Jump to content

யாழ் நகரில் சூடுபிடித்த காதல் விற்பனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாளை நடைபெறவுள்ள காதலர் தினத்தை முன்னிட்டு, யாழ்.நகரில் திடீரென முளைத்த ‘காதல் பரிசுக் கடைகளில்’ இளைஞர், யுவதிகள் கூட்டம் அலைமோதியது.

யாழ் வைத்தியசாலை வீதியில் அமைக்கப்பட்ட இவ்வாறான அங்காடி ஒன்றில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காதல் பரிசுகளை இளையோர் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
“காதலையும் வியாபாரமாக்கி விட்டார்களே” என இதனை அவதானித்த பலரும் விசனமடந்தனர்.

https://newuthayan.com/யாழ்-நகரில்-சூடுபிடித்த/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பிழம்பு said:

“காதலையும் வியாபாரமாக்கி விட்டார்களே” என இதனை அவதானித்த பலரும் விசனமடந்தனர்.

https://newuthayan.com/யாழ்-நகரில்-சூடுபிடித்த/

அது என்னமோ தெரியவில்லை யாழில் எது நடந்தாலும் விசனம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, சுவைப்பிரியன் said:

அது என்னமோ தெரியவில்லை யாழில் எது நடந்தாலும் விசனம்தான்.

யாழ்ப்பாணத்தானுக்கு காதலும் வரக்கூடாது ,ஒண்ணுக்கும் வரக்கூடாது என சிலர் விசனப்படுகினம் போல கிடக்கு

Link to comment
Share on other sites

Just now, putthan said:

யாழ்ப்பாணத்தானுக்கு காதலும் வரக்கூடாது ,ஒண்ணுக்கும் வரக்கூடாது என சிலர் விசனப்படுகினம் போல கிடக்கு

காதலுக்கு கண் இல்லை எண்டு சொல்லுவார்கள்। காதல் வரக்கூடாது என்பதல்ல। இந்த காதல் கைக்குழந்தையுடன் போகாமல் கலியாணத்தில் முடிந்தால் சரி।

எப்படி இருந்தாலும் நமது கலாச்சாரத்துக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும்। அதாவது மற்றவர்கள் அசவுகரியப்படாமல் , முகம் சுளிக்காமல் இருக்க பார்த்துக்கொள்ள வேண்டும்।

இங்கு அவர் விசனப்பட்ட்து காதலுக்காக அல்ல। காதலை வியாபாரமாக்கினத்துக்காகவே அவர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்। அது உண்மை।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

காதலுக்கு கண் இல்லை எண்டு சொல்லுவார்கள்। காதல் வரக்கூடாது என்பதல்ல। இந்த காதல் கைக்குழந்தையுடன் போகாமல் கலியாணத்தில் முடிந்தால் சரி।

எப்படி இருந்தாலும் நமது கலாச்சாரத்துக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும்। அதாவது மற்றவர்கள் அசவுகரியப்படாமல் , முகம் சுளிக்காமல் இருக்க பார்த்துக்கொள்ள வேண்டும்।

இங்கு அவர் விசனப்பட்ட்து காதலுக்காக அல்ல। காதலை வியாபாரமாக்கினத்துக்காகவே அவர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்। அது உண்மை।

எமது கலாச்சாரத்தை எமது பிள்ளைகளிடமே நடை முறைப்படுத்த முடியாத நிலையில் தான் இன்று நாம் இருக்கிறோம்....கலாச்சாரத்தை விடுவோம் எமது மொழியை கூட எமது பிள்ளைகளுக்கு சொல்லிகொடுக்க கூடிய நிலையில் நாம் இல்லை....

கற்பகிரகத்திலிருந்து காதல் வரை 
ஆத்மீகம் முதல் அரசியல் வரை
வியாபாரம் தான் .....உலகம் பூராவும் இது தான் நிலை ....நாங்கள் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியாத சூழ்நிலை....
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பாடசாலை சிறுமிகளைக் குறிவைத்து காதலர் தின கொடூரம்!

