Jump to content

என் மனதைக் கூட்டித் தைத்த  தையல் ஊசி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் விட்டு ஊரோடி

வான் விட்டு நாடோடி

நிலவரம் கலவரமாக

நீயே என் கதி என

ஊர்ப்புதினத்தின் விடுப்புக்காரி

கண் எதிரே திரை விரித்தாய். 

 

தாய்க்கு நிகர்த்து மொழி பேசி

உறவுக்கு நிகர்த்து கதை பேசி

கடுகதி வாழ்வில்

கனதிகள் குறைக்கும்

திரைபேசியானாய்

நான் அலைபேசி மறந்தேன். 

 

காலவெளியில்

கண்ட சங்கதிகள் ஆயிரம் ஆயிரம்

அத்தனையும் அடக்கி

அமுசடக்கமாய் வளர்ந்து

குமரியாய் குலுங்கி நிற்கும்

யாழே...

நீயே என் மனதை தைத்த

மோக முள்...

ஊர் தொலைத்தவனின்

ஊனத்தை

ஊமையாய் புரிந்து கொண்டவள்..!

 

சாதனைக்குள் சோதனை

சாதாரணம்..!

சார்ந்திருந்தோர்

எதிர் நின்றோர்

எல்லாம் தாண்டி

சதா நிகழும்

மாற்றங்கள் மத்தியில்

தானுமாய் மாறி 

தன் அடையாளம் காக்கும்

யாழே..

நீயே

என் மனதைக் கூட்டித் தைத்த 

தையல் ஊசி..!

 

காலத்தால் நீ

கிழவி ஆனாலும்

நான் கிழவன் ஆனாலும்

தமிழால் நீ

என்றும்.. தலை நிமிர்வாய்

தமிழருக்காய் நீ

வாழ்ந்திருப்பாய் வரலாறாய்

வாழி

என் தோழி.

 

ஆக்கம் - நெடுக்ஸ் [15-02-2020]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குமரியாக இருப்பதனால்தான் கிழவர்களின் கொட்டம் அதிகரித்துள்ளது😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது எப்படி யாழை பெண்ணாக வர்ணிக்கலாம்?

நோ நோ நோ யாழ் இஸ் எ மேல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இப்பத் தான் குமரி ...யாரையும் பார்த்து கட்டி வையுங்கோ 🤑

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்க்கு நிகர்த்து மொழி பேசி

உறவுக்கு நிகர்த்து கதை பேசி

கடுகதி வாழ்வில்

கனதிகள் குறைக்கும்

திரைபேசியானாய்

நான் அலைபேசி மறந்தேன்.....!

 

இது நல்லா இருக்கு,  அதுசரி கவிதை அலைபேசியிலா அடித்தநீங்கள்......!  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

யாழ் குமரியாக இருப்பதனால்தான் கிழவர்களின் கொட்டம் அதிகரித்துள்ளது😂🤣

யாழ் வந்த போது பதின்ம வயதில் இருந்தோர் இன்று முப்பதை கடந்த கிழவர்கள் ஆகிவிட்டனர்.

இருபதில் இருந்தோர் நாற்பதை கடந்த கிழவர்கள் ஆகிவிட்டனர்.

முப்பதில் இருந்தோர் ஐம்பதைக் கடந்த கிழவர்கள் ஆகிவிட்டனர்.

நாற்பதில் இருந்தோர் அறுபதைக் கடந்த கிழவர்கள் ஆகிவிட்டனர்.

ஐம்பதைக் கடந்தோர் எழுபதைக் கடந்த கிழவர்கள் ஆகிவிட்டனர்.

யாழோடு பிறந்தோர் இப்போ.. இருபதை தாண்டிவிட்டனர். அவர்கள் இங்கில்லாத போது மேற்படி கிழவர்கள் தானே கொட்டமடிக்க முடியும். 🤣

20 hours ago, ஈழப்பிரியன் said:

அது எப்படி யாழை பெண்ணாக வர்ணிக்கலாம்?

நோ நோ நோ யாழ் இஸ் எ மேல்.

இல்லை வ்வீ மேல் தான். ஏனெனில்... யாழ் ஒரு வீணை ரகம். வீணையையும் மங்கையையும் தான் மீட்டலாம். 

16 hours ago, ரதி said:

யாழ் இப்பத் தான் குமரி ...யாரையும் பார்த்து கட்டி வையுங்கோ 🤑

 

இப்ப சீதனம் வேண்டாம் என்றாலும் புரோக்கர் காசு சீதனத்தை விட அதிகாம இருப்பதால்.. யாழ் குமரியாகவே இருக்கட்டும். காலம் வரும் போது அது தானாகவே கட்டிக்கும். எதுக்கு நாங்கள் சிரமப்படனும். 

14 minutes ago, suvy said:

தாய்க்கு நிகர்த்து மொழி பேசி

உறவுக்கு நிகர்த்து கதை பேசி

கடுகதி வாழ்வில்

கனதிகள் குறைக்கும்

திரைபேசியானாய்

நான் அலைபேசி மறந்தேன்.....!

 

இது நல்லா இருக்கு,  அதுசரி கவிதை அலைபேசியிலா அடித்தநீங்கள்......!  🤣

இல்லை.. இப்பவும் திரை பேசி தான். திரை பேசியில் தான் யாழ் அழகு. அலைபேசிக்கு வந்ததும் நாணிக் கூனிக் குறுகி விடுகிறது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை.

இம்முறை நீங்கள் முந்திவிட்டாலும் யாழைப் பெண்ணாக்கியது

முதலில் நான்தான்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/15/2020 at 1:54 PM, கிருபன் said:

யாழ் குமரியாக இருப்பதனால்தான் கிழவர்களின் கொட்டம் அதிகரித்துள்ளது😂🤣

யாழுக்கு 22 வயதுதானே ஆகிறது

F7-FF1-E0-C-69-D0-49-DD-A547-88-E9-D4-D0

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்வாய் பொருத்தம், தாலிப்பொருத்தம், யூனிவர்சிட்டி பொருத்தம் எல்லாம் பார்க்காம யாழுக்கு ஒரு நல்ல வரனா பாருங்கப்பா 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இந்த செய்வாய் பொருத்தம், தாலிப்பொருத்தம், யூனிவர்சிட்டி பொருத்தம் எல்லாம் பார்க்காம யாழுக்கு ஒரு நல்ல வரனா பாருங்கப்பா 🤣

இப்ப இதுக்கு ஒரு பெரிய பந்தீல மறுப்பறிக்கை வரும்😂😂.. 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
On 2/15/2020 at 1:54 PM, கிருபன் said:

யாழ் குமரியாக இருப்பதனால்தான் கிழவர்களின் கொட்டம் அதிகரித்துள்ளது😂🤣

🤣🤣🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.