Jump to content

வீதிகளின் சைவப் பெயர்களை மாற்றும் முயற்சி- ஊர்காவற்றுறை பிரதேச சபையிடம் சைவ மகாசபை அவசர வேண்டுகோள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

All-Ceylon-Saiva-Council-1.jpg

வீதிகளின் சைவப் பெயர்களை மாற்றும் முயற்சி- ஊர்காவற்றுறை பிரதேச சபையிடம் சைவ மகாசபை அவசர வேண்டுகோள்!

ஊர்காவற்றுறை பிரதேச சபைக்குட்பட்ட சில வீதிகளின் சைவப் பெயர்களை மாற்று மதப் பெயர்களாகவோ பொதுப் பெயர்களாவோ மாற்றுவதற்கு பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளமை வருத்தம் அளிக்கின்றது என அகில இலங்கை சைவ மகா சபை தெரிவித்துள்ளது.

மேற்படி வீதிகளின் பெயர் மாற்றம் தொடர்பாக ஊர்காவற்றுறை பிரதேச சபை விளம்பரப்படுத்தியுள்ளமை தொடர்பாக சைவ மகா சபை ஆட்சேபனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “தீவகத்தின், பாரம்பரியம்மிக்க துறைமுக நகரான காவலூர் பண்டைய அழகிய சைவத் தமிழ் கிராமங்களையும் அந்தியராட்சியின் பின் ஏற்பட்ட மாற்றங்களை உள்வாங்கி கத்தோலிக்க மக்களைக் கொண்ட கிராமங்களையும் கொண்டமைந்த பிரதேசமாகும்.

இந்நிலையில் அங்குள்ள சைவ ஆலய வீதிப் பெயர்கள் சில வருடங்களுக்கு முன்னர் தான்தோன்றித்தனமாக மாற்றப்பட்டு மாற்று மதப் பெயரப் பலகைகள் இடப்பட்டுள்ளன. பதிவேடுகளில் உள்ள பெயர்களுக்கு முரணாக சபையினதோ மக்களினதோ அனுமதியின்றி தவறாக அப்போது செய்யப்பட்ட இந்தப் பெயர் மாற்றங்களை, இப்போது திட்டமிட்டு சட்டபூர்வமாக மாற்ற முனைவது தவறான முன்னுதாரணமாகும்.

ஊர்காவற்றுறையில் சைவர்களும் கத்தோலிக்கர்களும் மத நல்லிணக்த்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சைவ ஆலயத்தின் பெயரைத் தாங்கிய வீதிகளின் பெயர்களை மாற்றம் செய்ய முனைவது மக்களின் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் செயலாகும்.

எனவே, பிழையை சரியாக்கும் தவறான முயற்சியை கைவிடுமாறும் பதிவேடுகளில் தொன்றுதொட்டு வழக்கிலிருந்த உண்மையான, பதிவேடுகளில் உள்ளமை போன்று பெயர்களைக் காட்சிப்படுத்துமாறும் சைவத்தமிழ் மக்கள் சார்பாக சைவ மகா சபையினராகிய நாங்கள் ஊர்காவற்றுறை பிரதேச சபையை கேட்டுக்கொள்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

http://athavannews.com/வீதிகளின்-சைவப்-பெயர்களை/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில வீதியை திருத்திறாய்களோ இல்லையோ.. மும்மொழியில்.. வீதிக்கு பெயர் பலகை நாட்டுவதில் குறியாக இருக்கிறார்கள். அது என்னவோ நல்லம் தான்.. ஆனால்.. எதுக்கு உள்ள வரலாற்றுப் பெயர்களை மாற்ற வேண்டும். ??!

அதே போல்.. நாலு வீட்டை அரையும் குறையுமாகக் கட்டிவிட்டு.. அதுக்கு பளிங்குக்கல்லில்.. அங்குரார்ப்பண நினைவுக் கல் வைக்கிறார்கள். எல்லாம் நம்ம அத்தியடிக் குத்தியர் தன் பெயர் விளங்க முன்னெடுக்கிறாராம்.

