Jump to content

நிலங்களின் பெயர்கள்


Recommended Posts

நிலம்

1. நிலம் (பொதுவாக சொல்வது)

2. கல்லாங்குத்து நிலம் - கற்கள் மிகுந்து காணப்படும் நிலம்

3. செம்பாட்டு நிலம் - செம்மண் நிலம்

4. மேய்ச்சல் நிலம் - கால்நடைகள் மேய்யும் நிலம்

5. வட்டகை நிலம் - சுற்றிலும் வேலியிடப்பட்ட நிலம்

6. அசும்பு -- வழுக்கு நிலம்

7. அடிசிற்புறம் - உணவிற்க்காக விடப்பட்ட மானிய நிலம்

8. அடுத்தூண் - பிழைப்புக்கு விடப்பட்ட நிலம்

9. அறப்புறம் - தருமச் செயல்களுக்கு வரிவிலக்குடன் விடப்பட்ட இடம்

10. ஆற்றுப்படுகை - நதி நீர் பாசனத்தில் உள்ள வண்டல் படுகை நிறைந்த நிலம்

11. இதை - புன்செய் சாகுபடிக்கான நிலம்

12. இறையிலி - வரி நீக்கப்பட்ட நிலம்

13. உவர்நீலம் - உப்புத்தன்மை கொண்ட நிலம்

14. உழவுகாடு - உழவுக்கேற்ற நிலம்

15. உள்ளடிநிலம் - ஏரியை அடுத்துள்ள நிலம்

16. ஊர்மானியம் - ஊரின் பொது ஊழியத்துக்காக விடப்பட்ட வரியில்லா நிலம்

17. ஊரிருக்கை - ஊரைச் சார்ந்த நிலம்

18. ஒருபோகு - ஒரே தன்மையை உடைய நிலம்

19. ஓராண்காணி - ஒருவனுக்கே உரிய நிலம்

20. கடவுளரிடன் - கோயிலுக்கு விடப்பட்ட இறையிலி நிலம்

21. கடறு - பாலை நிலம்

22. கடுந்தரை - இறுகிய நிலம்

23. கரம்பு - சாகுபடி செய்யாத நிலம்

24. கரம்பை - வறண்ட களிமண் நிலம்

25. கழனி / காணி - நன்செய் நிலம்

26. களர் - சேற்று நிலம்

27. காணியாட்சி - உரிமை நிலம்

28. காவிதிப்புரவு - அரசனால் காவிதைப்பட்டம் பெற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலம்

29. கீழ்மடை - மடைநீர் இறுதியாகச் சென்று பாயும் நிலம்

30. கூ - நிலம்

31. கொத்துக்காடு - கொத்திப் பயிரிடுவதற்குரிய நிலம்

32. கொல்லை - முல்லை நிலம்

33. சாந்துப்புறம் - அரசனுக்குச் சந்தனம் கொடுத்து வருவதற்க்காக விடப்பட்ட இறையிலி நிலம்

34. சுரம் - வறண்ட பாலை நிலம்

35. சுவாஸ்தியம் - பரம்பரையாக வரும் நிலம்

36. செய்கால் - சாகுபடி நிலம்

37. செய்கால்கரம்பு - தரிசாக விடப்பட்ட நிலம்

38. செவல்காடு - செம்மண் நிலம்

39. தகர் - மேட்டு நிலம்

40. தண்பணை - மருத நிலம்

41. தரிசு - சாகுபடி செய்யப்படாமல் கிடக்கும் நிலம்

42. திருத்து - நன்செய் நிலம்

43. தினைப்புனம் - தினை வகைகள் விளையும் நிலம்

44. தோட்டக்கால் - கிணற்றுப் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்ப்டௌம் நிலம்

