Jump to content

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எங்கள் மீது சேறு பூசுகின்ற செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர் -அனந்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எங்கள் மீது சேறு பூசுகின்ற செயற்பாட்டை முன்னெடுக்கின்றனர் -அனந்தி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எங்கள் மீது சேறு பூசுகின்ற செயற்பாட்டை  முன்னெடுக்கின்றனர் -அனந்தி

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி புதிதாகத் தோற்றம் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணியாக இருக்கின்ற நிலையில் பலதரப்பட்ட விமர்சனங்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இந்த புதிய கூட்டணியை ஏற்றுக்கொள்ள முடியாமை காரணமாக பல விமர்சனங்களை அவர்கள் முன்வைக்கின்றனர் என ஈழமக்கள் சுயாட்சிக் கழகத்தின் தலைவர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தம்மிடம் சில இளையோர்கள் முகநூலில் இருக்கின்றார் என்பதை வைத்துக் கொண்டு உண்மைக்குப் புறம்பாக எங்கள் மீது சேறு பூசுகின்ற செயற்பாட்டை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் முன்னெடுக்கின்றனர் என்றும் அவர்களுடைய விமர்சனங்களுக்கு எம்மால் விளக்கம் சொல்வதற்கு அப்பால், எங்களுக்கு ஒரு பொதுவான எதிரியாக இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டவேண்டிய அரசாக இலங்கை அரசு இருக்கின்ற படியால் அது என்ன செய்கின்றது அதன் நடவடிக்கைகளுக்கு எதிராக எவ்வாறு போராடலாம் என்பதைச் சிந்திக்கின்றவர்களாகத்தான் நாம் இருக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.

தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு மேலாக தாம் தேசியத்தில் கொள்கைப் பற்றுள்ளவர்களாக இருந்திருந்தால் ஓர் போர்க்குற்றவாளியான சரத் பொன்சேகாவை 2010ஆம் ஆண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எவ்வாறு கூட்டமைப்புக்குள் இருந்துகொண்டு ஆதரித்திருந்தார்.போர்க்குற்றவாளியான மகிந்தவையும் ஆதரிக்கமாட்டேன், மைத்திரியையும் ஆதரிக்கமாட்டேன் என்று 2015ஆம் ஆண்டு நான் எடுத்துக் கொண்ட நிலைப்பாடுதான் என்னை கட்சியிலிருந்து விலக்குவதற்கு தீர்மானம் எடுக்கவைத்தது.

அதேபோன்று 2010ஆம் ஆண்டு வெளியாகிய விக்கிலீக்ஸில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தான் சர்வதேச விசாரணையைக் கோரவில்லை என்ற செய்தியையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.நான், விக்னேஸ்வரன் ஐயா எல்லோருமே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்ளை ஒன்றாகவும் செயற்பாடு ஒன்றாகவும் உள்ளபடியால்தான் வெளியேறினோமே தவிர, ஆசனப் பங்கீட்டுக்காக அந்தக் கட்சியைவிட்டு வெளியேறியவர்கள் அல்ல.

மீண்டும் நாம் தெளிவாகக் கூறுகின்றோம் 2010 ஆம் ஆண்டு கொள்கை, கொள்கை… என்று பேசிக்கொண்டிருக்கின்ற இதே முன்னணியினர், தங்களுக்கு இருந்த நாடாளுமன்ற ஆசனப் பங்கீடு காரணமாகத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அதிருப்தியடைந்து கட்சியிலிருந்து வெளியேறினர். அவ்வாறு கொள்கை காரணமாக வெளியேறாமல் ஆசனப் பங்கீட்டுக்காக வெளியேறியவர் இன்று எம்மை சில முகநூல்கள் ஊடாக விமர்சிப்பதும் ஊடகங்கள் வாயிலாக விமர்சிப்பதும் மிகவும் மனவருத்தத்தை தருகின்றது.

