Jump to content

சொற்களில் சுழலும் உலகம்


Recommended Posts

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சொற்களில் சுழலும் உலகம்

- அனோஜன் பாலகிருஷ்ணன்

olaichuvadiAugust 5, 2020

sorkalil-suzhalum-ulagam-192x300.jpg

 

‘செல்வம் அருளானந்தம்’ பாரிசிற்குப் புலம்பெயரும்போது வேதாந்தத்தையும், பாரதியார் கவிதைகள் புத்தகத்தையும் தன்னுடன் எடுத்துச் செல்கிறார். காரணம் செல்லும் இடமெல்லாம் அவருக்கு தன்னுடன் அந்தரங்கமாகப் பேசும் சொற்கள் தேவையாக இருக்கிறன. சொற்களே தனக்குள் உரையாடும் அவரது உலகமாக இருக்கிறது. அந்தரங்கமாக அவற்றுக்குள் சுழன்றபடியே இருக்கிறார்.

வந்து சேர்ந்த நாட்டில் மொழியும், பண்பாடும் பிரதான பிரச்சினையாக இருக்கிறது. பணம் இல்லாமல் நெருக்கடி நாளுக்கு நாள் கூடுகிறது. பிரெஞ்சு மொழி அறிவு கொஞ்சம் கூட இல்லாமல் வேலைக்குச் செல்ல இயலவில்லை. வாழ்க்கை இறுகிப்போய் நிற்கிறது. இதற்குள்ளும் செல்வத்திற்கு இன்னுமொரு பிரச்சினை விரிகிறது. அது அவரது வாசிப்பு, எழுத்து சார்ந்த வேட்கை. பாரிசில் ஒன்று கூடிய ஒத்த வயது நண்பர்களுக்கு விசாவும், வேலையும் தான் பிரதான குறிக்கோளாக இருக்கும்போது, செல்வம் அவர்களுக்கு அதைவிட மேலதிகமாக இலக்கியமும் இருக்கிறது. எழுதினால்கூட அவற்றை பிரசுரிக்க இதழ்கள் இல்லை. எல்லாமே அவதி நிறைந்த வாழ்வாக இருக்கிறது.

இலங்கையில் 83-ஆம் ஆண்டு நிகழ்ந்த தமிழ் இன ஒடுக்குமுறையில் பாரிய வன்செயலுக்கு உள்ளாகிய பின்னர், பெருந்தொகையான இளைஞர்கள் பாரிசுக்கு வரத்தொடங்குகிறார்கள். இதன்பின்னர் சூழல் மாறுகின்றது. வாசிப்பும், இலக்கியம், அரசியல் ஆர்வம் கொண்ட நண்பர்களின் தொடர்பு செல்வம் அவர்களுக்கும் கிட்டுகிறது. ‘தமிழ் முரசு’ என்ற பத்திரிகையில் கவிதைகள் எழுத ஆரம்பிக்கிறார். அவற்றை எழுதும்போது கவிதை தொடர்பான சரியான புரிதலும், பயிற்சியும் இல்லாத காலத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதப்பட்டதாக, செல்வம் குறிப்பிடுகிறார். பின்னர் அக்கவிதைகள் தொகுக்கப்பட்டு ‘கட்டிடக் காட்டுக்குள்’ என்ற தலைப்புடன் வெளியாகியது.

பிரான்ஸ் வாழ்க்கை பிடிக்காமல், கனடாவுக்குச் சென்று பொருளாதார நிலையிலிருந்து மெல்ல மீண்டு எழுந்த பின்னர், தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. கடந்து வந்த வாழ்க்கையைப் திரும்பிப் பார்க்கும்போது ஆறுதலாகப் புன்னகை விரிகிறது. எப்படி இந்தத் துயரை கடந்து வந்தோம் என்ற ஆச்சரியத்தைவிட இன்று ஆரோக்கியமாக இருப்பதும், உயிருடன் இருப்பதும் நிறைவை அளிக்கிறது என்கிறார் செல்வம். இதன் பின்னணியில் பாரிசின் அறைவாழ்கை அனுபவங்கள் சுயபகிடியுடன் ‘எழுதித் தீராப் பக்கங்கள்’ என்ற புத்தமாக வெளியாகியிருந்தது.

