Jump to content

அ.தி.மு.கவுக்கு 2021 ஆதரவு அலை வீசுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அ.தி.மு.கவுக்கு 2021 ஆதரவு அலை வீசுமா?

எம். காசிநாதன்   / 2020 பெப்ரவரி 17


ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்து, நான்காவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறது அ.தி.மு.க ஆட்சி. தமிழ்நாட்டில், ஒரு தேர்தலில் மூன்று முதலமைச்சர்களைச் சந்தித்த காலகட்டமாக, 2016 முதல் 2021 வரையிலான ஆட்சிக் காலம் அமைந்து விட்டது.   

முதலில் பதவியேற்ற ஜெயலலிதா, டிசெம்பர் 2016இல் மறைவு எய்தியதை அடுத்து, ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சரானார். அவருக்கும் சசிகலாவுக்கும் ஏற்பட்ட மோதலில், எடப்பாடி பழனிசாமி 2017 பெப்ரவரி மாதத்தில், தமிழகத்தின் முதலமைச்சரானார்.   

ஆனால், குறிப்பிடத்தக்க நிகழ்வு என்னவென்றால், சசிகலாவின் தயவில் முதலமைச்சர்களாக ஆக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் பதவியில் நீடிப்பதற்கு, மத்தியில் உள்ள பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவாகவே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.  
சசிகலா வெளியில் இருந்த நேரத்தில், ஓ. பன்னீர்செல்வத்தின் பா.ஜ.க ஆதரவு நிலைப்பாடு முதல், “ஸ்டாலினைப் பார்த்துச் சிரித்தார்” போன்ற குற்றச்சாடுகளைச் சுமத்தி, வெளியேற்றப்படும் சூழலுக்கு பன்னீர்செல்வம் தள்ளப்பட்டார்.   

ஜெயலலிதாவின் சமாதியில், ‘தர்மயுத்தம்’ நடத்திய அவர், இன்றைக்குச் சசிகலா உருவாக்கிய, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்தில் துணை முதலமைச்சராக இருக்கிறார். காரணம், சசிகலாவால் முதலமைச்சராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு, யோகம் என்பது ‘சிறை’ வடிவில் கிடைத்தது.   

அதாவது, ஜெயலலிதா- சசிகலா ஆகியோர் மீதான ஊழல் வழக்கில், நான்கு வருட சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டதால், சசிகலா பெங்களூர் சிறைக்குச் சென்றார். அவரது சிறைவாசம், எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.கவையும் ஆட்சியையும் தக்க வைத்துக் கொள்வதில் முக்கிய காரணியாக அமைந்துவிட்டது.   

அதேநேரத்தில், பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் ஸ்டாலின், ‘கொல்லைப் புறமாக ஆட்சியைப் பிடிக்கப் போவதில்லை’ என்று அறிவித்து விட்டதால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சிக்கு, எவ்வித தொந்தரவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது.  

ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருந்த ‘சசிகலா ஆபத்தும்’ ‘ஸ்டாலின் ஆபத்தும்’ எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. ஆகவே, “நான் முதலமைச்சர்; இல்லையேல் தேர்தல்” என்ற ஒற்றை நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த எடப்பாடி பழனிசாமி, தன்னை எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வத்தையே, தனது தலைமையை ஏற்றுக் கொள்ள வைத்தார்.   

கட்சிக்குள் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வம் இருந்தாலும், இன்று வரை அ.தி.மு.கவின் நிர்வாகக் கட்டுப்பாடு முழுக்க முழுக்க, எடப்பாடி பழனிசாமி கையிலேயே இருக்கிறது. தனக்குக் கட்டுப்படாத அமைச்சர் மணிகண்டனைப் பதவியை விட்டு நீக்குவதாக இருக்கட்டும், ராஜ்ய சபை உறுப்பினர் பதவிகளுக்கு தன் விசுவாசிகளுக்கு இடம் வழங்குவதாக இருக்கட்டும் அனைத்தும் எடப்பாடி பழனிசாமியின் அதிகார வட்டத்துக்குள் மட்டுமே நடந்தது. ஏன், ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவையே கட்சியை விட்டு நீக்கும் அதிகாரத்தைக் கூட, பன்னீர்செல்வத்தால் தடுக்க முடியவில்லை.   

