Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.jpg&key=a590aa3e80084064fdbd7a50c74fde1b4810ba80b5662fe19074fdbc5aca2d64

Ragging-at-UP-college-150-freshers-made-to-tonsure-735x389.jpg

 

Continued..Part:3

நள்ளிரவு 12:45 மணி..

பயணப் பொதிகளை தூக்கிக்கொண்டு நான்காம் ஆண்டு சீனியர் மாணவரோடு விடுதி அலுவலகத்திற்கு சென்றால் அங்கே கதவு பூட்டியிருந்தது.

சீனியர் மாணவர், எனது கல்லூரி அனுமதி கடிதத்தை வாங்கி அதிலுள்ள அனுமதி எண்களை பார்த்துவிட்டு அருகிலுள்ள தகவல் பலகையில் ஒட்டியிருந்த சமீபத்திய அறிவிப்புகளை நோட்டம் விட்டர். என்னைப் போன்றே சில முதலாம் வருட மாணவர்களும் அங்கே கூடிவிட்டனர். ஒருவழியாக எனது பெயரை பார்த்துவிட்டு,

"டேய்.. ஒனக்கு முதலாம் வருட விடுதியில் முதல் தளத்தில் அறை எண்... தற்காலிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. நீ இன்னமும் விடுதிக்கு பணம் கட்டலையா..?" எனக் கேட்டார்.

“இல்லை சார், இப்போதானே வரேன், பணம் என்னிடம் இருக்கு..” என்றேன்.

“சரி,என்னுடன் வா, எனக்குத் தெரிந்த இரண்டாம் வருட ஜூனியர் அறையில் இன்று இரவு தங்க ஏற்பாடு செய்றேன், நாளை காலை முதல் வேலையா கல்லுரி முதல்தளத்திலிருக்கும் வங்கியில் இந்த அனுமதி கடிதத்தைக் காட்டி விடுதிக்கு பணம் கட்டிவிடு..” என்றவர், என்னை அழைத்துக்கொண்டு இரண்டாம் வருட மாணவர் தங்கியிருக்கும் அறைக்கு கூட்டிச் சென்றார்.

கதவை தட்டியவுடன் ஒருவர் திறந்து பார்த்துவிட்டு என்ன சார்… இன்னேரம்..? யார் இது ஃபர்ஸ்ட் இயரா..?” என சிரித்தார்.

“ஆமான்டா.. இவனை இன்னைக்கு ஒன் ரூமில் சேர்த்துக்கொள், நாளை பேங்க் கவுண்டர் இருக்குமிடத்தை காட்டி பணத்தை கட்டி ரூம் ஒதுக்கீட்டை வாங்கிக் குடு”  என சொல்லிவிட்டு அங்கிருந்து விடை பெற்றார்.

“ம்ம் உள்ளே வாடா, ஒன் பேர் என்ன..?” எனக் கேட்டவாறு என்னுடைய பெட்டிகளை உள்ளே எடுத்துகொண்டு அழைத்துச் சென்றார்.

உள்ளே தயங்கியவாறு சென்றவுடன் அறையை பார்த்தேன்.. பெரிய அறையில் நான்கு இரண்டாம் ஆண்டு பயிலும் சீனியர் மாணவர்கள் அவர்களின் கட்டிலில் உட்கார்ந்திருந்தனர்.

“ஒன் பேரு என்னடா..? எந்த ஊர்..?” என நால்வரும் விசாரித்தனர். நான் ஒருவித மன அழுத்தத்தில் மெதுவாக சொல்ல, டேய் சத்தமா சொல்லுடா..” என மிரட்டினர்.

“இருங்கடா..” என அவர்களை அடக்கிவிட்டு ம்..ஒன் பெட்டியை தொறந்து டிரஸ்ஸை மாத்திக்கோ.. “ என முதலில் கதவைத் திறந்தவர் கூறினார்.

 

நானும் கூலாக பெட்டியை திறந்து சட்டையை மாத்திவிட்டு லுங்கியை எடுத்து மாத்த ஆரம்பித்தேன்.

அவ்வளவுதான்.. கட்டிலிலிருந்த இருவர் பாய்ந்து என்னை நோக்கி வந்து லுங்கியை பிடுங்கி என் பெட்டி மீது வீசிவிட்டனர்.

"ஏன்டா என்ன தில்லு இருந்தால் எங்கள் முன் நீ லுங்கி கட்டுவே..?" என சத்தம் போட்டனர்.

நான் அதிர்ந்து முழிக்க, மேலே சட்டையுடனும், கீழே உள்ளாடையுடனும் கூனிக் குறுகி நின்றேன்.

"சட்டையைக் கழட்டுடா" அடுத்த உத்தரவு.

இப்பொழுது வெறும் உள்ளாடைகளுடன் நான் நிற்க, நால்வருக்கும் ஒரே சிரிப்பு.