காவலூரில்.. அவருக்கு வேண்டிய ஆட்கள் உள்ள இடங்களில்.. வீதி விளங்குகள் போடப்பட்டிருக்கும்.. மற்றைய பகுதிகள்.. இருட்டாக ஏன்.. வீதியோ மரங்களைக் கூட  வெட்டாமல் விட்டுள்ளனராம். 

ஐயாவுக்கு வாக்குப் போட்டால் தான்.. மிச்ச வேலை நடக்குமாம். இதில.. இவர் எல்லாம் மக்கள் பிரதிநிதி அமைச்சர் என்று அலைவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

 

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

அந்த அறிக்கையில், “தீவகத்தின், பாரம்பரியம்மிக்க துறைமுக நகரான காவலூர் பண்டைய அழகிய சைவத் தமிழ் கிராமங்களையும் அந்தியராட்சியின் பின் ஏற்பட்ட மாற்றங்களை உள்வாங்கி கத்தோலிக்க மக்களைக் கொண்ட கிராமங்களையும் கொண்டமைந்த பிரதேசமாகும்.

இந்நிலையில் அங்குள்ள சைவ ஆலய வீதிப் பெயர்கள் சில வருடங்களுக்கு முன்னர் தான்தோன்றித்தனமாக மாற்றப்பட்டு மாற்று மதப் பெயரப் பலகைகள் இடப்பட்டுள்ளன.

கத்தோலிக்க மக்கள் இப்போது அங்கே வாழ்வதால் அவர்கள் தமது மதப்பெயர்களை வீதிகளுக்கு வைக்கிறார்கள். சைவ மக்கள் அங்கே மீண்டும் சென்று காணிகளை கத்தோலிக்கரிடம் இருந்து போதுமான பணம் கொடுத்து வாங்கி, மீண்டும் இந்த கிராமங்களை சைவ கிராமங்களாக மாற்றினால் வீதி பெயர்களும் மீண்டும் சைவமாகும். இது முடியாவிட்டால், உள்ள கோவணம் ஒன்றே காணும் என்று யோகர் சுவாமிகள் சொன்னது போல “சும்மா இருப்பதே சுகம்” என்று ஒரு மரத்தடியில் அமர்ந்து தவம் செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கற்பகதரு said:

கத்தோலிக்க மக்கள் இப்போது அங்கே வாழ்வதால் அவர்கள் தமது மதப்பெயர்களை வீதிகளுக்கு வைக்கிறார்கள். சைவ மக்கள் அங்கே மீண்டும் சென்று காணிகளை கத்தோலிக்கரிடம் இருந்து போதுமான பணம் கொடுத்து வாங்கி, மீண்டும் இந்த கிராமங்களை சைவ கிராமங்களாக மாற்றினால் வீதி பெயர்களும் மீண்டும் சைவமாகும். இது முடியாவிட்டால், உள்ள கோவணம் ஒன்றே காணும் என்று யோகர் சுவாமிகள் சொன்னது போல “சும்மா இருப்பதே சுகம்” என்று ஒரு மரத்தடியில் அமர்ந்து தவம் செய்யுங்கள்.

யூட் உங்கள் கருத்தும் பொதுபல சேனவின் கருத்தும் ஒன்று தான்.

காவலூரில்.. இப்பவும் எல்லா மக்களும் கலந்து தான் வாழ்கின்றனர். ஒற்றுமையாகவும் வாழ்கின்றனர். இப்பவும்.. சென் அன்ரனிஸ் கல்லூரியில்.. சிவத்தம்பியின் பொடியும் படிக்குது.. யோசப்பின் பெட்டையும் படிக்குது.

அந்த ஊரில் இருந்த மக்கள் போர் சூழலால் வெளியேற்றப்பட்டார்கள். அநேகர் பிற இடங்களுக்கும்.. வெளிநாடுகளுக்கும் சென்று நிரந்தரமாகக் குடியேறி விட்டனர்.

