Jump to content

எனது பார்வையில் ‘ஓ மை கடவுளே’ திரைப்படம்


Recommended Posts

நீண்ட காலத்தின் பின்னர் நேர்த்தியான நகைச்சுவை கலந்த ஓர் காதல் திரைப்படம் பார்த்த உணர்வு. நகைச்சுவைக் காட்சிகள் - குறிப்பாக முதற் பாதியில், நம்மை மறந்து சிரிக்க வைத்ததுடன் படத்தின் ஓட்டத்தைப் பாதிக்காமல் இயல்பாக இழையோடியுள்ளன; பிரதான காமெடி நடிகர்கள் இருந்திருந்தாலும் இவ்வாறு சிறப்பாக அமைந்திருக்குமா என்பது சந்தேகமே. உதாரணத்துக்கு, Toiletery factoryல் ஹீரோ படும் அவஸ்தைகள் நினைத்து நினைத்துச் சிரிக்க வைக்கின்றன. கூடவே, படத்தின் பின் பாதியில் வரும் சில காட்சிகள், வசனங்கள் முன்பாதியை நினைவூட்டியும், ஹீரோ அவ்வப்போது சொல்லும் ஒரே வசனம் வித்தியாசமான கோணங்களில் நினைத்தும் சிரிக்க வைத்த விந்தை இயக்குனரின் சாமர்த்தியமே. அந்த அளவுக்கு நெஞ்சைக் கிள்ளிச் சிரிக்கவும் கூடவே சிந்திக்கவும் வைத்த காட்சிகள் படத்தின் ஒரு பலம். 

மறுபுறம் காதல், உணர்வுபூர்வமான காட்சிகளும் ஏராளம் உண்டு; குறிப்பாக கௌதம் மேனனின் படத்திற்கான auditionக்காக ஹீரோ அஷோக்செல்வன் நடித்துக் காட்டுவதாக அமைந்த ஒரு close-up காட்சி படக்காட்சியில் மட்டுமல்ல தியேட்டரிலும் கைதட்டல் வாங்குகிறது. இன்னும், மழையில் நனைந்தபடியான காதல் காட்சிகள் அவ்வப்போது வந்தாலும், ஒவ்வொன்றும் இயற்கைக் கவிதை!

படத்தின் வலுவான கதைக்கு, அதைச் சொன்ன விதம் மேலும் வலுச்சேர்க்கிறது. 12B திரைப்படப் பாணியிலான இரு வேறு தேர்வுகளை எடுத்திருந்தால் வரும் விளைவுகளை நேர்த்தியான காட்சிகளால் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளனர். (12B க்கும் இப்படத்துக்கும் கதையளவில் தொடர்பு இல்லை.) நடைமுறைக்கு அப்பாற்பட்ட கற்பனையில் வரும் காட்சிகள் தான் இப்படத்தின் போக்கில் திருப்புமுனையாக அமைந்தாலும், உண்மையிலேயே புதுமையாகவும், கதைக்கு இக்காட்சிகள் தேவை என்பதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் படி அமைத்ததும் இயக்குனரின் வெற்றியே. இரு வேறு கோணங்களில் உணர்வோட்டங்களைக் காட்சிப்படுத்திய விதம் காதலர்களுக்கு / இளைய தம்பதிகளுக்கு ஓர் செய்முறை விளக்கம் போன்றது. ரசிக மனங்களை மெதுவாகத் தைத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் - முள்ளினால் அல்ல, வெட்டுக் காயத்தை மாற்றத் தையல் போடுவது போன்ற பக்குவத்துடன்!

படத்தின் ஹீரோ ‘தெகிடி’ படப் புகழ் அஷோக்செல்வன்; முதற் படத்திலேயே எம் மனம் கவர்ந்தவர். அவரைப் படங்களில் காணவில்லையே என்று யோசித்ததுண்டு. படத்தில் வருவது போல அவருக்கும் இப்படம் ஒரு second chance; வாய்ப்பை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளார். காதல், சோகம், கலகலப்புக் காமெடி என உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்திய காட்சிகள் பல. சில சாதாரண வசனங்களை, காட்சிகளைக்கூட இவரது உடல் மொழியாலும், வசனம் பேசும் முறையாலும் மிகச் சிறப்பாக்குகிறார். என்னைப் பொறுத்தவரை, அஜித்துக்கு அடுத்தபடியாக அம்சமான முகவெட்டு, உடல்வாகுள்ள இளம் நடிகர். 

