Jump to content

ஈரானின் மூன்றாவது செயற்கை கோள் முயற்சியும் தோல்வி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ikl-2-720x450.jpg

ஈரானின் மூன்றாவது செயற்கை கோள் முயற்சியும் தோல்வி!

நீண்டகால விண்வெளி திட்டங்களுள் ஒன்றான, ஜாபர் செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதில் ஈரான் தோல்வி கண்டுள்ளதாக ஈரானின் விண்வெளி திட்டங்களுக்கான பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஹ்மத் ஹொசைனி தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செயற்கைக்கோளை பூமியின் சுற்று வட்டப்பாதையில் செலுத்தப்பட வேண்டிய விண்கலம் அதன் வேகத்தை எட்ட முடியவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

எனினும், ஈரானிய விண்வெளி வல்லுநர்கள் தரவுகளை ஆராய்ந்து செயற்படுவார்கள் எனவும், சிக்கல்களை சரி செய்து செயற்கைக்கோளை மீண்டும் ஏவுவதற்கு தயார் செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.

செயற்கைக்கோள் ஜாபரை 540 கி.மீ உயரத்துக்கு அனுப்பியது, ஆனால் தகுந்த வேகம் இல்லாததால் இந்த செயல்முறை முழுமைப் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

90 கி.மீ தூரமுள்ள ஜாபர் வண்ண கேமராக்கள் பொருத்தப்பட்ட தொலைநிலை உணர்திறன் கொண்ட செயற்கைக்கோள் ஆகும்.

விண்வெளியிலிருந்து எண்ணெய் இருப்பு, சுரங்கங்கள், காடுகள் மற்றும் இயற்கை பேரழிவுகளை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு ஈரான் விண்ணில் செலுத்திய இரண்டு செயற்கைக்கோள்களும் தோல்வியடைந்த நிலையில், தற்போது மூன்றாவது செயற்கை கோள் முயற்சியும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

http://athavannews.com/ஈரானின்-மூன்றாவது-செயற்க/

Link to comment
Share on other sites

ஆனாலும் ஈரான் தொடர்ந்து முயற்சிக்கும். இறுதியில் வெற்றியும் பெறும்.

பி.கு. இந்த தோல்விகளுக்கு பின்னால் அமெரிக்காவும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

ஆனாலும் ஈரான் தொடர்ந்து முயற்சிக்கும். இறுதியில் வெற்றியும் பெறும்.

பி.கு. இந்த தோல்விகளுக்கு பின்னால் அமெரிக்காவும் இருக்கலாம்.

 ரஷ்யா இல்லாட்டி சீனா ஏன் சொல்லிக்/காட்டிக்குடுக்கேல்லை?

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

ரஷ்யா இல்லாட்டி சீனா ஏன் சொல்லிக்/காட்டிக்குடுக்கேல்லை?

அமெரிக்காவை ஏன் பகைப்பான் என்பது பிரதானமான காரணம்.
 
தமக்கு எதிராகவே அம்பை எய்திடுவார்கள் என்ற பயம் ... அடுத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ampanai said:

அமெரிக்காவை ஏன் பகைப்பான் என்பது பிரதானமான காரணம்.
 
தமக்கு எதிராகவே அம்பை எய்திடுவார்கள் என்ற பயம் ... அடுத்தது.

ஆக மொத்தத்திலை எல்லாருக்கும் பெரியண்ணை மேல ஒரு பயம் இருக்கு  எண்டு சூதானமா சொல்லுறியள்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.