ஆனாலும்.. விடுமுறை காலங்கள் தங்களில் மண்ணை இடிந்து போய் கிடக்கும் வீடுகளை பாழடைந்து கிடக்கும் மண்டபங்களை காடு பத்திக் கிடக்கும் காணிகளை பார்க்க மகிழுந்தில்.. வான்களில்.. ஆட்டோக்களில் வந்து கொண்டு தான் உள்ளார்கள்.

சில வெளிநாட்டு நம்மவர்கள் வீடுகளை காணிகளை புனரமைத்து உள்ளூர் மக்களுக்கு வழங்கி உள்ளனர். இன்னும் சிலர் வீடுகளை அமைக்கின்றனர். இன்னும் சிலர் வீடுகளை திருத்தி அமைத்து சிங்கள மற்றும் உல்லாசப் பயணிகள் தங்கி நின்று செல்லும் இடமாகப் பாவிக்க வழங்கி வருகின்றனர். இன்னும் சிலர் காணிகளை கூறு போட்டு விற்கவும் செய்கின்றனர். இதில் இன்ன மதம் தான் செய்யுது என்றில்லை. எல்லோரும் அவரவர் வசதிக்கு செய்கிறார்கள். 

அதுபோக ஈபிடிபி அடாவடி வேற. வர்த்தர்கள் செய்த வியாபாரங்களையும் கைவிட்டு விட்டு யாழ் நகர் நோக்கி ஓடுகின்றனர். 

இப்படி சூழல் இருக்க..

தமிழ் பிரேதச செயலர் ஒருவரே  அங்கு பதவியிலும் இருக்க.. எதுக்கு வரலாற்றுப் பெயர்களை மாற்ற வேண்டும். 

கோவில்களும்.. தேவாலயங்களும் புதுப்பொழிவுடன் தான் காணப்படுகின்றன. வீடுகள் காணிகள் வீதிகள்.. எப்படிக் கிடந்தாலும். 

Link to comment
Share on other sites

சைவ தமிழர்களும் கிறிஸ்த்தவ தமிழர்களும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. திட்டமிட்ட முறையில் இரண்டு தரப்பினருக்கும் இடையில் முரண்பாடுகளை விளைவிக்க பல குழுக்கள் களம் இறங்கி உள்ளன. இதில் பிரதானமானவர்கள் மொட்டு கட்சி,வீணை கட்சி மற்றும் வடக்கின் அடாவடி மினிஸ்ட்டரின் கட்சி.இவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு மாட்டுப்படாமல் இருப்பது தமிழஎஇன் மிக முக்கியமான கடமை.

Link to comment
Share on other sites

8 hours ago, nedukkalapoovan said:

தமிழ் பிரேதச செயலர் ஒருவரே  அங்கு பதவியிலும் இருக்க.. எதுக்கு வரலாற்றுப் பெயர்களை மாற்ற வேண்டும். 

காலத்துக்கு ஏற்ப மாற்றங்களை மக்கள் எதிர்பார்ப்பது வழக்கமானதே. நிலைமைகள் மாறும் போது பெயர்களும் அதற்கு தக மாற்றம் அடைகின்றன. உதாரணமாக, வரலாற்றில் நாகநாடு என்று அறியப்பட்ட பிரதேசத்தை  பின்னர் யாழ் பாடி பாணன் பரிசாக பெற்று தனது மக்களை கொண்டு வந்து குடியேற்றி யாழ்ப்பாணம் ஆக்கி விட்டான். இங்கே வாழ்ந்த பூர்வீக நாக மக்களுக்காக குரல் கொடுக்க அன்றும் யாரும் இருக்கவில்லை, இன்றும் எவரும் இல்லை.