45. நத்தம் - கிராமத்தில் உள்ள மனை நிலம்

46. நதீமாதுருகம் - ஆற்றுப் பாய்ச்சலுள்ள நிலம்

47. நீர்நிலம் - நன்செய் நிலம்

48. நீராரம்பம் - நீர்பாசன வசதியுள்ள நிலம்

49. பங்குக்காணி - கூட்டுப்பாங்கான நிலம்

50. படிப்புறம் - கோயில் அருச்சகருக்கு அளிக்கப்படும் மானிய நிலம்

51. பயிரிலி - தரிசு நிலம்

52. பழந்தரை - நீண்ட நாள் சாகுபடியில் இருந்ததால் வளம் குன்றிய நிலம்

53. பள்ளக்காடு - தாழ்வான புன்செய் நிலம்

54. பற்றுக்கட்டு - குடியுரிமை நிலம்

55. பாதவக்காணி - கோயில் பணியாளர்களுக்குப் படியாகத் தரப்படும் நிலம்

56. பார் - கடினமான நிலம்

57. பாழ்நிலம் - விளைச்சலுக்கு உதவாத நிலம்

58. பிரமதாயம் - பிராமணருக்குத் தரப்படும் மானிய நிலம்

59. புரவு - அரசனால் அளிக்கப்பட்ட மானிய நிலம்

60. புழுதிக்காடு - புழுதியாக உழுத புன்செய் நிலம்

61. புழுதிபாடு - தரிசு நிலம்

62. புறணி - முல்லை நிலம்

63. புறம் - இறையிலி நிலம்

64. புறம்போக்கு - சாகுபடிக்கு ஏற்றதல்லாத அல்லது பொதுப் பயன்பாட்டுக்கு விடப்பட்ட தீர்வை விதிக்கப்படாத நிலம்

65. புறவு - முல்லை நிலம்

66. புன்செய் - மழை நீரைக் கொண்டு புன்செய்ப்பயிர் சாகுபடி செய்யும் நிலம்

67. புன்புலம் - தரிசு நிலம்

68. புன்னிலம் - வறண்ட, பயனற்ற நிலம்

69. பூசாவிருத்தி - கோயிற் பூசைக்கு விடப்பட்ட மானிய நிலம்

70. பூமி - தரை (நிலம்)

71. பொதுநிலம் - பிரிவினை செய்யப்படாத நிலம்

72. போடுகால் - தரிசு நிலம்

73. மஞ்சள்காணி - பெண்ணுக்குப் பெற்றோர் சீதனமாகத் தரும் நிலம்

74. மடப்புறம் - மடத்திற்க்கு விடப்பட்ட மானிய நிலம்

75. மனை - வீடு கட்டுவதற்க்கான நிலம்

76. மா - நிலம்

77. மானாவாரி - மழைநீரால் சாகுபடி செய்யப்படும் நிலம்

78. மானியம் - கோயில், நிருவாகம், அறச்செயல்கள் போன்றவற்றிற்கு முற்காலத்தில் வழங்கப்பட்ட வரியில்லாத நிலம்

79. முதைப்புனம் - நெடுங்காலம் பயன்பாட்டில் உள்ள நிலம்

80. மெல்லம்புலம்பு - நெய்தல் நிலம்

81. மென்பால் - மருத நிலம் / நெய்தல் நிலம்

82. மேட்டாங்காடு - புன்செய்ப் பயிர்கள் விளையும் மேட்டுப் பாங்கான நிலம்

83. வறுநிலம் - பாழ் நிலம்

84. வறும்புனம் - அறுவடைக்குப் பிறகு தரிசாக உள்ள புன்செய் நிலம்

85. வன்பார் - இறுகிய பாறை நிலம்

86. வன்பால் - பாலை நிலம்

87. வானம்பார்த்த பூமி - மழையை முழுவதுமாக நம்பியிருக்கும் நிலம்

88. விடுநிலம் - தரிசு நிலம்

89. வித்துப்பாடு - குறிப்பிட்ட அளவு விதை விதைப்பதற்க்குரிய நிலம்

90. விதைப்பாடு - குறிப்பிட்ட அளவு விதை விதைப்பதற்க்குரிய நிலம்

92. விருத்தி - ஒருவருடைய பிழைப்புக்கு மானியமாக விடப்பட்ட நிலம்

93. விளைநிலம் - பயிர் செய்யும் வளமுடைய நிலம்

94. வெங்கார் மண் - சூரிய வெப்பத்தால் சூடேறிய நிலம்

95. வெட்டுக்காடு - திருத்தியமைத்த காட்டு நிலம்

96. வேலி - நிலம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது வானவில்.

