Jump to content

தெய்வானை-சிறுகதை-கோமகன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வானை-சிறுகதை-கோமகன்

February 8, 2020

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%

 

நான்கு புறமும் அமைந்திருந்த சுற்று மதிலின் பின்னே நிரை கட்டியிருந்த கமுகம் பிள்ளைகளும் பாளை தள்ளிய தென்னை மரங்களும் ஆங்காங்கே இருந்த பப்பா மரங்களும் முற்றத்தின் மத்தியிலே சடைத்து நின்ற அம்பலவி மரமும் அதிலே  துள்ளி விளையாடிய அணில் பிள்ளைகளும் என்று  ஐந்து பரப்பில் அமைந்திருந்த  அந்த நாற்சாரவீட்டில் சிங்கராயர் குடும்பத்தின் பவிசுகளைச் சொல்லி நின்றன. அந்தக்காலத்தில்  ஊரில் நாற்சார வீடுகள் வைத்திருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வீட்டின் தென்கிழக்கு மூலையில்  மால் ஒன்று இருந்தது. அந்த மாலின் அகன்ற சுவர்கள் மண்ணினால் கட்டப்பட்டு, இடையில் வெளிச்சமும் காற்றும் வருவதற்காகப் பனை மட்டை வரிச்சுக்களால் கிராதி அடித்துப் பின்னர் மேலே எழும்பிய சுவர்  பனையோலையினால் நன்கு வேயப்பட்டிருந்த கூரையைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது.

மாலின் உட்புறமாக இருந்த பாரிய வட்டத்தின் குறுக்குப்பாடாக சாமான்களை போட்டு வைப்பதற்கான களஞ்சிய அறை இருந்தது. அதற்கு நேர் எதிராக அமைக்கப்பட்டிருந்த புகட்டில் மூன்று கண்களைக் கொண்டு சுட்ட களிமண்ணினால் வனையப்பட்டிருந்த நான்கு சூட்டடுப்புகள் இருந்தன. அதில் ஒன்றின் மீது இருந்த தண்ணீர் பானையைக் காய்ந்த பனைஞ்சிராய்கள் விளாசி எரிந்து சூடேற்றிக் கொண்டிருந்தன.

புகட்டிற்குக்  கீழே மாட்டுச் சாணகத்தினால்  நன்கு மெழுகப்பட்டிருந்த தரையில் ஒரு காலை மடக்கி மறுகாலை குத்துக்காலிட்டவாறு  அமர்ந்திருந்த ‘தெய்வானைப்பிள்ளை’ என்கின்ற தெய்வானை தனது கோபத்தை எல்லாம் அன்று காலை உணவிற்காகத் தயாரித்துக்கொண்டிருக்கும் கோதம்பை மாப்புட்டைக் கொத்துவதில் காட்டிக் கொண்டிருந்தாள். அவளுடைய கோபம் ஒன்றும் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஷனும் சோவியத் யூனியன் பிரெஷ்னேவ்-க்கும் இடையிலானது போன்றதல்ல, மிகவும் சாதாரணமானதுதான். ஆனாலும் அந்த நேரத்தில் அது நிக்ஷன்-பிரெஷ்னேவ்-ஐ விட மூர்க்கமாக இருந்தது. விடியக்காத்தாலையே அதுவும் இருபத்தைஞ்சாவது கலியாணநாளிலை “வெளியாலை போட்டு வாறன்” என்று மொட்டையாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிய அவளுடைய புருஷன் காசிநாதர்  மதியமாகியும் திரும்பாததால் அவளுக்கு வந்த கோபத்தில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்தது.

காசிநாதரும் தெய்வானையும் கலியாணம் செய்து இருபத்தைந்து வருடங்களைக் கடந்திருந்தாலும் சிங்கராயர் குடும்பத்தின் வாரிசுக்கான பிரசன்னம் இதுவரையில் இல்லாது போயிற்று. ஆனாலும் அங்கே அமைதியும் அன்பும் மெத்தவே நிரம்பியிருந்தன. ஒருவரை ஒருவர் பரஸ்பரம் மதிக்கின்ற தோழர்களாகவும் பிறத்தியார்கள் பாத்துப் பொறாமைப்படுகின்ற இணையர்களாகவே அவர்கள் இதுவரையில் இருந்து வந்திருக்கின்றார்கள். காசிநாதர் மலாயாவில் பெரும் உத்தியோகத்தில் இருந்த பொழுதே தெய்வானையை ‘வெளிநாட்டு மாப்பிள்ளை’ என்ற பவிசுவுடன் புத்தூரில் கலியாணம் செய்திருந்தார். அந்தக்காலத்தில் புத்தூரிலேயே முதல் தடவையாக காசிநாதரைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வைத்துத் தனது கலியாண வீட்டிற்கு ‘மாப்பிள்ளை அழைப்பாக’ அழைத்துவந்ததை இப்பொழுதும் தெய்வானை எல்லோருக்கும் பெருமையாக சொல்லிக்கொள்வாள்.

