Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கலைந்து  சென்ற  கார்மேகம்.

 

கார்குழலில் இருந்து நழுவிய 

மலரொன்று நர்த்தனமாடுகின்றது 

அசைந்து வரும் அவள் அசைவுகளில் 

அவள் நடந்து வருகின்றாள்........!

 

பெருமழையின் தூறல்களில் 

விழும் சிறு துளிகள் 

முகமலரில் விழுந்து 

முன்னழகில் மோட்சமடைகின்றன 

அவள் ஓடி வருகின்றாள்......!

 

எதிரே பார்த்து புன்னகைக்கையில் 

என்னிடமும் சிறு மலர்ச்சி 

மழைநீரில் குமிழ்களாய் 

மனசுக்குள் சிதறுகின்றன 

அவள் சிரிப்புடன் வருகிறாள் ........!

 

என்னை கடந்து செல்கையில் 

என் மனசில் சிறு சலனம் 

குழந்தையோடும் குடையோடும் என் 

பின்னே வருகின்றான் அவள் கணவன் 

அவள் அவர்களிடம் செல்கிறாள் ......!

 

தாவியணைக்கிறாள் குழந்தையை 

தழுவிக்கொள்கிறான் அவளவன் 

சின்ன முத்தங்களின்  சிறு சலனங்கள் 

என் மனம் என்னை பரிகசிக்க 

அவள் குடும்பமாய் நகர்கிறாள் .......!

 

பார்த்தவிழி  பார்த்தபடி விரிகிறது 

மலர்ந்த மோகம் மனசினுள் மறைகிறது 

முகிழ்ந்த காமம்  முதிராமல் கரைகிறது 

இடியுடன் பெருமழை எனக்குள்ளே 

எட்டி நடந்து எங்கோ போகின்றேன் நான் .......!

 

யாழ் இணையம் அகவை  22.

ஆக்கம் சுவி......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

யாழ் இணையம் அகவை  22.

ஆக்கம் சுவி......!

என்ன சுவி இன்னும் நாள் இருக்கு என்றார்கள் வேளாவேளைக்கே தொடங்கியாச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி ஐயா, பாக்கியராஜ் “அந்த ஏழு நாட்கள்”  படத்தில் சொன்ன “ உன் மனைவி என் காதலியாக முடியாது” என்ற வசனத்தை தேவவாக்கியமாகக் கருதுவது போலிருக்கே!😜

Quote

பெருமழையின் தூறல்களில் 

விழும் சிறு துளிகள் 

முகமலரில் விழுந்து 

முன்னழகில் மோட்சமடைகின்றன

அவள் ஓடி வருகின்றாள்......!

பம்பாய் படத்தில் மனீஷா கொய்ராலா ஒரு பாடலில் ஓடிவந்தது மனச்சித்திரத்தில் வந்தது😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

சுவி ஐயா, பாக்கியராஜ் “அந்த ஏழு நாட்கள்”  படத்தில் சொன்ன “ உன் மனைவி என் காதலியாக முடியாது” என்ற வசனத்தை தேவவாக்கியமாகக் கருதுவது போலிருக்கே!😜

பம்பாய் படத்தில் மனீஷா கொய்ராலா ஒரு பாடலில் ஓடிவந்தது மனச்சித்திரத்தில் வந்தது😀

இந்தக் காலத்தில் அடுத்தவரின் மனைவியும் காதலியாகலாம்  tw_lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன சுவி இன்னும் நாள் இருக்கு என்றார்கள் வேளாவேளைக்கே தொடங்கியாச்சு.

நேற்று ஐந்து மணித்தியாலம் ட்ரெயினில் பிரயாணம் செய்தேன்......கண்முன்னே கலர்கலராய் காட்சிகள்.மேலும் அநியாயத்துக்கு ரயில் டிக்கட்டை  பெரிதாக அடித்திருந்தார்கள். பொக்கட்டில் பேனா இருந்தது, பிறகென்ன கிறுக்கல்தான். வேறொன்றுமில்லை.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

சுவி ஐயா, பாக்கியராஜ் “அந்த ஏழு நாட்கள்”  படத்தில் சொன்ன “ உன் மனைவி என் காதலியாக முடியாது” என்ற வசனத்தை தேவவாக்கியமாகக் கருதுவது போலிருக்கே!😜

பம்பாய் படத்தில் மனீஷா கொய்ராலா ஒரு பாடலில் ஓடிவந்தது மனச்சித்திரத்தில் வந்தது😀

நீங்கள் பம்பாயில் பார்த்த மனிஷா கொய்ராலாவை நான் இந்த ஏழு நாட்களுக்குள் பார்த்தேன்.......அதன் பாதிப்புதான் இந்த கவிதை......!😂

18 hours ago, ரதி said:

இந்தக் காலத்தில் அடுத்தவரின் மனைவியும் காதலியாகலாம்  tw_lol:

நம்ம சங்கம் என்ன வேண்டாம் என்றா சொல்லுது, அவங்களும் காதலிக்க வேண்டுமே சகோதரி......!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/8/2020 at 1:24 PM, suvy said:

இடியுடன் பெருமழை எனக்குள்ளே 

எட்டி நடந்து எங்கோ போகின்றேன் நான் .......!