எள்ளல், சுய எள்ளல் என்று பகிடி எழுத்துக்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். தன்னை உயர்ந்த இடத்தில வைத்துக்கொண்டு சமூகத்தைக் குனிந்து பார்த்து படிசெய்வது ஒரு வகை. இது பல சமயம் நம்மை எரிச்சல்படுத்தும். எழுத்தாளர் தன்னை மீறி உருவாக்கிவிடும் மேட்டிமைத்தனம் அதற்கான காரணமாக இருக்கும். சுய எள்ளல் அதிலிருந்து விலத்தி எழுத்தாளன் தன்னையும் தாழ்த்தியவாறு சமூகத்தைப் பார்க்கும் தொனியைக் கொண்டிருக்கும். செல்வத்தின் எழுத்து நடை, சுய எள்ளல் வகையைச் சேர்ந்த தன்வரலாறு. தனது துயரை தொடர்ச்சியாகப் பகிடி செய்கிறார். புரையேறி சிரிக்க வைத்தாலும் ஒவ்வோர் அத்தியாயத்திலும் துயர் பொதிந்து ஆழத்தில் இருக்கிறது.

சுஜாதாவின் ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’ புனைவு வடிவில் எழுதபட்ட தன்வரலாற்றுக் கதைகள். பெரும்பாலான வெகுஜன வாசகர் மத்தியில் கூர்மையான அவதானங்கள் என்பதைத் தாண்டி அங்கதத்திற்காக இடம் பிடித்தது. ஈழத்தில் பகிடியுடன் எழுதப்பட்ட தன்வரலாற்றுப் புத்தகங்களில் உண்மை கலந்த நாட்குறிப்புகள், மனசுலாவிய வானம், எழுதித் தீராப் பக்கங்கள், கொல்லைப்புறத்துக் காதலிகள், காக்கா கொத்திய காயம், தாமரைக்குள ஞாபகங்கள் போன்ற புத்தகங்களைக் குறிப்பிடலாம்.

‘சொற்களில் சுழலும் உலகம்’ புத்தகம் செல்வம் அருளாந்தம் அவர்களது மூன்றாவது புத்தகம். ஒருவகையில் ‘எழுதித் தீராப் பக்கங்கள்’ புத்தகத்தின் தொடர்ச்சியாக பலரால் எதிர்பார்க்கப்பட்ட தொகுப்பு. அது கொடுத்த அங்கதம் மீண்டும் மீண்டும் அதற்குள் பலரை இழுக்கின்றது.

‘எழுதித் தீராப் பக்கங்கள்’ புத்தங்களில் இருந்த சிறுகதைக்கான கட்டிறுக்கம், நேர்த்தி முடிவு போன்றவை ‘சொற்களில் சுழலும் உலகம்’ புத்தகத்தில் இல்லை. இவற்றிலுள்ள பெரும்பாலான அத்தியாயங்கள் தொடர்கதையாக நீள்கின்றன. ஒரு நாவலுக்குத் தேவையான விரிவை வைத்திருக்கும் கதைகள். கனடா என்ற நாட்டில் உறுதியாக நிலைகொண்ட பின்னர் தான் சந்தித்த மனிதர்களின் கதைகளை எழுதியிருக்கிறார். அவர்களை விமான நிலையத்தில் சந்திக்கிறார், மதுச்சாலைகளில் சந்திக்கிறார்; இவர்களிடம் துயரம் நிரம்பிய கதைகள் இருக்கிறன. அந்த துயரத்திற்குப் பின்னே மகத்துவமான தியாகங்கள் இருக்கின்றன. இவர்கள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் விடப்பட்ட நாயகர்கள். இவர்களின் கதையை செல்வம் ஏன் எழுதவேண்டும்? அவர்களின் பாடுகளை அவர்களால் எழுத முடியாததால் செல்வம் எழுதுகிறார். செல்வம் தேர்ந்த கதை சொல்லியாக இருக்கிறார். அலங்காரங்கள் இன்றி உண்மையின் சுவையோடு எழுதிச் செல்கிறார். துயரத்தைச் சொல்லுதல் என்பது கசக்கிப்பிழிந்து கழிவிரக்கத்தைக் கோருவதில்லை. மெலிதான பகிடியுடன் எதிர்முனையிலுள்ள துயரத்தின் அழுத்தங்களை உணர்வித்துச் செல்கிறார். 