இன்றைக்கு மூன்று வருடங்கள் ஆட்சி நிறைவு பெற்றுள்ள நிலையில், கட்சிக்குள் இருந்த அனைத்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக மாறி விட்டார்கள். அல்லது, “இனி நம் அதிகாரம் எடுபடாது” என்று அமைதியாகி விட்டார்கள் என்றே எண்ண இடமிருக்கிறது.  

அ.தி.மு.கவுக்குள் இனி ‘ஓ.பன்னீர்செல்வம் அதிகாரம்’ என்று எதுவும் எஞ்சி இருப்பதாகத் தெரியவில்லை. ஆட்சியிலும் அவருக்கு என்று தனிப்பட்ட முக்கியத்துவமும் இருப்பதாகத் தெரியவில்லை.   

அதனால்தானோ என்னவோ, ‘நிதி நிலை அறிக்கை தயாரிக்க ஆலோசனை வழங்கிய ஜெயலலிதா குறித்து, எப்படித் தனது ‘பட்ஜெட்’ உரையில் ஓ.பன்னீர்செல்வம்’ குறிப்பிடுவாரோ அதேபோல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய சிறந்த ஆலோசனைகள் என்று பட்ஜெட்டில் பாராட்டியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.   

ஆகவே, கட்சி ரீதியாகவும் ஆட்சி ரீதியாகவும் அ.தி.மு.கவின் தலைவர் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி என்பது நூற்றுக்கு இரு நூறு சதவீதம் உறுதியாகி விட்டது.  ஆட்சியைப் பொறுத்தமட்டில், 16,382 கோப்புகளை மூன்று வருடங்களில் பார்த்துக் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்ததாக, ‘மூன்று ஆண்டு சாதனை’ பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.   

அந்தக் பட்டியலில் பல்வேறு சாதனைத் திட்டங்கள் குறித்துக் கூறப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள், பொலிஸாரை நிம்மதியிழக்க வைத்துள்ளன.   

தொடர் போராட்டங்களில் நிம்மதியிழந்த பொலிஸார், சென்னையில் போராடிய இஸ்லாமியர்கள் மீது, தடியடி நடத்த, இப்போது தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பகுதிகளுக்கும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை நியமித்து, சட்டம், ஒழுங்குப் பிரச்சினைகளைக் கண்காணிக்க வேண்டிய கட்டாயம், இந்த அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிறது.   

ஆகவே, குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க வாக்களித்தது மிகப்பெரிய தலைவலியாக அக்கட்சிக்கு தமிழகத்தில் மாறியிருக்கிறது. அது மட்டுமின்றி, சிறுபான்மையினர் வாக்குகளை இனிமேல் அந்தக் கட்சி கனவிலும் பெற முடியாது என்ற சூழல் ஏற்பட்டு விட்டது.   

இதேபோன்று, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ‘காவிரி டெல்டா’வை அறிவிக்கப் போகிறேன் என்று முதலமைச்சர் கூறியிருந்தாலும் அந்தக் காவிரி டெல்டா பகுதிகளில், ஏற்கெனவே செயல்படும் அல்லது, புதிதாக ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டங்களின் நிலை என்ன? தொடருமா, அதற்கும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தின் கீழ், இரத்துச் செய்யப்படுமா என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.   

மாநில அரசாங்கம், தனது அதிகாரத்தின் கீழ் இந்தச் சட்டத்தை நிறைவேற்றி விட முடியுமா? அப்படி நிறைவேற்றப்படும் சட்டத்தை, மத்திய அரசு ஏற்றுக் கொள்ளுமா? இதெல்லாம் மில்லியன் டொலர் கேள்விகளாக வலம் வருகின்றன.  

இது போன்ற சூழ்நிலையில், புதிதாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அ.தி.மு.க ஆட்சியின் ‘கடைசி முழு நிதி நிலை அறிக்கை’, தேர்தல் நிதி நிலை அறிக்கையாகவோ தேர்தலை மனதில் வைத்தோ வெளியிடப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம், மாநிலம் 4.56 இலட்சம் கோடி கடனில் சிக்கிக் கொண்டிருப்பதே ஆகும்.   

