Jump to content

நிதியியல் அறிவு அவசியமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிதியியல் அறிவு அவசியமா?

அனுதினன் சுதந்திரநாதன்   / 2020 பெப்ரவரி 11 

உண்மையில், நமது கல்வியறிவு விகிதமானது, நமது நிதியியல் சார்ந்த விடயங்களைச் சார்ந்தோ நிதிசார் தேவைகளை முழுமைபெறச் செய்வதாகவோ அமைந்திருக்க வேண்டியதில்லை. ஆனாலும், அதிகரித்த கல்வியறிவு விகிதமானது, நாளாந்த நமது நிதியியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவோ அல்லது அடிப்படையான நிதியியல்சார் விடயங்களைப் பூர்த்தி செய்துகொள்ள உதவுவதாகவோ அமைந்திருக்க வேண்டியது அவசியமாகும். உதாரணமாக, கல்வியறிவு அதிகம் கொண்ட நம்மில் பலருக்கே, காசோலைகளை எப்படி நிரப்புவது, அதனை எப்படி வங்கியில் வைப்பிலிடுவது, பண வைப்பு மற்றும் பணம் மீளப்பெறல் இயந்திரங்களை எப்படி இயக்குவது, வங்கிக் கூற்றுகளை எவ்வாறு ஆய்வுசெய்வது, நிதிச் செயற்பாடுகளைத் திட்டமிடுவது  என்பதில் பலத்த குழப்பங்களும் சந்தேகங்களும் உள்ளன. படித்தவர்கள் நிலையே இவ்வாறிருக்க, சாதாரணப் பொதுமக்களின் நிலை என்னவாக உள்ளதெனச் சிந்தித்துப் பாருங்கள். 

தென்னாசியாவிலேயே, இலங்கையின் கல்வியறிவு விகிதமானது, ஏனைய அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் கல்வியறிவு விகிதத்துக்கு மிக நெருக்கமான போட்டித்தன்மை வழங்கும் நிலையிலேயே உள்ளது. குறிப்பாக, இலங்கையில் முதிர்ச்சி அடைந்தவர்களின் கல்வியறிவு விகிதமானது, 2018ஆம் ஆண்டின் பிரகாரம் 92 சதவீதமாக உள்ளது. ஆனாலும், ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்கிற பழமொழிக்கு ஏற்றாற் போல, இந்தக் கல்வியறிவு விகிதமானது, மக்களின் நிதியியல் சார்ந்த அறிவு விகிதத்தில் எவ்விதப் பயனையும் கொண்டிராத ஒன்றாகவே உள்ளது.  

2018ஆம் ஆண்டு ஆய்வுகளின்படி, இலங்கையின் நிதியியல்சார் அறிவு விகிதமானது, 35 சதவீதமாகவுள்ளது. 92 சதவீதமான கல்வியறிவைக் கொண்டிருக்கும் நாம், நிதியியல் சார் அறிவில் 35 சதவீதமாக இருப்பது நமது கல்வியறிவுக்கும் நடைமுறை வாழ்வியல்சார் விடயங்களுக்கும் இடையிலான இடைவெளியைத் தெள்ளத்தெளிவாகக் காட்டி நிற்கின்றது. 

நிதிசார் அறிவென்பதை, பணம் எவ்வாறு செயற்படுகின்றதென அறிந்து கொள்வதாக வரையறுத்துக்கொள்ள முடியும். இதனுள், எவ்வாறு பணத்தை உழைத்துக்கொள்வது, முதலீடுகளை எவ்வாறு செய்வது, செலவீனங்களைக் கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளுவது, எவ்வாறு சேமித்துக்கொள்வது போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைந்திருக்கும்.எனவே, தனிநபரொருவர் நிதியியல் சார் அறிவைப் பொருத்தமான வகையில் கொண்டிருக்கும்போது, அவர் தனது நிதி நலன்களைத் தானே சமாளித்துக் கொள்ளக்கூடியதாக இருப்பதுடன், அதுசார் வரிச் சுமைகள் தொடர்பான அறிவையும் தனது வருமானத்துக்கேற்ப செலவுகளைத் திட்டமிட்டுக் கொள்ளக்கூடிய திறனையும் கொண்டிருப்பவராக இருப்பார்கள்.  