ஒரு கதாநாயகி ரித்திகாசிங்கின் ‘ஆண்டவன் கட்டளை’ திரைப்படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து வியந்திருந்தேன். இப்படத்திலும் அவருக்கு வலுவான பாத்திரம்; இங்கும் கலக்கியிருக்கிறார். அவரது முகவெட்டும், கண்களும் உணர்வுகளைத் தனித்துவமாக வெளிப்படுத்தப் பெரிதும் பலம். நிச்சயமாக தமிழ் சினிமாவுக்கு வித்தியாசமான ஒரு கதாநாயகி தான்! துணிச்சலான, புத்திசாலியான, நகர்ப்புற நாயகி வேடங்களுக்கு இயல்பாகப் பொருந்துகிறார்.

இன்னொரு கதாநாயகி வாணி போஜன் தொலைக்காட்சி நாடக நடிகையாம்; ஆனால் அவரது இயல்பான நடிப்பு மனதைக் கவர்ந்தது.
ரித்திகா சிங்கிற்கு இணையாகக் கலக்கியுள்ளார்.
அடுத்தடுத்த படங்களில் அக்கா, தங்கை வேடம் கொடுக்காமல் இருந்தால் சரி!

இத்திரைப்படத்தில் எனக்கு இன்ப அதிர்ச்சியாக விஜய் சேதுபதியின் நீண்ட cameo role அமைந்தது. திலக்குடன் சேர்ந்து அஷோக்செல்வனைக் கேள்விகேட்டுக் கலாய்க்கும் காட்சிகள் கலகலப்பானவை. மற்றும்படி அவருக்கு இப்படத்தில் அவ்வளவாக வேலை இல்லை.

எம்.எஸ்.பாஸ்கர் குணச்சித்திர வேடத்திலும், ஷா ரா வழமையான திருட்டு முழிகளுடன் நகைச்சுவை வேடத்திலும் ஜொலிக்கின்றனர்.

இசை: மென்மையான காதல் கதைக்கு ஏற்ற ஆர்ப்பாட்டம் இல்லாத பின்னணி இசை meditation music கேட்கும் ஒரு உணர்வைத் தருகிறது. கூடவே, அவ்வப்போது வரும் திகிலான காட்சிகளில் நம்முள்ளும் திகில் உணர்வை ஏற்படுத்துகிறது. திரைக்கதையின் ஓட்டத்துடன் ஒட்டும் வகையில் பாடற்காட்சிகள் அமைந்துள்ளன. சித் ஶ்ரீராமின் பாடல்கள் பொதுவாக அவரது ‘ ஐ ‘ படப் பாடலான ‘என்னோடு நீயிருந்தால்’ பாடற்காட்சியில் விக்ரம் beast ஆக வருவதை நினைவுபடுத்தித் தொலைக்கும். அதனால் அக்குரல் மீது ஒருவித வெறுப்பு இருந்தது. ஆனால், இப்படத்தில் இவ்வாறு தோன்றாது சகிக்கும்படியாக இருந்தது நிம்மதியாக இருந்தது!

சுருக்கமாகக் கூறினால் ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் காதலர் தின விருந்தாக ரசிகர்களுக்கு அமையும் என்பது நிச்சயம். 
இங்கே முழுக்கதையையும் எழுதிப் படம் பார்க்கும் அனுபவத்தை நான் குழப்பவிரும்பவில்லை. பார்த்தால் புரியும் - பல்வேறு கோணங்களில் பார்த்து ரசிக்கலாம்; அந்த அளவுக்கு இப்படத்தின் கதையில் நிறைய ‘layers’ உண்டு.