அச்சமயம் அறைக்கு வெளியே பல கூக்குரல்களும், அதட்டும் சத்தமும், அதற்கு பதிலாக சில மாணவர்களின் கெஞ்சலும் ஒலித்தன.

“டேய் வாங்கடா வெளியே போவோம்.. இவனையும் கூட்டுக்கொண்டு போகலாம்..” என்றவாறு சொல்லிவிட்டு அந்த நால்வரும் என்னை நெட்டித் தள்ளி அறைக்கு வெளியே அழைத்துச் சென்றனர்.

வெளியே வந்து பார்த்தால் ஏறக்குறைய இருபத்தைந்து முதலாமாண்டு மாணவர்கள் ஜட்டி பனியனோடு குழுவாக வராந்தாவில் நின்றிருந்தனர்.

அவர்களை சுற்றி ஐம்பது அறுபது இரண்டாமாண்டு மாணவர்கள் ஒரே கொக்கரிப்புடன்...!

அதில் இருவர் அன்றைய ராகிங்கிற்கு தலைமை ஏற்பது போல சொற்பொழிவாற்ற ஆரம்பித்தார்.

என்னையும் அந்த முதலாமாண்டு மாணவர்கள் கூட்டத்தில் இணைத்தனர்.

“டியர் ஃபர்ஸ்ட் இயர் எஞ்சினியர்ஸ்..! வெல்கம் டு ஃபெகல்டி ஆஃப் எஞ்சினியரிங்..”

“டுடே இஸ் வெரி ஸ்பெசல் டே, டு ப்ளே..” என்றவர்,

"டேய் எல்லோரும் ரெயிலை பார்த்திருக்கீங்களா..?"

"யெஸ் சார்" என நாங்கள் மெதுவாக தலையாட்ட,

 

"பே......களா, நாங்கள் இப்போ சொல்றபடி நீங்கள் செய்யணும்.. ஓ.கே..?" என அரட்டினார்.

"ஓ.கே சார்" என நாங்கள் ஈனஸ்வரத்தில் பதிலலிக்க,

சில இரண்டாமாண்டு மாணவர்கள் உள்ளாடைகளுடன் நின்ற எங்களை வரிசையாக ஒருவர் பின் ஒருவராக நிற்கச் சொன்னார்கள்.

எப்படி..?

ஒவ்வொருவரின் பின்னாடி நின்றுகொண்டு முன்னாலிருப்பவரின் ஜட்டியின் மேல்விளிம்பை இறுக்க பிடித்துக்கொள்ள வேண்டும்..

நின்றோம்.. ரெயில் மாதிரி...!

 வேறு வழி..?

அந்த விடுதியின் அமைப்பு, மூன்று தளங்கள் கொண்ட செவ்வக வடிப்பைக் கொண்டது.. நடுவில் விளையாட சிறு மைதானமும், செடிகொடிகளும்..

முதலாமாண்டு மாணவர்களின் ரெயில், இப்பொழுது புறப்பட தயாரானது..

தலமை ஏற்ற இரண்டாமாண்டு மாணவர், கட்டளையிட்டார்.

நாங்கள் மைதானத்தில் ரெயில் மாதிரி உள்ளாடைகளுடன் ஓட ஆரம்பித்தோம்..

உடனே அதட்டல் வந்ததது.

"டேய் பரதேசிகளா..ரெயில் என்னடா சத்தமே போடாமல் ஓடுது..?" என அவர் கத்த, அந்த கட்டிடம் முழுவதும் மாடிகளின் வராந்தாவில் பல இரண்டாமாண்டு மாணவர்களும் நின்றுகொண்டு கூச்சலிட்டனர்.

தலமை எற்ற மற்றொரு சீனியர், எங்கள் முன் வந்து இதோ பாருங்கடா.. ரெயில் போகும்போதுகட கட”வென போகும்தானே..? ஆனால் அந்த சத்தத்திற்கு பதிலாக நாங்கள் சொல்வதை சத்தமாக எல்லோரும் சேர்ந்து கத்தியவாறு நீங்கள் இந்த மைதானத்தை பத்து முறை சுத்தி வரணும்..” என அந்த சொற்களை சொல்லிக் கொடுத்தார்..

அது..

"டக்கு......... க்கு.........."

"கூ.........."

பாலத்தின் மீது ரெயில் ஓடும்போது,

"............................."

விதியே என நினைத்துக்கொண்டு எங்கள் ரெயில், அவர்கள் சொல்லிக் கொடுத்த அந்த தகாத வார்த்தைகளின் ஓங்கிய குரலோடு ஓட ஆரம்பித்தது..

அத்தனை சீனியர்களுக்கும் ஒரே மகிழ்ச்சி, ஆரவாரம், கைதட்டல்கள்...

மணி அதிகாலை மூன்று ஆகிவிட்டது..

