Jump to content

விடுதலைப் புலிகளின் ஆசிர்வாதத்தோடு உருவாகிய கூட்டமைப்பு தமிழரின் உரிமைகளை அடகு வைக்காது- செல்வம் எம்.பி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Selvam-Adaikkalanathan-MP.jpg

விடுதலைப் புலிகளின் ஆசிர்வாதத்தோடு உருவாகிய கூட்டமைப்பு தமிழரின் உரிமைகளை அடகு வைக்காது- செல்வம் எம்.பி.

விடுதலைப் புலிகளின் ஆசிர்வாதத்தோடு உருவாகிய கூட்டமைப்பு தமிழரின் உரிமைகளை யாருக்கும் அடைமானம் வைக்காது என  தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளமை தமிழருக்கான காலம் கனிந்திருப்பதற்கான ஒரு செய்தி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு விழா வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் உரையாற்றுகையில்,  “எமது தலைவர்களது தியாகம் மக்களது விடுதலை என்ற இலட்சிய நோக்கத்தோடு இருந்தது. அரசாங்கத்தை அரவணைத்துப் போகும் சிந்தனையில் அவர்கள் இருக்கவில்லை. இன்று எமது கட்சி வலுவாக இருக்கிறதென்றால் அவர்கள் அன்று இட்ட அத்திவாரமே காரணம்.

விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தக் கூடாதென்று கருதிய இயக்கம் தமிழீழ விடுதலை இயக்கம் என்பதை இங்கு கூறுகிறேன். சகோதரப் படுகொலைகளின் பின்பு நாங்கள் (ரெலோ) இல்லை என்று பலர் கருதினார்கள். நாம் மீண்டும் வந்து புலிகளுடன் இணைந்து செயற்பட்ட வரலாற்றை இங்கு நினைவு கூருகிறேன்.

விடுதலைப் புலிகள் ஏதாவது தாக்குதல் நடாத்தினால் அடுத்த அடி இங்கு இருக்கும் எமது முகாம்களிற்கு தான் என்று அனைவருக்கும் தெரியும். இன்று ஊனமுற்று, இடுப்பு இயங்காமல் இராணுவத்தால் ஒடுக்கப்பட்டவர்களாக எங்களுடைய போராளிகள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

எமது இயக்கத்தின் செயற்பாடு தொடர்ந்து வந்த அரசாங்கங்களுக்கு எதிராகவே இருந்தது. அன்று மஹிந்த அரசாங்கம் எமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவுகளைப் பணயக் கைதிகளாக வைத்து வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிக்கவேண்டும் என்று சொன்னபோது கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இடமளிக்கவில்லை. எதிர்த்து வாக்களித்தார்கள். அதுதான் கூட்டமைப்பு இன்றும் மக்களின் பலமான சக்தியாக இருப்பதற்கு காரணம்.

கூட்டமைப்பை உருவாக்கியதிலே எமது பங்கு கூடுதலாக இருந்தது. கிழக்கில் சிவராம் மற்றும் பத்திரிகையாளர்கள் அந்த முயற்சியை எடுத்த போது கூடுதலாக நான் அவர்களோடு இருந்தவன். விடுதலைப் புலிகளின் ஆசிர்வாதத்தோடு கூட்டமைப்பு உருவாகிய பின்பு அது விடுதலைப் புலிகளின் அரசியல் அமைப்பாக செயற்பட்ட வரலாற்றையும் இங்கு கூறவேண்டும்.

இன்று கூட்டமைப்பை திட்டித்தீர்ப்பவர்கள் புதிதாக முளைத்தவர்கள். எங்களோடு இருந்துபோன அவர்கள் இன்று எள்ளி நகையாடுகின்றனர். நாம் அதற்குப் பதில்சொல்லத் தேவையில்லை. இனப்பிரச்சனைத் தீர்வுக்காக பல விட்டுக்கொடுப்புகளைச் செய்தோம். நாம் அடிவருடிகளாக அரசாங்கத்துடன் என்றும் செயற்படவில்லை.

புதிய ஜனாதிபதி சிங்கள வாக்குகளால் வெற்றி பெற்றதாகப் பெருமை பேசுகிறார். ஒரு தேசிய இனம் கொழும்பிலே நிர்ணயிக்கக் கூடிய சக்தியாக இருக்கக் கூடாது என்று சிங்கள மக்களிடம் பிரசாரம் மேற்கொண்டார்கள். நாம் இனவாதிகள் அல்ல என்ற நோக்கத்தோடு பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவருக்கு வாக்களித்தோம். எமது நல்ல சமிஞ்சையை ஏற்றுக்கொள்ள ஜனாதிபதி தயாரில்லை. அதன் பின்னணியே வடக்கு கிழக்கில் உள்ள சோதனைச் சாவடிகள். இந்த சோதனைச் சாவடிகளை நிறுத்த முடியாத முதுகெலும்பில்லாதவர்களாக சில தமிழர்கள் அரசாங்கத்துடன் இருக்கிறார்கள். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஜால்ரா அடிப்பவர்களாகவே அவர்கள் உள்ளார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அல்லது தமிழீழ விடுதலை இயக்கம் எங்களது மக்களின் உரிமைகளை யாருக்கும் அடைமானம் வைக்காது என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன்.

இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை அமெரிக்கா திருப்பி அனுப்புகின்றமை எமக்கான காலம் கனிந்திருப்பதற்கான ஒரு செய்தி. இது ஆரம்பம். எமது இனப்பிரச்சனைக்கான தீர்வினைப் பெற்றுத்தருவதற்கான வாய்ப்புகள் இப்பொழுது கிடைத்திருக்கிறன. அதற்காக எமது இயக்கம் மற்றும் கூட்டமைப்பு என்ன விலையையும் கொடுக்கத் தாயாராக இருக்கிறோம்” என்றார்.

http://athavannews.com/விடுதலைப்-புலிகளின்-ஆசிர/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kavi arunasalam said:

4-E0-A8-C88-8-E37-403-B-823-D-412005828-

ஆஹா.... அருமை. ஓவியத்தை பார்த்தவுடன்... "க்ளுக்"கென்று சிரிப்பு வந்தது. :grin: 🤣

Link to comment
Share on other sites

தேர்தல் நெருங்க நெருங்க ஐயா ஒவொன்றாக அவிழ்த்து விடுகிறார்। அன்மையில் ராணுவத்தைப்பற்றி ஒரு கதை சொல்லி இருந்தார்। இப்போது புலிகளைப்பற்றி கதை சொல்கிறார்।இன்னும் என்னவெல்லாம் சொல்லப்போகிறார்களோ ।  

Link to comment
Share on other sites

5 hours ago, தமிழ் சிறி said:

விடுதலைப் புலிகளின் ஆசிர்வாதத்தோடு உருவாகிய கூட்டமைப்பு தமிழரின் உரிமைகளை அடகு வைக்காது- செல்வம் எம்.பி.

இதுவரை தமிழற்ற உரிமைகளை செல்வம் அடைக்கலநாதன் என்பவர்  அடகு வைச்சு பாராளுமன்றத்தில சொகுசா காலம் கடத்தினார். நீங்க அவரில்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது புலிகளை பற்றி தமிழ் மக்களின் முன் நல்லவிதமாகச் சொல்லாமல்.. எந்தத் தமிழ் கட்சியும் தமிழ் மக்களின் முன் அவ்வளவு இலகுவாகச் செல்ல முடியாது.

டக்கிளசை விடுங்கள்.. அவருக்கு வாக்குகளை எப்படி அடாவடியாக பாசிசமாகப் புடுங்குவது என்று தெரியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.