Jump to content

கீனி மீனி: இலங்கையில் பிரித்தானிய கூலிப்படைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கீனி மீனி: இலங்கையில் பிரித்தானிய கூலிப்படைகள்

உண்மை வலியது; அதலபாதாளத்தில் ஒளித்து வைத்தாலும், உண்மை ஒருநாள் வௌிவந்தே தீரும்.   

உண்மைகள் வெளியாகிற போது, பலவித உணர்வுகளை அது ஏற்படுத்தும். சங்கடம், துரோகம், வேதனை, அதிர்ச்சி போன்றவற்றை, வெளிக்கொணரப்பட்ட உண்மை உருவாக்கிவிடும். இது, உண்மையின் வலிமையையும் ஆழத்தையும் முக்கியத்துவத்தையும் எமக்குப் புரிய வைக்கின்றன.   

பெரும்பாலும், நீண்ட முயற்சியின் பின்னர் வெளிவரும் உண்மைகளை ஏற்றுக்கொள்ள, ‘பொதுப்புத்தி’ மனநிலை தயாராக இருப்பதில்லை. “இப்படி நடந்திருக்காது” என்ற ஆறுதலுடன், அப்பால் கடந்து போகிறோம். 

உண்மைகள் கொடியன; அவை, எமது நம்பிக்கைகளில் தீ வைப்பன; எதிர்பார்ப்புகளில் கல்லெறிவன.   

‘கீனி மீனி’ என்ற தலைப்பே, ஒரு மாதிரியாக இருக்கிறது என்று, நீங்கள் நினைக்கக்கூடும். இலங்கை, ஓமான், நிக்கரக்குவா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை இணைக்கும் ‘கண்ணி’, இந்தக் ‘கீனி மீனி’.

‘கீனி மீனி’ என்றால் என்ன, இது பற்றி இப்போது ஏன் பேச வேண்டும் என்று, நீங்கள் கேட்கலாம்?   
இது கொஞ்சம் பழைய கதை. பழைய கதை மட்டுந்தான் என்பதையும், கோடிட்டுச் சொல்ல விரும்புகிறேன். 

image_2ef6d8d6b4.jpgகடந்த வாரம், மிகவும் சுவாரஷ்யமான புத்தகமொன்று வெளிவந்தது. அதன் தலைப்பு ‘கீனி மீனி: போர்க் குற்றங்களில் இருந்து தப்பிய பிரித்தானிய கூலிப்படைகள்’ (Keenie Meenie: The British Mercenaries Who Got Away with War Crimes).   

பிரித்தானியாவில் முக்கியமான புலனாய்வு ஊடகவியலாளர்களில் ஒருவரான பில் மில்லர் (Phil Miller) எழுதிய இப்புத்தகம், இலங்கை வரலாற்றில், மறைக்கப்பட்ட சில பக்கங்களை வெளிக்கொணர்கிறது. 

எல்லாவற்றுக்கும் மேலாக, 1970-80களில் பிரித்தானியா, தனது முன்னாள் கொலனிகளில் எவ்வாறு இயங்கியது என்பதன் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை, சில உதாரணங்களுடன் காட்ட முற்படுகிறது.   

சுருக்கமாகச் சொல்வதானால், ‘கீனி மீனி’ பிரித்தானிய அரசாங்கத்தின் ஆதரவுடனும் முழுமையாக ஆசிர்வாதத்துடனும் இயங்கிய ஒரு தனியார் நிறுவனம் ஆகும். சரியாகச் சொல்வதாயின், கூலிப்படை; ஏனெனில், அவர்கள் செய்த காரியங்கள், அந்த மாதிரி. அவை, எந்த மாதிரி என்று பார்ப்பதற்கு முன்னர் .....!  

‘கீனி மீனி’யின் கதைக்கான முன்கதை   

இரண்டாம் உலகப் போரின் முடிவின் பின்னர், சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியத்தில், சூரியன் அஸ்தமிக்கத் தொடங்கியது. 