000000000000000000000000

புத்தூரில் சிங்கராயர் குடும்பத்தில் வந்த நான்காவது தலைமுறையான பூரணம்பிள்ளைக்கும் பார்வதிப்பிள்ளைக்கும் மூத்த மகளாக அவள் பிறந்தாள். தனது பூட்டியின் நினைவாக ‘தெய்வானைப்பிள்ளை’ என்று தனது மகளுக்குப் பெயர் வைத்தாள் பார்வதிப்பிள்ளை. அன்றய காலத்தில் பத்தாம் வகுப்பிற்கு மேல் அவளைப் படிக்க விடாது  ஊரெங்கும் சல்லடை போட்டுத்தேடி கொழுத்த சம்பளக்காரரான ‘மலாயா மாப்பிள்ளை’ காசிநாதருக்குத் தெய்வானையைக் கலியாணம் செய்துவைத்தார் பூரணம் பிள்ளை. அந்தக்ககாலத்தில்  பெரும் கியாதியான கலியாணமாகப் புத்தூர் சனங்களால் அது பார்க்கப்பட்டத்தில் வியப்பில்லை. கலியாணம் கட்டிய கையுடன் தெய்வானையுடன் மலாயாவுக்கு திரும்பிய காசிநாதர் சிறிது காலம் அங்கே வேலை  பார்த்து விட்டு  விருப்பு ஓய்வில் மீண்டும் புத்தூருக்கு ‘மலாயன் பெஞ்சனியர்’ என்ற புதிய பட்டத்துடன் திரும்பினார்.

தெய்வானை இப்பொழுது உள்ளவர்கள் போல ‘நவீனமானவள்’ என்றோ இல்லை ‘அரத்தல் பழசு’ என்றோ இலகுவில் மட்டுக்கட்டிவிட முடியாது. மலாயாவில் இருந்த வாழ்க்கைமுறை தந்த பவிசும் சிங்கராயர்  குடும்பத்துப் பாரம்பரியமும் கலந்த கலவையாகவே அவள் இருந்தாள். அவள் ட்றெசிங் கவுன், சாறி  என்று தினத்துக்கொன்றாகத் தனது உடைகளைத் தெரிவு செய்து  அணிவாள். அதிலும் அவள் சாறி கட்டும்பொழுது கொசுவத்தை முன் புறமாகச் செருகி , வளைந்திருக்கும் நெற்றியில் பெரிய வட்ட வடிவிலான குங்குமப் பொட்டை வைத்திருப்பாள். அவள் தோற்றத்தில் நெடுநெடு என்ற உயரமாகவும் பேரழகிக்கும் அழகிக்கும் இடைப்பட்டவளாகவும் இருந்ததில் காசிநாதருக்கு தலைகால் தெரியாத புளுகமாக இருந்தது. அத்துடன் அவளது குணவியல்புகள் சிங்கராயர்  குடும்பத்தின் பெயரையும் புகழையும் கட்டிக்க காப்பதாகவே அமைந்திருந்தன.

அதிகாலை வேளையிலேயே வெளியே போன காசிநாதர் வீட்டுக்குத்  திரும்ப நேரமானதால் வல்லிபுரக் கோயில், வசந்தமாளிகை படம் என்று, ஏலவே தான் தீட்டியிருந்த திட்டங்களுக்கு விக்கினம் வந்து விடுமோ என்ற பதகளிப்புதான் புட்டுக்கு மாக்கொத்துவதில் அவளது கோபமாக வெளிப்பட்டது. கொத்திய கொத்தலில் தூள் தூளான மென்மையான கோதம்பை மாவில் வளவில் பிடுங்கிய தேங்காயை உடைத்து துருவிய தேங்காய் பூவும் பருத்தித்துறை பனங்கட்டியும் மெல்லிதாகப் பொடியாக்கிக் கலந்த கலவையை  மூங்கில் புட்டுக் அவள்குழாயில்  புட்டு மாவை  படைபடையாக அடைந்து கொண்டிருந்த பொழுதுதான் வீட்டின் முன் வாசலில் வாகனச் சத்தம் கேட்டது.

“மெய்யே ………..மெய்யே …….” என்ற காசிநாதரின் குரல் கேட்டதும் தாமதம் அவர் மேல் இருந்த கோபம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போக வீட்டின் கேற்ரடிக்கு நகர்ந்த தெய்வானையின் கண்கள் எவ்வளவுக்கு எவ்வளவு விரியமுடியுமோ அவ்வளவுக்கு விரிந்து கொண்டன. அவள் தன்நிலைக்கு வருவதற்கு சில செக்கன்கள் எடுத்தன.

