Jump to content

கோட்டாவை பலப்படுத்தும் விதமாகவே பொதுத்தேர்தலிலும் களமிறங்குவோம்- மைத்திரிபால


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

maithiri-2.jpg

கோட்டாவை பலப்படுத்தும் விதமாகவே பொதுத்தேர்தலிலும் களமிறங்குவோம்- மைத்திரிபால

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பலப்படுத்தும் நோக்கில்தான், பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து களமிறங்கத் தீர்மானிக்கப்பட்டதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பிரித்தானியர்களிடம் சுதந்திரம் பெற்று நாடு என்ற ரீதியில் நாம் தலைத்தூக்கிக் கொண்டிருக்கும்போது தான், யுத்தத்திற்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது.

30 வருடங்களுக்கும் மேல் நீடித்த இந்த யுத்தம்தான் இலங்கையை வறுமைக்கோட்டுக்குக் கீழ் தள்ளியது. மக்களை ஏழைகளாக்கியது.

யுத்தத்தின்போது பெற்றுக்கொண்ட கடன்களை நாம் இன்றும் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

இந்த யுத்தம் உருவாக்கப்பட்ட ஒரு பிரச்சினையாகுமே ஒழிய, இயற்கையாக தோன்றியதல்ல.

அரசாங்கங்கள் எவ்வளவு சிறப்பான திட்டங்களைக் கொண்டுவந்தாலும், இதன் பலனை மக்களால் முழுமையாக அனுபவிக்க முடியாதுள்ளது.

நாம் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டாலும், நாடு என்பதற்குத் தான் முன்னுரிமை வழங்க வேண்டும்.

இதற்காகத் தான் நாம் மீண்டும் பொதுத் தேர்தலில் களமிறங்கத் தீர்மானிக்கவுள்ளோம். ஜனாதிபதி பதவிக்காலம் நிறைவடைந்தவுடன், அரசியலில் இருந்து ஓய்வு பெறத்தான் தீர்மானித்தேன்.

எனினும், எமது கட்சியினர் என்னிடம் கேட்டுக் கொண்டமைக்கு இணங்கவே நான் மீண்டும் களமிறங்கவுள்ளேன்.

அத்தோடு, புதிய ஜனாதிபதி 2015 ஆம் ஆண்டில் நான் அனுபவித்ததைப் போன்ற சவாலுக்குத்தான் தற்போது முகம் கொடுத்து வருகிறார்.

எனினும், அப்போது எனக்கு மஹிந்த ராஜபக்ஷ முழுமையான ஆதரவினை வழங்கிய காரணத்தினால்தான் வரவு- செலவுத் திட்டத்தைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியுமாக இருந்தது.

இந்த ஒத்துழைப்பு இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைப்பதில்லை. இதனால்தான் நாம் அவரை பலப்படுத்த தீர்மானித்துள்ளோம்.

புதிய அரசாங்கமொன்று வந்தவுடன், அதனை கவிழ்க்கத்தான் அனைவரும் முற்படுகிறார்கள்.

இது கீழ்த்தரமான அரசியல் கலாசாரமாகும். நாட்டில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் நாம் ஆரம்பத்தில் அவர்களுக்கு ஒத்துழைத்தே ஆக வேண்டும்.

அதற்கிணங்க, பொதுத்தேர்தலில் நாம் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, புதிய ஜனாதிபதியை பலப்படுத்தவே தீர்மானித்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/கோட்டாவை-பலப்படுத்தும்-வ/

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

maithiri-2.jpg

கோட்டாவை பலப்படுத்தும் விதமாகவே பொதுத்தேர்தலிலும் களமிறங்குவோம்- மைத்திரிபால

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பலப்படுத்தும் நோக்கில்தான், பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து களமிறங்கத் தீர்மானிக்கப்பட்டதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இந்த யுத்தம் உருவாக்கப்பட்ட ஒரு பிரச்சினையாகுமே ஒழிய, இயற்கையாக தோன்றியதல்ல.

அத்தோடு, புதிய ஜனாதிபதி 2015 ஆம் ஆண்டில் நான் அனுபவித்ததைப் போன்ற சவாலுக்குத்தான் தற்போது முகம் கொடுத்து வருகிறார்.

அதற்கிணங்க, பொதுத்தேர்தலில் நாம் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, புதிய ஜனாதிபதியை பலப்படுத்தவே தீர்மானித்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/கோட்டாவை-பலப்படுத்தும்-வ/

இவர் நிறைய கதைகளை கூறினாலும் , மொட்டுக்காரர்கள் இவரை முடியுமென்றால் தங்களது SLFP கட்சியில் தனித்து நின்று கேட்க்கும்படி சவால் விட்டிருக்கிறார்கள்। இவர்கள் தனித்து கேடடால் அதோ கதி என்று அவர்களுக்கு நன்றாக தெரியும்। ஆதலால்தான் மொட்டுக்கட்சியுடன் சேர்ந்து கேட்க முயன்றுகொண்டிருக்கிறார்கள்।

இன்னும் இவர் தனது அனுபவத்தினூடாக கோதாவுக்கு உதவி செய்யப்போகிறாராம்। இவருடைய உதவிக்கு போனால் கோதாவுக்கும் அம்போதான்।

ஜனாதிபதி பதவி முடிந்த பின்னர் அரசியலில் இருக்கமாடடேன் எண்டு சொன்னவர் இப்போது பதவிக்காக அலைகிறார்। ஆசை யாரைத்தான் விட்ட்து।

Link to comment
Share on other sites

மஹிந்த தலைவர்; மைத்திரி தவிசாளர் மொட்டு சின்னத்தில் போட்டி

- செயலாளர் பசில் ராஜபக்‌ஷ
- விமல் வீரவங்ச, தயாசிறி ஜயசேகர தேசிய அமைப்பாளர்கள்
- சு.க, பொ.பெரமுன மற்றும் 9 கட்சிகள் இணைந்து கூட்டணி
- 'ஶ்ரீ லங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய' கட்சியை பதிவு செய்யும் ஆவணம் தேர்தல் செயலகத்தில்

எதிர்வரும் தேர்தலில் 'ஶ்ரீ லங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய' (ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு) கட்சியில் மொட்டு சின்னத்தில் போட்டியிட, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிகள் தீர்மானித்துள்ளன.

