Jump to content

"இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பயணத்தடையை அறிவித்தது அமெரிக்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இது பழைய காணொளி என்றாலும்.. இதில் கூறப்பட்ட விடயங்கள் குறித்து நம்மவர்கள்.. இதுவரை எந்தக் காத்திரமான அழுத்தங்களையும் சர்வதேசத்துக்கு தாயகத்தில் இருந்து வழங்கவில்லை. குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகள்.

இப்போது அமெரிக்காவின் தற்சார்ப்பு நடவடிக்கை ஒன்றின் பின் தான்... சிலர் சிலதைப் பேசுகின்றனர். சம் சும் மாவை சாவை கும்பல் வழமை போல் மூச். 

இவர்களா தமிழ் மக்களுக்கு நீதியும் உரிமையும் பெற்றுக்கொடுப்பார்கள்..???! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த அமெரிக்கா கிந்தி பிரதமர் மோடிக்கு போடாத தடையா?
இப்ப பாக்கேல்லையே கட்டிப்பிடிச்சுக்கொண்டு திரியுதுகள் :cool:

Bildergebnis für modi obama

Bildergebnis für modi donald trump

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உந்த அமெரிக்கா கிந்தி பிரதமர் மோடிக்கு போடாத தடையா?
இப்ப பாக்கேல்லையே கட்டிப்பிடிச்சுக்கொண்டு திரியுதுகள் :cool:

Bildergebnis für modi obama

Bildergebnis für modi donald trump

மோடி பிச்சை எடுப்பது அப்பட்டமாய் தெரிகிறது.

Link to comment
Share on other sites

இரா­ணு­வத்­ த­ள­ப­திக்கு எதி­ரான அமெ­ரிக்கப் பய­ணத்­த­டைக்குத் தமிழ்­ மக்கள் வர­வேற்பு - விக்­கி­னேஸ்­வரன்

இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சில்வாவிற்கு எதிராகக் கடந்த வாரம் விதிக்கப்பட்ட அமெரிக்கத் தடையை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்று விக்கினேஸ்வரனிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, இலங்கைத் தமிழ் மக்களின் சார்பில் பேசுவதாகக் கூறிய அவர், 10 வருடங்களுக்கும் அதிகமான காலமாக இலங்கையில் அடுத்தடுத்துப் பதவிக்கு வந்த 3 அரசாங்கங்களின் பிடிவாதப்போக்கைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது இப்போது சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும். நீதிக்கான தமிழ் மக்களின் நேரம் வந்துவிட்டது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

அவர் பதிலின் முழுவிபரம் வருமாறு:

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் எதிராக அமெரிக்கா விதித்த பயணத்தடையை வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் வரவேற்கிறார்கள். சில்வா கட்டளைப் பொறுப்பின் ஊடாக பாரதூரமான மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற நம்பகமான தகவல்களின் காரணமாக அவரை அமெரிக்காவில் வேண்டத்தகாதவர் என்று பிரகடனம் செய்வதற்கு முடிவெடுத்தமைக்காக அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோவை முழு மனதுடன் நாம் பாராட்டுகிறோம்.

2009 ஆம் ஆண்டு இலங்கையின் உள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டங்களில் சட்டவிரோதமான கொலைகளுக்கு சில்வா உத்தரவிட்டார் என்ற நம்பகமான குற்றச்சாட்டுக்களை பி.பி.சியின் சனல் - 4 ஆவணப்படுத்தியிருக்கிறது. 'என்னவானாலும் செய்யுங்கள். அது செய்யப்படவே வேண்டும். ஆனால் முடித்துக்கட்டப்பட வேண்டி முறையில் அதை முடித்துவிடுங்கள்' என்று அன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டளையொன்றை சில்வா இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவில் தனக்குக் கீழ் பணியாற்றியவர்களுக்குத் தெரியப்படுத்தியதற்கான சான்று சனல் - 4 ஒளிபரப்பிய காணொளி அறிக்கைகளில் உள்ளடங்கியிருக்கிறது. அந்தக் கட்டளை குடிமக்களும், சரணடைந்த போராளிகளும் உட்பட (அபகீர்த்தி மிக்க வெள்ளைக்கொடி சம்பவம் உட்பட) பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு வழிவகுத்ததாகக் கூறப்பட்டது. எனவே அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முடியாதவாறு சில்வா மீது விதிக்கப்பட்ட தடை ஏனைய நாடுகளும் பின்பற்றுவதற்கான ஒரு உதாரணமாக அமைகிறது.

போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலையாக அமையக்கூடிய செயற்பாடுகளுக்காக இலங்கை அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதில் சர்வதேச சமூகத்திற்கு இருக்கும் கடமையையும், அமெரிக்காவின் இந்த ஆக்கபூர்வமான நடவடிக்கை மேலும் உறுதிப்படுத்துகிறது. அத்தகைய குற்றவாளிகள் என்று கூறப்படுபவர்களை விசாரிப்பதற்குக் கலப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்குமாறு பணித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பல தீர்மானங்களுக்கு இணங்கமுடியாது என்று இலங்கை தொடர்ச்சியாகக் கூறிவந்திருக்கிறது. அப்பாவி குடிமக்களை வேண்டுமென்றே பயங்கரவாதிகள் என்று கூறிக்கொண்டு கொலை செய்வது எந்த வகையிலுமே வீரசாகசத்துக்கு ஒப்பாகிவிடாது என்பதை லெப்டினன்ட் ஜெனரல் சில்வாவை ஒரு ஹீரோவாகக் காண்பிக்க முயற்சிப்பவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

குற்றவியல் பொறுப்புத் தொடர்பான அத்த்கைய தெளிவான குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகும் சகல அதிகாரிகளினதும் வழக்குகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் அல்லது தகுதி வாய்ந்த எந்தவொரு சர்வதேச மன்றினால் விசாரணை செய்யப்பட வேண்டும். அத்தகைய குற்றங்கள் தொடர்பில் வழக்குத் தொடுப்பதற்கு சர்வதேச சமூகத்திற்கு இருக்கக்கூடிய அதிகாரம் (ஐக்கிய நாடுகள் சாசனத்தின் ஏழாவது அத்தியாயத்தில் உள்ளவாறான) சர்வதேச நியாயாதிக்கக் கோட்பாட்டிலும், ரோம் சட்டத்தில் கைச்சாத்திடாத நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு எதிராக அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட நடைமுறையிலும் குறித்துரைக்கப்பட்டிருக்கிறது.

10 வருடங்களுக்கும் அதிகமான காலமாக அடுத்தடுத்துப் பதவிக்கு வந்த 3 இலங்கை அரசாங்கங்களின் பிடிவாதத்தைக் கருத்திற்கொண்டு நோக்கும் போது இப்போது சட்டத்தின் ஆட்சி கட்டாயம் நிலைநிறுத்தப்பட வேண்டும். நீதிக்கான தமிழ் மக்களின் தருணம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/75879

Link to comment
Share on other sites

அமெரிக்காவின் தடையை விட அதன் பதிலே பலமானது

இலங்கையின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை இலங்கை அரசுக்கான முதலாவது எச்சரிக்கை எனலாம்.
 
ஏலவே சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்தமை தொடர்பில் சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டிருந்தது. போர்க்குற்றம் புரிந்தவர் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை இராணுவத் தளபதியாக நியமிப்பது நியாயமாகாதென்ற அடிப்படையில், சவேந்திர சில்வாவுக்கான எதிர்ப்பு சர்வதேச மட்டத்தில் வலுப் பெற்றிருந்தது. எனினும் இதனைப் பொருட்படுத்தாமல் இராணுவத் தளபதியாக அவர் நியமிக்கப் பட்டார்.
 
இவ்வாறு நியமிப்பதன் மூலம், சர்வதேசத் தின் எதிர்ப்பைத் தாம் பொருட்படுத்தவில்லை என்பதை உலகுக்குக் கூறுவது இலங்கை ஆட்சி யாளர்களின் முதன்மை நோக்கமாக இருந்தது. இதுதவிர, சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு சிறிது காலம் மட்டுமே நின்று நிலைக்கும். பின்னர் அது மறக்கப்பட்ட விடயமாகிப் போய் விடும் என்ற நினைப்பிலும் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
 
நிலைமை இதுவாக இருக்கையில், இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது என அமெரிக்கா அதிரடியாக அறிவித்தது.
 
