Jump to content

பாலியல் ரீதியான பகிடிவதைக்கு எதிராக யாழில் போராட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Protest-3-2-720x450.jpg

பாலியல் ரீதியான பகிடிவதைக்கு எதிராக யாழில் போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகிடிவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல் ரீதியான வன்முறைகளுக்கு எதிராக பெண்கள் அமைப்பினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள மகளிர் அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு, பாலியல் வன்முறை மற்றும் பகிடிவதைக்கு எதிராக கோசமிட்டனர்.

‘மகிழ்ச்சியான பல்கலைக்கழக வாழ்க்கையை மரணத்தில் முடிக்காதே’, ‘தற்கொலை சிந்தனையை தூண்டும் பகிடிவதை தேவைதானா’, ‘நாட்டிலும் வீட்டிலும் பெண்கள் சமத்துவத்தைப் பேணுவோம்’, ‘பாலியல் கல்வி என்பது வாழ்க்கை பாடம் தயக்கத்தை விட்டு கற்றுக்கொள்வோம்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் உள்ளூராட்சி சபைகளின் பெண் உறுப்பினர்களும் மகளிர் அமைப்புகளும் கலந்துகொண்டனர்.

Protest-2-2-384x288.jpg    Protest-1-2-384x288.jpg

http://athavannews.com/பாலியல்-துன்புறுத்தல்-ரீ/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிடிவதைக்கு எதிராக கிளிநொச்சி வளாகத்தில் ஆர்ப்பாட்டம்

by TharaniFebruary 11, 2020071

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பகிடிவதை மற்றும் கைத்தொலைபேசி ஊடாக இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

யாழ்ப்பாண சமூகம் என தம்மை அடையாளப்படுத்திய குழுவினர்,  யாழ். பல்கலைக்கழகம் முன்பாக இன்று(11)  குறித்த போராட்டத்தினை முன்னெடுத்தனர். 

அதன்போது பகிடிவதைக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன் , பதாகைகளையும் கைகளில் ஏந்தி இருந்தனர். 

யாழ்ப்பாணத்தில் உள்ள மகளிர் அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பாலியல் வன்முறை மற்றும் பகிடி வதைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தனர்

மகிழ்ச்சியான பல்கலைக்கழக வாழ்க்கையை மரணத்தில் முடிக்காதே, தற்கொலை சிந்தனையை தூண்டும் பகிடிவதை தேவைதானா, நாட்டிலும் வீட்டிலும் பெண்கள் சமத்துவத்தைப் பேணுவோம், பாலியல் கல்வி என்பது வாழ்க்கை பாடம் தயக்கத்தை விட்டு கற்றுக்கொள்வோம் போன்ற பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்தில் உள்ளுராட்சி சபைகளின் பெண் உறுப்பினர்களும் மகளிர் அமைப்புகளும் கலந்து கொண்டனர்.

https://newuthayan.com/பகிடிவதைக்கு-எதிராக-கிளி/

Link to comment
Share on other sites

யாழ் பல்கலைக்கழக காவாலி மாணவர்கள் திருந்தும்வரை இது போன்ற போராட்டங்கள் தொடர வேண்டும்.

Link to comment
Share on other sites

சமூக சீர்கேடுகள், ஒடுக்குமுறைகள்,  சிங்கள பேரினவாத  அடக்குமுறைகள்  புனர்வாழ்வு   மீள் குடியேற்றம் என தமிழ்கள் சந்திக்கும்  போராட்டங்களில் பங்கெடுக்கவும் வழிநடத்தவும்  தமிழ் அரசியல் கட்சிகளுக்கு நிகரன பொறுபபு பல்கலைக்கழங்களுக்கும் இருக்கினறது. ஆனால் இங்கு பல்கலைக்கழக காவாலிகளுக்கு எதிராக மக்கள் போராடுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.