தெற்காசியாவில், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, இலங்கை போன்ற நாடொன்றில் மக்களுக்கும் வங்கிகளுக்கும் இடையிலான இடைவெளியானது, மிகக் குறைவாகும். உதாரணமாக, இந்தியா போன்ற நாடொன்றில், பல கிராமங்களில் பொருத்தமான வங்கி வசதிகளைக் கொண்ட வங்கிகளற்ற நிலையே காணப்படுகின்றது. ஆனாலும், இலங்கை போன்ற நாடொன்றில், மிகப்பெரிய முன்னேற்றகரமான நிலையுள்ள போதிலும், நிதியியல்சார் அறிவில் நம்மவர்கள் மிகவும் பின்தங்கி யநிலையிலுள்ளமை ஆச்சரியத்தைத் தரக்கூடிய தரவாக அமைந்துள்ளது. பெரும்பாலான நிதியியல் செயற்பாடுகள், வங்கிகளுடன் பின்னிப் பிணைந்திருப்பதால், நமது அடிப்படையான நிதியியல் செயற்பாடுகள் அனைத்துமே அங்கிருந்துதான் ஆரம்பிக்கின்றன. எனவே, இலங்கை போன்ற நாடொன்றில், வங்கிகளுடன் மிக நெருக்கமான உறவை நாம் கொண்டிருக்கின்ற போதிலும், அவை சார்ந்த அடிப்படையான விடயங்களில்கூட நாம் கவனம் செலுத்தவில்லை என்பதே உண்மையாகவுள்ளது. 

நிதியியல் ரீதியான படிப்பினையானது, கல்விக் கூடங்களிலிருந்து ஆரம்பிப்பது என்பது பொருத்தமானதாகாது. மாறாக, அவை ஒவ்வொரு வீட்டிலும் அல்லது குடும்பங்களிலிருந்துமே ஆரம்பிக்கப்பட வேண்டும். அப்போதுதான், அவை மேலும் அர்த்தமுடையதாக அமையும். ஆனால், அவை நடைமுறைக்குச் சாத்தியமற்றே உள்ளன. இதற்குப் பிரதான காரணம், இலங்கையின் பெரும்பாலான குடும்பங்கள், பொருத்தமான நிதி ஆதாரங்களைக் கொண்டிருப்பதில்லை. எனவே, அத்தகைய குடும்பங்கள், நிதிசார் பராமரிப்புகளை மேற்கொள்ளவோ அதற்கு முக்கியத்துவம் வழங்கவோ முற்படுவதில்லை. மாறாக, அத்தகைய குடும்பங்கள், நாளாந்த நிதியியல் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதையே  பிரதானமானதாகக் கொண்டிருக்கின்றன. இதுதான், பெரும்பாலான நடுத்தர வருமானத்தைக் கொண்ட குடும்பங்களின் நிலையாகவும் இருப்பதால், நம்மவர்களின் நிதியியல்சார் அறிவு விகிதத்தில் தளம்பல் காணக் காரணமாகவுள்ளது. 