ஆம், பிரித்தானியக் கொலனியாதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகள், ஒவ்வொன்றாக விடுதலை பெற்றன. தனது முன்னாள் கொலனிகள் மீதான காதலால், (செல்வத்தின் மீதான) பொம்மை அரசாங்கங்களை நிறுவியோ, வேறு வழிகளிலோ கட்டுப்பாட்டை வைத்திருக்க பிரித்தானியா முயன்றது.  

 இதை நேரடியாகச் செய்வதற்குத் தடைகள் இருந்தன. விடுதலை அடைந்த சுதந்திர நாடுகளில் தலையிடுவது, நன்மதிப்புடைய செயலாக இருக்காது; தப்பித்தவறி, யாராவது நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினால், பதில் சொல்லியாக வேண்டும்; ஊடகங்களின் ஊடாகக் கெட்ட பெயருக்கு ஆளாகினால், ஆட்சியை இழக்க நேரிடும். இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, அனைத்தையும் மறைமுகமாகச் செய்ய, பிரித்தானிய விரும்பியது.   

இக்காலத்தில், எகிப்தில் ஜனாதிபதியாகப் பதவிவகித்த கமல் அப்துல் நாசார், அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்; பிரித்தானிய வர்த்தக நலன்களுக்குப் பிரச்சினை கொடுத்துக் கொண்டிருந்தார். 

இதையடுத்து, பிரித்தானிய சிறப்பு விமானச் சேவையில் கொமாண்டராகப் பணியாற்றிய கேர்ணல் ஜிம் ஜோன்ஸன் தலைமையிலான கூலிப்படை, 1960களில் ஜெமனில் நாசருக்கு எதிராகப் போரிட்டது. நாசருக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்திய பின்னர், இந்தக் கூலிப்படை நாடு திரும்பியது.   

இது, பிரித்தானிய இராணுவ, அரசியல் உயரடுக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வாறான செயற்பாடுகள், அரசாங்கத்தைப் பொறுப்பில் இருந்து அகற்றுவதால், இதற்கான கணிசமான ஆதரவு அரசாங்கத்தில் இருந்தது. இதன் தொடர்ச்சியாக, 1970களில் ஜோன்சனால் Keenie Meenie Services (KMS) என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது.    

இது, பிரித்தானியா விரும்புகின்ற வேலைகளை, பிரித்தானியாவுக்காகச் செய்து முடித்தது. 1980களில் இது, மிகப்பெரிய இலாபம் தருகிற வியாபாரமானது.  

1975ஆம் ஆண்டு, முன்னாள் இராணுவ வீரர்கள் நால்வரினால் ‘கீனி மீனி’ உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம், ஆர்ஜென்டீனாவின் தலைநகர் பொர்ன்ஸ் அய்ரிஸில் இருந்த, பிரித்தானிய இராஜதந்திரிகளுக்குப் பாதுகாப்பு வழங்கியது. இவ்வாறு தான், இந்த நிறுவனம் பிரித்தானியப் பாதுகாப்பு, வெளியுறவுத் துறை சார்ந்த வட்டாரங்களில் அறிமுகமானது.   

பிரித்தானியப் பிரதமர் மார்க்கிரட் தச்சரின் அளவு கடந்த தனியார் மயமாக்கல், சுதந்திர சந்தை ஆகிய கொள்கைகளும் அமெரிக்க ஜனாபதி ரொனால்ட் றீகனின் கொம்யூனிசத்துக்கு எதிரான நிலைப்பாடும் இணைந்து, இவ்வகையான நிறுவனங்களுக்குச் செங்கம்பளம் விரித்தன. 

இந்நிறுவனங்கள், பிரதானமாக இடதுசாரி ஆட்சிகளை அகற்றுவதற்கு வேலை செய்தன.  அந்நாடுகளில், நாசகார வேலைகளில் ஈடுபடுவது, வலதுசாரி சர்வாதிகார ஆட்சிகளை நிறுவுவதும் அவற்றை நிலைபெற உதவிகள் செய்வதும் போன்ற பணிகளில் ஈடுபட்டன.   

