Jump to content

அமெரிக்காவை 35 ஓட்டங்களுக்கு சுருட்டி வரலாறு படைத்த நேபாளம் அணி


Recommended Posts

அமெரிக்காவை 35 ஓட்டங்களுக்கு சுருட்டி வரலாறு படைத்த நேபாளம் அணி

 
wp-header-logo-435-696x449.png
 

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த அணியாக அமெரிக்கா கிரிக்கெட் அணி தம்மைப் பதிவு செய்துள்ளது. 

.சி.சியின் உலகக் கிண்ண லீக் கிரிக்கெட் 2 தொடரில் நேபாளத்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அமெரிக்கா அணி இந்த மோசமான சாதனையை படைத்துள்ளது.

ஒரு மணித்தியாலயம் 39 நிமிடங்களில் முடிந்த இந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அமெரிக்காவை 35 ஓட்டங்களுக்கு சுருட்டி நேபாளம் அபார வெற்றி பெற்றது

நேபாளத்தில் முதன்முறையாக நேபாளம், ஓமான், அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் இடம்பெற்று வருகின்றது. இது .சி.சியின் உலகக் கிண்ண லீக் தொடரின் போட்டிகளாக  நடைபெற்று வருகிறது

கிர்திபூரில் நேற்று (12) நடைபெற்ற 30ஆவது லீக் ஆட்டத்தில் நேபாளம்அமெரிக்கா அணிகள் மோதின. இதன் நாணய சுழற்சியில் வென்ற நேபாளம் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி அமெரிக்கா முதலில் துடுப்பாடியது. 

அமெரிக்காவின் தொடக்க வீரர் மார்ஷல் மட்டும் தாக்குப்பிடித்து 16 ஓட்டங்களை எடுத்தார்

மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் வெளியேற அமெரிக்கா அணி 35 ஓட்டங்களில் சுருண்டது. போட்டியில் அமெரிக்க அணி 12 ஓவர்கள் மாத்திரம் துடுப்பெடுத்தாடியிருந்தது.

இதற்கு முன்னர் 2004ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஹராரேயில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 35 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்திருந்தது.

 

எனவே, சுமார் 14 வருடங்கள் பழமையான இந்த சாதனையை நேபாள அணிக்கெதிராக அமெரிக்கா அணி சமன் செய்துள்ளது. இலங்கை அணியுடனான போட்டியில் ஜிம்பாப்வே அணி 18 ஓவர்களில் 35 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை இழந்தது.

அத்துடன், குறைந்த பந்துகளில் (104 பந்துகள்நிறைவடைந்த ஒருநாள் போட்டி என்ற வரிசையில் முதலிடத்தையும் பெற்றுக் கொண்டது. அத்துடன் குறைந்த ஓவர்களில் முடிந்த போட்டிகள் வரிசையில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது

இந்தப் பட்டியலில் இடங்களில் கனடா (36), ஜிம்பாப்வே (38) மற்றும் இலங்கை (43) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன

நேபாளம் அணி சார்பில் சந்தீப் லாமிச்சேன் 6 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்

பின்னர் 36 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நேபாளம் அணி 5.2 ஓவரில் (32 பந்துகள்) 2 விக்கெட்டுகளை  இழந்து வெற்றி பெற்றது.

 

காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டி 11.09 மணிக்கு முடிந்து விட்டது. எனவே 50 ஓவர்கள் போட்டியொன்று ஒரு மணித்தியாலயம் 39 நிமிடத்திற்குள் முடிந்தது இதுவே முதல் முறையாகும்

ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் குறைந்த ஓவர்களில் நிறைவுக்கு வந்த போட்டியாகவும் இது இடம்பிடித்தது.

http://www.thepapare.com/35-all-out-usa-register-record-equalling-low-in-odis-tamil/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
    • டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்  மிக  கவனமாக இருக்கின்றார்கள். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயாராக  எதிர் தரப்பினர் இருக்கின்றார்கள்.
    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.