இன்றைய இலங்கையில், பெரும்பாலும் நகரத்தை நோக்கி பறந்துகொண்டிருப்பவர்களும் நகரத்தில் வாழ்பவர்களும், நிதியியல் ரீதியான அடிப்படை அறிவைக் கொண்டிருக்கிறார்கள். இவர்களால், நிதிசார்ந்து வெளியிடப்படும் கவர்ச்சிகரமான விளம்பரங்களில் பெரும்பாலானவற்றின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ளக் கூடியதாகவும் உள்ளது. ஆனால், இவர்களில் பெரும்பாலானவர்களுக்கே கடனட்டையின் செயற்பாடுகள், வங்கியின் குறுங்கால மற்றும் நீண்டகால கடன்களுக்கு எவ்வாறு வட்டி விகிதம் அறிவிடப்படுகின்றது என்பது போன்ற பல்வேறு விடயங்களில், இன்னமும் தெளிவற்ற நிலையே காணப்படுகின்றது. இவை அனைத்துமே, நாம் இன்னமும் நிதியியல்சார் கல்வியறிவு விகிதத்தில் வளர்ச்சியடைய வேண்டும் என்பதையும் இது நம்மைச் சுற்றியிருக்கும் நிதி நிறுவனங்களுக்கும் ஏதுவாக அமைந்துள்ளது. 

இலங்கையின் நகரங்களைத் தவிர்த்து, கிராமப்புறங்களில் இந்த நிலை மிக மோசமாக இருக்கின்றது. இதற்குப் பிரதான காரணம், கிராமங்களில் நிதியியல்சார் விடயங்கள், வீட்டின் தலைவர்களைச் சுற்றியே வியாபித்திருப்பதாகும். பெரும்பாலும், உழைக்கும் தரப்பாக ஆண்களிருப்பதுடன், அவர்கள் பெரும்பாலான நிதியியல் செயற்பாடுகளையும் நிதிசார் நெருக்கடிகளையும் குடும்பத்தில் பகிர்ந்துகொள்ளாத நிலையும் காணப்படுகின்றது. இதன் விளைவால், குடும்பங்களில் நிதியியல்சார் தகவல் பரிமாற்றம் குறைவடைகிறது. அத்துடன், பெண்கள் அடியோடு இது தொடர்பான புரிதலைக் கொண்டிராத நிலை ஏற்படுகிறது. இதன்காரணமாக, கிராமப்புறங்களில் சட்டத்துக்குப் புறம்பான நிதியியல்சார் செயற்பாடுகள், நேரத்துக்கு நேரம் புல்லுருவியாகத் தோன்றி, மக்களின் உழைப்பைச் சுரண்டிக் கொண்டுள்ளது. பணம் சார்ந்த கவர்ச்சியும் அதனை மிக விரைவாக உழைத்துக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலும், அதனுடன் சேர்ந்ததாக நிதியியல் சார்பாகப் போதிய அறிவின்மையும், இந்தச் சட்டத்துக்குப் புறம்பான நிதியியல் செயற்பாடுகள் வெற்றிபெறவும், அதனூடாக மக்கள் தமது உழைப்பை இழக்கவும் காரணமாகி இருக்கிறது. 

இத்தகைய நிலையிலிருந்து நாம் மீளவும் நமது நிதியியல்சார் கல்வியறிவு விகிதத்தை அதிகரித்துக் கொள்ளவும், நாம் நிறைய விடயங்களை நமது குடும்பங்களிலிருந்தும் கல்வியியல் ரீதியாகவும் மாற்றவேண்டியது அவசியமாகிறது. குடும்பங்களைப் பொறுத்தவரை, பெண்களுக்கு நிதியியல் சார்ந்த சுதந்திரத்தை  வழங்குவது அவசியமாகிறது. தற்போதைய காலகட்டத்தில், ஆண்களுக்கு சமமாகப் பெண்களும் வீட்டின் தலைமைப் பொறுப்பைக் கையாளும் நிலையுள்ளது. எனவே, அவர்கள் நிதியியல் ரீதியான சுதந்திரத்தைக் கொண்டிருப்பதுடன், நிதிசார் அடிப்படை அறிவைப் பெற்றிருப்பதையும் உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும்.
அத்துடன், பெரும்பாலான கிராமப்புறங்களிலும் சரி நகர்ப்புறங்களிலும் சரி, நாட்கூலியை நம்பியே வாழ்க்கையைக் கொண்டு நடத்தும் குடும்பங்கள் இருக்கின்றன. இத்தகைய குடும்பங்களில், ஒரு நாள் வருமானம் இல்லாதுபோகின்ற போது, அவர்களுக்கான உணவைக்கூட அவர்கள் குறித்த நாளில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே, நாளாந்த வருமானத்தை நம்பியுள்ள குடும்பங்களில்கூட, இந்த நிதியியல் ஒழுக்கத்தை (Financial Discipline) கொண்டுவருகின்ற வகையில், இலங்கை அரசாங்கமும் இலங்கை வங்கியும், பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். இது, நாட்டின் பொருளாதாரத்துக்கும் ஒருவகையில் உதவுவதாக அமைந்திருப்பதுடன், சிறு குடும்பங்களின் பொருளாதார நலனைப் பாதுகாப்பதாகவும் அமையும். 

