Jump to content

பேரறிவாளன் விடுதலை தொடர்பான ஆளுநரின் நிலை என்ன?- கேட்டுச்சொல்லுங்கள்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 

FOLLOW US

 

Published : 11 Feb 2020 18:18 pm

Updated : 11 Feb 2020 18:18 pm

 

பேரறிவாளன் விடுதலை தொடர்பான ஆளுநரின் நிலை என்ன?- கேட்டுச்சொல்லுங்கள்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

what-is-the-position-of-the-governor-regarding-the-release-of-perarivalan-supreme-court-order-to-tamil-nadu-government  

பேரறிவாளன் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மான கோப்பின் நிலை என்ன? என்பது தொடர்பாக 2 வாரத்துக்குள் ஆளுநரிடம் கேட்டுத் தெரிவிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் தன் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

ஏற்கனவே கடந்த முறை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் சி.பி.ஐ தரப்பில் உரிய புதிய நிலவர அறிக்கை தாக்கல் செய்யாததால், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டப்பூர்வமாக எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், தீர்மானங்கள் குறித்தும் அதன் நிலை குறித்தும் நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பு ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலாஜிகூறும்போது, “ஏழுபேர் விடுதலை தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதன் மீது முடிவெடுக்கப்படாமல் உள்ளது. மேலும் ஆளுநருக்கு அரசு அழுத்தம் கொடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆளுநரும் ஒரு அரசின் பிரதிநிதிதானே, அவரிடம் அரசு தான் கேட்க வேண்டும்.எனவே ஆளுநரிடம் போய் கேட்டுக் கூறுங்கள். விடுதலை தொடர்பான சட்டப்பேரவை தீர்மானம் என்னவானது, அதன் நிலை என்ன என்பது தொடர்பாக ஆளுநர் முன்பு முறையிடுங்கள் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

“விடுதலை சம்பந்தமான கோப்பு ஆளுநர் முன்பு ஏன் இத்தனை காலம் நிலுவையில் உள்ளது ? ஆளுநருக்கு எங்களால் நேரடி அழுத்தம் கொடுக்க முடியாது, எனவே தமிழக அரசு அந்த கோப்புகள் நிலையென்ன என்பது தொடர்பாக கேட்டு தெரிவிக்க வேண்டும். விடுதலை தொடர்பான தீர்மானம் போட்டு அனுப்பியது தொடர்பாக ஆளுநரிடம் கேட்க வேண்டியது நாங்களல்ல.

விடுதலை செய்வது என்ற தீர்மானம் தொடர்பான கோப்புகள் குறித்து அரசு தான் கேட்க வேண்டும், எனவே தீர்மானம் மீதான முடிவு என்ன, அதன் நிலை என்ன என்பது தொடர்பாக ஆளுநரிடம் கேட்டு தெரிவியுங்கள்?”. எனத்தெரிவித்து வழக்கை 2 வார காலத்திற்கு ஒத்திவைத்தனர்

https://www.hindutamil.in/news/tamilnadu/539121-what-is-the-position-of-the-governor-regarding-the-release-of-perarivalan-supreme-court-order-to-tamil-nadu-government-1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உச்சநீதிமன்றம் குட்டு: இனியாவது எழுவர் விடுதலையில் விரைந்து முடிவெடுங்கள்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் அறிவுரை

 

எழுவர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரிடம் பதில் கேட்டு சொல்லுங்கள் என உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. இனியாவது ஆளுநரை வற்புறுத்தி நல்ல முடிவெடுங்கள் என தமிழக அரசுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வநதபோது தமிழக அரசு தரப்பில், ஏழுபேர் விடுதலை தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதன் மீது முடிவெடுக்கப்படாமல் உள்ளது. மேலும் ஆளுநருக்கு அரசு அழுத்தம் கொடுக்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டது.ஆளுநரும் ஒரு அரசின் பிரதிநிதிதானே, அவரிடம் அரசு தான் கேட்க வேண்டும். விடுதலை தொடர்பான தீர்மானம் போட்டு அனுப்பியது தொடர்பாக ஆளுநரிடம் கேட்க வேண்டியது நாங்களல்ல.

