Jump to content

அஜித் போயகொடவின் "நீண்ட காத்திருப்பு"


Recommended Posts

 

No photo description available.
 
 

பலாலித்தளம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தற்கொலைத்தாக்குதலில் படையினரிடம் அகப்பட்ட கெனடியை மீட்பதற்காக, விடுதலைப்புலிகள் மேற்கொண்ட கைதிகள் பரிமாற்றத்தில் விடுவிக்கப்பட்டவர் "சாகரவர்த்தனா" கப்பல் கப்டன் அஜித் போயகொட. 1994 ஆம் ஆண்டு மன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகள் மேற்கொண்ட கரும்புலித்தாக்குதலில் பிடிக்கப்பட்ட அஜித் போயகோட, ஏழு வருடங்களின் பின்னர் விடுதலைப்புலிகளினால் விடுவிக்கப்பட்டார். போயகொட சொல்ல சுனிலா கலபதி எழுதிய A Long Watch என்ற தன்வரலாற்றுக்குறிப்பு 2016 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த நூல் தமிழில் தேவாவின் மொழிபெயர்ப்பில் 'வடலி' பதிப்பகத்தின் ஊடாக "நீண்ட காத்திருப்பு" என்ற பெயரில் தற்போது வெளிவந்திருக்கிறது.

யுத்த களத்தில் எதிரிகளால் பிடிக்கப்பட்டு பின்னர் உயிர் மீண்டவர்களின் கதைகள் அனைத்தும் சாவை சுவைத்து திரும்பியவர்களின் கதைகள்தான். உலகப்போர் முடிந்த பின்னர் எழுதப்பட்ட இவ்வாறான பல கதைச்சேகரங்கள் பல்வேறு புத்தகங்களாக பல மொழிகளில் வெளிவந்திருக்கின்றன. பலர் இந்தக்கதைகளை வரலாற்றுக்கான ஆவணங்களாக எழுதிச்சென்றிருக்கிறார்கள். பலர் அந்த நினைவுகளிலிருந்து மீளமுடியாமல் எழுதிக்கடந்து செல்ல முயற்சித்திருக்கிறார்கள். இன்னும்பலர், வரலாற்றில் தம் மீதான பழியொருபோதும் எழுதப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தாங்களே அந்த வரலாற்றை எழுதிவிட்டுச்சென்றுள்ளார்கள்.

கடலில் வைத்து கைதுசெய்யப்பட்ட அஜித் போயகொட புலிகளுடன் இணைந்து செயற்படுகிறார் என்று சிங்களபடைத்தரப்பில் மாத்திரமல்லாது ஊடகங்களின் வாயிலாக மக்கள் மத்தியிலும் பிரச்சாரப்படுத்தப்பட்டு உண்மையாக்கப்பட்டிருந்த நிலையில், ஏழு வருடங்களின் பின்னர் தென்னிலங்கை திரும்பும் அஜித் முகங்கொடுக்கின்ற மிகப்பெரிய மன உளைச்சலின் விளைவாகவே இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், தனக்கு வெள்ளையடித்து காண்பிக்கவேண்டும் என்பதற்காக தான் கைதுசெய்யப்பட்டிருந்த காலப்பகுதியில் அனுபவித்த உண்மைகளை இயன்றளவு மறைக்காமல் எழுதியிருப்பது இந்த நூலுக்கு ஒரு பெறுமதியை கொடுக்கிறது.

மாலுமிகள் நித்திரைகொண்டிருந்தபோது கடற்புலிகள் தாக்கி மூழ்கடித்த கப்பலில் இருந்து பாய்ந்து, கடலில் மிதந்துகொண்டிருந்த தன்னை பிடித்துக்கொண்டு கரைக்கு கொண்டுபோனபோது, சூசை வந்து அடையாளம் காணுவதிலிருந்து -

கிளாலி வழியாக யாழ்ப்பாணத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு கொக்குவில், மானிப்பாய், நல்லூர், மிருசுவில், வன்னி என்று 94 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை - புலிகள் இராணுவ ரீதியாக எழுச்சிகொண்டுவந்த முழுக்காலப்பகுதியிலும் - அவர்களோடு ஒரு கைதியாக பயணிக்கிறார் அஜித் போயகொட.

இவர் உட்பட கைதுசெய்யபட்ட ஏனையவர்களுக்கும் சசிக்குமார் மாஸ்டரின் முதல் நியூட்டன்வரை பொறுப்பாக இருந்திருக்கிறார்கள். இவர்களுடனான அனுபவங்கள், பொதுவாக விடுதலைப்புலிகள் இயக்கம் எப்படி இயங்கியது, அவர்கள் கைதிகளை எப்படி நடத்தினார்கள், போர் குறித்தும் தமிழீழம் குறித்தும் அவர்களது பார்வை எப்படியாக இருந்தது என்பவை குறித்தெல்லாம் ஒரு படைத்துறை அதிகாரியாகவும் ஒரு சிங்களதேசத்தவராகவும் தனது பார்வையை முன்வைக்கிறார் போயகொட.

இந்தப்பார்வை தென்னிலங்கையில் தனக்கு மேலும் பழியை கொண்டுவரும் என்ற இரண்டாம் சிந்தனைக்குள் நின்று தன்னை சுதாரித்துக்கொள்ளாமல், தனது உணர்வுகளுக்கு நேர்மையாக சம்பவங்களை பதிவுசெய்திருக்கிறார்.