பாடசாலை சிறுவர் சிறுமியரை வலிந்து இழுத்து காதலர் தின பொருட்கள் விற்பனை கோண்டாவிலில் அதிர்ச்சி சம்பவம் காதலர் தினத்தை முன்னிட்டு கோண்டாவில் டிப்போவுக்கு முன்னாள் உள்ள அழகுசாதன பொருட்கள் விற்பனை கடையில் விசேட விற்பனைக் கூடத்தில் காதலர்களுக்கான அன்பளிப்புப் பொருட்கள் விற்கப்படுகிறது இன்று பாடசாலை செல்லும் சிறுவர் சிறுமியரை வலிந்து கூவி அழைத்து அவர்களுக்கு காதலர்களுக்கு வழங்கும் பொருட்களை விற்பனை செய்வதை காணக்கூடியதாக இருந்தது பாடசாலை சீருடையுடன் சிறுவர்-சிறுமியரை ஏமாற்றிபணத்திற்காக இவ்வாறு சமூகத்தை சீரழிப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் .

84396167_1254206224784602_8890783161160564736_o.jpg?_nc_cat=107&_nc_ohc=9X1CZqu4ZoMAX8Fq8af&_nc_ht=scontent.fcmb3-1.fna&oh=1dd4c11e9c2812bb2aaefb4f86cd41bf&oe=5EC67EB5

Image may contain: 1 person, tree, plant, sky and outdoor

Image may contain: one or more people, bicycle and outdoor

Image may contain: 1 person, bicycle, sky and outdoor

https://vampan.net/?p=12813

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில் சிறுமிகள் சிறுவர்கள் கடையில் உள்ள பொம்மைகளை ஆவலுடன் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அதற்க்கு போய் யாழில் பாடசாலை சிறுமிகளைக் குறிவைத்து காதலர் தின கொடூரம் பாடசாலை சிறுவர் சிறுமியரை வலிந்து இழுத்து காதலர் தின பொருட்கள் விற்பனை கோண்டாவிலில் அதிர்ச்சி சம்பவம் என்று செய்தி.

வக்கிரகம், செய்தி பஞ்சம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சுவைப்பிரியன் said:

அது என்னமோ தெரியவில்லை யாழில் எது நடந்தாலும் விசனம்தான்.

அது விசனம் இல்லை உள்ளூர ஒரு மனப்பயம். மேலத்தேய பழக்க வழக்கங்கள் எமது நாட்டுக்கு ஒத்து வராது. ஏனெனில் வெளிநாடுகளில் வாழும் எமக்குத்தான் அதன் பின்விளவுகள் தெரிகின்றது. அங்குள்ள  எமது மக்களும் அரசியலும் கத்தியின் நுனி மேல் இருப்பது போல்....பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையட்டும்.அரசியலில் தன்னிறைவு அடையட்டும். அது வரைக்கும் அமைதியான சந்தோசமும் அமையான வாழ்க்கையும் போதுமானது என நான் நினைக்கின்றேன்.
மேலைதேய நாட்டவர் வாழ்க்கை முறை வேறு. அவர்களை போல் வாழ நினைத்தால் அழிவும் சீரழிவுமே நம்மவர்களுக்கு மிஞ்சும்.அது மட்டுமல்லாமல் பணபலம் நிறையவே இவர்களிடம் இருக்கிறது.
உங்கள் கருத்தை மேற்கோள் காட்டியமைக்கு மன்னிக்கவும்.பொதுவாக எழுதினேன்.

Link to comment
Share on other sites

பொதுவாகவே பாடசாலை OL க்கு உட்பட்ட மாணவர்கள் எதை வாங்கிறதென்டாலும் பெற்றோர்களோட, பெரியவங்களோட போய் வாங்கோணும்.

இல்லை என்டா தேவையில்லாத பல பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்கு.

இந்த படத்தை எடுத்து போட்ட ஆட்களை பாராட்டலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, சுவைப்பிரியன் said:

அது என்னமோ தெரியவில்லை யாழில் எது நடந்தாலும் விசனம்தான்.