சரி, ‘கீனி மீனி’ என்ற பெயர், ஏன் வைக்கப்பட்டது என்பதற்குப் பல கதைகளும் கிளைக் கதைகளும் உண்டு. இவற்றை, இந்தப் புத்தகத்தில் பில் மில்லர் அழகாக எடுத்துரைக்கிறார்.   

ஓமான் - நிக்கரகுவா - இலங்கை  

ஓமானில் புரட்சிகர விடுதலைப் போராட்ட இயக்கம் ஒன்று, 1960களில் வீரியத்துடன் இயங்கத் தொடங்கியது. எகிப்தின் நாசரின் ஆதரவு, ஜெமன் உள்ளிட்ட நாடுகளில், எழுச்சிபெற்ற இடதுசாரிச் சிந்தனைகளின் தொடர்ச்சியாக, ஓமானில் டொவார் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் இந்தப் புரட்சியில் ஈடுபட்டனர்.   

அவர்கள், ஓமானில் சுல்தான் செயிட் பின் தைமூரின் ஆட்சியில் இருந்து பிரிந்து, தனியானதும் சுதந்திரமானதுமான ஆட்சியைக் கோரினர். இது பிரித்தானியாவுக்கு உவப்புடையதாக இருக்கவில்லை. 

1962 முதல், ஆட்சிக்குக் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்தப் போராளிகள், பிரித்தானியாவின் நலன்களில் ஆப்பு வைத்து விடுவார்கள் என்று, பிரித்தானியா அஞ்சியது.   

பிரித்தானிய இராணுவக் கல்லூரியில் பயின்ற இளவரசர் கபூஸ் பின் சைட்டின் உதவியுடன், சதிப்புரட்சி அரங்கேறியது. பிரித்தானிய இராணுவ வீரர்களின் உதவியுடன் மகன், தந்தையைப் பதவியை விட்டு அகற்றினார். இந்த மகன்தான், அண்மையில் காலமான ஓமானிய சுல்தான்.   

புதிய சுல்தான், தனக்கெனச் சிறப்புப் படைகளை உருவாக்க, ‘கீனி மீனி’யை நாடினார். அவர்களின்  உதவியுடன், கிளர்ச்சி அடக்கப்பட்டது. தனது தந்தைக்கு நேர்ந்தது, தனக்கும் நேரா வண்ணம், தனக்கெனப் பிரத்தியேகப் படைகளை, ‘கீனி மீனி’யின் உதவியுடன் உருவாக்கினார்.   

நிக்கரக்குவாவில் ஆட்சிக்கு வந்த சன்டனிஸ்டாக்களுக்கு எதிரான போரில், நேரடியாக ஈடுபட விரும்பாத பிரித்தானியா, ‘கீனி மீனி’யை உதவிக்கு நாடியது. அவர்கள், நிக்கரக்குவாவில் நேரடியாகப் போரில் ஈடுபட்டார்கள். வைத்தியசாலைகள் மீது குண்டு போடுவதில் தொடங்கி, அனைத்து அட்டூழியங்களையும் செய்தார்கள். நூலின் பல பக்கங்களில், இவை குறித்த சான்றுகள் விவரிக்கப்பட்டுள்ளன.  

இலங்கையில் ‘கீனி மீனி’   

இனி, இலங்கைக்கு வருவோம். 1980ஆம் ஆண்டு முதல், ஜெயவர்தனவின் அரசாங்கம், பிரித்தானியாவிடம் இராணுவப் பயிற்சி உதவிகளைப் பெற்றுக் கொண்டிருந்தது. ஆனால், 1983ஆம் ஆண்டு, கலவரத்தைத் தொடர்ந்து, நேரடியான இராணுவ உதவிக்கு, பிரித்தானியா பின்னடித்தது.   

