Jump to content

கனடாவின் இழப்பீட்டுக் கோரிக்கையை ஈரான் நிராகரித்தது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Iran-Says-Canadas-Complaint-Over-Ukrainian-Plane-Crash-Lacks-Legal-Basis.jpg

கனடாவின் இழப்பீட்டுக் கோரிக்கையை ஈரான் நிராகரித்தது

கடந்த மாதம் உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் கொல்லப்பட்ட தமது குடிமக்களுக்கான கனடாவின் 1 பில்லியன் டொலர் இழப்பீட்டுக் கோரிக்கையை ஈரான் நிராகரித்துவிட்டது.

உக்ரேனிய விமான விமானம் தவறாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் ஒப்புக்கொண்ட போதிலும், கனடாவின் கோரிக்கையில் சட்டபூர்வமான அடிப்படை இல்லை என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜவாத் ஸரீஃப் கூறியுள்ளார்.

அத்துடன், ஈரானின் நடவடிக்கைகள் சர்வதேச விதிகளின் அடிப்படையில் அமைந்தவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த மாதம், ஈரான் புரட்சிப் படையின் மூத்த தளபதியின் படுகொலை தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஏற்பட்ட பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானில் இருந்து 176 பயணிகளுடன் புறப்பட்ட, உக்ரைனின் போயிங்-737 என்ற விமானம் 2020, ஜனவரி 8ஆம் திகதி தற்செயலாக சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்த நிலையில் இறந்தவர்களில் 57 கனேடியர்களும் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில், சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரேனிய விமானத்தின் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக கனேடிய வழக்கறிஞர்கள் தொடர்ந்துள்ள வழக்கில் குறைந்தபட்சம் 1.1 பில்லியன் டொலர் இழப்பீடு கோரப்பட்டது. இந்த வழக்கில், விமானம் வேண்டுமென்றே அழிக்கப்பட்டதாகவும், அது ஒரு பயங்கரவாதச் செயல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விமானத்தில் இருந்த கருப்புப் பெட்டியை ஆய்வு செய்யத்தருமாறு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்த கோரிக்கையையும் ஈரான் நிராகரித்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட தமது குடிமக்களுக்கான கனடாவின் 1 பில்லியன் டொலர் இழப்பீட்டையும் ஈரான் நிராகரித்துள்ளது.

http://athavannews.com/கனடாவின்-1-பில்லியன்-டொலர/

Link to comment
Share on other sites

14 hours ago, தமிழ் சிறி said:

இதேவேளை, விமானத்தில் இருந்த கருப்புப் பெட்டியை ஆய்வு செய்யத்தருமாறு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்த கோரிக்கையையும் ஈரான் நிராகரித்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட தமது குடிமக்களுக்கான கனடாவின் 1 பில்லியன் டொலர் இழப்பீட்டையும் ஈரான் நிராகரித்துள்ளது

தாடியை வளர்த்தும் பயப்படுக்கிறானுங்கள் இல்லை இந்த ஈரானியர்கள் 🙄

Image result for justin trudeau beard meme

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

தாடியை வளர்த்தும் பயப்படுக்கிறானுங்கள் இல்லை இந்த ஈரானியர்கள் 🙄

😃

தாடி இன்னும் நீளம் காணாது. முஸ்லிம் உடுப்பும் போட்டவர். மத்திய கிழக்கில் அமெரிக்காவின் படைநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருந்திருந்தால் அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குச் திரும்பி இருப்பார்கள் என்றும் சொல்லி பார்த்தார்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.