ராகிங்கின் அடுத்த கட்டம் ஆரம்பமானது..!

 (தொடரும்..)

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

வெளியே வந்து பார்த்தால் ஏறக்குறைய இருபத்தைந்து முதலாமாண்டு மாணவர்கள் ஜட்டி பனியனோடு குழுவாக வராந்தாவில் நின்றிருந்தனர்.

தனியே என்றால்த் தான் ரொம்ப கஸ்டம் ஊரோடு என்றால் பரவாயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

தனியே என்றால்த் தான் ரொம்ப கஸ்டம் ஊரோடு என்றால் பரவாயில்லை.

என்ன சார், குழுவோடு என்றால பரவாயில்லையா..? அன்றைக்கு நான் அவமானபட்டது போல என்றும் வாழ்க்கையில் சந்தித்ததில்லை. :(

 

பின்னர் எனக்கு அன்றிரவு ரூம் கொடுத்த இரண்டாமாண்டு சீனியர் மாணவர், பின்னாளில் சொன்னது,

"எலேய்.. ஒங்களை 'நிர்வாணமாக ஓட வைக்கவில்லையே' என சந்தோசப் படு...! மற்ற கல்லூரிகளில் ராகிங் நம்ம கல்லூரியை விட மிக மோசமாக இருக்கும், இங்கே யாரும் யாரையும் அடிப்பதில்லை, குறிப்பிட்ட அளவுக்கு மேல் கொடுமை செய்வதில்லை, நானும் சென்ற வருடம் இதே போல இங்கே உள்ளாடைகளுடன் ஓடியிருக்கிறேன்.." என்றார்.

அதற்கு நான் "ஏன் சார், நீங்க பட்டதை ஏன் எங்களிடம் காட்டுகிறீர்கள்...?" என்றேன்..

"இது ஒரு செயின் ரியாக்சன் மாதிரி.. யாம் பெற்ற துன்பத்தை மற்றவரிடம் செய்து பார்க்கும் ஒரு குரூர திருப்தி.." என்றார்.

டிஸ்கி:

(கல்லூரி படிப்பு முடிந்து, பின்னாளில் பொறியாளர்களாக, ஒரே அரசு அலுவலகத்தில் இருவரும் சில வருடங்கள் பணியாற்றியபோது, அவரை நான் கிண்டலடித்து காலை வாருவது வழக்கம் என்பது வேறு கதை..! :))

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ராசவன்னியன் said:

அதற்கு நான் "ஏன் சார், நீங்க பட்டதை ஏன் எங்களிடம் காட்டுகிறீர்கள்...?" என்றேன்..

வன்னியன் நீங்க இரண்டாம் மூன்றாம் ஆண்டு மாணவனாக இருந்த போது புதிதாக வந்த முதலாமாண்டு மாணவரிடம் எப்படி நடந்து கொண்டீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஈழப்பிரியன் said:

வன்னியன் நீங்க இரண்டாம் மூன்றாம் ஆண்டு மாணவனாக இருந்த போது புதிதாக வந்த முதலாமாண்டு மாணவரிடம் எப்படி நடந்து கொண்டீர்கள்?

நான் ராகிங் செய்ததில்லை என சொன்னால் அது உண்மையில்லை.

நாங்கள் விடுதியில் தங்கியிருக்கும்போது ஒரு அறையில் நான்கு பேர் இருப்பார்கள்..

இரண்டாம், மூன்றாம், நான்காம் வருடங்கள் படிக்கும்போது எங்கள் அறைக்கு சக ரூம்  தோழர்கள் முதலாமாண்டு மாணவர்களை அழைத்து வருவதுண்டு.

என் ரூம்  தோழர்கள், வேண்டுமென்றே என்னிடம் அவர்களை அனுப்பி "சார் சொல்வது மாதிரி செய்..!" என சீண்டுவதுண்டு. நானும் சில கேள்விகளை கிண்டலாக கேட்க, அவர்கள் முழிக்க, நான் பட்ட துன்பங்கள் நினைவுக்கு வரும், "அவர்களிடமே போங்கடா..!" என அனுப்பிவிடுவதுண்டு.

ராகிங் செய்வதற்கும் சில திறமைகள்(?) வேணும் சார்,  நிச்சயம் எனக்கில்லை...!:)

சிலருக்கு என்னுடைய புத்தகங்கள், நோட்ஸ்களை கொடுத்திருக்கிறேன்.

(பெரும்பாலும் ஐந்தாம் ஆண்டு பொறியியல் மாணவர்கள் முதிர்ச்சி (Well matured Engineers..!) அடைந்திருப்பார்கள், அவர்கள் அதிகம் ராகிங் செய்வதில்லை, ஆனால் அகப்பட்டால், சில நேரம் அதோ கதிதான்..!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

முதலாமாண்டு மாணவர்களின் ரெயில், இப்பொழுது புறப்பட தயாரானது..