 தமிழ் பிரேதச செயலர் பதவியில் இருப்பதால் அவர் தமிழ் பேசும் மக்களுடன் உரையாடி அவர்களின் எதிர்பார்ப்பின் படி செயற்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மத ரீதியான எந்த வித பேதங்களும் எமது சபையினால் மேற்கொள்ளப்படுவதில்லை -ஊர்காவற்றுறை பிரதேச சபை

மத ரீதியான எந்த வித பேதங்களும் எமது சபையினால் மேற்கொள்ளப்படுவதில்லை. அனைவரும் சமமாகவே எம்மால் பார்க்கப்படுகின்றது. வீதி இலக்கம் மாற்றப்பட்டமை தொடர்பில் குறித்த விளம்பரம் பெயர் மாற்றம் என பிரசுரிக்கபட்டமை தொடர்பில் திருத்தமான பதில் விளம்பரம் விரைவில் செய்யப்படும் என ஊர்காவற்றுறை பிரதேச சபை தெரிவித்துள்ளது.

ஊர்காவற்றுறை முகாம் வீதியில் அமைந்துள்ள கதிரேசன் கோவில் வீதிக்கும் பண்ணை வீதியில் அமைந்துள்ள சென் மேரிஸ் வீதிக்கு எந்த தொடர்பும் இல்லை இரண்டுக்கும் இரண்டு கிலோ மீற்றர் வரையான தூர வித்தியாசம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எந்த சைவ வீதிகளும் கிறிஸ்தவ பெயரால் மாற்றம் செய்யப்படவில்லை என்பதே தெளிவு. எனவே உண்மையான நிலவரம் அறிந்து கொண்டு செயல்பட பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் பொது அமைப்புகளை தயவுடன் கேட்டு கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெயர் மற்றம் செய்யும் போது குறித்த வீதி வாழ் மக்கள் பொது அமைப்புகள் ஆலோசனை அபிபிராயம் பெறப்பட்டு எந்த வித சிக்கலும் இல்லாமலே இடம் பெற்றது. குழப்பமான வீதிகள் இன்று வரை பெயர் மற்றம் செய்யப்படவில்லை.இவை தவிர முன்னர் குறிப்பிட்ட வகையில் வீதிகளே இல்லாமல் பெயர் குறிப்பிடபட்டு இருந்த வீதிகளுக்கு வழங்கபட்ட வீதி இலக்கங்கள் புதிதாக பதியபட்ட வீதிகளுக்கு வழங்கபட்டது.

வீதி பெயர் பதிவு புத்தகத்தில் காணபட்ட உண்மையில் பிரதேசத்தில் காணப்படாத வீதி கதிரேசன் கோவில் முதலாம் ஒழுங்கைக்குரிய இலக்கம் புனித மரியாள் வீதியில் ஆரம்பித்து சென் ஜோசெப் வீதியில் நிறைவடையும் புதிதாக பதியபட்ட புனித மரியாள் முதலாம் ஒழுங்கை என பெயரிடப்பட்ட வீதிக்கு வழங்கபட்டது.அந்த வகையிலான மாற்றங்கள் தொடர்பிலே தினக்குரல் பத்திரிகையில் பெயர் மாற்றம் என குறிப்பிடபட்டு விளம்பரமாக பிரசுரிக்கபட்டு இருந்தது. எந்த வீதியின் பெயரும் மாற்றம் செய்யவில்லை. பெயர் குறிப்பிடப்பட்ட பதிவு இலக்கங்களுக்கான பெயர் மாற்றங்கள் தான் பத்திரிகையில் குறிப்பிடபட்டு இருந்தது. இங்கு எந்த வீதியும் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. எனவே தகவல் எதையும் தெளிவில்லாமல் குழப்பத்தையும் சபைக்கு அபகீர்த்தியும் ஏற்படுத்த வேண்டாம் என அன்பாக கேட்டு கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை பிரதேச சபை எல்லைக்குள் பிரதேச சபைக்கு சொந்தமான வீதிகள் தொடர்பில் முன்னர் தயாரிக்க பட்ட வீதி பதிவு புத்தகத்தில் உள்ள வகையில் ஒவ்வொரு வீதிகளுக்கும் இலக்கங்கள் வழங்கபட்டு இருந்தமை குறிப்பிட தக்கது. இராணுவ கட்டுப்பாட்டு பகுதி மற்றும் ஆட்களற்ற பகுதி என்பன தவிர்த்த ஏனைய பகுதியில் இனம் காணபட்ட வீதிகள் பெயர் மற்றும் இலக்கங்கள் வழங்கப்பட்டு வீதி பதிவு புத்தகம் தயாரிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/மத-ரீதியான-எந்த-வித-பேதங்/