 

13 hours ago, putthan said:

யாழ்ப்பாணத்தானுக்கு காதலும் வரக்கூடாது ,ஒண்ணுக்கும் வரக்கூடாது என சிலர் விசனப்படுகினம் போல கிடக்கு

Image may contain: 1 person, tree, plant, sky and outdoor

Image may contain: one or more people, bicycle and outdoor

சுவைப்பிரியன், புத்தன்....
நீங்கள் கருத்துக்களை எழுதிய பின்பு... கொழும்பான் இணைத்த படங்களை பார்த்த பின்பாவது...
நீங்கள் எழுதிய அதே... கருத்துடன்,  உடன் பட மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

அந்தப் படங்களில்....  நான்காம், ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளே  நிற்கிறார்கள்.
அதனைப் பார்க்க, எனக்கு மிகவும்... அதிர்ச்சியாக இருந்தது.

அந்த வயதில்... என்ன காதல் வேண்டிக் கிடக்கு. என்பதே... எமது, ஆதங்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

படத்தில் சிறுமிகள் சிறுவர்கள் கடையில் உள்ள பொம்மைகளை ஆவலுடன் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அதற்க்கு போய் யாழில் பாடசாலை சிறுமிகளைக் குறிவைத்து காதலர் தின கொடூரம் பாடசாலை சிறுவர் சிறுமியரை வலிந்து இழுத்து காதலர் தின பொருட்கள் விற்பனை கோண்டாவிலில் அதிர்ச்சி சம்பவம் என்று செய்தி.

வக்கிரகம், செய்தி பஞ்சம்

விளங்க நினைப்பவன் அவர்களே....
கடையில் விற்கும் பெரும்பாலான பொம்மைகள்...  சிவப்பு நிறத்தில், இதயம் போட்ட படியா இருக்கும்?
எனக்கு... இது, சிறுவர்களுக்கான பொம்மைகள்... விற்கும் கடை மாதிரி தெரியவில்லை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

பொதுவாகவே பாடசாலை OL க்கு உட்பட்ட மாணவர்கள் எதை வாங்கிறதென்டாலும் பெற்றோர்களோட, பெரியவங்களோட போய் வாங்கோணும்.

இல்லை என்டா தேவையில்லாத பல பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்கு.

இந்த படத்தை எடுத்து போட்ட ஆட்களை பாராட்டலாம்.

சரியாக... சொன்னீர்கள் ராஜேஷ்.
இதனை...  தமிழர் சமூகம் ஆதரித்தால், 
அதற்குப் பின் வரும், பாரிய விளைவுகளுக்கும் முகம் கொடுக்க வேண்டி இருக்கும்.

ஏற்கெனவே... தமிழர் பகுதியில்.... வாள் வெட்டு, கேரள கஞ்சா.. என்று, 
சமூகத்தை சீரழிக்கும் வேலைகளை செய்து கொண்டு இருப்பவர்கள் தான்....
இதனையும்... புது வடிவில் கொண்டு வருகின்றார்கள்.
நாங்கள் தான்... விழிப்பாக இருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/14/2020 at 7:23 PM, தமிழ் சிறி said:

 

Image may contain: 1 person, tree, plant, sky and outdoor

Image may contain: one or more people, bicycle and outdoor

சுவைப்பிரியன், புத்தன்....
நீங்கள் கருத்துக்களை எழுதிய பின்பு... கொழும்பான் இணைத்த படங்களை பார்த்த பின்பாவது...
நீங்கள் எழுதிய அதே... கருத்துடன்,  உடன் பட மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

அந்தப் படங்களில்....  நான்காம், ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளே  நிற்கிறார்கள்.
அதனைப் பார்க்க, எனக்கு மிகவும்... அதிர்ச்சியாக இருந்தது.

அந்த வயதில்... என்ன காதல் வேண்டிக் கிடக்கு. என்பதே... எமது, ஆதங்கம்.