தலமை ஏற்ற இரண்டாமாண்டு மாணவர், கட்டளையிட்டார்.

நாங்கள் மைதானத்தில் ரெயில் மாதிரி உள்ளாடைகளுடன் ஓட ஆரம்பித்தோம்..

அட.... இவ்வளவும் நடந்த பின்பும்,  அந்த ரயிலுக்கு....
முதலாமாண்டு மாணவர்களின் ரயில், 🚂🚞🚋 என்று பெயரும் வைத்தாச்சு.:grin:

அந்த ரயிலில்.... ராஜவன்னியர்  எத்தனையாவது பெட்டி.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியர் உங்களுக்கு செய்த ராகிங்கும் பத்தாது, நீங்கள் செய்த ராகிங்கும் பத்தாது. நீங்கள் சும்மா படிக்கிறதுக்கு மட்டும்தான் லாயக்கு. அதுக்கு சரிவர மாட்டியள் .......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

அட.... இவ்வளவும் நடந்த பின்பும்,  அந்த ரயிலுக்கு....
முதலாமாண்டு மாணவர்களின் ரயில், 🚂🚞🚋 என்று பெயரும் வைத்தாச்சு.:grin:

அந்த ரயிலில்.... ராஜவன்னியர்  எத்தனையாவது பெட்டி.  🤣

 

பதினைந்தோ, பதினாறாவது ஆளாக(ரெயில் பெட்டியாக) இருக்கும் என நினைக்கிறேன், தமிழ் சிறி..! :)

 

சமீபத்தில் நடந்த சுவாரசியமான விடயம்:

சமீபத்தில் தொலைபேசியில் ஒரு குரல் என்னை அழைத்தது..!

'இது என்னடா, புது நம்பரா இருக்கே..?' என எடுத்து "ஹலோ.." சொன்னேன்.

"டேய் யார் பேசுறது, தெரியுமாடா..?" என்றது மறுமுனையில் குரல்..!

குரலை எங்கோ கேட்டது மாதிரி இருந்தது ஆனால் உடனே நினைவிற்கு வரவில்லை.

"தெரியலையே, நீங்கள் யாரு..?" என்றேன்.

"அடப்பாவி, ஃபர்ஸ்ட் இயரில் ஒன் ஜட்டியை பிடித்துக்கொண்டு ஓடி வந்தேனடா... மறந்துட்டையே..?" என மறுமுனையில் குரல் சிரித்தது. ஆனால் குரலில் சிறிது தடுமாற்றம் தெரிந்தது..

எனக்கு புரிந்துவிட்டது, ஆள் தீர்த்தம் போட்டிருக்கிறார்.. அடுத்தடுத்து இரண்டு குரல்கள் அவனுக்கடுத்து பேசினர்.

'அடடா.. இவன் நம்ம ........னந்தன்'ஆச்சே..? இவன் எப்படி துபாயில்..?' என அதிசயித்து "டேய் .........னந்தன்,  நீ எங்கேடா இந்தப் பக்கம்..?" என ஆவலுடன் கேட்டேன்..

"இல்லையடா, நாங்கள் அரசுப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டோம், சும்மா ஜாலியாக ஒரு ரவுண்டு துபாயை பார்க்க வந்தோம், நீயும் இங்கே வாடா.." என அழைத்தனர்.

அடுத்து வழக்கம் போல கல்லூரி நண்பர்களின் சந்திப்பு, இத்தியாதிகள்..!  feux-artifice.gif

இந்த பகுதியை எழுதும்போது அன்று என்னை பின் தொடர்ந்த அந்தக் கல்லூரி நண்பனின் ஞாபகம் வந்தது.

( கொசுறு: என்னுடைய உள்ளாடையை பிடித்துக்கொண்டு, பின்னாடி அடுத்த ரெயில் பெட்டியாக வந்த அந்த நண்பன், மூன்று வருடங்களுக்கு முன் அரசின் ஒரு துறையில் தலைமை பொறியாளராக உயர்பதவியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றான். )

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.jpg&key=a590aa3e80084064fdbd7a50c74fde1b4810ba80b5662fe19074fdbc5aca2d64

1513077158phpuJPj5y.jpeg

Continued..Part: 4

அதிகாலை மூனு மணிக்கு மேல் நடந்த ராகிங் வதைகளை இங்கே எழுத இயலாது, ஏனெனில் அவ்வளவு கொடுமை..! :(

பொழுதும் விடிந்துவிட்டது..!

'சரி எல்லாம் முடிஞ்சது' என அறைக்கு போய் மறுபடியும் லுங்கியை எடுத்து கட்டலாமென நினைத்து எடுத்தால், மறுபடியும் அறையிலிருந்த சீனியர்கள்,

"டேய் ஹாஸ்டல்ல இருக்குற இன்னும் ரெண்டு மாசத்துக்கு நீ லுங்கியே கட்டக் கூடாது..!" என 144 தடை போட்டனர்..!