இதைத் தொடர்ந்து, பிரித்தானிய அரசாங்கத்தின் பரிந்துரையில், ‘கீனி மீனி’ நிறுவனம் இலங்கையின் பாதுகாப்பு உதவிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டது. ‘கீனி மீனி’யே இலங்கையில், விசேட அதிரடிப் படையினரை உருவாக்கிப் பயிற்சியளித்தது. 

இலங்கையில் பல விமர்சனங்களுக்கு உட்பட்ட பொலிஸ் பிரிவாக, விசேட அதிரடிப் படையினர் உருவாகினர். இதற்கான பெருமையை, ஜே. ஆர். ஜெயவர்தனவின் மகன், ரவி ஜெயவர்த்தன தனதாக்கிக் கொண்டார்.   

1985ஆம் ஆண்டு, இலங்கை விமானப் படை பெற்றிருந்த நவீன ரகத் தாக்குதல் ஹெலிகொப்டர்களைச் சரியாகப் பயன்படுத்தக்கூடிய விமானிகள் இன்மையால், ‘கீனி மீனி’ ஊழியர்கள், அப்பணியையும் செய்தார்கள். இவர்கள், அக்காலத்தில் இடம்பெற்ற பாதகச் செயல்களில், பங்காளிகளாக இருந்தார்கள். 

இவை அனைத்தும், பிரித்தானியாவின் ஆசிர்வாதத்துடன் நடந்தன. இந்த உதவிகள், இந்திய அமைதி காக்கும் படைகள் இலங்கையில் இருந்த போதும் தொடர்ந்தன என்பதை, ஆராய்ந்து ஆதாரங்களுடன் இந்நூல் தருகிறது.  

கற்காத பாடங்களுக்குக் கொடுக்கும் விலை  

இப்போதும், பிரித்தானியாவும் அமெரிக்காவும் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும் என்று நம்புகிறவர்கள் இருக்கிறார்கள்; ‘டவுனிங் ஸ்ரீட்’ வாசலில், ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் இருக்கிறார்கள். மேற்குலகம் தான், தமிழ் மக்களுக்கான ஒரே போக்கிடம் என்பவர்கள், இவ்வாறான உண்மைகளின் பின்னரவாவது, திருந்துவார்களோ தெரியாது. 

மேற்குலகம், தொடர்ச்சியாக எம்மை ஏமாற்றி இருக்கிறது. எம்மை மட்டுமல்ல, உலகில் உள்ள எத்தனையோ விடுதலைப் போராட்டங்களைத் தோற்கடித்து இருக்கிறது. இந்த உண்மைகளை ஏற்காத வரை, எமக்கு விடுதலை சாத்தியமில்லை. 

நல்லவேளை, இந்த ஏற்கக் கடினமான உண்மைகளை, ஒரு பிரித்தானியப் பத்திரிகையாளர் வெளிக்கொணர்ந்தார். அல்லாவிடின், இதற்கும் கதைகளையும் காரணங்களையும் கட்ட, நாம் தயாராக இருப்போம்.   

இந்த நூலின் சிறப்பு, இது தேக்கி வைத்துள்ள தகவல்களும் சான்றாதாரங்களும் ஆகும். பில் மில்லர், கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள், இந்த நூலுக்காக உழைத்திருக்கிறார். ஆவணக் காப்பகங்கள் அனைத்திலும் பல நூறு மணித்தியாலங்களைச் செலவிட்டிருக்கிறார். 

மேலும், பிரித்தானிய அரச ஆவணங்கள், 30 ஆண்டுகளின் பின்னரே, பொதுவெளிக்கு அனுமதிக்கப்படுவதால் அதுவரை பொறுமை காத்திருக்கிறார். ஒரு புலனாய்வு ஊடகவியலாளனாக மிகச் சிறப்பான பணியை அவர் செய்திருக்கிறார்.   