Link to comment
Share on other sites

இலங்கையே வத்திக்கான் கிழக்கிஸ்தான் புத்திஸ்தான் ஆக போகிறது முன்றுபக்கத்திலும் மதம் மாறுவது பழைய இந்துக்களின் வம்சம் தானே இதில தெருவும் சந்தியும் தேவையா??😜😜🤣🤣😂😎👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

எனவே தகவல் எதையும் தெளிவில்லாமல் குழப்பத்தையும் சபைக்கு அபகீர்த்தியும் ஏற்படுத்த வேண்டாம் என அன்பாக கேட்டு கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நீங்கள் பெயர்மாற்றம்   செய்யாவிட்டாலும்,  அவசரமாக ஒரு மதக்கலவரம் தமிழர் பிரதேசங்களில்  தேவைப்படுகிறது சில குழப்பவாதிகளுக்கு. மத்திக்கு முண்டு குடுக்க.

Link to comment
Share on other sites

தமிழ் மக்களின் பழமை பாரம்பரியம் முதலியவற்றை மாற்ற முயற்சிக்கும் அற்பசொற்ப சலுகைகளுக்கு சோரம்போன விஷமிகளின் செயல் கண்டிக்கத்தக்கது.
தமிழ் மக்கள் மத்தியில் ஊடுருவியுள்ள இந்த விஷமிகள் பற்றி மிக எச்சரிக்கையாக இருக்க வேணும். 

Link to comment
Share on other sites

6 hours ago, Rajesh said:

தமிழ் மக்களின் பழமை பாரம்பரியம் முதலியவற்றை மாற்ற முயற்சிக்கும் அற்பசொற்ப சலுகைகளுக்கு சோரம்போன விஷமிகளின் செயல் கண்டிக்கத்தக்கது.
தமிழ் மக்கள் மத்தியில் ஊடுருவியுள்ள இந்த விஷமிகள் பற்றி மிக எச்சரிக்கையாக இருக்க வேணும். 

தமிழ் மக்கள் பாரம்பரியமாக அணிந்து வந்த கச்சைக்கு மேலாக காற்சட்டை அணியும் விஷமிகளை அடையாளம் கண்டு அனைவரதும் காற்சட்டைகளை களற்றிவிட்டு பாரம்பரிய உடையான கச்சையை மட்டுமே எமது பிரதேசத்தில் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/19/2020 at 9:46 AM, கற்பகதரு said:

தமிழ் மக்கள் பாரம்பரியமாக அணிந்து வந்த கச்சைக்கு மேலாக காற்சட்டை அணியும் விஷமிகளை அடையாளம் கண்டு அனைவரதும் காற்சட்டைகளை களற்றிவிட்டு பாரம்பரிய உடையான கச்சையை மட்டுமே எமது பிரதேசத்தில் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் இப்போதுள்ள இடங்களிலும்(வெளிநாடுகளில்) பல வீதிகளிலும் ஒழுங்கைகளிலும் நம்மவர்களே கூடிய அளவில் இருக்கிறார்கள் என்பதற்காக பெயரை மாற்றுங்கள் என்று கேட்டால் வெள்ளைக்காரன் விடுவானோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

நீங்கள் இப்போதுள்ள இடங்களிலும்(வெளிநாடுகளில்) பல வீதிகளிலும் ஒழுங்கைகளிலும் நம்மவர்களே கூடிய அளவில் இருக்கிறார்கள் என்பதற்காக பெயரை மாற்றுங்கள் என்று கேட்டால் வெள்ளைக்காரன் விடுவானோ?