ஒரு நாட்டின் இராணுவத் தளபதியாக இருக்கக்கூடிய ஒருவரைத் தனது நாட்டுக்குள் நுழைய விட முடியாது என இன்னொரு நாடு அறிவிக்குமாக இருந்தால், சம்பந்தப்பட்ட இராணுவத் தளபதிக்கு அதைவிட்ட அவ மானம் வேறு எதுவுமாக இருக்க முடியாது.
 
இந்நிலையிலேயே அமெரிக்கத் தூதுவர் களை அழைத்து சவேந்திர சில்வா மீது அமெ ரிக்கா விதித்த தடையை நீக்குமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுள்ளது. இவ்வாறு கேட்கப்பட்டதற்கு, சவேந்திர சில்வா போர்க்குற்றம் புரிந்ததற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாக அமெரிக்காவின் பதில் அமைந்தது.
 
இவ்வாறு அமெரிக்கா தெரிவித்த பதிலா னது அந்த நாடு சவேந்திர சில்வாவுக்கு விதித்த தடையை விட, காத்திரமும் கனதியு மானது என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
 
அதாவது, இலங்கையின் இராணுவத் தளபதியாக இருக்கக்கூடியவர் போர்க்குற்றம் புரிந்தவர் என அமெரிக்கா கூறுகிறது  என்றால், இலங்கை ஆட்சியாளர்கள் எவ்வாறாக தங்கள் அதிகாரத்தை சிறுபான்மைத் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கின்றனர் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kapithan said:

மோடி பிச்சை எடுப்பது அப்பட்டமாய் தெரிகிறது.

மோடியைத் தேடிப் போனது டிரம்...அவர் தான் பிச்சை எடுத்து திரியிறார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

மோடியைத் தேடிப் போனது டிரம்...அவர் தான் பிச்சை எடுத்து திரியிறார் 

உங்கள் முசுப்பாத்திக்கு அளவேயில்ல. இரதிக்கு எந்த நேரமும் பகிடிதான். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎18‎/‎2020 at 10:38 PM, Kapithan said:

உங்கள் முசுப்பாத்திக்கு அளவேயில்ல. இரதிக்கு எந்த நேரமும் பகிடிதான். 😜

 

மோடியைத் தேடிப் போனது யாரு ?...நிழலி ஏற்கனவே எழுதியது தான் ...டிரம்ப் முதலில் ஒரு வியாபாரி🤣 ...பிறகு தான் ஜனாதிபதி
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ரதி said:

 

மோடியைத் தேடிப் போனது யாரு ?...நிழலி ஏற்கனவே எழுதியது தான் ...டிரம்ப் முதலில் ஒரு வியாபாரி🤣 ...பிறகு தான் ஜனாதிபதி
 

இரதிக்கு பகிடி கூடிப்போச்சு. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/16/2020 at 9:39 PM, ampanai said:

எதிர்காலத்தில் இதே நிலைமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஏனைய முக்கியஸ்தர்களுக்கும் ஏற்படாலம் என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

அங்க நிக்குது சிங்களத்தின் நாடித்துடிப்பு. நடுங்குதில்ல?... ஆயத்தமாகுவது நல்லது. எவ்வளவு வீறவாப்பு பேசினாலும், ஒருநாள் எல்லாம் கலையும். எதுக்கும் தமிழன் வாக்கு முக்கியம். பாத்து நடவுங்காே.....ம்.

Link to comment
Share on other sites

அமேரிக்கா : தனக்கு இன்று சிங்களம் மீது ஒரு அழுத்தத்தை பிரயோகிக்க எண்ணி இந்த முடிவை எடுத்துள்ளது. 

என்ன அழுத்தம் : சோபா மற்றும் எம்.சி.சி. போன்ற உடன்படிக்கைகளை முன்னெடுத்தல் 

சிங்களம் : இறுதியில் இந்தியாவின் ஊடாக ஒரு விட்டுக்கொடுப்பை எடுக்கும் 

சீனா: இன்றும் சிங்களத்திற்கும் உதவ எண்ணுகின்றது, ஆனால், கொரோனா வைரஸால் பலவீனமாக்கப்பட்டுள்ளது. 

தமிழர் தரப்பு : போர்க்குற்றம் என்பதை இன்று ஏற்றுக்கொண்ட நிலையில் இருந்து இனப்படுகொலை என்பதை ஏற்க வைத்தல் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.