வீட்டுக் கேற்ருக்கு முன்னால் புத்தம் புதிய பளபளப்பான ஒஸ்ரின் சோமர்செற் ( Summerset ) காடி ஒன்று நின்றிருந்ததது.  காடியின் ட்ரைவர் சீற்ரில் இருந்து முகம் முழுக்கச் சிரிப்புடன் இறங்கிய காசிநாதர்,

“மெய்யே ……….. உமக்கெண்டு ஒரு சோக்கான சாமான் எல்லோ வாங்கிக் கொண்டு வந்திருக்கிறன். உமக்குத்தான் இந்த காடி. கொழும்பாலை இறக்கினது. எப்பிடி இருக்கெண்டு வந்து பாருமென்…..?”

புத்தூரிலேயே இல்லாத ஒஸ்ரின் சோமர்செற் காடியை, அதுவும் கொழும்பாலை இறக்கித்  தமது கலியாண நாள் பரிசாக கொண்டு வந்த விண்ணாதி விண்ணனான காசிநாதர், உண்மையிலேயே அவளுக்குத் தான் பார்க்கப்போகும் ‘வசந்தமாளிகை’ படத்தின் நாயகனான சிவாஜி கணேசனை விட மேலான ஒரு ஹீரோவாகத் தான்  தெரிந்தார்.

அந்த ஒஸ்ரின் சோமர்செற் காடி கன்னங்கரிய நிறத்தில் கொள்ளை அழகில் கம்பீரமாக இருந்தது. முன்பக்கத்தில் நீள் வாக்காக ஒரு புள்ளியில் இருந்து புடைத்தவாறே மேல் எழுந்து சரிந்து விழுந்த வட்ட வடிவிலான இரண்டு ஹெட் லைட்டுகளும், அதே போல் மேல் எழுந்து சரிந்து விழுந்த பெரிய மட்கார்டுகளும் இரு பக்கத்துக் கதவுகளுக்கு இடையில் காடி திரும்பும் பொழுது குறுக்குப்பாடாக மேல் எழுந்து காட்டவென   சுட்டுவிரல் வடிவில் அமைந்திருந்த சிக்னல் லைட்டுகளும், உள்ளே சின்னஞ்சிறிதாக வட்ட வடிவில் அமைந்திருந்த ஸ்டியரிங்-உம், மண்ணிற நிறத்தில் தோலினால் செய்யப்பட்ட புசுபுசுவென்ற அகலமான இருக்கைகளும், மறுதலையாகப் பின்புறமாக நல்ல தவாளிப்புடன் சரிந்து சென்ற டிக்கியுமாக அந்தக் கன்னங்கரிய ஒஸ்ரின் சோமர்செற் காடி அட்டாகாசமாகவே இருந்தது.

காசிநாதருக்கு மிகவும் பிடித்தமான கத்தரிக்காய் பொரியலுடன், முட்டைப்பொரியலும் சேர்த்துக் கணக்காக வெந்திருந்த கோதம்பை மா குழாய் புட்டை குருத்து வாழை இலையில் வைத்த தெய்வானை,

“இஞ்சை………… இப்ப என்னத்துக்கு உந்தக் காடி? உது எக்கச்செக்க விலையல்லோ வந்திருக்கும் ..? காசைக் கண்டால் கண்மண் தெரியாமல் நடக்கிறது………”

“காசென்ன காசு…… ? மண்ணாங்கட்டி காசு. எங்களிட்டை இல்லாத காசே…? இருக்கும்வரை ஆண்டு அனுபவிக்க வேணும் கண்டீரோ……….அதெல்லாங் கிடக்க இந்தக் காடி உமக்கு புடிச்சுதோ இல்லையோ….. ? அதைச்சொல்லும். உமக்குச் செய்யாமல் வேறை ஆருக்கு செய்யப் போறன்….. கதையோடை கதையாய் கொழும்பிலை எனக்கு தெரிஞ்ச கூட்டாளி  ஒருத்தனிட்டை சொல்லி வைச்சனான்…… அவன் தான் லண்டனாலை இருந்து வந்த ஒருத்தரிட்டை வாங்கி அனுப்பி விட்டவன். இண்டைக்குத்தான் எல்லா அலுவலும்  சுளுவாய் முடிஞ்சுது”.

கோதம்பை மாப்புட்டை நிதானமாக ரசித்து ருசித்துக் கொண்டிருந்த காசிநாதரை அவள் பார்த்த பொழுது அவர் மீது கொண்ட அன்பும் பெருமையும் அவளது முகத்தில் அப்படியே பரந்திருந்தன.

“அப்ப நாங்கள் ஒருக்கா வல்லிபுரக்கோயிலுக்கு போட்டு வருவமே……? அதோடை ஒரு படமும் பாத்திட்டு வருவம்.”

“பாத்தீரே …..காடியை முதலிலை உமக்கு காட்ட வேணும் எண்ட பிராக்கிலை கோயிலுக்கு கொண்டு போக அயத்துப் போனன். அதுசரி……. உமக்கு என்ன படம் பிடிக்கும்? சாப்பிட்டிட்டு வெளிக்கிடுவம். ”

“வசந்தமாளிகை.”