நகர்ப்புற ரசிகர்களுக்கு மட்டுமே பிடிக்கக்கூடிய படம், சற்றே இழுவலான நிறைவுப்பகுதி  ஆகியவற்றை இத்திரைப்படத்தின் குறைகளாகச் சொல்லலாம்.

இவ்வாறான தரமான காதல் படங்கள் தற்காலத்தில் அபூர்வம், உண்மைக் காதலைப் போலத் தான்! எனவே, இப்படம் காதலர்களை/பிரிந்த தம்பதிகளை மனம் மாறச் செய்து மீண்டும் சேர வைக்குமா என்ற கேள்விக்கு ‘ இது அவர்களுடைய காதலின் உண்மைத் தன்மையைப் பொறுத்தது; படம் பற்றிய அவர்களின் புரிதலையும் பொறுத்தது. இன்னும் அவர்கள் பார்க்கவிருக்கும் குப்பைப்படங்களை, ரிவி சீரியல்களையும் பொறுத்தது ‘ என்பதே எனது கருத்தாகும்! 

இப்படியொரு படம் இனி எப்ப வரும்? ஓ மை கடவுளே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விமர்சனத்திற்காகவே படம் பார்க்கவேண்டும் போலுள்ளது. 

நன்றி மல்லிகைவாசம்🙏🏿

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் உங்கள் திரை விமர்சனங்களை யாழில் பார்ப்பதில் மகிழ்ச்சி , நன்றி , படத்தை பார்க்க முற்சிப்பேன்.

Link to comment
Share on other sites

17 hours ago, கிருபன் said:

இந்த விமர்சனத்திற்காகவே படம் பார்க்கவேண்டும் போலுள்ளது. 

நன்றி மல்லிகைவாசம்🙏🏿

 கருத்துக்கு நன்றி கிருபன். பார்த்துவிட்டு உங்கள் விமர்சனத்தையும் பதியுங்கள். 🙂

Link to comment
Share on other sites

6 hours ago, vasee said:

மீண்டும் உங்கள் திரை விமர்சனங்களை யாழில் பார்ப்பதில் மகிழ்ச்சி , நன்றி , படத்தை பார்க்க முற்சிப்பேன்.

படத்தைப் பார்த்தவுடன் எழுத வேண்டும் என்று தோன்றியது. கருத்துக்கு நன்றி அண்ணா. நேரம் கிடைத்தால் பாருங்கள். மனதுக்கு இனிய படம் ஒன்று. அடிதடி, கருத்துக்கூறி அறுத்தல் இவை எதுவுமே இதில் இல்லை. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, மல்லிகை வாசம் said:

நீண்ட காலத்தின் பின்னர் நேர்த்தியான நகைச்சுவை கலந்த ஓர் காதல் திரைப்படம் பார்த்த உணர்வு

பார்க்கத் தூண்டும் நல்லதொரு விமர்சனம். அசோக்செல்வனின் சகோதரி தயாரித்த படம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். சொந்தப் படம் என்பதால் பார்த்துப் பார்த்துச் செதுக்கி இருப்பார்கள். நானும் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்.

மல்லிகை வாசம் நன்றாக வீசுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு படம். உங்கள் விமர்சனத்தை பார்த்துவிட்டு, Google இல் தேடினால் Hindi Oh my good Netflix இல் வந்துச்சு,  அதையும் பார்த்தேன், அதுவும் நல்லதொரு படம்.