ஏனென்றால் ஜனாநாயக ரீதியாக யாருமே அரசியலில் இறங்கக் கூடிய வாய்ப்பிருக்கின்றது. ஏன் எதற்காக இவர்கள் குத்தி முறிந்துகொண்டு இருக்கின்றார்கள் என்பது எங்களுக்குப் புரியவில்லை.ஆனால் நான்கு, ஐந்து பேர் கொண்ட கூட்டாக எம்மைக் கூறுவதும் இந்தக் கூட்டணி மக்கள் மத்தியில் நிலைக்கப் போவதில்லை, தாங்கள்தான் மக்கள் மத்தியில் நிற்கப் போகின்ற கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணியினராக தங்களை சித்தரித்துக் கொண்டு எங்களை விமர்சித்துக் கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பலவாறாகப் பேசி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்-தேசிய-மக்கள்-முன்ன-6/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கோதாரியும் விழங்க வில்லை

Link to comment
Share on other sites

54 minutes ago, சுவைப்பிரியன் said:

ஒரு கோதாரியும் விழங்க வில்லை

அவர்களுக்கே விளங்கவில்லை என்ன பேசுகிறார்களென்று। அப்படி இருக்கும் போது உங்களுக்கு / எங்களுக்கு எங்க விளங்கப்போகுது। இப்படியே ஆளாளுக்கு சேறு பூசிக்கொண்டு கதை விட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதான்। எல்லோருக்கும் வாய்தான் பெரிதாக இருக்கிறதே ஒழிய செயலில் ஒண்டையும் காணோம்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

ஒரு கோதாரியும் விழங்க வில்லை

அதுதான் நல்லதும் ஆரோக்கியமானதும் கூட........😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் தமிழ் மக்கள் மீதும் ஈழத்தாயகம் மீதும் பற்றுறுதி இருந்தால்..

இந்தக் கூட்டணிக் கட்சிகள் எல்லாம்.. ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட... ஒரு பொது உடன்படிக்கையின் கீழ் ஒரே சின்னத்தில் போட்டி இட்டு சர்வதேச சமூகத்திற்கும் சிங்கள தேசத்திற்கும் நாம் பிரிக்கப்பட முடியாத சக்திகள் எமது மக்களுக்கான கொள்கையில் நாம் எப்போதும் ஒரே நிலைப்பாட்டை தான் கொண்டிருக்கிறோம்.. அது புலிகள் இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன.. எமது மக்களின் அரசியல் உரிமை என்பது இந்த மண்ணில் எமக்கு முக்கியம் என்பதைச் சொல்ல வேண்டும்.

செய்வார்களா..??!

சும்மா அக்கால ஒருத்தர்.. இது புலிகளால் உருவான கூட்டணி என்கிறார்.. அது அப்படியே கட்டிக்காக்கப்படுகிறது என்கிறார்.. அவர் ஒருத்தரும் இல்லை.. மாவீரர் தினமே கொண்டாடக் கூடாது என்றவர்.. சிவஞானம் என்றவர்..

இவா.. இப்படிச் சொல்லுறா..

அங்கால கஜேந்திரகுமார் தான் தான் தமிழ் மக்களுக்காக உழைக்கின்றன் என்கிறார்..

உங்கள் எல்லோரினதும் குரல் தமிழ் மக்களுக்கானது என்றால்.. ஏன் ஒரே அணியில் நிற்க முடியாது.. வெவ்வேறு கட்சிகள் கூட்டணிகளைக் கொண்டிருந்தாலும்..

டக்கிளசை.. வரதராஜப்பெருமாளை.. முரளிதரனை.. விடுங்கள்.. அதுகள் திருந்தாத ஜென்மங்கள்.. திருந்தப் போறதும் இல்லை.. அதேபோல்.. சிங்களத் தேசியக் கட்சிகளுக்கு வால்பிடிப்போரும்.. அவர்களின் சுயலாபம் தான் நோக்கு.. அவர்களும் திருந்தமாட்டார்கள். 

மற்றவர்கள் இணையலாம் தானே. 

Link to comment
Share on other sites

7 hours ago, சுவைப்பிரியன் said:

ஒரு கோதாரியும் விழங்க வில்லை

 

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
தமிழ் தேசிய மக்கள் முன்னணி
ஈழமக்கள் சுயாட்சிக் கழகம்

இந்த பெயர்களுக்கிடையில் 6 வித்தியாசங்களாவது கண்டு பிடிக்க முடிகின்றதா? என்னால முடியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று மட்டும் தெளிவாக விளங்குகிறது. ஒவ்வொருவரும் தமிழ் மக்களை விழுங்கி ஏப்பமிட வெளிக்கிட்டுவிட்டார்கள் என்பது. ஒரு குட்டியில் ஊறி தேறியவர்கள் இவர்கள்.