அந்தப் பிள்ளைகள் பாடசாலைக்கு போய் கொண்டு இருக்கிறார்கள்...போற  வழியில் புதுசாய் கடை ஒன்று இருக்கு...அழகான பொம்மைகள் இருக்குது...பார்த்து ரசிக்கிறார்கள் ...வாங்கினார்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?....
மேலே ராஜேஷ் எழுதின மாதிரி நீங்கள் ஊரில் இருக்கும் போது எல்லாத்தையும் உங்கள் பெற்றோரோடு போயா வாங்கினீர்கள்?...உந்த படத்தை எடுத்தவர் மன நோயாளி     ***
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரதி said:

அந்தப் பிள்ளைகள் பாடசாலைக்கு போய் கொண்டு இருக்கிறார்கள்...போற  வழியில் புதுசாய் கடை ஒன்று இருக்கு...அழகான பொம்மைகள் இருக்குது...பார்த்து ரசிக்கிறார்கள் ...வாங்கினார்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?....
மேலே ராஜேஷ் எழுதின மாதிரி நீங்கள் ஊரில் இருக்கும் போது எல்லாத்தையும் உங்கள் பெற்றோரோடு போயா வாங்கினீர்கள்?...உந்த படத்தை எடுத்தவர் மன நோயாளி என்றால் அதை விட மன நோயாளிகள் உந்த ராஜேஷ் போன்றவர்கள் 

ரதி... பகிடியா.. விடுகின்றீர்கள்
அந்த நகரத்தில்... பாடசாலை  முன்பு, திடீரென்று  ஒரு கடையை...
காதலர் தினத்திற்கு முன்பு திறந்து, சிவப்பு இதயத்துடன் பலூன் கட்டும்  போதே....
அந்த பாடசாலை அதிபரும், நகராட்சசியும்... விழிப்புடன் செயற் பட்டு இருக்க வேண்டும்.

அந்தப் பிள்ளைகள்... அதை, வாங்கினார்களோ.. இல்லையோ என்பது,
தேவையற்ற விதண்டாவாதம்.   

வருங்கால சந்ததியை... பாதுகாக்க வேண்டியது, எமது கடமை.
அதில்.. நானும், ராஜேஷும்.. மன நோயாளிகள் என்று, நீங்கள் கருதினால்...
அதுகும்  மனதிற்கு, மகிழ்ச்சியே... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/15/2020 at 5:23 AM, தமிழ் சிறி said:

 

Image may contain: 1 person, tree, plant, sky and outdoor

Image may contain: one or more people, bicycle and outdoor

சுவைப்பிரியன், புத்தன்....
நீங்கள் கருத்துக்களை எழுதிய பின்பு... கொழும்பான் இணைத்த படங்களை பார்த்த பின்பாவது...
நீங்கள் எழுதிய அதே... கருத்துடன்,  உடன் பட மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

அந்தப் படங்களில்....  நான்காம், ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளே  நிற்கிறார்கள்.
அதனைப் பார்க்க, எனக்கு மிகவும்... அதிர்ச்சியாக இருந்தது.

அந்த வயதில்... என்ன காதல் வேண்டிக் கிடக்கு. என்பதே... எமது, ஆதங்கம்.

காதலர் தினத்தின் உண்மையான விளக்கம் வேறு என்று நினைக்கிறேன் .....வலன்டேன்ஸ் எனபவர் தனது கண்ணை தானம் செய்தவர் ....என்று ஒரு கதை இருக்கு அதை குறிக்கும் நாள் என்று கேள்வி பட்டேன்...

Link to comment
Share on other sites

பதின்மவயதில் காதல் வருவது இயல்பானது. யாழில் பிறந்தற்காக விதிவிலக்கு இல்லை. காதல் வரும் போது காதலிக்கோ காதலனுக்கோ பரிசுகள் வழங்க  நினைக்கதும் இயல்பானது. பரிசுப்  பொருட்களை விற்பதற்கு கடைகள் தோன்றுவதும் இயல்பானது.

இளவயது தாண்டிய காதல் வந்தும் தமது காலத்தில் இப்படி சுதந்திரமாக காதலிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில்  பின்னர் இளவயது  காதலரைப் பார்தது பொறாமையுடன் காதல்  கலாச்சாச சீர் கேடு, மேற்கத்தய கலாச்சாரம்  என்று புலம்புவதும்   இயல்பானதாக இருக்கலாம். 