எம் வாழ்வில், எத்தனையோ விடயங்களைக் கடந்து போகிறோம்; எத்தனையோ புத்தகங்களைக் கடந்து போகிறோம்; பலவும் எமது கண்களுக்குத் தென்படாமலே போய்விடுகின்றன. அது, எவ்வளவு அபத்தமானது. 

எமது சமூகத்தால், இந்தப் புத்தகமும் அவ்வாறே கடக்கப்படும். ஏனெனில், இன்றைக்கு 18 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தக் ‘கீனி மீனி’ நிறுவனத்தில் விமானியான இருந்த ஒருவர், இலங்கையில் தனது அனுபங்களைப் புத்தகமாக வெளியிட்டார்.   

அதன் பெயர் ‘தயங்கிய கூலிப்படையாள்: இலங்கையில் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் ஒரு பிரித்தானிய முன்னாள் இராணுவ வானூர்தி ஓட்டியின் நினைவுகள்’ (The reluctant mercenary : the recollections of a British ex-Army helicopter pilot in the anti-terrorist war in Sri Lanka). 

இந்தப் புத்தகம் வந்தபோது, இலங்கையில் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தது; சமாதானம் குறித்து, அதிகம் பேசப்பட்டது. இந்தப் புத்தகம், யார் கவனத்தையும் ஈர்க்காமல் போய்விட்டது.   

‘கீனி மீனி’ நூலில் பேசப்பட்ட விடயங்களில், இலங்கை ஒருபகுதி மட்டுமே. ஆனால், இன்று இலங்கையை முன்னிறுத்தியே இப்புத்தகம் பிரபல்யமாகிறது. 

உண்மைதான், இப்போது ‘சன்டனிஸ்டாக்கள்’ பற்றியோ, ஓமானின் புரட்சிகர இடதுசாரிகள் பற்றியோ, ‘முஜாகிதீன்கள்’ பற்றியோ அறியும் ஆவல் குறைவுதானே!   
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கீனி-மீனி-இலங்கையில்-பிரித்தானிய-கூலிப்படைகள்/91-245456

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றி கிருபன். வழக்கம் போல எமக்கு தேவையான விடயங்களை பற்றிய காத்திரமான நல்ல திரிகள் கவனிப்பாரற்று போவது போல இதுகும் போய் விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்தியாவின் சூழ்ச்சி அம்பலமானது.

eelam.jpg

இலங்கையில் 1980களில் நடந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கூலிக்காகப் பணிபுரியும் பிரித்தானிய விமான பைலட்களை இந்தியா பயன்படுத்தியதாக முதன்முதலாக பிரிட்டனில் வெளிவந்துள்ள ஒரு நூல் வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் பிரிட்டிஷ் கூலிப் படையினர் இருப்பதைப் பொதுவெளியில் இந்திய உயர் அலுவலர்கள் கண்டித்து வந்தபோதிலும், புலிகளுக்கு எதிரான தங்களுடைய தாக்குதலில் உதவுவதற்காகப் பணம் கொடுத்து இவர்களின் உதவியை இந்திய அமைதிக் காப்புப் படையினர் பெற்றனர் என்று அந்த நூல் தெரிவித்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த புலனாய்வுப் பத்திரிகையாளர் பில் மில்லர் எழுதியுள்ள ‘கீனி மீனி: தி பிரிட்டிஷ் மெர்சினரீஸ் ஹூ காட் அவே வித் வோர் கிரைம்ஸ்’ என்ற இந்த நூலில் இலங்கைப் போர் பற்றிய மேலும் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

