Jump to content

எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யாத யாழ்.விமான நிலையம்


Recommended Posts

திடீர் வேகத்துடன் பணிகள் முடிக்கப்பட்டு, அவசர அவசரமாக திறக்கப்பட்ட யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த போதும், வெற்றிகரமானதாக செயற்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

கடந்த ஒக்டோபர் மாதம் திறந்து வைக்கப்பட்ட போதும், நவம்பர் 11ஆம் திகதியே யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான பயணிகள் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது.

எயார் இந்தியாவின் இணை நிறுவனமான எலையன்ஸ் எயார் நிறுவனம் வாரத்தில் மூன்று நாட்களுக்கு மாத்திரம் சேவைகளை நடத்துகிறது. 72 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ஏரிஆர் விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்ற போதும், இப்போது இந்த சேவையில் பயணிகளின் எண்ணிக்கை திருப்திகரமானதாக இல்லை என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

விமான நிலையம் திறக்கப்படுவதற்கு முன்னதாக, பலாலி விமான நிலையத்துக்கு இந்தியாவிலிருந்து சேவையை நடத்துவதற்கு இன்டிகோ, பிட்ஸ் எயார் உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியிடப்பட்டன.

கடந்த ஆண்டின் பின் அரையாண்டுப் பகுதியில் பலாலி விமான நிலையம் மற்றும் அதற்கான சேவைகளை நடத்துவதற்கு ஆர்வம் கொண்டுள்ள நிறுவனங்கள் குறித்து அடிக்கடி பரபரப்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன.

எலையன்ஸ் எயார் நிறுவனம் சேவையை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், பிட்ஸ் எயார் நிறுவனம் சென்னைக்கு வாடகை விமான சேவையை நடத்துவதற்கு பரீட்சார்த்த பயணம் ஒன்றை நடத்தியிருந்தது.

அதற்குப் பின்னர், அந்த நிறுவனமோ, இன்டிகோ நிறுவனமோ அல்லது வேறு எந்த நிறுவனங்களோ, விமான சேவைகளை ஆரம்பிக்க ஆர்வம் காட்டவில்லை.

பலாலி விமான நிலையம் திறக்கப்படுவதற்கு முன்னர், இந்தியாவிலிருந்து சேவைகளை ஆரம்பிக்க ஆர்வம் வெளியிட்ட நிறுவனங்கள், இப்போது ஒதுங்கிக் கொள்ளத் தொடங்கியிருக்கின்றன.

பலாலி விமான நிலையத்தின் ஊடாக எதிர்பார்க்கப்பட்டளவு பயணிகள் போக்குவரத்து இடம்பெறாமை அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். தற்போது 72 ஆசனங்களைக் கொண்ட விமானம் ஒன்று, வாரத்தில் மூன்று நாட்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகிறது .

இதில், சராசரியாக 50 இற்கு குறைவான பயணிகளே பயணம் செய்வதாக கூறப்படுகிறது.

சென்னை – பலாலி விமான சேவை தொடங்கப்பட்ட முதல் மாத நிறைவில், 857 பயணிகள், பலாலி விமான நிலையம் வழியாக பயணம் மேற்கொண்டிருந்தனர் என்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியிருந்தன.

முதல் மாத காலத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு 472 பேர் பயணித்தனர் என்றும், சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு 385 பேர் பயணம் மேற்கொண்டனர் என்றும் கூறப்பட்டது.

எனினும், அதற்குப் பின்னர் இந்த எண்ணிக்கையில் பெரிய அதிகரிப்பு ஏற்படவில்லை. பயணிகள் போக்குவரத்தில் எதிர்பார்க்கப்பட்டளவுக்கு வளர்ச்சி இல்லாதமைக்கு அரசாங்கத்தின் மீதும், சேவையை நடத்தும் நிறுவனம் மீதும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

எலையன்ஸ் எயார் நிறுவனம் சென்னை – பலாலி இடையிலான போக்குவரத்துக்கு அறவிடும் கட்டணம், கொழும்பு –- சென்னை இடையிலான பயணத்துக்கு ஏனைய நிறுவனங்கள் அறவிடும் கட்டணத்தை விட மிக அதிகமாக உள்ளது.