வீட்டுக்கு வீடு வாசற்படி...

நாங்கள் மனதுக்கை நினைக்கிறதெல்லாம் வெளியிலை சத்தமாய் கேட்குமாயிருந்தால் டெய்லி தூக்குத்தண்டனைதான்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/8/2020 at 12:30 PM, ரதி said:

இந்தக் காலத்தில் அடுத்தவரின் மனைவியும் காதலியாகலாம்  tw_lol:

எப்பிடி என்று ஏதும் டிப்ஸ் கிடைக்குமா? 

காலம் போய்க்கொண்டு இருக்கிறது 
எவ்ளவு காலம்தான் இப்படி தனிமையிலேயே இருப்பது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Maruthankerny said:

எப்பிடி என்று ஏதும் டிப்ஸ் கிடைக்குமா? 

காலம் போய்க்கொண்டு இருக்கிறது 
எவ்ளவு காலம்தான் இப்படி தனிமையிலேயே இருப்பது ?

உங்களிட்ட நிறைய சொத்துக்கள் இருந்தால், உங்கள் பழைய காதலியை போய் கூப்பிட்டு பாருங்கோ அவர்கள் கல்யாணம் கட்டி இருந்தாலும் வசதிக்காய் சில நேரம் உங்களோடு வரக் கூடும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

எப்பிடி என்று ஏதும் டிப்ஸ் கிடைக்குமா? 

காலம் போய்க்கொண்டு இருக்கிறது 
எவ்ளவு காலம்தான் இப்படி தனிமையிலேயே இருப்பது ?

tha.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

உங்களிட்ட நிறைய சொத்துக்கள் இருந்தால், உங்கள் பழைய காதலியை போய் கூப்பிட்டு பாருங்கோ அவர்கள் கல்யாணம் கட்டி இருந்தாலும் வசதிக்காய் சில நேரம் உங்களோடு வரக் கூடும்  

பொம்பள புள்ளையா பொறந்துருக்கலாம், காலாகாலத்துல செட்டில் ஆயிருக்கலாம்

Link to comment
Share on other sites

On 2/8/2020 at 11:24 PM, suvy said:

எதிரே பார்த்து புன்னகைக்கையில் 

என்னிடமும் சிறு மலர்ச்சி 

மழைநீரில் குமிழ்களாய் 

மனசுக்குள் சிதறுகின்றன 

அவள் சிரிப்புடன் வருகிறாள் ........!

ஆஹா கவித... கவித....! 😀

உங்கள் கவிதையை வாசித்து என் மனமும் மலர்கிறது. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் வெள்ளணவே தொடங்கியாச்சாக்கும். அவசரக் குடுக்கைகள்.
கவிதை நன்று அண்ணா.   😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எல்லாரும் வெள்ளணவே தொடங்கியாச்சாக்கும். அவசரக் குடுக்கைகள்.
கவிதை நன்று அண்ணா.   😃

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி......!  😁

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/11/2020 at 12:51 AM, Maruthankerny said:

எப்பிடி என்று ஏதும் டிப்ஸ் கிடைக்குமா? 

காலம் போய்க்கொண்டு இருக்கிறது 
எவ்ளவு காலம்தான் இப்படி தனிமையிலேயே இருப்பது ?

ஊரில் ஒரு பெண் 3 பிளளைகள் பெற்ற பின் பிரான்சில் உள்ள முன்னால் காதலனிடம் போய்சசேர்நிட்டார்.இப்ப பழைய கணவனையும் பிள்ளைகளையும் பிரான்சுக்கு எடுத்து விட்டிருக்கிறார்.ஆனால் காதலனுடன்தான் வாழக்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, சுவைப்பிரியன் said:

ஊரில் ஒரு பெண் 3 பிளளைகள் பெற்ற பின் பிரான்சில் உள்ள முன்னால் காதலனிடம் போய்சசேர்நிட்டார்.இப்ப பழைய கணவனையும் பிள்ளைகளையும் பிரான்சுக்கு எடுத்து விட்டிருக்கிறார்.ஆனால் காதலனுடன்தான் வாழக்கை.

கதை நன்றாக நகர்ந்து இருக்கிறது 
கணவனுக்கும் ஒரு காதலி கிடைத்தால் 
நல்ல திரை கதை போன்று இருக்கும் 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்திட்டு + புள்ளியிட்டு மற்றும் வாசித்து செல்லும் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.....!  🌹

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.