1987ல் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி, இலங்கை ஜனாதிபதி ஜெயவர்தன ஆகியோர் இடையே இந்திய – இலங்கை உடன்பாடு கையெழுத்தானதைத் தொடர்ந்து, நான்கு மாதங்கள் பிரிட்டிஷ் கூலி பைலட்களின் சேவையை இரகசியமாக இந்தியா பயன்படுத்திக் கொண்டதாகவும் மில்லர் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் மண்ணுக்கு இந்திய அமைதிக் காப்புப் படை வருவதற்கு முன்னர் தமிழர்களுக்கு எதிரான அத்துமீறல்களிலும் பிரிட்டிஷ் கூலிப் படையினர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கீனி மீனி என்பது ரகசிய நடவடிக்கைகளைக் குறிக்கும் அரபுச் சொல். கீனி மீனி சேவைகள் (கேஎம்எஸ்) என்ற இந்த பிரிட்டிஷ் நிறுவனத்தை பிரிட்டிஷ் சிறப்பு விமானப் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கேணல் ஜிம் ஜோன்சன் என்பவர் நடத்தி வந்தார். யேமன், ஓமன் போன்ற நாடுகளில் பல்வேறு ரகசிய நடவடிக்கைகளில் இவர் ஈடுபட்டுவந்துள்ளார்.

பிரிட்டனின் உதவியை எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஜெயவர்தன, தீவிரவாதத்துக்கு எதிரான இவருடைய நடவடிக்கைகள் பற்றி அறிய வந்ததும் இலங்கைக்கு அழைத்துள்ளார்.

அதிகாரப்பூர்வமாகவோ, வெளிப்படையாகவோ இலங்கைக்கு உதவ முன்வராத நிலையில், கீனி மீனி சேவைகள் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இலங்கை மண்ணில் தமிழர்களுக்கு எதிரான போரில் ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் பணியாற்றுவதை பிரிட்டன் அனுமதித்துள்ளது.

கடைசி பைலட் விலக்கிக் கொள்ளப்பட்ட (1987) நவம்பர் 27 வரையிலும் இலங்கை விமானப் படை விமானங்களில் கேஎம்எஸ் பைலட்கள் பறந்து கொண்டிருந்தார்கள் என்று கேணல் ஜோன்சன் உறுதிப்படுத்தியுள்ளார் என்று தந்தியொன்றில் கொழும்பிலிருந்த பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் டேவிட் கிளாட்ஸ்டோன் குறிப்பிட்டுள்ளதையும் மில்லர் எடுத்துக்காட்டியுள்ளார்.

அண்மையில் வெளிவந்த இந்த நூலில் மேலும் எண்ணற்ற விவரங்களை பத்திரிகையாளர் பில் மில்லர் வெளிப்படுத்தியுள்ளார்.

http://www.vanakkamlondon.com/விடுதலைப்-புலிகளுக்கு-எத/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து  வெள்ளைக்காரனின்... 
குட்டுக்களை... உடைத்த, கட்டுரையை பார்க்க.. அதிர்ச்சியாக  இருந்தது. 
செய்தி  இணைப்பிற்கு... நன்றி கிருபன் ஜீ. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பற்றி உப்ப தான் கேள்விப் படுகிறேன்...இந்த புத்தகம் லைப்ரரியில் இருக்குமோ தெரியாது...தேடிப் பார்க்க வேண்டும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமைகளை செய்தவன் எல்லாம் இப்ப தான் செய்த கொடுமைகளை புத்தமாக வெளியிட்டு பிழைப்பு நடத்தும் அளவுக்கு உலகில் மனித உயிர்கள் மீதான கொடுமைகளைச் செய்வோர் சாதாரணமாக தப்பி விடும் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒரு கொலைஞனே தண்டனையில் இருந்து தப்புவது மட்டுமன்றி.. தன் சுயசரிதையை எழுதி காசு பார்ப்பது போன்றது. 

இது நீண்ட காலப் போக்கில் மனித இனத்துக்கு ஆபத்தாக அமையும். 

எதுஎப்படியோ.. கொலைஞர்கள் தெரிந்தோ தெரியாமலோ.. ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவதும் நடக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் தயாரிப்பு ஏவுகணையைப்பயன்படுத்தும் இலங்கை படையினர்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.