இதென்ன புதுக்கூத்து..?

"ஏன் சார்.. ஏன் லுங்கி கட்டக்கூடாது, பின் எப்படிதான் ரூமில் இருப்பது..?" என வினவினேன்..

"இங்கிருக்கும் பொறியியல் கல்லூரி வளாகத்தினுள் ஒவ்வொரு வருட மாணவர்களுக்கும் தனித்தனி விடுதிகள் இருந்தாலும், அனைத்தும் ஒரே காம்பவுண்ட்க்குள் தான் இருக்கின்றன. எங்களுக்கு முதல் வருட மாணவர்கள் யார், மற்ற வருட மாணவர்கள் யாரென அடையாளம் தெரிய வேணுமே..? தவறுதலாக மற்ற வருட மாணவர்களை ராகிங் செய்துவிட்டால், பெரிய கலவரமே மூண்டுவிடும்..அதை தடுக்கவே இந்த ஏற்பாடு.. அதுவரை நீங்கள் வேட்டிதான் கட்ட வேணும்டா..!" என்று சிரித்தனர்.

அதைக் கேட்டவுடன், முந்தின நாள் பகலில், மதுரை ரெயில் நிலையத்தில் நான் வேட்டியுடன் ரெயிலுக்கு காத்திருந்த நேரம், அந்த இரண்டு சீனியர் மாணவர்கள் "முன்னாடியே ஒனக்கு தெரியுமா.. வேட்டியுடன் வந்திருகே..?" என சிரித்து நக்கலடித்த காரணம் புரிந்தது.

'ஆகா என்ன கண்டுபிடுப்பு..!' என நொந்துகொண்டு, மறுபடியும் வேட்டியை கட்டிக்கொண்டு குளிக்கப் போனேன்.

குளித்து முடித்து வந்தவுடன், அறையிலிருந்த நான்கு சீனியர் மாணவர்களும் என்னை மெஸ்ஸுக்கு சாப்பிட அழைத்துச் சென்றனர். அங்கே பார்த்தால் எனக்கு முன்னதாக சாப்பிட வந்திருந்த சில முதலாமாண்டு மாணவர்கள் கையில் இலையை வைத்துக்கொண்டு மற்ற சீனியர் மாணவர்களின் அதட்டல்படி பிச்சை எடுத்துக்கொண்டிருந்தனர்.

மெஸ் ஊழியர்களுக்கு, 'இது ஒவ்வொரு வருடமும் நடக்கும் வழக்கமான நிகழ்ச்சி' என்பதால் யாரும் தடுக்க வரவில்லை.சிரித்துக்கொண்டு அவர்களின் வேலைகளை கவனித்தனர்.

அன்று முழு இரவும் தூங்கவில்லை, முந்தைய நாள் பிரயாணக் களைப்பு...! எனது கண்கள் தூக்கத்திற்கு ஏங்கின.

'முதல்நாள் கல்லூரி வகுப்புகள் ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும், முதல் வருட மாணவர்கள் எல்லோரும் முதல் மாடியிலிருக்கும் குறிப்பிட்ட லெக்சர் ஹாலுக்கு வரச் சொல்லி' அறிவிப்பு அங்கே ஒட்டப்பட்டிருந்தது.

அறையிலிருந்த அந்த இரண்டாம் வருட சீனியர், "சீக்கிரம் சாப்பிடு, ஒனக்கு கல்லூரியிலிருக்கும் 'பேங்க் கவுண்டரை' காட்டுறேன், விடுதிக்கும் கல்லூரிக்கும் பணத்தைக் கட்டிவிட்டு, ஒன் அறையின் சாவியை விடுதி அலுவலகத்தில் வாங்கி தாரேன்" என சொல்லி அழைத்துச் சென்று அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார்.

இந்த அலுவல்களை முடித்து கல்லூரி முதல் மாடியிலுள்ள லெக்சர் ஹாலுக்கு போய் அமர்ந்தேன். தூக்கம் கண்ணை சொக்கியது.

ஒரு மணி நேரத்தில், முதல் வருட மாணவர்களின் வரவேற்பு நிகழ்ச்சியை கல்லூரி முதல்வரும், மற்றைய பேராசிரியர்களும் வாழ்த்தி வரவேற்றுவிட்டு கல்லூரியில் பல வசதிகள், வழிகாட்டல்களை மாணவர்களுக்கு வழங்கினர்.

'எல்லாம் சரி இந்த ராகிங் பற்றி ஏதாவது சொல்வார்'களென பார்த்தால் ஒருத்தரும் மூச் விடவில்லை..!