எல்லாவற்றையும் மீறி சுனாமி காலப்பகுதியில் மீண்;டும் வன்னி செல்கிறார். ஜோர்ஜ் மாஸ்டரின் மனைவி இறந்த செய்தியைக்கேட்டு நேரில் சென்று அவரை பார்க்கிறார். தென்னிலங்கையில் போகுமிடமெல்லாம் பெரும் தலைகுனிவை எதிர்கொண்டு விரக்தியோடு வாழுந்துகொண்டு, வெளியில் வந்த பின்னர், தனது இரண்டாவது மகனை விபத்தில் பறிகொடுக்கும் போயகொ, வன்னிக்கு மீண்டும் வரும்போது காண்பிக்கும் உணர்ச்சிப்பெருக்கு மனசாட்சியின் மீது என்று அவரை பேசவைக்கிறது.

மனம் பொருமிய இடங்களில் வன்மத்தை துப்பவும் அஜித் தவறவில்லை. அதுபோல, போர் முடிந்த பின்னர் தன்னை கனடாவிலிருநு;து தொடர்புகொண்ட ஒப்பிலான் தன்னை சுகம் விசாரித்ததாக கூறிவிட்டு, தான் புலிகள் அமைப்பிலிருக்கும்போதே றோவுடன் வேலை செய்ததாக ஒப்பிலான் தனக்கு கூறியதாக அஜித் எழுதியிருக்கிறார். இப்படியான இடங்கள்தான் இந்தப்பிரதியை எந்த இடத்தில் வைத்து வாசிப்பது என்ற குழப்பம் வருகிறது. ஏனெனில், புலிகளின் தடுப்பிலிருந்த ஏழுவருட காலத்தில் தான் எந்த தகவலையும் அவர்களுக்கு சொல்லவில்லை. தாய்நாட்டை காட்டிக்கொடுக்கவில்லை என்று புத்தகம் முழுவதும் கூறுகின்ற இவர், வெளியில் வந்தபிறகு புலிகள் அமைப்பில் தான் சந்தித்த நல்லவர்கள் என்ற பட்டியலில் வைத்திருந்த ஒப்பிலான் றோவில் பணிபுரிந்தவராம் என்று போற போக்கில் அடித்துவிட்டுப்போய்விடுகிறார். அவரைப்பொறுத்தவரை அது உண்மையாகவே இருந்திருந்தாலும், இப்படிப்பட்டவர் உள்ளே இருந்தபோது ஒரு தகவலையும் சொல்லியிருக்கமாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்?

ஈழத்து போரிலக்கிய பிரதிகளில் - போர் முடிந்த பின்னர் வெளிவந்த நூல்களில் - "நீண்ட காத்திருப்பு" முக்கியமானது. வரலாற்றின் மீதான சமாந்தரமான பார்வை என்பதற்கு அப்பால், புலிகளுக்குள்ளிருந்த எதிராளி ஒருவர் எழுதிய இந்தப்போர்க்குறிப்புக்கு அதிக கனதி உண்டு. தமிழரின் போருக்கான நியாயங்களும் உண்டு.

"நீண்ட காத்திருப்பு" - நிச்சயம் படிக்கவேண்டிய நூல். வெளிக்கொண்டுவந்த 'வடலி' பதிப்பகத்துக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கட்டாயம் வாங்கி வாசிக்க வேண்டும் 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/8/2020 at 6:18 PM, ரதி said:

 

கட்டாயம் வாங்கி வாசிக்க வேண்டும் 

 

இலண்டன் புத்தகக் கண்காட்சியில் அனோஜன் பாலகிருஷ்ணன் கட்டாயம் வாசிக்கவேண்டும் என்று சொல்லி இந்தப் புத்தகத்தை எடுத்துத் தந்தார். வாசித்து சில வரிகள் எழுதுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎3‎/‎14‎/‎2020 at 12:31 PM, கிருபன் said:

இலண்டன் புத்தகக் கண்காட்சியில் அனோஜன் பாலகிருஷ்ணன் கட்டாயம் வாசிக்கவேண்டும் என்று சொல்லி இந்தப் புத்தகத்தை எடுத்துத் தந்தார். வாசித்து சில வரிகள் எழுதுகின்றேன்.

ஆ ...அநியாயம் நான் மிஸ் பண்ணிட்டன் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image result for sea black tiger nalayini

Image result for sea black tiger  nalayini

கடற்புலிகளின் சிறப்பு தளபதியாக 
மிகவும் திறமையுடன் செயற்பட்டு வந்தவர் நளாயினி 
அன்றைய நாளில் அவருடைய இடத்தை நிரவுவதுக்கு யாரும் 
இல்லை என்ற போதும் ... இரண்டு கப்பல்கள் இலக்கு 
என்பதால் ... தாக்குதல் எந்த தளர்ச்சியும் இல்லது வெற்றியாக முடியவேண்டும் 
என்பதாலேயே தானே போகவேண்டும் என்று கேட்டுக்கொண்டு 
மேஜர் மங்கையுடன் சென்றாராம் ............

இருவரையும் இழக்கும் நிலையில் அன்று கடற்புலிகளின் மகளிர் அணி இருக்கவில்லை 
அவர்களின் இந்த சாதனைதான் பின்னாளில் பல பெண்போராளிகளை 
உறுதியுடன் கடலில் சண்டையிட வைத்தது. 

நால்வருக்கும் வீர வணக்கம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.