விடுதலை செய்வது என்ற தீர்மானம் தொடர்பான கோப்புகள் குறித்து அரசு தான் கேட்க வேண்டும், எனவே தீர்மானம் மீதான முடிவு என்ன, அதன் நிலை என்ன என்பது தொடர்பாக ஆளுநரிடம் கேட்டு 2 வார்த்தில் தெரிவியுங்கள்?. என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் முகநூலில் தனது பதிவிட்டுள்ளார். அவரது பதிவு:

"பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கு தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் மீது ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேட்டு, இரு வாரத்தில் பதில் மனுதாக்கல் செய்யுமாறு" அதிமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

அமைச்சரவை தீர்மானம் மற்றும், மாநில உரிமை பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருந்த அதிமுக அரசிற்கு உச்சநீதிமன்றம் "குட்டு" வைத்துள்ளது. எனவே இனியாவது உடனடியாக அமைச்சரவை தீர்மானத்திற்கு ஒப்புதல் கொடுங்கள் என்று ஆளுநரை வலியுறுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைக் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/539138-seven-men-release-supreme-court-order-stalin-s-advice-to-the-tamil-nadu-government-1.html

 

Link to comment
Share on other sites

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம்: அ.தி.மு.க. விற்கு உச்சநீதிமன்றம் சரியான பதிலடி- ஸ்டாலின்

 

by : Dhackshala

M.K.Stalin.jpg

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் அ.தி.மு.க. அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரியான பதிலடி வழங்கியுள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, 7 பேரை விடுவிப்பது தொடர்பாக  சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும்  இந்த விவகாரத்தில் ஆளுநரின் ஒப்புதலுக்காக அரசு காத்திருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் வாதத்தை கேட்ட நீதிபதிகள், 7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது குறித்து, ஆளுநரிடம் கேட்க வேண்டியது உச்சநீதிமன்றம் அல்ல, தமிழக அரசுதான் என்று கூறினர்.

மேலும், தீர்மானம் மீது எடுக்கப்பட்ட முடிவு என்ன, அதன் நிலை என்ன என்பது குறித்து, ஆளுநரிடம் கேட்டு தெரிவிக்குமாறும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் அ.தி.மு.க. அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரியான பதிலடி வழங்கியுள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர்,  உச்சநீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், அ.தி.மு.க. அரசானது, அமைச்சரவை தீர்மானம் மற்றும் மாநில உரிமை பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருந்ததாகவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இனியாவது அமைச்சரவை தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆளுநரை வலியுறுத்த வேண்டும் என்றும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

http://athavannews.com/பேரறிவாளன்-உள்ளிட்ட-7-பேர-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் அ.தி.மு.க. அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரியான பதிலடி வழங்கியுள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சுடலை ஆட்சியில் இருந்தால் வெளியே அனுப்பிட்டுதான் மறுவேலை பார்ப்பார்..😢

அது போக ஆளுநர் அவரின்ட வேலையில் ரொம்ப பிஸி..👌

main-qimg-ec8942d1270c77b43f2043b5a4303b

"கடலூரில் தூய்மை இந்தியா திட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார் தமிழக ஆளுநர். அப்போது, திடீரென்று பாத்ரூமில் ஆளுநர் புகுந்ததால் அப்பகுதியில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது."

https://www.vikatan.com/government-and-politics/politics/110887-cuddalore-visit-unexpected-experience-of-governor