கேள்வி இடக்கு முடக்காக இருப்பதனால் பதிலும் இடக்கு முடக்காகத்தான் இருக்கும். ஓக்கேயா ?

Link to comment
Share on other sites

13 hours ago, Eppothum Thamizhan said:

நீங்கள் இப்போதுள்ள இடங்களிலும்(வெளிநாடுகளில்) பல வீதிகளிலும் ஒழுங்கைகளிலும் நம்மவர்களே கூடிய அளவில் இருக்கிறார்கள் என்பதற்காக பெயரை மாற்றுங்கள் என்று கேட்டால் வெள்ளைக்காரன் விடுவானோ?

விடுவான், விடுவான்। நம்மவர்களையே வாழ விடும்போது இது எல்லாம் வெள்ளைக்காரனுக்கு பெரிய காரியமில்லை । 

Link to comment
Share on other sites

14 hours ago, Eppothum Thamizhan said:

நீங்கள் இப்போதுள்ள இடங்களிலும்(வெளிநாடுகளில்) பல வீதிகளிலும் ஒழுங்கைகளிலும் நம்மவர்களே கூடிய அளவில் இருக்கிறார்கள் என்பதற்காக பெயரை மாற்றுங்கள் என்று கேட்டால் வெள்ளைக்காரன் விடுவானோ?

எங்கட ஊரில இந்தியாக்காரன் விட்டால் தான் வெள்ளைக்காரன் மூச்சே விடலாம். இங்க அப்பக்கடையிலும் இட்டிலிக்கடையிலும் வரிசையில் நிற்கும் தமிழனிடம் கேட்காமல் வெள்ளைக்காரன் எதுவும் செய்வதில்லை. எங்கட ஊர் எங்கை தமிழ்நாட்டிலேயோ எண்டு கேட்டு ஏமாறக்கூடாது. எங்கட ஊர்  உள்ள இடம் கலிபோர்னியா. இங்கே சுந்தர் பிச்சையை தெரியாத நாய் கூட இல்லை. தெருவுக்கு பெயர் வைக்கும் வீண் வேலையில் தமிழனோ இந்தியாக்காரரோ சீனரோ மினக்கடுவதில்லை. இங்கே தெரு கூட்டுபவர் வெள்ளைக்காரர். தெருவிலே விலை கூடின காரில் போறவர் இந்தியாக்காரர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/21/2020 at 3:24 AM, Eppothum Thamizhan said:

நீங்கள் இப்போதுள்ள இடங்களிலும்(வெளிநாடுகளில்) பல வீதிகளிலும் ஒழுங்கைகளிலும் நம்மவர்களே கூடிய அளவில் இருக்கிறார்கள் என்பதற்காக பெயரை மாற்றுங்கள் என்று கேட்டால் வெள்ளைக்காரன் விடுவானோ?

வெள்ளைக்காரன் நாட்டில் இந்துக்  கோயில் கட்டி, அபிஷேகம் செய்து, பூசை கூட நடக்குதாம். அங்கேயும் தலைவர் பதவிக்கு அடிபடுகினமாம் எங்கட ஆக்கள்.  அவன் விடாமலா இதெல்லாம் நடக்குது? நீங்கள் கேள்விப்படவில்லையோ??  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் தமிழன் கேட்டுக்கொண்டதற்கிணங்க.....

கனடா நாட்டின், ஒன்றாறியோ மானிலத்தில் உள்ள மார்க்கம் நகரில் VANNI AVENUE இருக்கிறது. 

நண்பனை மீட்க முனைந்து அதற்காக உயிரைத் துறந்த BRUNTHAN PARK இருக்கு...

இத்தனையும் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ? (Big match ஞாபகத்தில் வந்தது. தெரியாதவர்கள் பொறுத்தருள்க🤪)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.