“பிஞ்சைபாரன்….. அட்ராசக்கையெண்டானாம்.”

தெய்வானை சாப்பிட்டு வெளிக்கிடும் வரை முற்றத்து வாசலில் நின்றிருந்த காடியைப் பளபளப்பாக்க மீண்டும் துடைக்கத் தொடங்கினார் காசிநாதர். அன்றில் இருந்து அவருக்கும் அந்தக் காடிக்குமான பந்தம் ஆழமாக வேரோட தொடங்கியது. அதனைத் தனது குழந்தைப் பிள்ளை போலவே கவனிக்கத்தொடங்கினார். தினமும் அதிகாலை வேளையிலேயே சவர்க்காரம் போட்ட தண்ணியில் காடியைக்  குளிப்பாட்டி காய்ந்த துணியால் அதனைப் பளபளப்பாக்குவது அவரது கடமைகளில் ஒன்றாயிற்று.

மலாயாவில் இருந்து வாங்கி வைத்திருந்த அரக்கு நிறத்து சாறிக்குப் பொருத்தமான சிவப்பு நிறத்தில் எடுப்பான பிளவுஸ் அணிந்து, சாறியின் கொசுவத்தை முன்புறமாக செருகி நெற்றியில் பெரிய வட்டவடிவில் ஒரு குங்குமப் பொட்டுடன் வந்த தெய்வானையை பார்க்கும்பொழுது, தான் முதன் முதலில் எப்படி அவளை பார்த்தாரோ அப்படியே பார்ப்பது போன்ற உணர்வைக் காசிநாதர் அடைந்தார். அவர் காடியை செலுத்த தெய்வானை முன்னிருக்கையில் அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து வல்லிபுரக்கோயிலுக்குச் சென்றது அக்கம் பக்கத்து கிடுகு வேலிகளில் அமைந்திருந்த பொட்டு கண்களுக்கு விருந்தாயிற்று. சில நாட்களுக்கு அங்கே இந்தக் கதைதான் ‘குய்யோ’ என்றிருந்திருக்கும்.

பருத்தித்துறை வீதியில்  ஓடிக்கொண்டிருந்த  காடியின் இருபக்க கதவுகளுக்கும் இடையே அமைந்திருந்த சமிக்ஞைக் கைகாட்டிகள் வீதியின் வளைவுகளுக்கு ஏற்றாற் போல் மேல் எழுந்து ஒளிர்ந்தது அவளுக்கு வியப்பாக இருந்தது. முன்னே செல்லும் வாகனங்களை விலத்துவதற்கு காசிநாதர் தனக்கு அருகே வெளிப்பக்கமாக இருந்த பெரிய ரப்பர் குமிழை அமுக்க, அது பெரிதாக சத்தம் போட, அவள் திடுக்கிட வேண்டியதாயிற்று. அத்துடன் அவர் அடிக்கடி அந்தப்பெரிய ரப்பர் குமிழை பிசைந்து பிசைந்து அமுக்கும் பொழுது அவள் தனக்குள் பெரிதும் வெட்கப்பட்டுக் கொண்டாள். வசந்த மாளிகை படம் பார்க்கும் பொழுது அவள் அடிக்கடி பல்வேறு உணர்ச்சிகளில் இருந்து காசிநாதரையும் இடைக்கிடை பார்த்துக்கொண்டாள். அந்தப்படம் தங்களுக்காகவே உருவாக்கப்பட்டது போல் பிரமை கொண்டாள். படம் பார்த்து விட்டு  யாழ்ப்பாணத்தில் இருந்த  ‘தாமோதர விலாஸில்’ அவளுக்குப் பிடித்த மாசால் தோசையை இருவருமாக சாப்பிட்டு விட்டு மீண்டும் புத்தூருக்கு காடியில் ஆரோகணித்தார் காசிநாதர். அன்று பூரணை நிலவும் நட்சத்திரப் படுக்கையும் கட்டவிழ்த்து விட்ட குளிர்ந்த மென்மையான ஒளியில் வீட்டு முற்றத்தில் அவர்கள் மீண்டும் புதிதாகச் சந்தித்துக்கொண்டார்கள். அந்தப் பூரணை நிலவும் நட்சத்திரப் படுக்கையும் அவர்களுக்காகவே படைப்பட்டிருந்தன. இந்தக் கூத்துகளை எதிரே நின்றிருந்த காடி மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தது.

