Jump to content

மாங்குளத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு


Recommended Posts

மாங்குளத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

 

 

image_40b084c5ed.jpg-சண்முகம் தவசீலன்

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து, இன்று (12) மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

image_ecd9ad670a.jpg

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில், புனர்வாழ்வு வைத்தியசாலை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட நிலையில், குறித்த வைத்தியசாலையை நிர்மாணிபதற்காக, வைத்தியசாலை நிர்மாணிக்கப்படும் காணியில், துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

image_a0f7eebcf8.jpg

இதன்போது அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாக திடீரென அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி மனித நேயக் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களால், கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

image_335b1910d2.jpg

இந்நிலையில், இன்று (12), குறித்த காணியின் ஒரு பகுதியில் மனித எச்சங்கள் காணப்பட்டன.

image_27dee69cb4.jpg

இதன்போது, குறித்த பகுதியில் புகைப்படம், வீடியோ எடுப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு, பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டதுடன், குறித்த வளாக வாயில் கதவும் கண்ணிவெடியகற்றும் பணியாளர்களால் மூடப்பட்டது.

image_4d4a70dff7.jpg

பின்னர், குறித்த இடத்தை பார்வையிட்ட நீதிபதி, குறித்த இடத்தின் ஆரம்பகால வரலாறுகளையும் இந்த விடயம் தொடர்பான வரலாறுகளையும், ஆராயுமாறு, மாங்குளம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்ததுடன், இன்று (13) குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/மஙகளததல-மனத-எசசஙகள-கணடபடபப/46-245369

Link to comment
Share on other sites

மன்னார் மனித எச்சங்கள் வைத்த அறை உடைப்பு

இந்நிலையில் மன்னார் மனித எச்சங்கள் தொடர்பிலான தற்போதைய நிலைமை குறித்து பிபிசி தமிழ் விடயங்களை ஆராய்ந்தது.

மன்னார் மனிதப் புதைக்குழியிலிருந்து இதுவரை 342 மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சிறப்பு சட்ட மருத்துவ அதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த மனித எச்சங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள மன்னார் நீதிமன்ற வளாகத்திலுள்ள அறையின் பூட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், விடயங்கள் குறித்து விசாரணைகளை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள மனித எச்சங்கள் மற்றும் அறையின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளமை குறித்து போலீசார் விசாரணைகளை நடத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மன்னார் மனிதப் புதைக்குழி ஐரோப்பிய ஆதிக்க காலத்திற்கு சொந்தமானது என அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்தினால் நடத்தப்பட்ட கார்பன் டேட்டிங் பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த அறிக்கை கடந்த வருடம் மார்ச் மாதம் 9ஆம் தேதி வெளியாகியிருந்தது.

அதன்படி, இந்த மனித எச்சங்கள் கி.பி 1477 - 1642 காலப் பகுதிக்கு உரியது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-51478918

Link to comment
Share on other sites

மாங்குளத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

image_947af4c77b.jpg

-விஜயரத்தினம் சரவணன், செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மருத்துவ புனர்வாழ்வு வைத்தியசாலை வளாகத்தில், மனித எச்சங்கள் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றின் உத்தரவுக்கமைய இன்றைய தினம் (13) மேலதிக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தனுஷன் தலைமையில் பொலிஸார், தடயவியல் பொலிஸார், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினரின் பங்கு ற்றுதலுடன், இந்த அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, சிதைவடைந்த மனித எச்சங்கள், துப்பாக்கி ரவைகள் சில, இரண்டு பேருடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஆடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட தடையப்பொருள்கள் சட்ட வைத்திய பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளன.

image_3ff1ee2eee.jpgimage_2e767ced1d.jpg

http://www.tamilmirror.lk/வன்னி/மஙகளததல-அகழவப-பணகள-ஆரமபம/72-245452

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணவில்லை என்று தேடிக்கொண்டிருக்கும் எந்தப் பெற்றோர் பெற்ற பிள்ளையோ? யார் பிள்ளை, என்பதை இந்தப் புதைகுழி அடையாளப்படுத்துமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணப்படும் உடுதுணிகளை வைச்சுப் பார்க்கும் போது.. அவை 3 ம் 4ம் நூற்றாண்டுகளுக்கு முன் பூமிக்குள் நுழைந்த ஏலியன்களினுடையதாக இருக்க வாய்ப்புள்ளதாக.. அரிச்சந்திரன் வீட்டு ஆய்வு புகழ் அமெரிக்க நாசா ரகசியக் குறிப்பு வழங்கியுள்ளதாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

காணவில்லை என்று தேடிக்கொண்டிருக்கும் எந்தப் பெற்றோர் பெற்ற பிள்ளையோ? யார் பிள்ளை, என்பதை இந்தப் புதைகுழி அடையாளப்படுத்துமா?