அறிமுக வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து, நான்கு வகுப்பு குழுக்களாக நாங்கள் பிரிக்கப்பட்டு அவரவர் வகுப்புகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

நான் எனது வகுப்பிற்கு சென்று இரண்டாம் வரிசையிலுள்ள மேசை இருக்கையில் உட்கார்ந்தேன். அப்பொழுதைய வகுப்பு 'எலெக்ட்ரிகல் எஞ்சினீயரிங்' பற்றியது..

உதவி பேராசிரியர் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, ஓவ்வொரு மாணவர்களையும் எழுந்து பெயர், இதற்கு முன் படித்த கல்லூரி, சொந்த ஊர் முதலியவற்றை சொல்லி அறிமுகப்படுத்திகொள்ள சொன்னார்.

அனைத்து முடிந்ததும் கரும்பலகையில் அடிப்படை மின்சாரப் பொறியியல் பற்றி சிறிது விளக்கிவிட்டு, 'என்னென்ன புத்தகங்களை இதற்கு படிக்க வாங்க வேண்டு'மென விளக்கினார்..

எனக்கு அசதியில் பயங்கர தூக்கம்..

அவர் கூறியவைகள் அரைகுறையாக காதில் விழ, கொஞ்ச நேரம் அசந்துவிட்டேன்..!

திடீரென அப்பேராசிரியர் என்னை நோக்கி அழைத்து எழச் சொல்லி, தான் சற்றுமுன் படிக்கக் கூறிய புத்தக ஆசிரியரின் பெயரை கூறச் சொன்னார்.

நான் காதில் அரைகுறையாக விழுந்த அவரின் சொற்களை நினைவுபடுத்தி "தண்டோரா, சார்.." என்றேன்.

வகுப்பு முழுவதும் 'கொல்'லென சிரித்துவிட்டது..!

ஏனெனில் அவர் கூறிய புத்தக ஆசிரியரின் பெயர் "டெல்டோரா.."

பேராசிரியர் என் கண்களைப் பார்த்து நிலமையை உணர்ந்திருக்க வேண்டும், சிரித்துவிட்டு உட்கார சொல்லிவிட்டார்..

அந்நிகழ்ச்சியை இன்றளவும் என்னால் மறக்க முடியவில்லை.  5.gif

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/18/2020 at 12:57 PM, ராசவன்னியன் said:

ராகிங் செய்யபட்டதினால் சில நல்ல விசயங்களும், பயன்களும் கிட்டின.

அழகான அந்த பழைய நினைவுகளை மீண்டும் நினைக்க வைக்கிறது உங்களது இந்த பதிவு அங்கிள்.. 

ராகிங்கினால் நீங்கள் கூறிய நன்மைகள் உண்டு .. அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.. 

ஆனால் இப்பொழுது உள்ள மாணவர்கள்  வரம்பை/மரபை மீறுவதால் ராகிங்கை ஆதரிக்க முடியவில்லை.. 

ஆனாலும் பல்கலைகழக வாழ்க்கையில் அந்த முதலாமாண்டு ராகிங்கும் ஒரு இனிமையான காலப்பகுதி ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அழகான அந்த பழைய நினைவுகளை மீண்டும் நினைக்க வைக்கிறது உங்களது இந்த பதிவு அங்கிள்.. 

ராகிங்கினால் நீங்கள் கூறிய நன்மைகள் உண்டு .. அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.. 

ஆனால் இப்பொழுது உள்ள மாணவர்கள்  வரம்பை/மரபை மீறுவதால் ராகிங்கை ஆதரிக்க முடியவில்லை.. 

ஆனாலும் பல்கலைகழக வாழ்க்கையில் அந்த முதலாமாண்டு ராகிங்கும் ஒரு இனிமையான காலப்பகுதி ..

உண்மைதான் அம்மணி.

'ராகிங்' ஒரு எல்லைக்குள் உடல், உளவியல் ரீதியாக துன்புறுத்தல் இல்லாமல், மென்மையாக இருந்தால் அறிமுகப்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும், வரவேற்கலாம்.

நானும் பல சுவாரசியமான, சிலசமயம் ரொம்ப நகைச்சுவையாக அனுபவித்த வதைகளும் உண்டு. பல நிகழ்வுகள் மறந்தே போச்சு.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரானா பாதிப்பின் அவசர நிலையை கவனத்தில் கொள்வோம்.

நேரமிருக்கும் பட்சத்தில் பிறிதொரு சமயத்தில் தொடர்கிறேன்.

இதுவரை பார்வையிட்டு, ஊக்குவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..!