அம்மா மீதான நினைவுகளையும், ஏக்கங்களையும் ஒரு பாடலின் தூண்டுதலோடு எழுதுகிறார். அம்மாவின் சேலையை பற்றிய பாடல். வெங்காயம் ஆயப்போகும் அம்மாவின் சேலையில் எப்போதும் வெங்காயத்தின் வாசனை இருக்கும். அப்போதெல்லாம் அம்மாவிடம் மொத்தமாக நான்கு சேலைகள்தான். கோயிலுக்கு இரண்டு, வீட்டுக்கு இரண்டு என்று உடுத்து வாழ்கிறார். அந்தச் சேலையைப் போர்வையாகப் போர்த்துக் கொண்டு தூங்குவது இனிய துயிலைச் செல்வத்திற்கு வழங்குகிறது. அம்மா இறந்தபின்னர் அனைத்து உடைமைகளையும் எரிப்பது அவர்களின் ஊர் வழக்கமாக இருக்கிறது. செல்வம் இரண்டு சேலைகளை மட்டும் அம்மாவின் நினைவாகப் பத்திரப்படுத்துகிறார். பழைய சேலைகளை அன்று எறியச் சொன்னபோது “பஞ்சம் போகும். பஞ்சத்தால் பட்ட வடு போகாதடா” என்று அம்மா சொல்கிறார். இந்த வடு யுத்தம் முடிந்த பின்னரும் இன்னும் போகாத தமிழ் மக்களின் வடுவாகவும் பொருள்கொள்ள முடியும். இந்தச் சின்ன வாழ்கையில் எத்தனை அலைச்சல்கள். எத்தனைத் தலை சுற்றுதல்கள். எத்தனைக் கனவு எல்லாமே உயிர்வாழ்தலின் பொருட்டுத்தானே என்று நீளும் கேள்வியில் ஆறுதலைக் கொடுக்க இறுதியில் பாரதிதான் வருகிறார் செல்வத்திற்கு. பாரதியின் வரிகள் தலையை வருடி தூங்க வைக்கிறது. எல்லாமே கடந்து செல்ல வேண்டியது என்பதற்கான தைரியத்தை கடந்தகால இடர்களைக் கடந்துவந்த அனுபவங்கள் கொடுக்கின்றன.

“முப்பது” என்று சரியாக உச்சரித்து சொல்ல முடியாமல் “நுட்பது” என்று சொல்லும் பொடியனை நண்பர்கள், உறவினர்கள் ‘நுட்பது’ என்று அழைக்கிறார்கள். அவன் கனடா வந்த பின்னரும் இந்தப் பெயர் காணாமல் போய்விடும் என்று விரும்பினாலும் கனடாவிலும் தமிழ்ச் சமூகங்களுடன் இயங்க நேர்வதால் ‘நுட்பது’ என்ற பட்டப் பெயர் தொடர்கிறது. மெல்ல தமிழ் பண்பாட்டுச் சூழலிலிருந்து வெளியேறும் அவன் பிற்காலத்தில் தொழில் அதிபராகிவிடுகிறான். இப்போது அவன் முப்பதைத் தமிழில் சொல்லும் நிலையில் இல்லை. ஆங்கிலத்தில்தான் சொல்கிறான். இங்கே நுட்பது என்ற சொற்பிறழ்வை வாசகன் தனக்குரிய அர்த்தத்தில் விரித்து செல்லக்கூடிய தொலைவு அதிகம். நுட்பத்துக்கு ஈழ அரசியல் மீது பெரிய ஆர்வம் இல்லை. அதன் மீது எந்தப் பற்றும் இல்லை. கனடா மண்ணின் சுதந்திரம் அவனை விரிக்கிறது. “தந்தை செல்வாவை போட்டது எந்த இயக்கம்?” என்று கேட்கும் பலவீனமான அரசியல் அறிவுதான் எந்த அரசியல் செயற்பாட்டிலும் அவனை ஈடுபடச் செய்யாமல் பொருளாதாரத்தை வளர்க்க இயங்க வைக்கிறது. புலம்பெயர்ந்த முதல் தலைமுறைக்கு போராட்டத்தில் ஈடுபட முடியவில்லையே என்ற குற்றவுணர்வு அரித்துச் செல்ல, அதிலிருந்து மீண்டு செல்ல வெவ்வேறு அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். இமானுவேல் தொலைத்த வாழ்க்கை அப்படியானது.

புலம்பெயர்ந்து சௌகரியமாக வாழ்ந்தாலும், நாட்டிலுள்ளவர்கள் படும் கஷ்டத்தைப் பார்க்க அவர்களுக்குக் குற்றவுணர்வு ஏற்படுகிறது. இதற்குப் பரிகாரமாக ஏதாவது செய்யவேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது. ஒருவகையில் அகம் கொடுக்கும் தொந்தரவு. அதிலிருந்து விடுபட புலம்பெயர் நாடுகளில் இருந்துகொண்டு சர்வதேச ரீதியிலான இயக்க செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.