மனிதன் உருவான பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பும் பதின்ம் வயதில  காதல் இருந்தது. இன்னும் பல ஆயிரம் வருடங்கள் கழிந்தாலும் இளவயதில் காதல் அரும்பத்தான்  போகிறது. ஆகவே விசனம் தெரிவிப்பர்கள் அதை தெரிவித்து  விட்டு அடுத்த விடத்திற்கு  விசனம் தெரிவிக்க செல்லாம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் இயற்கையானது. காதல் செய்வது அவரவர் விருப்பம். செய்யாமல் விடுவதும் அவரவர் விருப்பம். காதலர் தினம் கொண்டாடுவதும் கொண்டாடாமல் விடுவதும்.. அவரவர் விருப்பம். இதற்குள் ஏன்..?! பிறர் தங்கள் எண்ணங்களை திணிக்க முனைகின்றனர்..?! 

இப்ப பிள்ளைகளே அம்மா - அப்பா லவ் பண்ணினறது பத்தல்லையே.. என்ற கவலையில் இருக்குதுகள். 

எங்கட ஆக்கள்.. இன்னும் காதலை.. காதலர் தினத்தை பிள்ளைகளின் கண்ணில் இருந்து மறைக்கப் பார்க்கினமாம்.

அம்மா - அப்பா பிள்ளைகளின் முன் உண்மையான காதலின் வடிவத்தைக் காட்டினால்.. பிள்ளையும் அதன் புரிந்து கொள்ளும்.. தெரிந்து கொள்ளும். இதில் ஒளிப்புமறைப்புக்கு எதுவும் இல்லை. 

Link to comment
Share on other sites

கடந்த 10, 15 வருஷமா திட்டமிட்ட தமிழின அழிப்புக்கு துணைபோபவர்கள், சுமந்திரன், டக்லஸ், கருணா, ஆனந்தசங்கரி, சம்பந்தன், போன்ற ஆக்கள், அவையல ஆதரிக்கிற ஆக்கள், தமிழ் சமூகம் சீரழியோனும் என்று நினைக்கிறதில ஆச்சரியப்பட என்ன இருக்குது.  

இளசுகள் தங்கட முக்கிய குறிக்கோளான கல்வியில் பின்னடைய தேவையான அனைத்தையும் ஆதரிச்சு ஒரு சமூக விரோத குரூப் யாழில் வாள்வெட்டு, போதைப் பொருள் வியாபாரம், விபச்சார விடுதி என்று பலத்தை ஊக்குவிச்சு வரேக்க, அந்தமாதிரி குரூப்புகளுக்கு ஆதரவா அப்பிடியான சிலர் செயற்படினம். 

Link to comment
Share on other sites

16 minutes ago, Gowin said:

கடந்த 10, 15 வருஷமா திட்டமிட்ட தமிழின அழிப்புக்கு துணைபோபவர்கள், சுமந்திரன், டக்லஸ், கருணா, ஆனந்தசங்கரி, சம்பந்தன், போன்ற ஆக்கள், அவையல ஆதரிக்கிற ஆக்கள், தமிழ் சமூகம் சீரழியோனும் என்று நினைக்கிறதில ஆச்சரியப்பட என்ன இருக்குது.  

இளசுகள் தங்கட முக்கிய குறிக்கோளான கல்வியில் பின்னடைய தேவையான அனைத்தையும் ஆதரிச்சு ஒரு சமூக விரோத குரூப் யாழில் வாள்வெட்டு, போதைப் பொருள் வியாபாரம், விபச்சார விடுதி என்று பலத்தை ஊக்குவிச்சு வரேக்க, அந்தமாதிரி குரூப்புகளுக்கு ஆதரவா அப்பிடியான சிலர் செயற்படினம். 

என்ன இடம் மாறி வந்திடீங்ளோ அல்லது நேற்றிரவு அடித்தது முறியேல்லயோ 😂

Link to comment
Share on other sites

32 minutes ago, tulpen said:

என்ன இடம் மாறி வந்திடீங்ளோ அல்லது நேற்றிரவு அடித்தது முறியேல்லயோ 😂

நீங்க ****** மாதிரி தெரியுது.  