 

End.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இலங்கையில் கல்லூரி சென்றதில்லை  ஆதலால் 
இந்த ராகிங் பற்றி தெரியவும் இல்லை புரியவும் இல்லை 

இன்னொருவரை வதை செய்வது என்பது எந்த கோணத்திலும் ஏற்பு உடையது அல்ல. 
இது ஒரு மனித அறிவின் குன்றிய நிலை என்பது எனது கருத்து 

ஈழத்தில் இயக்கங்கள் தொடங்கிய காலங்களில் (ஆரம்ப காலம் இல்லை)
போராடத்தில் இணைந்து பயிற்சிக்கு சென்ற இளைஞர்களை 
ஏற்கனவே பயிற்சி எடுத்த போராளிகள் இப்படி அநியாயமாக புதியவர்களை அடிப்பதுண்டு 
சில இயக்கங்களில் டெலோ ஈப்பி ஆர் எல் வ்  புளொட் போன்ற இயக்கங்களில் 
பல இளைஞர்கள் பயிற்சி காலத்தில் கைகால் முறிந்தது கூட உண்டு 
எனது நண்பர் ஒருவருவருக்கு பயிற்சி முகாமில் மண்டையில் அடித்து அவருக்கு புத்தியே தடுமாறி போய் விட்டது  பின்பு (மந்திகை) மன நல மருத்துவமனை ஒன்றில் சேர்த்தார்கள் பெரிதாக பலன் கிடைக்கவில்லை. 

புலிகள் சுய ஒழுக்கம்  பக்குவம் போன்றவற்றையே கடுமையாக கற்பித்தார்கள் 
இவ்வாறான வன்முறைகள் மிக மிக குறைவு 
பின்னாளில் யாரும் யாருக்கும் அடிக்க முடியாது என்று சட்டம் போன்று கட்டளையை பிரபாகரன் பிறப்பித்து 
இருந்ததாக அறிந்துகொண்டேன். மாறாக பனிஸ்மென்ட் கொடுப்பார்கள் 

இவர்கள் மாறாக மூத்தவர்கள் சீக்ரெட்டை ஊதிக்கொண்டே இருப்பார்கள் 
ஊரில் சீகிரெட் பிடிக்காத வயதில் குறைந்தவர்கள் கூட பின்பு இவர்களை பார்த்து பழகியதுண்டு 
இந்த லட்ஷணத்தில் புதியவர்களை அடிப்பார்கள்.

அவர்களின் தனிப்பட்ட குறையாக இப்போது என்னால் இதை பார்க்க முடியவில்லை 
பிற மனிதர்களிடம் சாதி கொடுமை செய்வது துன்புறுத்துவது 
என்று எல்லாமே எமது இனத்தில் இருந்த அறிவற்ற ஒரு மடமை தானம் என்றுதான் நான் எண்ணுகிறேன்.
நாங்கள் ஆண்கள் என்பதால் மிக மிக குறைவு 
இந்த சமூகத்த்தில் பெண்கள் எவ்ளவு கொடுமைகளை பூட்டிய வீடுகளுக்குள் அனுபவித்து இருப்பார்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ராசவன்னியன் said:

அதிகாலை மூனு மணிக்கு மேல் நடந்த ராகிங் வதைகளை இங்கே எழுத இயலாது, ஏனெனில் அவ்வளவு கொடுமை..! :(

வெளியிலை சொல்லேலாத அளவுக்கு மதுரைக்காரரை உருட்டி பிரட்டி காய்ச்சி எடுத்திருக்கிறாங்கள்.படுபாவியள்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

வெளியிலை சொல்லேலாத அளவுக்கு மதுரைக்காரரை உருட்டி பிரட்டி காய்ச்சி எடுத்திருக்கிறாங்கள்.படுபாவியள்.😁

யப்பா.. 'பரிமளம் சாமிகளுக்கு' எவ்வளவு சந்தோசம்...!  vil-marre.gif

வாழியவே..!

Link to comment
Share on other sites

நாவல்கள், கட்டுரைகள் படிக்கும்போது அவைகளில் வரும் கதாபாத்திரங்களாக, அவைகளை வாசிக்கும் வாசகர்களை மாற்றிவிடும் திறன் கொண்ட எழுத்தாளர்களே சிறந்த எழுத்தாளர்களாக வரலாற்றில் நிலை பெறுகிறார்கள். அந்தவகையில் ராசவன்னியரின் ராக்கிங் அனுபவக் கட்டுரை என்னைமட்டுமல்ல, கள உறவுகள் பலரையும் ராசவன்னியராகவே மாற்றிவிட்டதை அவர்கள் கருத்துக்கள் வெளிப்படுத்தி உள்ளதை, இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.

ரவுசர் போடு, டைகட்டு என்று சொல்லாமல், வேட்டிகட்டு என்று ராசவன்னியரை ஒரு பச்சைத் தமிழனாகப் பார்த்து, ராக்கிங்செய்த அந்த பழைய மாணவர்களையும் நான் பாராட்டியே ஆகவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

நாவல்கள், கட்டுரைகள் படிக்கும்போது அவைகளில் வரும் கதாபாத்திரங்களாக, அவைகளை வாசிக்கும் வாசகர்களை மாற்றிவிடும் திறன் கொண்ட எழுத்தாளர்களே சிறந்த எழுத்தாளர்களாக வரலாற்றில் நிலை பெறுகிறார்கள். அந்தவகையில் ராசவன்னியரின் ராக்கிங் அனுபவக் கட்டுரை என்னைமட்டுமல்ல, கள உறவுகள் பலரையும் ராசவன்னியராகவே மாற்றிவிட்டதை அவர்கள் கருத்துக்கள் வெளிப்படுத்தி உள்ளதை, இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.