உது சங்கிலியன் காலத்தான் எண்டு சொல்லுறதுக்கும் ஒரு கூட்டம் திரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

உது சங்கிலியன் காலத்தான் எண்டு சொல்லுறதுக்கும் ஒரு கூட்டம் திரியும்.

கூட்டமாக சனம் தேவையில்லை  மந்தியே நாளை சொல்லிவிடும்

Link to comment
Share on other sites

மாங்குளத்தில் மீட்கப்பட்ட என்புக்கூடுகள் 20 வருட பழைமையானவை

மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் மீட்கப்பட்ட என்புக்கூடுகள் 20 வருடங்கள் பழைமை வாய்ந்தவை என கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வரும்நிலையில் இதன்போது மேற்கொண்ட அகழ்வுப் பணியின்போது சில என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக, கடந்த வெள்ளிக்கிழமை (07), மாங்குளம் பொது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவரினால், மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அது தொடர்பில் அதே நாளில் (07) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, மாங்குளம் பொலிஸ் நிலையம் அது தொடர்பில் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும், பின்னர் அந்த இடத்தை நீதவான் கடந்த புதன்கிழமை (12) ஆய்வு செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, நீதவான் உத்தரவின் பேரில், கிளிநொச்சி மருத்துவமனையின் நீதிமன்ற விசேட மருத்துவ நிபுணரினால் நேற்றையதினம் (13) காலை 10.00 மணிக்யளவில் அவ்விடம் அகழ்வாராய்ச்சிக்குட்படுத்தப்பட்டதோடு, அதன்போது மீட்கப்பட்ட என்புக்கூடுகள் 20 வருடம் பழைமை வாய்ந்தது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக நீதிமன்ற விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.thinakaran.lk/2020/02/14/உள்நாடு/48370/மாங்குளத்தில்-மீட்கப்பட்ட-என்புக்கூடுகள்-20-வருட-பழைமையானவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

மாங்குளத்தில் மீட்கப்பட்ட என்புக்கூடுகள் 20 வருட பழைமையானவை

மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் மீட்கப்பட்ட என்புக்கூடுகள் 20 வருடங்கள் பழைமை வாய்ந்தவை என கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வரும்நிலையில் இதன்போது மேற்கொண்ட அகழ்வுப் பணியின்போது சில என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக, கடந்த வெள்ளிக்கிழமை (07), மாங்குளம் பொது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவரினால், மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அது தொடர்பில் அதே நாளில் (07) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, மாங்குளம் பொலிஸ் நிலையம் அது தொடர்பில் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும், பின்னர் அந்த இடத்தை நீதவான் கடந்த புதன்கிழமை (12) ஆய்வு செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, நீதவான் உத்தரவின் பேரில், கிளிநொச்சி மருத்துவமனையின் நீதிமன்ற விசேட மருத்துவ நிபுணரினால் நேற்றையதினம் (13) காலை 10.00 மணிக்யளவில் அவ்விடம் அகழ்வாராய்ச்சிக்குட்படுத்தப்பட்டதோடு, அதன்போது மீட்கப்பட்ட என்புக்கூடுகள் 20 வருடம் பழைமை வாய்ந்தது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக நீதிமன்ற விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.thinakaran.lk/2020/02/14/உள்நாடு/48370/மாங்குளத்தில்-மீட்கப்பட்ட-என்புக்கூடுகள்-20-வருட-பழைமையானவை

20 வருசத்துக்கு முந்தி என்றால் புலிகள் காலத்தா ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

அதன்போது மீட்கப்பட்ட என்புக்கூடுகள் 20 வருடம் பழைமை வாய்ந்தது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதெப்படி உடனடியாக  அவர்களால் முடிவு செய்ய முடிந்தது? அதோடு சம்பந்தப்பட்டவர் தெரிவித்தாரா? அல்லது மீட்க்கப்பட்ட  எலும்புக்கூடு கூறியதா?

Link to comment
Share on other sites

மாங்குளம் மனித எச்சங்கள்: 26இல் விசாரணை ஆரம்பம்

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான வழக்கு விசாரணை, 26ஆம் திகதி, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

http://www.tamilmirror.lk/வன்னி/மாங்குளம்-மனித-எச்சங்கள்-26இல்-விசாரணை-ஆரம்பம்/72-245579

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.