Hindi இல் God Krishna, தமிழில் Love God, ஆனால் கதை வேறு 

தமிழ் படத்தை  TamilYogi இல் பார்க்கலாம், Cookies அதிகம்

 

 

Quote "படத்தின் ஹீரோ ‘தெகிடி’ படப் புகழ் அஷோக்செல்வன்; முதற் படத்திலேயே எம் மனம் கவர்ந்தவர். அவரைப் படங்களில் காணவில்லையே என்று யோசித்ததுண்டு. படத்தில் வருவது போல அவருக்கும் இப்படம் ஒரு second chance; வாய்ப்பை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளார். காதல், சோகம், கலகலப்புக் காமெடி என உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்திய காட்சிகள் பல. சில சாதாரண வசனங்களை, காட்சிகளைக்கூட இவரது உடல் மொழியாலும், வசனம் பேசும் முறையாலும் மிகச் சிறப்பாக்குகிறார். என்னைப் பொறுத்தவரை, அஜித்துக்கு அடுத்தபடியாக அம்சமான முகவெட்டு, உடல்வாகுள்ள இளம் நடிகர். " 

நன்றாக நடித்துள்ளார், 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் விமர்சனம் படத்தை பார்க்கத் தூண்டுகின்றது நண்பரே, பார்க்கலாம்.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசோக் செல்வன் முதல் படத்தில் நல்ல அழகனாய் இருந்தார்🥰...பிறகு ஓர் ,இரு படங்களில் உடம்பு வைத்து விட்டு இருந்தது...நல்ல நடிகர் ...முக ,பாவம் எல்லாம் அற்புதம் ...அவருக்காய் இந்த படத்தை கட்டாயம் தியேட்டரில் பார்க்க வேண்டும் 
 

Link to comment
Share on other sites

18 hours ago, Kavi arunasalam said:

அசோக்செல்வனின் சகோதரி தயாரித்த படம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். சொந்தப் படம் என்பதால் பார்த்துப் பார்த்துச் செதுக்கி இருப்பார்கள். நானும் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்.

அப்படியா? நீங்கள் சொல்லித் தான் அறிகின்றேன் ஐயா. ம்... ஒவ்வொரு காட்சியையும் நன்றாகச் செதுக்கியுள்ளார்கள் என்பதைப் பார்க்கும் போது உணர்ந்தேன்.

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா. 🙂

17 hours ago, உடையார் said:

நல்லதொரு படம். உங்கள் விமர்சனத்தை பார்த்துவிட்டு, Google இல் தேடினால் Hindi Oh my good Netflix இல் வந்துச்சு,  அதையும் பார்த்தேன், அதுவும் நல்லதொரு படம்.

Hindi இல் God Krishna

அக்ஷய் குமார், மிதுன், ஓம் பூரி நடித்த படமா? கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். தமிழ் டப்பிங் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். தகவலுக்கும், கருத்துக்கும் நன்றி உடையார். 🙂

Link to comment
Share on other sites

17 hours ago, உடையார் said:

தமிழ் படத்தை  TamilYogi இல் பார்க்கலாம், Cookies அதிகம்

ஆஹா அதற்குள் அங்கும் வந்துவிட்டதா! 🤔😀

10 hours ago, suvy said:

உங்களின் விமர்சனம் படத்தை பார்க்கத் தூண்டுகின்றது நண்பரே, பார்க்கலாம்.......!   👍

நன்றி சுவி அண்ணா. கண்டிப்பாகப் பாருங்கள். ஏமாற்றாது. 🙂

8 hours ago, nunavilan said:

மல்லிகை வாசம் ,நன்றி  பட விமர்சனத்துக்கு. படத்தை பார்த்து விட வேண்டியது தான். 

நன்றி நுணாவிலான். 🙂

Link to comment
Share on other sites

3 hours ago, ரதி said:

அசோக் செல்வன் முதல் படத்தில் நல்ல அழகனாய் இருந்தார்🥰...பிறகு ஓர் ,இரு படங்களில் உடம்பு வைத்து விட்டு இருந்தது...நல்ல நடிகர் ...முக ,பாவம் எல்லாம் அற்புதம் ...அவருக்காய் இந்த படத்தை கட்டாயம் தியேட்டரில் பார்க்க வேண்டும் 
 

எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும். ரித்திகா சிங், வாணி போஜனுடன் வரும் காட்சிகளில் இன்னும் அசத்தலாகத் தெரிகிறார். நானும் தியேட்டரில் தான் பார்த்தேன் ரதி. 

கருத்துக்கு நன்றி ரதி. 🙂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.