Jump to content

இலங்கையின் ஒற்றையாட்சி மாறாது- டில்லியில் மகிந்த ராஜபக்ச


Recommended Posts

ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு?

இலங்கையின் ஒற்றையாட்சி மாறாது- டில்லியில் மகிந்த ராஜபக்ச

கோட்டா- மகிந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுதான் என்ற தொனியில் மோடியிடம் எடுத்துரைப்பு
 
 
main photomain photo

 

கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய புதிய அரசாங்கம் இந்திய மத்திய அரசுடன் பொருளாதார உடன்படிக்கைகள். நிதியுதவிகள் குறித்துப் பேச்சு நடத்தி வருகின்றது. இந்தோ பசுபிக் பிராந்திய நலன் அடிப்படையில் இந்திய அரசின் வெளியுறவு கொள்கைக்கு அமைவாக இலங்கையுடனான உறவுகளைப் பேணும் புதிய அணுகுமுறைகளின் வெளிப்பாடாகவே கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனால் சென்ற நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்று முதன் முறையாக இந்தியாவுக்குப் பயணம் செய்திருந்தார் கோட்டாபய ராஜபக்ச. இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவும் நான்கு நாள் பயணமாக சென்ற வெள்ளிக்கிழமை இந்தியாவுக்குச் சென்றிருந்தார்.
 
வடக்குக்- கிழக்கு இணைப்பு, 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்ற பேச்சுக்கள் எதனையும் நரேந்திரமோடி மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பில் குறிப்பிடவில்லை என்றும் அது பற்றிய அழுத்தங்கள் எதனையும் இந்திய மத்திய அரசு கொடுக்கவில்லை எனவும் கொழும்பில் உள்ள இலங்கை வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கூறினார்

 

ஹைதராபத் நகரத்தில் அமைந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் இல்லத்தில் இன்று சனிக்கிழமை பிரதமர் மகிந்த ராஜபக்சவும் நரேந்திரமோடியும் சந்தித்து உரையாடியிருந்தனர். ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக நரேந்திரமோடி மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தியதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

நரேந்திரமோடியைச் சந்திப்பதற்கு முன்னதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட இந்திய உயர் அதிகாhரிகளையும் மகிந்த ராஜபக்ச சந்தித்ததர்.

ஈபிடிபியின் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

கோட்டாபய ராஜபக்ச சென்ற டிசம்பர் மாதம் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது இலங்கைக்கு நாநூற்றி ஐம்பது மில்லியன் டொலர்கள் வழங்க இந்தியா இணங்கியிருந்தது. அந்த உதவிகளை உடனடியாக வழங்குவதாக மகிந்த ராஜபக்சவிடம் இந்தியா இன்று சனிக்கிழமை உறுதியளித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்துள்ளதாக மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் இலங்கைக்கு வேண்டிய உடனடி உதவிகள் குறித்து மகிந்த ராஜபக்ச புதுடில்லியில் விளக்கமளித்திருந்தார்.

இந்தியா வழங்கும் கூடுதல் நிதியுதவிகளைப் பொறுத்தே, இந்தோ- பசுபிக் பிராந்திய பாதுகாப்புக் கட்டமைப்புகளில் இந்தியாவுக்கு இலங்கை உதவியளிக்குமென கோட்டாபய ராஜபக்ச சென்ற டிசம்பர் மாதம் புதுடில்லியில் வைத்துக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை புதுடில்லிக்குச் சென்றிருந்த மகிந்த ராஜபக்ச ஈழத் தமிழர் விவகாரத்தில் புதிய அரசாங்கம் கையாளவுள்ள அணுகுமுறைக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டுமென உறுதியளித்துள்ளார்.

குறிப்பாக இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பு மாறாமல் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் விரும்புவதாகவும் அதற்குரியவாறு புதிய அரசாங்கம் அரசியல் தீர்வை ஏற்படுத்தும் எனவும் மகிந்த ராஜபக்ச அங்கு கூறியதாகப் புதுடில்லித் தகவல்கள் கூறுகின்றன.

வடக்குக்- கிழக்கு இணைப்பு, 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்ற பேச்சுக்கள் எதனையும் நரேந்திரமோடி மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பில் கடுமையாகக் குறிப்பிடவில்லை என்றும் அது பற்றிய அழுத்தங்கள் எதனையும் இந்திய மத்திய அரசு கொடுக்கவில்லை எனவும் கொழும்பில் உள்ள இலங்கை வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கூறினார்.

Link to comment
Share on other sites

On ‎2‎/‎10‎/‎2020 at 9:42 PM, nunavilan said:

நரேந்திரமோடியைச் சந்திப்பதற்கு முன்னதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட இந்திய உயர் அதிகாhரிகளையும் மகிந்த ராஜபக்ச சந்தித்ததர்.

ஈபிடிபியின் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இந்த தமிழர்களை அழைத்து சென்று ஏமாற்றும் வேலையை, அதாவது தமிழர்களை தொடர்ந்து சிங்களம் அழிப்பதை, கிந்தியா அறிந்தே இருக்கும்.

 

On ‎2‎/‎10‎/‎2020 at 9:42 PM, nunavilan said:

வடக்குக்- கிழக்கு இணைப்பு, 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்ற பேச்சுக்கள் எதனையும் நரேந்திரமோடி மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பில் கடுமையாகக் குறிப்பிடவில்லை என்றும் அது பற்றிய அழுத்தங்கள் எதனையும் இந்திய மத்திய அரசு கொடுக்கவில்லை எனவும் கொழும்பில் உள்ள இலங்கை வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கூறினார்

 

Link to comment
Share on other sites

மேலும், இப்போது இது குறித்து பேசப்படுவது ஏன் என்று கேட்டபோது, "இந்தியாவுக்கு இலங்கை தரவேண்டிய 120 மில்லியன் டாலர் கடன் முதிர்வு அடைகிறது. அதைத் திருப்பிச் செலுத்துவதற்கு வாய்தா வாங்க விரும்புகிறது இலங்கை. அதை வலியுறுத்துவதே ராஜபக்ஷே வருகையின் நோக்கம். இந்தியாவுடனான கடன் மட்டுமல்ல. ஜப்பானுக்கு இலங்கை தரவேண்டிய 190 மில்லியன் டாலர் கடனும், சீனாவுக்கு இலங்கை தரவேண்டிய 500 மில்லியன் டாலர் கடனும்கூட முதிர்வடைய உள்ளன. அது தவிர, முதிர்வடையும் வங்கிப் பத்திரங்களுக்கு அந்நாடு திருப்பித் தரவேண்டிய தொகை 1.4 பில்லியன் டாலர்களாகும்.

வங்கிப் பத்திரங்களுக்கான முதிர்வுத் தொகையை திருப்பித் தந்துதான் ஆகவேண்டும். ஆனால், இந்தியாவிடம் வலியுறுத்தி கடனை திருப்பிச் செலுத்துவதற்கு வாய்தா வாங்கினால், அதைக் காட்டி ஜப்பானிடமும் வாய்தா வாங்கத் திட்டமிட்டுள்ளது இலங்கை. இருவரும் ஏற்றுக்கொண்டால், அதைக் காட்டி சீனாவிடமும், வாய்தா வாங்குவதற்கு இலங்கை அழுத்தம் கொடுக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/india-51432564

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/11/2020 at 6:48 AM, Kavi arunasalam said:

2-BEC7573-DF49-4-B18-8275-F03-EECF75-CAB

மனதை கவர்ந்த... கருத்துப் படத்துக்கு நன்றி, கவி அருணாசலம். :)
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.