2016ஆம் ஆண்டின் இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் பிரகாரம், இலங்கை மக்களின் சராசரிக் கடனின் உச்ச வரம்பு, 196.00 ரூபாயெனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது, தனித்து வடக்கு - கிழக்கு பகுதிகளாகப் பார்க்கின்ற போது, இன்னும் அதிகமாகவிருக்க வாய்ப்புள்ளது. போர் காரணமாக, பல்வேறு வகையில் நிதியியல் இழப்புகளைச் சந்தித்துள்ள நம்மவர்கள், நிதியியல் ரீதியான ஒழுக்கநிலையில் இன்னமும் பின்தங்கியவர்களாகவே இருக்கின்றார்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக, நுண்ணியல் நிதிக்கடனில் சிக்கியுள்ளவர்களின் நிலையே போதுமானது. எனவே, இந்த நிலையிலிருந்து மீண்டுவர, நமது இளம் சந்ததியினராவது கல்வியறிவு விகிதத்துடன், நிதியியல் சார் அறிவு விகிதத்தையும் அதிகரித்துக்கொள்வது  அவசியமாகிறது. 
 

http://www.tamilmirror.lk/வணிக-ஆய்வுகளும்-அறிமுகங்களும்/நிதியியல்-அறிவு-அவசியமா/145-245337

Link to comment
Share on other sites

2018ஆம் ஆண்டு ஆய்வுகளின்படி, இலங்கையின் நிதியியல்சார் அறிவு விகிதமானது, 35 சதவீதமாகவுள்ளது. 92 சதவீதமான கல்வியறிவைக் கொண்டிருக்கும் நாம், நிதியியல் சார் அறிவில் 35 சதவீதமாக இருப்பது நமது கல்வியறிவுக்கும் நடைமுறை வாழ்வியல்சார் விடயங்களுக்கும் இடையிலான இடைவெளியைத் தெள்ளத்தெளிவாகக் காட்டி நிற்கின்றது

இறுதியில், அதிக கல்வி அறிவை கொண்ட இலங்கையர்கள் நிதியியல் அறிவில் கூடியவர்களுக்கு உழைத்து வாழ்வார்கள்.

A student works for C student 🙂 

And, B student works for government 🙂 

Link to comment
Share on other sites

’பரீட்சை முறையில் மாற்றம் வேண்டும்’

இலங்கையிலுள்ள மாணவர்கள் 1200 மணித்தியாலங்களை மாத்திரமே கற்றல் செயற்பாடுகளுக்காக செலவிடுவதாக தெரிவிக்கும் கல்வி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும, முழுமையாக 5 நாள்கள் மாத்திரமே கல்விக்காக ஒதுக்கப்பகிறது என்றும் தெரிவித்தார்.

உலகின் மற்றைய நாடுகளுன் ஒப்பிடுகையில் இலங்கையிலுள்ள மாணவர்களே கல்விக்காக குறைந்தளவு நேரத்தைதை ஒதுக்குவதாக தெரிவித்துள்ள அவர், அவ்வாறிருக்கும்போது பரீட்டைகளால் மாத்திரம் அவர்களின் திறனை மதிப்பீடு செய்யும் முறையில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம் என்றார்.