000000000000000000000

இப்போதெல்லாம் முன்னையைப் போல தெய்வானைக்குத் துடியாட்டமாக இருக்க முடிவதில்லை. அத்துடன்  வீட்டில் வைத்த பொருட்களை அவளால் நினைவில் கொண்டுவர முடிவதில்லை. அவள் தான் செய்ய வேண்டிய வேலைகளை அடிக்கடி மறக்க ஆரம்பித்தாள். இதனால் சிலவேளைகளில் ஒரே வேலையை இரண்டு தடைவைகள் அவள் செய்ய வேண்டி வந்தது. இந்த நிலையில் அவள் காசிநாதரையும் வீட்டையும் கவனிக்க கஷ்டப்பட்டாள். இந்த மறதி என்பதே ஒரு அற்புதமான மருந்து தானே? ஒருவன் தான் பிறக்கும் பொழுது தனது முன்னைய பிறப்பில் தான் எப்படியாக இருந்தேன் என்று நினைவில் வைத்திருந்தால் அது நன்றாகவா இருக்கும்? இல்லை தான் இறக்கும் நாளை முன்கூட்டியே நினைவில் வைத்திருந்தால் அவன் சந்தோசமாகத் தான் இருப்பானா? வீட்டு வேலிச்சண்டை ,கிணைத்துப் பங்கு சண்டை, பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் நன்றாக இருந்தால் அவர்களை பார்த்துப்  பொறாமை படுதலில் இருந்து தனது பிள்ளைகள் வளர்ந்து தமக்கு விரும்பிய இணையை தேடினால் அதற்குவேறு ஜென்மத்துச் சண்டை என்று தினமும் சண்டை சச்சரவுகளுடன் வாழுகின்ற ஒரு சாதாரண தமிழ்க்குடிமகன் இவைகளையெல்லாம் தனது நினைவில் அழியாது வைத்திருந்தால் அவனது வாழ்வில் நின்மதிதான் இருக்குமா? ஆனால் இந்த மறதியே அவனுக்கு நிரந்தரமானால் அதுவே அவனை ஒரு மூலையில் இயங்க முடியாதவாறு முடக்குகின்றது. அதன் ஆரம்பக் கட்டமே தெய்வானைக்கும் நடக்க ஆரம்பித்தது.

ஒருநாள் காலை நித்திரையால் எழும்பும் பொழுது அவளால் கையை  ஊன்றி எழுந்திருக்க முடியவில்லை. அவள் கையில் பலமில்லாது போல் உணர்ந்தாள். அருகே நல்ல நித்திரையில் இருந்த காசிநாதரை எழுப்ப மனமில்லாது மீண்டும் மீண்டும் எழுந்திருக்க முயற்சி செய்தாள். ஒரு கட்டத்தில் தெய்வானையின் அசுகைகளினால் விழிப்பு நிலைக்கு வந்த காசிநாதர் தெய்வானையின் கோலத்தைப் பார்த்து விட்டு பதறிவிட்டார். அவள் மிகவும் பயந்திருந்தாள். கைகள் ஏன் இயங்க மறுத்து ஆடம் பிடிக்கின்றன என்பது அவளுக்குப் புரியாத புதிராக இருந்தது. பருத்தித்துறையில் இருக்கும் அவர்களது குடும்பவைத்தியரான டொக்ரர் ஏகாம்பரத்திடம் காசிநாதர் அவளை அழைத்துவந்த பொழுது, டொக்ரர் ஏகாம்பரம் அவளுக்கு வந்திருந்த வியாதியை விபரிக்கும்பொழுது அவர் ஆடித்தான் போய்விட்டார்.  அல்ஸ்ஹைமர்-ம் பாரிசவாதமும் அவளை ஒன்றாகத் தாக்கியிருந்தன. அவ்வப்பொழுது எல்லாவற்றையும்  குடைந்து குடைந்து கேட்ட தெய்வானைக்கு, அவரால் ‘பயப்பிட ஒன்றும் இல்லை’ என்று மட்டுமே  சொல்ல முடிந்தது.

ஆரம்பத்தில்  சிறிதுசிறிதாக மறக்க ஆரம்பித்த தெய்வானைக்கு இப்பொழுதெல்லாம் காசிநாதரையே அடையாளம் காணமுடியாத நிலை வந்தது. இதனால் வீட்டில் அவளை தனியாக விட்டு விட்டு காசிநாதரால் வெளியே செல்ல முடிவதில்லை. அவளையுமொரு குழந்தைப்பிள்ளை போல் அவர் பராமரிக்க வேண்டியிருந்தது. இப்பொழுதெல்லாம் தனது இயலாமையினால் வருகின்ற கோபத்தையெல்லாம் காசிநாதர் மீது  காட்ட ஆரம்பித்து விட்டாள் தெய்வானை. அதிர்ந்து பேசியறியாத காசிநாதர் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது அவளை முடக்கிய வியாதியைப் பற்றியே கவலைப்பட்டார். தமது முன்னோர்கள் செய்த பாவம் பழியெல்லாம் தம்மை படுத்துகின்றதோ என்றுகூட  யோசித்தார்.

