Jump to content

86ஆவது தடவையாக நடைபெறவுள்ள புனிதர்களின் மாபெரும் கிரிக்கெட் சமர்


Recommended Posts

86ஆவது தடவையாக நடைபெறவுள்ள புனிதர்களின் மாபெரும் கிரிக்கெட் சமர்

 

இலங்கையின் முன்னணி கத்தோலிக்க பாடசாலைகளான கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் கொழும்பு புனித பேதுரு கல்லூரி ஆகிய அணிகளுக்கிடையிலான அருட்தந்தை மொரிஸ் லே கொக் கிண்ணத்துக்கான 86ஆவது புனிதர்களின் சமர் கொழும்பு பி. சரவணமுத்து ஓவல் மைதானத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.  

‘Battle of the Saints’ எனும் பெயரில் ஜோசப்பியன் பீட்டரைட் கிரிக்கெட் போட்டியாக அழைக்கப்படுகின்ற இம்மாபெரும் கிரக்கெட் சமரானது முதல் இன்னிங்ஸில் 60 ஓவர்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக இரண்டு நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. 

இந்த வருடம் புனித ஜோசப் கல்லூரியை, சகலதுறை வீரர் ஜொஹான் டி சில்வாவும், புனித பேதுரு கல்லூரியை விக்கெட்காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ஷெனன் பெர்னாண்டோ வழிநடத்தவுள்ளனர். 

இந்த இரண்டு பாடசாலைகளுக்கும் இடையில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் புனித ஜோசப் கல்லூரி அணி 12 இலும், புனித பேதுரு கல்லூரி அணி 10 இலும் வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளது. 

இறுதியாக வினு மொஹொட்டி தலைமையில் 2016 இல் வெற்றிபெற்ற புனித பேதுரு கல்லூரியிடம் இந்த வெற்றிக் கிண்ணம் தற்போது உள்ளது.

இந்த நிலையில், கடந்த 2008ஆம் ஆண்டு ருவந்த பெர்னாண்டோபுள்ளே தலைமையில் புனித ஜோசப் கல்லூரி சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டது.

இது இவ்வாறிருக்க, இலங்கை அணிக்காக விளையாடிய இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலர் இவ்விரண்டு கல்லூரிகளிலும் கல்வி கற்றுள்ளனர்.  

இதில் திமுத் கருணாரத்ன, அஞ்செலோ மெத்திவ்ஸ், சமிந்த வாஸ், திசர பெரேரா, ஆஷ்லி டி சில்வா, மைக்கல் வான்டொட், ரோஷேன் சில்வா, பிரியாமல் பெரேரா மற்றும் சதீர சமரவீர ஆகியோர் புனித ஜோசப் கல்லூரியையும்,  ரோய் டயஸ், ருமேஷ் ரத்னாயக்க, ரஸல் ஆர்னல்ட், வினோதன் ஜோன், அமல் சில்வா, கௌஷால் லொக்குஆராச்சி, மலிந்த வர்னபுர, மற்றும் அஞ்செலோ பெரேரா ஆகியோர் புனித பேதுரு கல்லூரியையும் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள்.

இதனிடையே 1975ஆம் ஆண்டு முதல் இவ்விரண்டு பாடசாலைகளுக்கும் இடையில் நடைபெற்று வருகின்ற புனிதர்களின் சமரின் ஒருநாள் போட்டியானது எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் திகதி கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவுள்ளது.

46ஆவது தடவையாக நடைபெறவுள்ள இந்த ஒருநாள் போட்டியானது அருட்தந்தை பீடர் ஏ பிள்ளை கிண்ணத்துக்காக நடைபெறுகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

இந்த நிலையில், 86ஆவது புனிதர்களின் சமர் குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு கடந்த 12ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய கொழும்பு புனித ஜோசப் கல்லூரியின் முதல்வரான அருட்தந்தை ரஞ்சித் அந்த்ராடி அடிகளார்,  

இலங்கையின் இரண்டு முன்னணி பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெறுகின்ற இம்மாபெரும் கிரிக்கெட் சமரானது, இலங்கையின் விளையாட்டு நாட்காட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக திகழ்வதுடன் இது இளைஞர்களையும் முதியவர்களையும் ஈர்க்கின்ற போட்டியாகவும் காணப்படுகின்றது எனவும் இரண்டு அணிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார். 

அத்துடன், கொழும்பு புனித பேதுரு கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை ரோஹித ரோட்றிகோ கருத்து தெரிவிக்கையில், 

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் கொழும்பு புனித பேதுரு கல்லூரி அணிகளுக்கிடையிலான வருடாந்த கிரிக்கெட் சமரானது சுமார் எட்டு தசாப்தங்களுக்கு மேலாக பராம்பரிய வரலாற்றினையும் தோழமையினையும் கொண்டுள்ளது. 

இதன் மூலம் தேசிய மட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பல முன்னணி வீரர்களை உருவாக்கி இலங்கைக்கு மிகுந்த மரியாதையும் பெற்றுத்தந்துள்ளது என தெரிவித்தார். 

இதேவேளை, 86ஆவது தடவையாக நடைபெறவுள்ள புனிதர்களின் சமருக்கு இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான டயலொக் ஆசியாட்டா இவ்வருடமும் அனுசரணை வழங்கவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

 

இதனிடயே, 86ஆவது தடவையாக நடைபெறவுள்ள புனிதர்களின் சமரை இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக நேரடியாக கண்டுகளிக்க முடியும். அத்துடன், டயலொக் TV மற்றும் டயலொக் Viu மூலமும் பார்க்கலாம்.

http://www.thepapare.com/saints-set-to-go-marching-in-for-the-86th-time-tamil/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.