சிங்கள பவுத்தர்களா எண்டு। ஏன் என்றால் புதை பொருள் ஆராய்ச்சியில் நிறைய பவுத்த சின்னங்கள் கண்டெடுக்கப்போகிறார்கள்।  வத்திக்கானில்  ஒரு  பகுதி   மன்னர்   நகரில் உள்ளது  ।   அதை அங்கு கொண்டு  செல்ல வேண்டிய  அவசியம் இல்லை।  

Link to comment
Share on other sites

On 2/13/2020 at 4:23 AM, Vankalayan said:

புரியும் புரியும்।  எல்லாம் இன்னும் சில நாளாக புரியும் அத்துடன் நியாயமும் கிடைக்கும்। மண்டவளை இப்பதான் காரியத்தில் இறங்கி இருக்கிறார்। இவர்தான் தொல்பொருள் திணைக்களத்தின் பொறுப்புவாய்ந்த அதிகாரி। அதன்  பின்னர் புரியும் அங்கு திருக்கேதீஸ்வரத்தில் வாழ்ந்தவர்கள் தமிழ் பவுத்தர்களா சிங்கள சிங்கள பவுத்தர்களா எண்டு। ஏன் என்றால் புதை பொருள் ஆராய்ச்சியில் நிறைய பவுத்த சின்னங்கள் கண்டெடுக்கப்போகிறார்கள்।  வத்திக்கானில்  ஒரு  பகுதி   மன்னர்   நகரில் உள்ளது  ।   அதை அங்கு கொண்டு  செல்ல வேண்டிய  அவசியம் இல்லை।  

இந்த கேதீஸ்வர பிரச்சனை மொட்டு கட்சி,வீணை கட்சி மற்றும் அடாவடி மினிஸ்ட்டரின் கட்சி சேர்ந்து நடத்திய நாடகம், நன்கு திட்டமிட்டு 4-5 வருடங்களாக திட்டமிட்டு இரண்டு தரப்பையும் தூண்டி விட்டு நடத்தப்பட்டது தான் இந்த வளைவு உடைப்பு.  இதை இரண்டு சமூகங்களும் கவனிக்காமல் நடந்து கொண்டால் 3வது சமூகம்  ஒன்றிடம் மண்டியிட வேண்டி வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரங்கு அப்பம் பங்கிட்டிட மாதிரி. அவனே குழந்தையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டி, அதில விகாரையும் எழுப்பி, சிங்களவனையும் குடியேற்றி, திறப்பு விழாவிற்கு கொடியேற்றும்போது பக்கத்தில் நின்று கைதட்டி சந்தோசப்படுவோம்.

Link to comment
Share on other sites

திருக்கேதீஸ்வரத்தில் தற்காலிக அலங்கார வளைவு அமைப்பு

 

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் திருக்கேதிஸ்வர திருத்தலத்தின் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மாந்தை திருக்கேதீஸ்வர வீதியில், கேதீஸ்வரம் சிவத் தொண்டர்களால் தற்காலிக அலங்கார வளைவானது, இன்று காலை    அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம், சிவராத்திரி தினத்தன்று  உடைக்கப்பட்ட குறித்த அலங்கார வளைவு தொடர்பாக  மன்னார் நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது. 

இதேவேளை, திருக்கேதீச்சர நிர்வாகம் கடந்த 6ஆம் திகதி இந்த வருடம் சிவராத்திரி விழாவை சிறப்பாக அனுஷ்டிப்பதற்காக ஏற்கெனவே வளைவு இருந்த இடத்தில் தற்காலிக வளைவு அமைப்பதற்கு   நீதிமன்றில் சட்டத்தரணி ஊடாக அனுமதி  கோரி இருந்தனர்.

அதற்கமைவாக, மன்னார் மேல் நிதிமன்றத்தால்  இன்றில் (19) இருந்து எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை  வரையான  5 நாள்களுக்கு  வளைவு அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதற்கமைவாக, இன்றைய தினம் காலை குறித்த தற்காலிக அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/வன்னி/தரககதஸவரததல-தறகலக-அலஙகர-வளவ-அமபப/72-245793

Link to comment
Share on other sites

அந்த அலங்கார வளைவை போனமுறை உடைந்த கிறிஸ்தவ வன்முறைக் கோஷ்டியை இன்னமும் கைது செய்யேல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

image_2a36de2966.jpg 

சமஸ்கிரத மயமாக்கல் போல தோன்றுகிறது ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.