சிங்கராயர் குடும்பம் காசுகழஞ்சு சொத்துப்பத்துக்கள் இருந்தாலும் ‘ஒழுக்க’விடயத்தில் நேர்எதிரானவர்கள். இவர்கள் செல்லும் இடமெல்லாம் காமக்கிழத்திகழும் அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளும் இருந்ததாகக் அவர் கேள்விப்பட்டிருக்கின்றார். அது மட்டுமா சாதித்தடிப்பிலும் இவர்களை மிஞ்ச யாருமில்லை. தமது சாதிக்கு குறைவானவர்கள் யாராவது சைக்கிள் எடுத்து றோட்டில் ஓடினால் தமது அடிபொடிகளை ஏவிவிட்டு சைக்கிள் ஓடியவரை அடித்து காயப்படுத்தி விட்டு சைக்கிளை கொண்டு போய் கிணற்றினுள் வீசிய கதைகளையும் செவிவழியாகக் கேட்டிருக்கின்றார். ஆனாலும் ‘குப்பையில் குண்டுமணி’ என்பது போல தெய்வானையின் கொள்ளுப் பாட்டனார் ஒருவர் தனது முன்னோர்கள் செய்த பாவம் பழிகளுக்குப்  பிராயச்சித்தமாக புத்தூரில் ஒரு பெரிய பள்ளிக்கூடத்தை கட்டி விட்டார்.

பயம் என்பதையே அறியாத காசிநாதர் இப்பொழுதெல்லாம் எதிர்காலத்தையிட்டு அதிகம் யோசிக்கத் தொடங்கினார். ஒவ்வொரு நாளும் அவளைக் குளிப்பாட்டி வல்லிபுரக்கோயிலுக்கு காடியில் கூட்டிச்செல்லமட்டும் அவர் தவறுவதில்லை. இந்த வேளையில் இருவர் பக்கத்திலும் யாருமே இவர்களை எட்டியும் பார்க்கவில்லை. மலாயாவில் வாழ்ந்த வாழ்வும் அதனால் வந்த குறையாத செல்வமும் அவர் விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல. அது காலம் அவர்மீது சுமத்திய சுமையாகும். உறவுகளின் உதாசீனம் அவருக்கு நம்பமுடியாத மனவலியாக இருந்தது. ஒருமுறை தெய்வானையின் பக்கத்தில் இருந்த இறுதி உறவான ‘பார்வதிப்பிள்ளையின்’ செத்த வீட்டிற்கு இருவரும் போய் வந்ததின் பின்பு அவள் பக்கத்து உறவுகளும் படிப்படியாக அவர்களிடம் இருந்து விலகிக் கொண்டன. உறவுகளின் நல்ல நிகழ்வுகளுக்கெல்லாம் இவர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. ஒருவேளை தங்களுக்கு ஒரு மகனோ மகளோ பிறந்திருந்தால் தங்களிடம் குவிந்திருக்கும் சொத்துக்களை பட்டயம் போடுவதற்கு, ‘நன்கு பழுத்த பழத்தில் இலையான்கள் மொய்ப்பது போல் இந்த உறவுகளும் சுற்றங்களும்  தங்களை மொய்த்திருப்பார்களோ’ என்றெல்லாம் இப்பொழுது காசிநாதர் எண்ணத் தொடங்கினார். தங்களது இருப்பில் மாற்றங்கள் வந்தபொழுது  கூட இருந்தவர்களும் அயல் அட்டைகளும் அவரையம் தெய்வானையையும் ஒரு சக உயிரியாக மதிக்கத்தவறியதை அவர் எண்ணியெண்ணி மருகினார். கடவுளுக்கும் மனிதர்க்கும் இருக்கின்ற உறவுநிலை எப்பொழுதும் இலைமேல் தண்ணீர் போலத்தான். இந்த பூமியில் வாழ்வதற்கு காரணமான அந்த ஆதிமூலத்தை இவர்கள் அடிக்கடி மறந்து போகின்றமையாலேதான் கடவுளும் இவர்களுக்கு அவ்வப்பொழுது வாதையைக் கொடுக்கின்றார் போலும். இப்பொழுது அவருக்கும் அவளுக்கும் இருக்கின்ற ஒரேயொரு உறவு அந்த வல்லிபுரத்தாழ்வார்தான்.

இப்பொழுதெல்லாம் தெய்வானை தனது இயலாமையினால் வருகின்ற கோபத்தை அடக்க மாட்டாது வன்முறையில் இறங்க ஆரம்பித்தாள். அன்றும் அப்படித்தான் அவர் செய்திருந்த மத்தியானச் சாப்பாட்டை சோறு கறிகளுடன் சேர்த்துக் குழைத்து சிறிய சிறிய உருண்டைகளாக தெய்வானைக்கு ஊட்டிவிட வரும்பொழுது அவளோ கோபத்தில் சாப்பாட்டுக் கோப்பையை அவருக்கு நேராகத் தட்டி விட்டாள். காசிநாதர்மீதும் தரையிலும் அவள் தட்டிவிட்ட குழைசாதம் பரவியது. காசிநாதர் எதுவித சலனத்தையும் வெளிக்காட்டாது பொறுமையாக தன்னையும் அவளையும் சுத்தம் செய்து விட்டார். என்னதான் இருந்தாலும் அவள் அப்படிச்செய்தது அவர் மனதின் ஓரத்தில் வலிக்கத்தான் செய்தது. ஒருவேளையில் அது அவரின் ‘ஆண்’ என்ற மரபுவாதசிந்தனையை சீண்டியிருக்கலாம். அதன் எதிர்வினை அன்று மாலை டொக்ரர் ஏகாம்பரத்திடம் தெய்வானையின் வழமையான செக்அப்-க்கு கூட்டிச் செல்கையில் வெளிப்பட்டது.