Link to comment
Share on other sites

16 hours ago, nedukkalapoovan said:

உண்மையில் தமிழ் மக்கள் மீதும் ஈழத்தாயகம் மீதும் பற்றுறுதி இருந்தால்..

இந்தக் கூட்டணிக் கட்சிகள் எல்லாம்.. ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட... ஒரு பொது உடன்படிக்கையின் கீழ் ஒரே சின்னத்தில் போட்டி இட்டு சர்வதேச சமூகத்திற்கும் சிங்கள தேசத்திற்கும் நாம் பிரிக்கப்பட முடியாத சக்திகள் எமது மக்களுக்கான கொள்கையில் நாம் எப்போதும் ஒரே நிலைப்பாட்டை தான் கொண்டிருக்கிறோம்.. அது புலிகள் இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன.. எமது மக்களின் அரசியல் உரிமை என்பது இந்த மண்ணில் எமக்கு முக்கியம் என்பதைச் சொல்ல வேண்டும்.

செய்வார்களா..??!

சும்மா அக்கால ஒருத்தர்.. இது புலிகளால் உருவான கூட்டணி என்கிறார்.. அது அப்படியே கட்டிக்காக்கப்படுகிறது என்கிறார்.. அவர் ஒருத்தரும் இல்லை.. மாவீரர் தினமே கொண்டாடக் கூடாது என்றவர்.. சிவஞானம் என்றவர்..

இவா.. இப்படிச் சொல்லுறா..

அங்கால கஜேந்திரகுமார் தான் தான் தமிழ் மக்களுக்காக உழைக்கின்றன் என்கிறார்..

உங்கள் எல்லோரினதும் குரல் தமிழ் மக்களுக்கானது என்றால்.. ஏன் ஒரே அணியில் நிற்க முடியாது.. வெவ்வேறு கட்சிகள் கூட்டணிகளைக் கொண்டிருந்தாலும்..

டக்கிளசை.. வரதராஜப்பெருமாளை.. முரளிதரனை.. விடுங்கள்.. அதுகள் திருந்தாத ஜென்மங்கள்.. திருந்தப் போறதும் இல்லை.. அதேபோல்.. சிங்களத் தேசியக் கட்சிகளுக்கு வால்பிடிப்போரும்.. அவர்களின் சுயலாபம் தான் நோக்கு.. அவர்களும் திருந்தமாட்டார்கள். 

மற்றவர்கள் இணையலாம் தானே. 

நீங்கள் எல்லா தமிழ் கட்சிகளும் ஒற்றுமைப்பட்டு ஒன்றாக போராடவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்। எங்களது எதிர்பார்ப்பும் அதுதான்। இங்கு உள்ள அநேகமான அரசியல்வாதிகள் சுய லாபத்துக்காக , தங்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற கட்சிகளை நடாத்துபவர்களே ஒழிய வேறொன்றுமில்லை। எல்லோரும் ஒற்றுமை, தமிழர் உரிமை என்று பேசுவார்கள் ஆனால் ஒற்றுமையக்கமாட்டார்கள்। இதுதான் தமிழர்களின் சாபக்கேடு।

Link to comment
Share on other sites

18 hours ago, நிழலி said:

 

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
தமிழ் தேசிய மக்கள் முன்னணி
ஈழமக்கள் சுயாட்சிக் கழகம்

இந்த பெயர்களுக்கிடையில் 6 வித்தியாசங்களாவது கண்டு பிடிக்க முடிகின்றதா? என்னால முடியவில்லை

இதெல்லாம் ஒற்றுமையின் சின்னங்கள்.
அதான் உங்களால வித்தியாசத்தை கண்டு பிடிக்க முடியல்ல.  
தமிழர்களுக்கு ஒற்றுமை இல்லை என்கிற ஆக்கள் ஏமாந்து போவினம். 🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.