Jump to content

இந்த மாதத்திற்குள் பாராளுமன்றம் கலைக்கப்படும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதத்திற்குள் பாராளுமன்றம் கலைக்கப்படும்?

இந்த மாதத்திற்குள் பாராளுமன்றம் கலைக்கப்படும்?

பாராளுமன்றத்தை இந்த மாதத்திற்குள்ளே கலைப்பதற்கு ஆராயப்பட்டு வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதிக்கு பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கக் கூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும் நிலையில் அதற்கு முன்னர் இந்த மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் யோசனையொன்றை கொண்டு வந்து அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றி பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்வதற்கு ஆராயப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மார்ச் மாதத்தில் கலைத்தால் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் ஏப்ரல் இறுதியிலேயே தேர்தலை நடத்த முடியுமாக இருக்கும் ஆனால் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னரே தேர்தலை நடத்தக் கூடியவகையிலேயே முன் கூட்டியே பாராளுமன்றத்தை கலைக்க எதிர்பார்ப்பதாக கூறப்படுகின்றது.
இதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் பூரண ஆதரவை பெற்றுக்கொள்வதற்கு இரகிய பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. -(3)
 

http://www.samakalam.com/செய்திகள்/இந்த-மாதத்திற்குள்-பாராள/

Link to comment
Share on other sites

திட்டமிட்ட அடிப்படையில் ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும்

திட்டமிட்ட அடிப்படையில் ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும்

 

பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில், ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் மார்ச் 2 ஆம் திகதி கலைக்கப்பட்டு ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

முன்கூட்டியே பாராளுமன்றத்தைக் கலைத்து - தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தும் அரசாங்கத்தின் யோசனைக்கு ஆதரவு வழங்கமாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் அறிவித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே எஸ்.பி. திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.

கொத்மலையில் இன்று இடம்பெற்ற நடமாடும் சேவை நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, பாராளுமன்றத்தை வெகு விரைவில் கலைத்து தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தும் யோசனை அரச தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு அவசியமாகும். இதன்படி எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கினால் புத்தாண்டுக்கு முன்னர் தேர்தலை நடத்தலாம்.

இதற்கு சஜித் தரப்பு ஆதரவை வழங்காவிட்டாலும் எமக்கு எவ்வித பிரச்சினை இல்லை. ஏனெனில் திட்டமிட்ட அடிப்படையில் மார்ச் 2 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நிச்சயம் நடத்தப்படும்." என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியின் போது இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வாகன இறக்குமதி தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

" நான் வாகனம் கொள்வனவு செய்யவில்லை. அமைச்சில் இருந்த வாகனத்தையே பாவனைக்கு எடுத்துள்ளேன்.

வாகனம் வாங்குவதற்கு கையொப்பமிடு (சைன்) இல்லையேல் பதவி விலகு ´ரிசைன்´ என அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்தார் என ஊடகத்துறை அமைச்சின் செயலாளராக இருந்த போபகே அறிவித்துள்ளார்.

இவ்வாறுதான் எவ்வித திட்டமிடலும் இல்லாமல், கையில் நிதி இல்லாதபோதிலும், நாலா புறங்களிலும் கடன்பட்டாவது வாகனங்களை கொள்வனவு செய்துள்ளனர்.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்களுக்கு மட்டுமல்ல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சொகுசு வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக்கட்சிக்குள் தனது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காகவே ரணில் இவ்வாறு செய்துள்ளார். ஆனால், அன்று இருந்ததைவிடவும் இன்று அவருக்கு கட்சிக்குள் எதிர்ப்புகள் வலுத்துள்ளன. ஏனெனில் அவரின் பிறவி பலன் அப்படி அமைந்துள்ளது." என்றார்.
 

-மலையக நிருபர் கிரிஷாந்தன்-

http://tamil.adaderana.lk/news.php?nid=125549

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.