டொக்ரர் ஏகாம்பரத்திடம் அன்று  நடந்தவைகளை ஒன்றும்விடாது அவர் சொல்லிக் கொண்டிருக்கையில்,  டொக்ரரின் வற்புறுத்தலின் பெயரில் ஏலவே காசிநாதர் கொடுத்திருந்த அவரது இரத்தப் பரிசோதனை அறிக்கைகள் மீது ஏகாம்பரத்தின் கண்கள் மேய்ந்து கொண்டிருந்தன. அவர் அறிக்கைகளை எல்லாம் ஒரு ஓரத்தில் வைத்து விட்டு,

“காசிநாதர்…… உங்கடை மனுசி இனி இப்பிடித்தான் இருப்பா. அவாக்கு வயசு போகப் போக இந்த மறதி வருத்தம் கூடுமே ஒளியக்  குறையாது. அப்ப இப்பிடியான கோபங்கள், ஏன் கையை காலை விசுக்கிற பழக்கங்கள்  எல்லாம் வரத்தான் செய்யும். அவாவின்ரை வாதையைப் பொறுத்து அது சிலநேரம் கூடவாய் இருக்கும். ஒரு கட்டத்திலை மலசலம் போறதே அவருக்கு தெரியவராது எண்டால் பாருங்கோவன்.  படுக்கையிலை வைத்துத்தான் எல்லாம் பார்க்க வேண்டிவரும். ஏனெண்டால் அவருக்கு வந்திருக்கிற அல்ஸ்ஹைமர் வருத்தம் அப்பிடியானது. நீங்கள் தான் அவாவோடை அனுசரிச்சு போகவேணும். அதெல்லாம் கிடக்க கஷ்டத்தோடைகஷ்டமாய் நீங்கள் தந்திருந்த  பிளட் ரெஸ்ற் றிப்போர்ட் எல்லாம் வந்து கிடக்கு. உங்களுக்கும்  ரத்தத்திலை கான்ஸர் இருக்கிறதாய் றிப்போர்ட் சொல்லுது. இது ஆரம்பகட்டமாய் இருக்கிறதால இப்பவே வைத்தியம் பார்க்க வேணும். கவலையீனமாய் இருக்கப்படாது. மகரகமவிலை இருக்கிற என்ரை கூட்டாளி ஒருத்தருக்கு கடிதம் எழுதி தாறன். நீங்கள் அங்கை போங்கோ, அவர் எல்லா உதவியளையும் செய்து விடுவார். ஒன்றுக்கும் யோசிக்காதையுங்கோ. எல்லாத்துக்கும் வைத்தியம் இருக்கு.” என்று ஏகாம்பரம் சொல்லச் சொல்லக் காசிநாதர் இடிந்தே போய் விட்டார்.

ஏகாம்பரத்தின் கிளினிக்கில் இருந்து இருவரும் காடியில் வீடு திரும்பும் பொழுது காசிநாதரது முகத்தில் பலவித உணர்ச்சிக்கலவைகள் விரவியிருந்தன. அவரது கண்கள் லேசாகச்சிவந்து கலங்கி இருந்தன. இவை பற்றி எதுவுமே தெரியாது அவருக்குப்பக்கத்திலே அவர் தோள் மீது தலை சாய்த்து இருந்த தெய்வானை புதினம் பார்த்துக் கொண்டு வந்தாள். இருந்தால் போல் நினைவு வந்தவளாக, “ஏகாம்பரத்தார் என்ன சொல்லுறார்”? என்று மட்டும் கேட்டாள். அவர் ஒற்றைக்கையால் ஸ்ட்டயரிங்க்-ஐ பிடித்தவாறே அவளை ஆதரவாகத் தடவி விட்டார். அவள் அமைதியாகி விட்டாள்.