பலாலி -– சென்னை விமானக் கட்டணம் இந்தளவு அதிகரித்திருப்பதற்கு, விமான நிறுவனத்தின் கட்டணம் மாத்திரம் காரணமல்ல. இலங்கை அரசாங்கத்தின் வரிகள் மற்றும் கட்டணங்களுக்காக மாத்திரம், சுமார் 11,500 ரூபா அறவிடப்படுகிறது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவருக்கு அறவிடப்படும், வரிகள் மற்றும் கட்டணங்களை விடவும் அதிகமான தொகை, பலாலி விமான நிலையத்தின் ஊடாக பயணம் செய்யும் பயணிகளிடம் அறவிடப்படுகிறது .

இந்தளவு வரிகள் மற்றும் கட்டணங்களை அறவிடும் அரசாங்கம், பலாலி விமான நிலையத்தில் பயணிகளுக்கான முழு வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.

எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத பலாலி விமான நிலையத்திலிருந்து பயணம் செய்பவர்களிடம், பயணச்சீட்டுக் கட்டணத்தில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் வரிகளாகவும், கட்டணங்களாகவும் அரசாங்கத்தினால் அறவிடப்படுகிறது.

பலாலி விமான நிலையம் கடந்த அரசாங்கத்தின் பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் அவசரமாக திறக்கப்பட்டது. எந்த அடிப்படை வசதிகளும் செய்யாமல் திறக்கப்பட்டதாக அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த தற்போதைய ஆளும்கட்சியினர் குற்றம்சாட்டினர்.

அரசியல் நலன் கருதியாவது, அப்போதைய அரசாங்கம் பலாலி விமான நிலையத்தை திறந்திருந்தது. அந்த வாய்ப்பு நழுவ விடப்பட்டிருக்குமானால், பலாலி சர்வதேச விமான நிலையம் திறக்கப்படாமலேயே போயிருக்கலாம்.

ஏனென்றால், தற்போதைய அரசாங்கத்துக்கு பலாலி சர்வதேச விமான நிலையத்தின் மீது அக்கறையில்லை. அதனால், ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், பலாலி விமான நிலையம் அதனை சார்ந்த அபிவிருத்திகள் குறித்த செய்திகள் எல்லாமே அருகிப் போய் விட்டன.

மத்தள விமான நிலையத்தை மீண்டும் செயற்பட வைப்பதில் காட்டும் அக்கறையில் நூறில் ஒரு பங்கேனும் பலாலியின் மீது தற்போதைய அரசாங்கம் காண்பிக்கவில்லை..

இதற்கு அரசியல் காரணிகள் மாத்திரமன்றி, இன ரீதியான காரணிகளும், பொருளாதாரக் காரணிகளும் கூட இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

பலாலி விமான நிலையம் ஒழுங்காக செயற்படத் தொடங்கினால், வடக்கிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை பயன்படுத்துவோர் தொகை குறையும்.

அது, தென்பகுதியின் பொருளாதார வாய்ப்புகள், வளர்ச்சி என்பனவற்றை பாதிக்கும். எனவே, சிங்கள மேலாதிக்கச் சிந்தனை கொண்ட ஒரு அரசாங்கம், பலாலி போன்ற பிராந்திய விமான நிலையங்களின் வளர்ச்சியை அனுமதிக்க வாய்ப்பில்லை.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த சில வாரங்களுக்குப் பின்னர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பரபரப்பாக ஊடகங்களுக்கு ஒரு தகவலை வெளியிட்டார். பலாலி விமான சேவையை ஆரம்பித்த முன்னைய அரசாங்கம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அறவிடப்படும், கட்டணங்கள், வரிகளுக்கு இணையாகவே பலாலியிலும் அறவிடுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு அநியாயம் செய்திருக்கிறது. கூட்டமைப்பும் இதற்கு துணைபோயிருக்கிறது என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

பலாலி விமான நிலைய கட்டணங்கள், வரிகள் குறித்து மீளாய்வு செய்வது தொடர்பாக அமைச்சரவையில் பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார்.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து 3 மாதங்களாகி விட்ட போதும், எந்த மீளாய்வும் நடக்கவில்லை. வரிகளைக் குறைக்கவோ, விமானக் கட்டணத்தைக் குறைக்கவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் அதிகளவு கட்டணங்களை செலுத்தியே பயணங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.

