Jump to content

யாழ்.மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபர் இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபர் இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றார்

808c044b-e0a9-4551-805a-eec8f1242e4f-1-e
புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள கணபதிப்பிள்ளை மகேசன் முன்னதாக மட்டக்களப்பு வாழைச்சேனை, வவுணதீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராக பதவி வகித்துள்ளார்.அத்துடன் கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் பதில் உயர்ஸ்தானிகராகவும் பணியாற்றியுள்ளதோடு, உணவு ஊக்குவிப்பு வாரியத்தின் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.

இந்நிலையில் யாழ்.மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் இன்று திங்கட்கிழமை காலை தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட செயலகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-மாவட்டத்தின்-புதிய-2/

Link to comment
Share on other sites

திரு வேதநாயகம் அவர்களை இன்னும் மூன்று மாதம் வேலை செய்ய இடம் கொடுத்திருக்கலாம்। அப்போது அவருடைய சேவை பூரணமாக இருந்திருக்கும்। அரசியல் வாதிகள் எதைத்தான் சரியாக செய்கிறார்கள்। இருந்தாலும் திரு மகேசன் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்। 

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தானின் உணர்வுகளை அடக்க மிகச்சிறந்த ஆயுதம் அடிமைகளாக்க வேறு மாவட்ட ஆட்களை பதவிகளில்  அமர்த்தி வேறு மொழி கலாச்சாரம் தப்பே இல்லை என்னும் மனநிலையை உருவாக்கிவிட்டார்கள் விக்கினேஸ்வரன் முதல் கொண்டு இன்றை வரை உளவியல் யுத்தம் இது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் யாழ்ப்பாணத்தார் தான் மட்டக்களப்பில் பெரிய பதவிகளில் இருந்துள்ளார்கள்...முதல் ,முதலில் எனக்கு தெரிந்து ஒரு மட்டுவை சேர்ந்தவரை யாழில் பெரிய பதவிக்கு நியமித்துள்ளார்கள்...நல்ல மாற்றம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இவ்வளவு காலமும் யாழ்ப்பாணத்தார் தான் மட்டக்களப்பில் பெரிய பதவிகளில் இருந்துள்ளார்கள்...முதல் ,முதலில் எனக்கு தெரிந்து ஒரு மட்டுவை சேர்ந்தவரை யாழில் பெரிய பதவிக்கு நியமித்துள்ளார்கள்...நல்ல மாற்றம் 
 

இதிலும்  பிரதேச வாதத்தை  கையிலெடுக்காவிட்டால் எல்லாம் சுபம். 😀

14 hours ago, மார்த்தாண்டன் said:

யாழ்ப்பாணத்தானின் உணர்வுகளை அடக்க மிகச்சிறந்த ஆயுதம் அடிமைகளாக்க வேறு மாவட்ட ஆட்களை பதவிகளில்  அமர்த்தி வேறு மொழி கலாச்சாரம் தப்பே இல்லை என்னும் மனநிலையை உருவாக்கிவிட்டார்கள் விக்கினேஸ்வரன் முதல் கொண்டு இன்றை வரை உளவியல் யுத்தம் இது 

யாழ்ப்பாணத்துக்கென்று  தனி உணர்வேதுமுண்டோ ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kapithan said:

இதிலும்  பிரதேச வாதத்தை  கையிலெடுக்காவிட்டால் எல்லாம் சுபம். 😀

யாழ்ப்பாணத்துக்கென்று  தனி உணர்வேதுமுண்டோ ? 

விடா முயற்சியும்,கடின உழைப்பையும் உடையவர்கள். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

விடா முயற்சியும்,கடின உழைப்பையும் உடையவர்கள். 😁

சிலதுகளை போட(தவறுதலாக 😜) மறந்துபோனீர்கள் பால படுகிறது 😀

Link to comment
Share on other sites

அதன் எழுதிய உளவியல் யுத்தம் இது தான் பிரதேசவாதம் அல்ல திசை திருப்பாமல் யோசித்து பாருங்கள் ஆளுனர் அரசாங்க அதிபர் இப்படி மிகப்பெரிய பதவிகளை வகிக்கும் தகுதி விக்கி வந்த போது மகிந்த மாத்தயா கேட்ட கேள்வியும் நக்கலும் ஞாபகம் வருகுது 

Link to comment
Share on other sites

6 hours ago, ரதி said:

இவ்வளவு காலமும் யாழ்ப்பாணத்தார் தான் மட்டக்களப்பில் பெரிய பதவிகளில் இருந்துள்ளார்கள்...முதல் ,முதலில் எனக்கு தெரிந்து ஒரு மட்டுவை சேர்ந்தவரை யாழில் பெரிய பதவிக்கு நியமித்துள்ளார்கள்...நல்ல மாற்றம் 

பிரதேசவாதக் கண் கொண்டு பார்க்கும் உங்கள்ல நல்ல மாற்றம் எப்ப நடக்கும்?

Link to comment
Share on other sites

7 hours ago, ரதி said:

இவ்வளவு காலமும் யாழ்ப்பாணத்தார் தான் மட்டக்களப்பில் பெரிய பதவிகளில் இருந்துள்ளார்கள்...முதல் ,முதலில் எனக்கு தெரிந்து ஒரு மட்டுவை சேர்ந்தவரை யாழில் பெரிய பதவிக்கு நியமித்துள்ளார்கள்...நல்ல மாற்றம் 
 

யாழ்பாணத்தவர்கள் மற்றைய மாவட்ட்ங்களில் அநேக வருடங்களாக அரச அதிபராக இருந்துள்ளார்கள்। எனவே மட்டு நகரை சேர்ந்த ஒருவர் யாழுக்கு அரச அதிபராக வருவது ஒன்றும் பெரிய விடயம் இல்லை। அங்குள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அவர் தனது சேவையை முன்னெடுப்பர் என்று எதிர்பார்க்கிறோம்।

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
    • சுலபமான மாலை நேர சிற்றூண்டி... - உருளைக்கிழங்கு முட்டை  ப்ரை     
    • நன்றி - யாழ்பாணப் பொருளாதாரம் அசுர பாய்ச்சல் பாய்கிறது என எழுதிய போது சிலர் நகைத்தார்கள். இது அந்த பாய்ச்சலின் ஆரம்ப நிலைதான். எவ்வளவு இளமை, எவ்வளவு துணிச்சல், எவ்வளவு தன்னம்பிக்கை இந்த பிள்ளைகளிடம். இவர்கள்தான் இந்த இனத்தின் எதிர்காலம். @அக்னியஷ்த்ரா மட்டுவில் இப்படி உள்ளதா? இல்லை எனில் -உங்கள் கவனத்துக்கு.
    • 300 ரூபாய்க்கு கொத்து ரொட்டி கிடையாது. வேணும் என்றால்… ஒரத்திலை நின்று, கொத்து ரொட்டி கொத்துற…  சத்தத்தை கேட்டுட்டு போகலாம். 😂 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.