காசிநாதருக்கு கான்ஸர் வந்ததை அவரால் நம்பவே முடியவில்லை. தனது பரம்பரையில் இல்லாத வருத்தம் தனக்கு எப்படி வந்தது என்று அவருக்கு ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருந்தது. இரண்டாவதாக தனது காலத்துக்குப் பிறகு யார் தெய்வானையைப் பார்ப்பார்கள்? என்ற கேள்வியே அவரைத் திணறடித்தது. ஒரு வேளையில் தான் செத்தால், அதுகூட அவளிற்கு நினைவில் நிற்குமா என்பது அவருக்குச் சந்தேகமாகவே  இருந்தது. அவரைப்பொறுத்தவரையில் தெய்வானை ஒருவயதுக் குழந்தை நிலைக்குச் சென்று விட்டாள். ஆம்….. இப்பொழுது அவள் உடல் அளவில் வளர்ந்துவிட்ட அழகானதொரு குழந்தைதான். கலியாணம் கட்டிய நாளில் இருந்து அவளது விருப்பங்கள் தானே அவரது விருப்பங்களாயின. ஒரு நாளாவது அவர் அவளைக் கோபித்தது கிடையாது. சிங்கராயர் குடும்பத்தில் பிறந்து கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாது செல்வச்செழிப்பிலே வளர்ந்த தெய்வானை தன்னையே தான் தெரியாமலா போகவேண்டும்? அவரது கண்கள் அவரையறியாது கலங்கி கண்ணீர் வழிந்தோடியது.  ஒருவர் விடுகின்ற அறமில்லாத தவறுகழும் பழிகளும்  பரம்பரைகளைக் கடந்தும் அறுக்கும் என்பது இதுதானா? அவரது தோள்மீது தலைசாய்ந்து வெளியே புதினம் பாத்துக்கொண்டுவரும் தெய்வானைக்கு அவரது மனவோட்டங்களைத் தெரியவோ இல்லைப் புரிந்துகொள்ளவோ முடியுமென்று அவர் எண்ணுவதில் நியாமில்லைத்தான். தனது நாடி நரம்புகளிலும் இதயத்தின்  மூலைமுடுக்குகளிலும் பரவியிருந்த  தெய்வானையையிட்டே அதீத  யோசனையோடு  காடியை ஓட்டிக்கொண்டிருந்த காசிநாதர் மிகவும் தெளிவான சிந்தனையுடன் எதிரே வேகமாக வந்து கொண்டிருந்த ‘மொக்கன்’  லொறிக்கு நேர் எதிராகக் காடியைத்  திருப்பினார்.

கோமகன்- பிரான்ஸ் 

 

https://naduthal.com/?p=3567

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஊரில் எடுத்ததெற்காலும் தற்கொலை செய்வது வழமை என்றாலும், அதே பாரம்பரியம் இப்போது புலம்பெயர் நாடுகளில் தனிமையாலும், தோல்விகளைத் தாங்கும் மனப்பான்மை இல்லாததாலும் அடிக்கடி நடக்கின்றது.  

மனிதர்களின் பிரச்சினைகளுக்கு தற்கொலையை முடிவாக்குவதில் உடன்பாடில்லை. பட்டினி கிடந்து மரிக்கும் விலங்கு ஏன் தற்கொலை செய்வதில்லை என்பதையும் எண்ணிப்பார்க்கவேண்டும். ஒவ்வொரு உயிரியும் இறுதிவரை வாழ்வோடு போராடித்தான் மரிக்கின்றது. மனிதனும் அப்படி ஓர்மத்துடன் போராடிக்கொண்டே இருக்கவேண்டும். சிந்திப்பதால்தான் மனிதன் தற்கொலை முடிவை எடுக்கின்றானா அல்லது சிந்திக்காமல் ஒரு கணத்தில் எடுக்கும் அசட்டுத்தனமான முடிவா?

தற்கொலைகள் அதிகமுள்ள நமது சமூகத்தில் கதையின் முடிவு மேலுள்ள சிந்தனைகளைத் தூண்டியது. தற்கொலைகளை தடுத்து நிறுத்த இலக்கியத்திலும் அவற்றைப் பற்றிக் கதைக்கவேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த முடிவு சரிபோலத்தான் இருக்கு ஏனெனில் மறதி நோய் மிகவும் கொடியது. இவர்கள் நன்றாக  இருக்கும்போதே அவர்களைக் கவனிக்காத சமூகம் நோய் வந்தபின்பா கரிசனை காட்டப்போகிறது.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/24/2020 at 12:34 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு இந்த முடிவு சரிபோலத்தான் இருக்கு ஏனெனில் மறதி நோய் மிகவும் கொடியது. இவர்கள் நன்றாக  இருக்கும்போதே அவர்களைக் கவனிக்காத சமூகம் நோய் வந்தபின்பா கரிசனை காட்டப்போகிறது.  

 

இந்த முடிவு சரியென்றால், ஏன் nursing home பிஸினஸ் வளர்ந்த நாடுகளில் பெருகிக்கொண்டு போகின்றது? 

தற்கொலை என்ற கோழைத்தனம் மனிதனிடம் மட்டுமே இருக்கின்றது. அதை ஒரு தீர்வாக சொல்வதை சரி என்று ஏற்றுக்கொள்ளமுடியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.