Jump to content

ரஜினி யார்.. எம்எல்ஏவா, கட்சி தலைவரா? சேட்டைகளை சினிமாவோடு நிறுத்திக்கணும்.. தா.பாண்டியன் தாக்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் மோடி

ரஜினி யார்.. எம்எல்ஏவா, கட்சி தலைவரா? சேட்டைகளை சினிமாவோடு நிறுத்திக்கணும்.. தா.பாண்டியன் தாக்கு

முதல்ல, இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் இருக்குன்னு ரஜினிகாந்த்துக்கு தெரியுமா? குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு இல்லைன்னு சொல்ல இவர் யாரு? எம்எம்ஏவா? கட்சி தலைவரா? ஒன்னும் இல்லை.. ஒரு நடிகர்.. அந்த நடிப்போடு அவர் நிறுத்தி கொள்வது நல்லது என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

தமிழகத்தின் மிக சிறந்த பேச்சாளர்களில் ஒருவரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தா.பாண்டியன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, பாஜக ஆட்சியை சரமாரி தாக்கினார்.. அக்கட்சிக்கு வக்காலத்து வாங்கி வரும் ரஜினியை பகிரங்கமாகவே விமர்சித்தார். அவர் பேசியதாவது:

"பிரதமர் மோடி மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே நாட்டின் நிலைமை ரொம்பவும் மோசமாகி வருகிறது.. முதல்ல, இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன.. அவற்றிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது இப்படி எந்த விவரமும் நடிகர் ரஜினிகாந்திற்கு தெரியாது.. ஆனால், சிஏஏவினால் இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு வராது என்று மட்டும் சொல்கிறாரே, அதை சொல்ல ரஜினி யார்? இது குறித்து ரஜினி குரல் கூட கொடுக்கவே வேண்டாம்.
இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு இல்லை என்று சொல்ல இவர் யார்? சட்டமன்ற உறுப்பினரா? கட்சியின் தலைவரா? அவர் ஒரு நடிகர் அவ்வளவு தான் அவர் நடிப்போடு நிறுத்திக் கொள்வது தான் நல்லது... இந்தியாவில் எத்தனை மாவட்டங்கள் இருக்கின்றது.. எத்தனை மாநிலங்கள் இருக்கின்றன.. இந்தியாவின் முதல் பட்ஜெட்டில் எவ்வளவு பணம்? இதையெல்லாம் அவரை சொல்ல சொல்லுங்களேன் பார்க்கலாம்?

யார் யாரை வந்து ஏமாத்துறது? ஏதோ இவர் திரையில் செய்கிற சேட்டைகளை பார்த்து அவர் சினிமாவுலகில் வேண்டுமானால் முதலிடம் பிடித்திருக்கலாம். அவருக்கு பாலாபிஷேகம் செய்யட்டும்.. விமர்சையாக நடக்கட்டும்.. ஏன் வாழைப்பழ அபிஷேகம் கூட நடக்கட்டும் அரசியல் பேசுவதற்கு அவருக்கு எந்த அருகதையும் இல்லை... இப்பொழுது வந்து இஸ்லாமியர்களுக்கு என்றால் முதலில் குரல் கொடுப்பேன் சொல்கிறார்..

எங்களை பாதுகாத்துக் கொள்ள எங்களுக்குத் தெரியும்... எங்களுக்குப் பாடம் சொல்லித்தர அவர் அவராகவே தம்மை ஆசிரியராக நியமிக்க வேண்டாம்... உங்களுக்கு என்ன தெரியும், என்ன தெரியாது என்று எங்களுக்கும் தெரியும்" என்று தா.பாண்டியன் சற்று காட்டமாக கூறினார். தா.பாண்டியன் ரஜினியை கடுமையாக சாடிய இந்த பேச்சுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/madurai/cpi-senior-leader-d-pandian-slams-rajinikanth-376579.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ரஜினி யார்.. எம்எல்ஏவா, கட்சி தலைவரா? சேட்டைகளை சினிமாவோடு நிறுத்திக்கணும்.. தா.பாண்டியன் தாக்கு

தமிழ்நாட்டு மக்கள்  ரசினியை பரட்டையாகவே வைத்திருக்கணும்.
யாரோ சொல்லிக்கொடுத்த நடிப்பையும்....
யாரோ  எழுதிய பாடல் வரிகளையும்...
யாரோ எழுதிய திரைக்கதை வசனங்களையும்....
தொழில்நுட்பவாதிகளின் உழைப்பையும்.....
சிறந்த இசையமைப்பாளர்களின் பாடல்களையும்....
நல்ல கதாசிரியர்களின் பஞ்ச் வசனங்களையும்  வைத்து முன்னேறிய பரட்டை நாட்டை ஆள நினைப்பது  இப்போதிருக்கும் அரசியல்வாதிகளின் இயலாண்மையையே  காட்டுகின்றது.
இவ்வளவு காலம் தமிழ்நாட்டில்  இருந்தும் தமிழ் மொழியை சரளமாக பேச முடியாத பரட்டையை தலைவர் என மக்கள் விளிப்பது அதியுச்ச கேவலம். :cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.