Jump to content

காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களிற்கு புலனாய்வு அமைப்புகளிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் - அச்சுறுத்தல்கள்- சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு


Recommended Posts

இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தாபய தெரிவு செய்யப்பட்ட பின்னர் காணாமல்போகச்செய்யப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் மற்றும் அவர்களிற்கு ஆதரவாக செயற்படும்மனித உரிமை செயற்பாட்டாளர்களிற்கு எதிரான படையினரினதும் புலனாய்வு பிரிவினரினதும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச மனிதஉரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வடகிழக்கின ஆறு பகுதிகளில் காணாமல்போனவர்களினது குடும்பத்தவர்களின் சார்பில் செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அரசாங்கத்தின் கண்காணிப்பு நடவடிக்கையும் மிரட்டல்களும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சமீபத்தை சந்திப்பொன்றிற்கு முன்னதாக காணாமல்போனவர்களின் தாய்மார்க ள் ஒவ்வொருவரிற்கும் ஆகக்குறைந்தது ஆறு தொலைபேசி அழைப்புகளாவது பல புலனாய்வு அமைப்புகளிடமிருந்து வந்துள்ளன  என மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொலைபேசிகளில் தொடர்புகொண்டவர்கள் சந்திப்புகள் எங்கு இடம்பெறுகின்றன ,யார் ஏற்பாடு செய்துள்ளனர் போன்ற விபரங்களை கோரியுள்ளனர் எனஅவர் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்களுடனான சந்திப்புகளில் பேசப்பட்ட விடயங்கள் என்னவென கேள்விஎழுப்பியுள்ளனர் என குறிப்பிட்டுள்ள மற்றுமொரு செயற்பாட்டாளர் எங்களால்எந்த திட்டங்களையும் முன்னெடு;க்க முடியவில்லை நாங்கள் அனைத்தையும் நிறுத்திவிட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.


missing_people.jpg

காணாமல்போனவர்களின் உறவினர்கள் பல வருடங்களாக பதிலுக்காக காத்திருக்கின்றனர் என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின்  தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி ராஜபக்சாக்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்த பின்னர்  பாதுகாப்பு படையினர் காணாமல்போனவர்களின் உறவினர்களை அவர்களது கோரிக்கைகளை கைவிடுமாறு அச்சுறுத்துகின்றனர் என தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் இந்த துன்புறுத்தல்களை உடனடியாக நிறுத்தி காணாமல்போனவர்கள் குறித்து விசாரiணைகளை மேற்கொண்டு உறவினர்களிற்கு நீதி வழங்குவதாக ஐநாவிற்கு அளிக்கப்பட்ட உறுதிமொழியை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னர் சிஐடியினர் தனது வீட்டிற்கு தொடர்ச்சியாக வந்து செல்வதாக 2009 இல் தனதுமகனை பறிகொடுத்த தாய் ஒருவர் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்திற்கு தெரிவித்துள்ளார்.

அவர்கள் என்னிடம் வந்து யார் சந்திப்புகளிற்கு செல்கின்றனர் என கேட்கின்றனர், என தெரிவித்துள்ள அவர் யார் ஜெனீவாவிற்கு செல்கின்றனர் எனவும் இலங்கையின் குற்றப்புலனாய்வு பிரிவினர் கேள்வி எழுப்புவதாக தெரிவித்துள்ளார்.

இவர்கள் எங்கள் வீடுகளில் இருந்து வெள்ளை வானில் இழுத்துச்செல்லப்பட்டவர்கள் அல்லது இராணுவத்தினரிடம் சரணடைநதவர்கள் எ தெரிவித்துள்ள அவர் இவர்களை பற்றியே நான் கதைக்கின்றேன், எனது மகனிற்கு என்ன நடந்தது என்பதை நான் அறிய விரும்புகின்றேன்,அவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்பதை அறிய முயல்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனது மகன் உயிருடன் இல்லாவிட்டால் அவருக்கு என்ன நடந்தது?யார் அதனை செய்தார்கள், அவர் அடித்துக்கொல்லப்பட்டாரா அல்லது அடித்து முடமாக்கப்பட்டாரா என்பதையும் அறிய விரும்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் வெளிப்படையான சூழ்நிலை காரணமாக காணாமல்போனவர்களின் உறவினர்கள் வெளிப்படையாக பேசுவதற்கு முன்வந்தனர் என தெரிவித்துள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் இதனால் தற்போது படையினருக்கு தங்களை பற்றி யார் கதைக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் அச்சத்தில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இலங்கையை பொறுத்தவரை பலவந்தமாக காணாமல்செய்யப்படுதல் என்பது  நீண்ட கால வரலாற்றை கொண்டதாக காணப்படுகின்ற நிலையில் தற்போதைய அரசாங்கம் இந்த விவகாரத்தினை சாதாரணமாக அலட்சியம் செய்வதற்கு அனுமதிக்ககூடாது எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையை அதன் சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றுமாறும், பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாக்குமாறும் ஐக்கியநாடுகளிற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றுமாறும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகள் பெப்ரவரியில் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


missing_mothes.jpg


அரசாங்கம் இதனை நிறைவேற்ற தவறினால் சர்வதேச விசாரணைகளிற்கு வழிவகுக்ககூடிய நடவடிக்கைகளை மனித உரிமை பேரவை முன்னெடுக்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் காணாமல்போனவர்களின் உறவினர்களிற்கு தங்களின் குடும்பத்தவர்களிற்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கான உரிமையுள்ளது என குறிப்பிட்டுள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி உண்மை தெரியவரும் நீதி கிட்டும் என அவர்களிற்கு சிறிதளவு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை மாத்திரம் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/75830

Link to comment
Share on other sites

7 hours ago, ampanai said:

சமீபத்தை சந்திப்பொன்றிற்கு முன்னதாக காணாமல்போனவர்களின் தாய்மார்க ள் ஒவ்வொருவரிற்கும் ஆகக்குறைந்தது ஆறு தொலைபேசி அழைப்புகளாவது பல புலனாய்வு அமைப்புகளிடமிருந்து வந்துள்ளன  என மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மோசமான மிலேச்ச போர்க்குற்றவாளிகளின் கைகளில் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத நிறுவனம் சிக்கியுள்ளதற்கு சிறந்த ஆதாரம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.