நிறையத் தமிழ் சொற்கள் தேவையான அளவு கொண்டிருந்தபோதும், அவற்றை நாம் உபயோகிக்கும்போது தான் சமூகமட்டத்தில் அவை பாவனைக்கு வரும். அதில்லாமல், வெறுமனே தமிழ் அழிவதாக வருத்தமுறவது எவ்வித வெற்றிiயும் தரப்போவதில்லை.

வேறு சொற்களையும் இiணையுங்கள்.

Link to comment
Share on other sites

நல்லது வானவில்.

நிறையத் தமிழ் சொற்கள் தேவையான அளவு கொண்டிருந்தபோதும், அவற்றை நாம் உபயோகிக்கும்போது தான் சமூகமட்டத்தில் அவை பாவனைக்கு வரும். அதில்லாமல், வெறுமனே தமிழ் அழிவதாக வருத்தமுறவது எவ்வித வெற்றிiயும் தரப்போவதில்லை.

வேறு சொற்களையும் இiணையுங்கள்.

தமிழ் அழிகிறது அழிகிறது என்று சொல்வதில் அர்த்தமில்லை, அதை தடுக்கவேண்டும் அதுதான் முக்கியம், ஒரு நிலத்தையே இத்தனை பிரிவுகளாக பிரித்து அதற்க்கு அழகிய பெயர்கள் இருப்பது எமது மொழியில் மட்டுமே இருக்குமென்று நினைக்கிறேன்

முடிந்ததை இணைக்கிறேன் தூயவன்

Link to comment
Share on other sites

இப்படியான சொற்களை இன்றைக்கு தான் கேள்விபடுகிறேன் நன்றி தலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை நீங்கள் சுட்ட இணையத்தளத்தை தெரியப்படுத்தினால் என்னைப்போன்ற பாமரமக்களுக்கு இன்னும் உபயோகமாக இருக்கும்.நன்றி :o

Link to comment
Share on other sites

:o:lol::lol::D:D நடக்கிற கதையைக் கதையுங்கோ குமாரசாமி. ஒட்டுக்குழு எங்கையாவது நதிமூலம் பார்க்குமா???
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol::lol::D:D:D நடக்கிற கதையைக் கதையுங்கோ குமாரசாமி. ஒட்டுக்குழு எங்கையாவது நதிமூலம் பார்க்குமா???

இது என்ன நக்கலா அவர் எவ்வளவு கஷ்டபட்டு மனனம் செய்து எவ்வளவு புத்தகத்தை படித்து யாழுக்காக இதை செய்கிறார் இடையில வந்து இப்படி சொல்லுறது உங்களின்ட மனசாட்சிக்கே நல்லதா தெறியுதா

:P :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வகை, தொகையற்ற நிலங்களாக இருக்கே!! இதற்கு மேலும் இன்னும் இருக்கா வில்சார். எனக்குத் தெரிந்து இன்னும் இரண்டு , மூன்று நிலம் உண்டு.

97. ஆமியா நிலம்-- மக்களை அகதியாக்கிப் பிடிப்பது.

98. படை நிலம்--- உடயவரை அடித்து விரட்டிப் பறிப்பது.

99. காடை நிலம்-- ரவுடிகளை ஏவிவிட்டு அபகரிப்பது.

வில்சார்! செஞ்சரியை ஐ நீங்கள் போடுங்கோ. :P :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.