இமானுவேல் என்ற இரண்டு அத்தியாயம், புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் இமானுவேல் போராட்டத்திற்கு உதவக் கிளம்பி அதில் அடையும் எதிர்பாராத சம்பவங்களால் பாரிய குற்றவுணர்வுக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்டு வர செல்லும் தூரம் செல்வத்தை புரட்டிப் போடுகிறது. என்றும் மறுக்க முடியாத மனிதனாக காட்டுகிறது. மண்டகடன் என்ற எட்டு அத்தியாயங்கள் கொண்ட பகுதிகள் நாவலாக எழுதும் அளவுக்குச் சம்பவங்களால் நிறைந்தவை. சிறுவயதில் பிரான்ஸ் தேசத்துக்குத் தத்தெடுத்துச் செல்லப்பட்ட நாயகம் அங்கிருந்து போராடக் கிளம்பி அனைத்தையும் இழந்து உதிர்ந்து இறுதியில் அடையும் இடம் நம்மை திகைக்கவைக்கக் கூடியது. அதுவும் மெய்யாகவே நிகழ்ந்த கதை என்பது இன்னும் தொந்தரவுக்கு உள்ளாக்கும். இமானுவேலின் கதையும், நாயகத்தின் கதையும் ஆரம்பிக்கும் இடம் நாட்டின் மீதான பற்று என்றாலும் அடிப்படையில் தங்கள் சௌகரியமான வாழ்க்கை மீது குற்றவுணர்ச்சி கொடுக்கும் தொந்தரவு. அதனால் இருக்கும் நாட்டிலிருந்து கிளம்பி சாகசங்களில் ஈடுபடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அவை கொண்டு வந்து சேர்ந்த இடம் துயர், தனிப்பட்ட வாழ்கையில் பெரும் இழப்பு. இப்போது மக்களுக்குத் தேவை ஆறுதல். மனச் சிதைவைக் கொடுத்திருக்கக் கூடிய போரின் வடுவிலிருந்து மீண்டுவர அவை உடனடியாகத் தேவையாக இருக்கின்றன என்பது நாயகத்தின் வாயிலாக வருகின்றன.

செல்வத்திற்கு எப்போதுமே சொற்கள் தேவையாக இருக்கின்றன. சொற்கள் கடந்த காலத்தை நியாபகப்படுத்தும். அந்த நினைவுகள் தான் அவரைச் சீராட்டுகின்றன. கதைகளைச் சொல்லும்போது அவர் அதிகம் மெனக்கெடுவது இல்லை. கதாப்பாத்திரங்கள் அருகே தானும் தோன்றி அவர்களைப் பற்றிய குறிப்புகளை தூவிவிடுவார். பங்கிராஸ் அண்ணரின் குண இயல்புகளைச் சொல்ல இந்திய இராணுவம் வழிமறித்து “ஐடி பிளீஸ் ஐடி பிளீஸ்” என்று கேட்க பதிலுக்கு அவர்களிடம் “பாஸ்போர்ட் பிளீஸ் பாஸ்போர்ட் பிளீஸ்” என்று சொல்வது மட்டும் போதுமானதாக இருக்கிறது. ‘சடங்கு’ என்ற அத்தியாயத்தில் கனடாவில் பிறந்து பூப்படைந்த பெண்ணுக்கு வீட்டுக்காரர் செய்யும் தொந்தரவைச் சொல்கிறது. இரண்டு கலாசாரங்கள் மோதிக்கொள்ளும் யுத்த பூமியாகிறது வீடு. புலம்பெயர்ந்த பின்னரும் உறவினர்கள் தங்கள் பழமைவாதத்தை கட்டியெழுப்ப சமரசமின்றி ஈடுபடுகின்றனர். மிகுந்த பகிடியுடன் அடுத்த சங்கதியினர் எழுந்து செல்லும் தன்னம்பிக்கையையும் சுதந்திரத்தையும் நோக்கலாம்.

‘எழுதித் தீராப் பக்கம்’ எழுதிய கதை சொல்லியான செல்வம் ‘சொற்களில் சுழலும் உலகத்தில்’ இல்லை. முன்னையதுடன் ஒப்பிடும்போது இங்கே பகிடி கொஞ்சம் குறைவுதான். தன்னுடைய கதையைச் சொல்லும்போது வரும் பகிடி, அடுத்தவர்களின் கதையைச் சொல்லும்போது செல்வத்தால் சொல்ல முடியவில்லை. அந்த தர்ம சங்கடம் துருத்துகிறது. நாற்பது வருடங்களாக தமிழர்கள் அடைந்த இன்னல்கள் எக்கச்சக்கம். புலம்பெயர் தேசத்தில் நிகழ்ந்த பல்வேறு இன்னல்களை நியாபகம் கொள்ளத்தான் வேண்டும். தலைமுறை தலைமுறையாக அவை சொல்லப்பட வேண்டும். செல்வம் அவற்றை பாடும் பாடகன். செல்வத்தின் அம்மா சொல்வதுபோல “பஞ்சம் போகும். பஞ்சத்தால் பட்ட வடு போகாது”. அந்த வடுக்கள் அடுத்த சங்கதிகளாக புலம்பியர் தேசத்தில் பண்பாட்டு அடையாளம் அற்றுத் தொலைந்து போதலோ என்று ஐமிச்சம் கொள்ள வைக்கிறது.

 

 

https://www.olaichuvadi.in/issues/issue-8/annogen/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.