பின்லாந்து போன்று கல்வியில் உயர் மட்டத்தில் இருக்கும் நாடுகள் செயற்பாடுகள் மூலமே மாணவர்களின் திறனை மதிப்பிடுவதாக தெரிவித்துள்ள அவர்,  அவ்வாறான மாற்றங்களை நோக்கி நகர வேண்டியது அவசியமெனவும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/பரடச-மறயல-மறறம-வணடம/175-245660

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. கேரள மாநிலத்தில் 3-ம் கட்டமாக வரும் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கு முன்னோட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை நடத்தப்பட்டு, தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காசர்கோடில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் மோக் போல் (Mock Poll) நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. இதையடுத்து எந்த சின்னத்திலும் ஒருமுறை வாக்களித்தால் இரண்டு வாக்குகள் பதிவாவதாகவும், அதில் மற்றொரு வாக்கு பா.ஜ.க-வுக்கும் பதிவாவதாக புகார் எழுந்தது. மோக் போலிங்கில் முதல் ரவுண்டில் இது போன்ற பிரச்னை எழுந்ததாகவும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா ஒரு ஒட்டு வீதம் செலுத்தியபோது, பா.ஜ.க வேட்பாளருக்கு கூடுதலாக ஒரு வாக்கு பதிவானதாகவும், முதல் மூன்று ரவுண்டுகளில் அப்படி நடந்ததாகவும், பின்னர் அது சரிசெய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் கூட்டணியில் காசர்கோடு பூத் ஏஜென்ட்டாச் செயல்படும் செர்க்களா நாசர் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.         மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாதிரிப் படம் அதே சமயம், முதலில் உள்ள வேட்பாளரின் சின்னம் ஒரு டம்மி ரசீதாக பதிவாகும் எனவும், அந்த ரசீது மற்ற ரசீதுகளைவிட அளவில் சிறியதாக இருக்கும் எனவும, அது எண்ணுவதற்கு தகுந்தது அல்ல என ரசீதிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஒருபுறம் இருக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ள விவி பேட் ரசீதுகளையும் எண்ண வேண்டும் என பிரசாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்த நிலையில், காசர்கோடில் மோக் போலிங்கில் ஏற்பட்ட குழறுபடி குறித்தும் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டுசென்றிருந்தார்.     தேர்தல் ஆணையம் அது குறித்து இன்று மதியத்துக்கு மேல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குழறுபடி செய்ய வாய்ப்பே இல்லை எனவும், காசர்கோடில் பா.ஜ.க-வுக்கு அதிக வாக்குகள் பதிவாவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தவறானது எனவும், ஒரு பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையிலே பிரசாந்த் பூஷன் அதை தெரிவித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. மேலும், காசர்கோடு கலெக்டர் மற்றும் ரிட்டனிங் ஆபீசர் ஆகியோர் இது குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எதிர்க்கட்சிகள் அடிக்கடி சந்தேகம் கிளப்பிவரும் நிலையில், மோக் போலிங்கில் எழுந்துள்ள குளறுபடி சர்ச்சையாகியுள்ளது. இ.வி.எம்-மில் பாஜக-வுக்கு அதிக வாக்குகள் பதிவாகின்றனவா? - சர்ச்சையும் தேர்தல் கமிஷன் விளக்கமும்! | Reports of EVMs showing ‘extra votes’ during mock poll in Kerala are false: ECI informs Supreme Court - Vikatan
    • தம்பி கணிதத்தில் வீக் என்று சொன்ன மாதிரி இருந்ததே?
    • எதையும் கணித ரீதியில் சொன்னால் இலகுவாய் புரியும்🤣
    • 52 வீதமான மக்கள் போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது. 74 வீதமான மக்கள் போரை வீரும்பவில்லை என்று உங்களுக்கும் கபிதானுக்கும் விளங்குகிறது.  🙂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.