ரவுசர் போடு, டைகட்டு என்று சொல்லாமல், வேட்டிகட்டு என்று ராசவன்னியரை ஒரு பச்சைத் தமிழனாகப் பார்த்து, ராக்கிங்செய்த அந்த பழைய மாணவர்களையும் நான் பாராட்டியே ஆகவேண்டும்.

ஊக்க கருத்துக்களுக்கு நன்றி, திரு.பாஞ்.

வேட்டி கட்டும் சூழல் இங்கே வந்ததிலிருந்து எல்லாம் மாறிப் போச்சு..!

அலுவலக மீட்டிங்களுக்கு சென்றால் சூட், டை மற்றும் திட்டப்பணிகளுக்கு சென்றால் முழு பாதுகாப்பு கவசங்களுடன்(PPE) தான் செல்ல வேண்டுமென அலுவலக வழிகாட்டல்கள்..

வேட்டிக்கு மாற தமிழகம்தான் செல்ல வேண்டும்..! :(

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

அந்தக் கால ராக்கிங்க்கும் இந்த கால ராகிங்க்கும் எக்கசக்க வித்தியாசம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kali said:

அந்தக் கால ராக்கிங்க்கும் இந்த கால ராகிங்க்கும் எக்கசக்க வித்தியாசம். 

அப்படியா..? கொடுமைகள் குறைந்துள்ளனவா..?

பாலியல் ரீதியாக துன்புறுத்தல்கள் இருக்காது என எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

4 minutes ago, ராசவன்னியன் said:

அப்படியா..? கொடுமைகள் குறைந்துள்ளனவா..?

பாலியல் ரீதியாக துன்புறுத்தல்கள் இருக்காது என எண்ணுகிறேன்.

இப்ப எல்லாமே கூடியிருக்கு. 
யுனி போக முதலே போன் நம்பர் கண்டுபிடிச்சு ஆரம்பிச்சிடும். 
மனுஷ வேஷத்தில் இருக்கிற மிருகங்களை கஷ்டமேயில்லாமல் அடையாளம் கண்டிடலாம். 

On 1/4/2020 at 23:15, ராசவன்னியன் said:

PPE) தான் செல்ல வேண்டுமென

அங்கே ஒரு PPEஇன் விலை என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kali said:

..அங்கே ஒரு PPEஇன் விலை என்ன? 

தரமான PPE வேண்டுமெனில் 800 திர்ஹாமிலிருந்து கிடைக்கிறது.

செலவழிக்கும் கம்பெனியை பொறுத்து வாங்கிக் கொடுக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

21 hours ago, ராசவன்னியன் said:

தரமான PPE வேண்டுமெனில் 800 திர்ஹாமிலிருந்து கிடைக்கிறது.

செலவழிக்கும் கம்பெனியை பொறுத்து வாங்கிக் கொடுக்கிறார்கள்.

நன்றி!

பயங்கர விலையா இருக்கே!

200 டொலருக்கு மேல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kali said:

நன்றி!

பயங்கர விலையா இருக்கே!

200 டொலருக்கு மேல 

நான் சொல்வது தலை, முகம், கண்கள், கைகள், உடைகள் மற்றும் பாதணிகளையும் சேர்த்து..
('கேட்டர் பில்லர்' - Caterpillar நிறுவன பொருட்கள்..)

இந்த நிறுவன பொருட்கள் பெரும்பாலும் அரச நிறுவனகளில் அங்கீகரிக்கப்பட்ட பொருட்களாக இருக்கும். அனைவரும் அரசு அங்கீகரித்த பொருட்களையே தங்கள் திட்டப்பணிகளுக்கு பயன்படுத்த வேண்டுமென்பது முக்கிய நிபந்தனையாகும்.

Link to comment
Share on other sites

இப்ப தான் ராகிங் பாகங்களை முழுமையா படிச்சு முடிச்சன்.
வன்னி அண்ணை சூப்பர் பதிவு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவரெவரெல்லாம் என்னை அதிகமாக ராகிங் செய்தார்களோ அவர்களே என்னுடன் அதிக நட்புடன் இருக்கிறார்கள், தற்போதும் 😀.

அந்த இனிய நாட்களை மீளவும் இங்கே திரும்பவும் கொண்டுவந்ததற்கு இராச வன்னியருக்கு நன்றிகள். 👏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.