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரணில் "தனது  மினி"யை... வழமைபோல் வீட்டின்  பின்பக்கம் தான் பார்க் பண்ணுவார். 😂 🤣
    • முடிவுரை: நாங்கள் நின்றது ஸ்பெயின் நாட்டின் ஒரு தீவு. Majorque (Mallorca) 3600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு  தனித்தீவு என்பதால் எப்பொழுதும் மாறி மாறி (ரோமேனியர் போர்த்துகல் அராபியர்கள்....) ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களின் பட்டியல் நீளமானது. கிட்லரால் தம்மை பிடிக்க முடியவில்லை காரணம் தங்கள் நாட்டில் பாதுகாப்பு உத்தரவாதம் தரும் மலைகள் என்கிறார்கள் அங்குள்ள மக்கள். இந்த Majorque என்பதே அராபியர்கள் வைத்த பெயர் தான். அருகே சிறிய தீவுக்கு Minorque என்று பெயர் வைத்தனர்.  மலையும் கடலும் உள்ள தீவு என்பதால் ஆதி மனிதர்கள் கற்களை கொண்டே குடிசைகளை அமைத்து வாழ்ந்துள்ளனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்த மக்கள் முதன் முதலாக கற்களால் அரணமைக்கு வாழ்ந்த இடத்தையும் பார்வையிட்டோம். அந்த இடத்தை ஒரு காட்சியகமாக வைத்து இருக்கிறார்கள். அந்த அரணின் நுளைவாயிலில் 8 தொன் கல் ஒன்றை இரண்டு மீற்றர் உயரத்தில் வைத்து இருப்பதை எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் பெருமையுடன் சொன்னார். நான் அவருக்கு தஞ்சாவூரை காட்டினேன். அதிசயித்தார்.  Majorque இன் சனத்தொகை கிட்டத்தட்ட 1 மில்லியன் ஆனால் அங்கு எப்பொழுதும் சனத்தொகையாக 3 மில்லியன் மக்கள் இருப்பார்கள். அதாவது 2 மில்லியன் மக்கள் சுற்றுலா வந்து போவார்கள்.  இதனுடைய விமான நிலையம் Palma. ஒரு நிமிடத்திற்கு ஒரு விமானம் ஏற ஒன்று இறங்கியபடி இருக்கும். இதன் வரலாற்றை பார்த்தால் மிகவும் வறண்ட பிரதேசம். குடிநீர் வசதி இல்லை. ஆனால் இன்று பச்சை பசேல் என்று இருக்கிறது. அநேகமாக அந்த மக்களுக்கு தேவையான மரக்கறி வகைகள் பழங்கள் இறைச்சி மீன் என்பன அங்கேயே கிடைக்கின்றன. ஸ்பெயின் நாட்டின் அதி கூடிய வசதியும் வருவாயும் வேலை வாய்ப்பும் பணச்செழிப்பும் கொண்ட பிரதேசமாக இத்தீவு இன்றுள்ளது. இது எம் போன்ற பலருக்கும் ஒரு நல்ல உதாரணமாகும். எனக்கு எங்கே போனாலும் என் நாடு என் ஊர் என்று தான் மண்டைக்குள் ஓடும். இங்கும் அப்படி தான். நானும் இவ்வாறான ஒரு வரட்சியான காலநிலை மற்றும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவை பிறப்பிடமாகக் கொண்டவன் தான். ஆனால் என் தீவின் இன்றைய நிலைமை மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வியலை பார்க்கும்போது இத்தீவு என்னை மிகவும் பாதித்தது. ஆனால் நாங்கள் முக்கியமாக நான் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இல்லை. எனது இனத்தின் சாபமோ என்னவோ நான்கு பேர் மட்டும் தான் எல்லாவற்றையும் செய்யட்டும் என்று தூங்கி விடுகிறது. நாங்கள் நின்ற இடம்: camp de mar நின்ற கோட்டல்:  alua camp de mar  நன்றி. 
    • ரணிலுக்கு... அழகிகளில் நாட்டம் இல்லை என்று கேள்விப் பட்டோம். 🤣 நீங்கள் இப்பிடி சொல்கிறீர்கள். வேணுமென்றால்... @விசுகுவிடம் கேட்டுப் பாருங்கள். 😂
    • இதுக்கே இந்த குதி…குதிக்கிறீங்களே… ரணில் தனது Austin Mini ஐ எங்கே பார்க் பண்ணுவார் என அறிந்தால் என்ன குதி குதிப்பீர்களோ🤣.
    • @தமிழன்பன், @விசுகு, @குமாரசாமி, @ஈழப்பிரியன் இந்தத் தலைப்புக்கு பொருத்தமான கவுண்டமணியின் காணொளி ஒன்றை  மேலே இணைத்துள்ளேன் தவறாமல் பார்க்கவும். 😂 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.