மிகப்பெரிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் எதற்கும், தேர்தல் வருடத்தில் செலவிட முடியாத அளவில், நிதி நெருக்கடியில் தமிழ்நாடு இன்றைக்கு உள்ளது. ஆகவே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்துக்கு, நிதி மேலாண்மை மிகப்பெரும் சவாலாகவே இன்றுவரை இருந்து வருகிறது.   

எஞ்சியிருக்கின்ற ஒரு வருடத்துக்குள், இதைச் சரியான பாதையில் திருப்பி விட முடியும் என்று, பொருளாதார நிபுணர்களாலும் நம்பிக்கை தெரிவிக்க முடியவில்லை என்ற நிலை உள்ளது.  

அரசாங்க நிர்வாகத்தில் அதிகாரிகளுக்கு மிகப்பெரிய ‘சுதந்திரம்’ கிடைத்துள்ள காலகட்டமாக, எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக் காலம் இருக்கிறது. அமைச்சர்களுக்குச் ‘சுதந்திரம்’ இருக்கிறது. ஆனால், அவை எல்லாம் ‘நிர்வாகத் திறமைகளாக’ அ.தி.மு.க ஆட்சிக்கு நல்ல பெயர் வாங்கித் தருவதாக இருக்கிறதா என்றால், “இல்லை” என்றே கூறிவிட வேண்டும்.  

ஏனென்றால், வரலாறு காணாத வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் முறைகேடு, பல்வேறு ஊழல் புகார்கள் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள், ஊழல் வழக்குகள் அமைச்சர்கள் மீதே தொடரப்படுவது எல்லாம், இந்த மூன்றாண்டு கால ஆட்சி வெளியிட்டுள்ள ‘சாதனைப் பட்டியலுக்கு’ வேதனை அளிக்கும் நிகழ்வுகளாகவே இருக்கின்றன.  

ஆகவே, தேர்தல் வருடத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் அ.தி.மு.கவுக்கு இப்போதைக்கு கட்சிக்குள் பிரச்சினை இல்லை; ஒற்றைத் தலைமை என்பது உறுதியாகி விட்டது. இனிமேல், சட்டமன்றத் தேர்தலில், ‘முதலமைச்சர் வேட்பாளர்’ யார் என்பதில், அடுத்த குழப்பம் வரலாம் என்பது மட்டுமே இப்போதுள்ள பிரச்சினை.   

ஆனால், ஆட்சி நிர்வாகத்தில், மத்திய அரசு கொடுத்த ஆதரவைப் பயன்படுத்தி, ஒரு நல்ல நிர்வாகத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கம் கொடுத்து விட்டதா என்று கேட்டால், உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளில், அதற்கு ஆதரவான காட்சிகளைக் காணமுடியவில்லை.   

அதற்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலும், அப்படியோர் உறுதிமொழியை அ.தி.மு.கவுக்குக் கொடுக்கவில்லை. இந்நிலையில், ‘மூன்றாண்டு சாதனை’, இனி அடுத்துச் சந்திக்கப் போகும் 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுக்குச் சாதகமான ‘ஆதரவு அலை’ வீச வைக்கும் சாத்தியகூறுகள் காணப்படவில்லை என்பதே தற்போதைய நிலைமை.   

ஒருவேளை இன்னும் இருக்கின்ற ஒரு வருடத்தில் அந்த ஆதரவு அலையை, அ.தி.மு.கவால் உருவாக்கிக் கொள்ள முடியுமா? அது மிகப்பெரிய சவால் என்றே அ.தி.மு.கவினருக்கு இப்போது தெரிகிறது.    
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அ-தி-மு-கவுக்கு-2021-ஆதரவு-அலை-வீசுமா/91-245592

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
    • நல்லது இதை தமிழ் நாட்டவர்கள் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் குத்தி முறிந்து எதுவுமாகப் போவதில்லை.
    • தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது. இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும். அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.     https://www.tamilmirror.lk/ஆசிரியர்-தலையங்கம்/ரபயன-மதபப-வணடமனற-கறககபபடகனறத/385-334940
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.