 

🤣

Link to comment
Share on other sites

3 hours ago, Gowin said:

நீங்க *** மாதிரி தெரியுது.  

 

🤣

நீங்க தலையங்கத்திற்கு தொடர்பில்லாமல் எழுதியதால் சும்மா ஜோக்காக எழுதினேன். கோபப்படுத்த அல்ல் மன்னித்துக்  கொள்ளுங்கள்.  

Link to comment
Share on other sites

5 minutes ago, tulpen said:

நீங்க தலையங்கத்திற்கு தொடர்பில்லாமல் எழுதியதால் சும்மா ஜோக்காக எழுதினேன். கோபப்படுத்த அல்ல் மன்னித்துக்  கொள்ளுங்கள்.  

நானும் கடுமையா எழுதினத்தை சுயதணிக்கை செய்தாச்சு.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலும் கூட பாரதிக யனதா கட்சிகாரர்களுக்கு முஸ்லிம் கட்சிகளுக்கும் காதலர் தினம் எல்லாம் பிடிக்காதாம்.

Link to comment
Share on other sites

காதல் வெறுப்புநோயுள்ளவர்கள் தயவு செய்து சில்லுக்கருப்பட்டி படம் பார்க்கவும்.

அழகான அவசியமான காதலை அடக்கக முயல்வது பின்னர் பிறந்த குழந்தையின் சடலத்தை தோண்டியெடுப்பதில் வந்து முடிகிறது.

குழந்தைகளுடன் தரமான நேரத்தை செலவிட்டு அவர்கள் தேவையை அறிந்து வழிகாட்டுவது பெற்றோரின் கடமை, மாநகராட்சியினுடையது அல்ல.

ஆனால் மாநகராட்சி இப்படி மழைக்கு முளைக்கும் காளான் போல கடைகளை அமைக்க அனுமதித்து இதனால் போக்கவரத்திற்குத் தடையும், குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தையும் ஏற்படாமல் தடுத்திருக்க வேண்டும். ஆனால் அதனை எங்களில் ஒருவனான அதிகாரியிடம் அந்த எங்களில் ஒருவனான வியாபாரி வழங்கிய கையூட்டு அனுமதித்து விட்டது. (இதுவரை கையூட்டு வழங்காத அல்லது வழங்க ஊக்குவிக்காதவர்கள் இருந்தால் மன்னிக்கவும்.)

கலாச்சார காவலர்கள் அன்று தொடக்கம் இன்றுவரை நல்லூர் கோவில் திருவிழாவில் எதற்காக பொம்மை மற்றும் குளிர்களி  கடைகளை அமைத்து அங்கே துப்பாக்கி, வாள் பொம்மைகளை விற்க அனுமதிக்கிறார்கள். சாமி கும்பிட வேண்டிய இடத்தில் அவை எதற்கு என நிறுத்தியிருக்கலாமே. (செய்திருந்தால் அங்கும் தோிழுக்க டிரக்டர் தேவைப்பட்டிருக்கும்)

வாழ்வாதாரத்திற்காக ஒரு இளம் குடும்பம் (அங்கே படத்தில் தொியும் இருவரும் கணவன் மனைவி என்ற எடுகோளுக்கமைய) தனக்கு தொிந்த, முடிந்த வழியில் பொருளீட்ட முயல்வதை கேள்விகேட்பவர்கள், இளம்பெண் விபச்சாரம், இளைஞன் தற்கொலை போன்ற அவலங்களை தடுக்க யாழ்ப்பாணத்தில் உடனடி சாத்தியமான தீர்வுகளையும் தரவேண்டும்.

சிறுவர்கள் மற்றும் மாணவர்களை வழிகாட்டுவதாக கூறிக் கொண்டு மேலும் மேலும் கட்டுப்பாடுகளை விதிப்பது சிறப்பான பயன் தராது. மாறக அவர்களை சுதந்திரமாக முடிவெடுக்க அனுமதிப்பதும், சுய ஒழுக்கத்தையும், தைரியத்தையும் ஊக்குவிப்பதே சிறந்தது என எண்ணுகின்றேன். 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.