குறித்த கட்சியைப் பதிவு செய்வதற்காக, இன்றையதினம் (17) ஶ்ரீ.ல.பொ.பெரமுன கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் மற்றும் ஶ்ரீ.ல.சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் தேர்தல்கள் செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த இரு கட்சிகளின் செயலாளர்களும் இவ்விடயத்தை உறுதிப்படுத்தினர்.

அத்துடன், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரு கட்சிகளும் இணைந்து உருவாக்கியுள்ள இக்கூட்டமைப்பின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும், தவிசாளராக மைத்திரிபால சிறிசேனவும் நியமிக்கப்பட்டுள்ளதாக, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

குறித்த இரு கட்சிகள் உள்ளிட்ட மேலும் 9 கட்சிகள் இணைந்து இக்கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இக்கட்சியின் செயலாளராக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச மற்றும் ஸ்ரீ.ல.சு.கவின் பொதுச் செயலாளர் தயசிறி ஜயசேகர ஆகியோர் தேசிய அமைப்பாளர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 8ஆவது சரத்தின் அ பிரிவின் கீழ் குறித்த கட்சியை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தற்போது கையளித்துள்ளதாக, ஶ்ரீ.ல.பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்ததோடு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாரிய வெற்றியை ஈட்டும் நோக்கில் மொட்டு சின்னத்தில் இக்கட்சி களமிறங்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

மிகவும் ஒத்துழைப்புடன் இரு கட்சிகளும் இணைந்து புரிந்துணர்வுடன் செயற்படும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

http://www.thinakaran.lk/2020/02/17/அரசியல்/48466/மஹிந்த-தலைவர்-மைத்திரி-தவிசாளர்-மொட்டு-சின்னத்தில்-போட்டி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியை நல்லவர் வல்லவர் என்ற சம் சும் மாவை சாவை கும்பல்.. இப்ப எங்க போய் முகத்தை புதைச்சுக்கிட்டு நிற்குதுகளோ. 

Link to comment
Share on other sites

47 minutes ago, ampanai said:

மஹிந்த தலைவர்; மைத்திரி தவிசாளர் மொட்டு சின்னத்தில் போட்டி

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இறுதி தேர்தல்.

ஐ.தே,க. வின் கதையையும் (இரண்டாக பிரித்து) மொட்டு முடிக்கலாம்.

 

Link to comment
Share on other sites

இலங்கையில் மீண்டும் கை கோர்த்த மஹிந்த - மைத்திரி: சஜித் - ரணில் தரப்பு தொடர்ந்து இழுபறி

மஹிந்த - மைத்திரிபடத்தின் காப்புரிமை Getty Images

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன இணைந்து கூட்டணியொன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு என்ற பெயரில் இந்த கூட்டணியை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த கூட்டமைப்பின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்த புதிய கூட்டமைப்பின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் இந்த கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் சின்னமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சின்னமான தாமரை மொட்டு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்தர பொதுஜன கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த கூட்டமைப்பில் 9 கட்சிகள் இடம்பிடித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

 

சஜித் - ரணில்படத்தின் காப்புரிமை Sajith/ Twitter

ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில் இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என அந்த கட்சியின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

யானை அல்லது அன்னம் சின்னத்தின் கீழ் எதிர்வரும் தேர்தலில் போட்டியிட தாம் கலந்துரையாடி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவும், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டமைப்பின் தலைவராக சஜித் பிரேமதாஸவும் செயற்பட கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னமான யானை சின்னத்தின் கீழ் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பில் சர்ச்சை நிலவி வருகின்றது.

எவ்வாறாயினும், இந்த சர்ச்சைக்கு எதிர்வரும் புதன்கிழமைக்குள் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க தாம் எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவிக்கிறார்.

இதேவேளை, எதிர்வரும் தேர்தலில் இதயம் சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தரப்பினர் முயற்சித்து வருகின்றனர்.

எனினும், அந்த சின்னத்திற்கு மற்றுமொரு கட்சி உரிமை கோரியுள்ளது.

தேசப்பற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியே இதயம் சின்னத்திற்கான உரிமையை கோரியுள்ளது.

இதனால் ஐக்கிய தேசியக் கட்சி எந்த சின்னத்தில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது என்பது தொடர்பில் தொடர்ந்தும் சர்ச்சை நிலவி வருகின்றது.

https://www.bbc.com/tamil/sri-lanka-51542383

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர், "நீங்கள் தந்த பணியை கச்சிதமாய் முடித்துவிட்டேன்" என்று பல்லிளிக்கிறார். "அப்பிடியா இப்ப எந்நேரம் நானும் உனக்கு சன்மானம் தருவேன் பொறுத்திரு" என இவர் இளிக்கிறார்.  என்ன, பதவிக்காக பல்லிளித்து வால்பிடிக்குது.

Link to comment
Share on other sites

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை நடத்த அனுமதித்த பிரதான குற்றவாளியான மைத்திரி தற்போது ராஜபக்ச கோஷ்டியின் மிரட்டல் அரசியலில் பணயக் கைதியாக மாட்டியுள்ளார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.