தனி நபர்கள், நீண்ட பயணத்தை தவிர்க்க விரும்புபவர்கள், அவசர பயணங்களை மேற்கொள்பவர்கள் மாத்திரமே, இவ்வாறு அதிக கட்டணங்களை செலுத்த முன்வருவார்கள். வடக்கிலிருந்து குடும்பங்களாக, குழுக்களாக இந்தியா செல்பவர்களே அதிகம்.

அவர்களுக்கு ஏற்றதாக, அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யக் கூடியதாக, பலாலி விமான நிலையம் ஊடான சேவைகள் அமையவில்லை.

இந்தியாவுக்கு சென்று திரும்புகிறவர்கள் அங்கிருந்து பொருட்களை கொண்டு வரவே விரும்புவார்கள். தற்போது சேவையை நடத்தும் எலையன்ஸ் எயார் நிறுவனம், 15 கிலோ பொதிகளை மாத்திரமே அனுமதிக்கிறது.

கொழும்பு – சென்னை இடையே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில், பயணம் செய்பவர்கள், 30 கிலோ பொதிகளை கொண்டு வர முடியும். அதில் பாதியைத் தான் பலாலி வழியாக கொண்டு வர முடிகிறது. மேலதிக ஒவ்வொரு கிலோவுக்கும் 20 டொலர்கள் வரை செலுத்த வேண்டியிருக்கும்.

அதிகளவு பொதிகளைக் கொண்டு வர முடியாமல் இருப்பது, வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்க முடியாமல் இருப்பதற்கு முக்கியமான காரணியாக உள்ளது.

கனடா, அவுஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளிலிருந்து சென்னை வழியாக பலாலிக்கு பயணங்களை மேற்கொள்ளக் கூடிய வசதிகள் உள்ளன. அவ்வாறு வருபவர்கள் அதிகளவு பொதிகளை கொண்டு வர விரும்புவார்கள். அதற்கு ஏற்றதாக எலையன்ஸ் எயர் நிறுவனத்தின் கட்டணங்கள் அமைந்திருக்கவில்லை.

இதனால் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை அதிகளவில் ஈர்க்க முடியாத நிலையில் பலாலி விமான நிலையம் இருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் ஒரு சர்வதேச விமான நிலையம் இருக்கிறது என்ற பெயர் தான் உள்ளதே தவிர, அதனை அபிவிருத்தி செய்து இன்னமும் வருமானமும் போக்குவரத்தும் அதிகம் கொண்டதாக மாற்றுவதற்கு எந்த ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலை நீடிக்கும் வரை பலாலி விமான நிலையம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியாது.

கார்வண்ணன்

https://www.virakesari.lk/article/75835

Link to comment
Share on other sites

கார்வண்ணனுக்கு நன்றிகள். உண்மைகளை தெளிவாக கூறி உள்ளீர்கள்.

1. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவருக்கு அறவிடப்படும், வரிகள் மற்றும் கட்டணங்களை விடவும் அதிகமான தொகை, பலாலி விமான நிலையத்தின் ஊடாக பயணம் செய்யும் பயணிகளிடம் அறவிடப்படுகிறது

2. பலாலி விமான நிலையம் ஒழுங்காக செயற்படத் தொடங்கினால், வடக்கிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை பயன்படுத்துவோர் தொகை குறையும்.

 

..... இந்த நிலை நீடிக்கும் வரை பலாலி விமான நிலையம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார ரீதியில் இலாபமீட்ட முடியாத எந்தவொரு வியாபார முயற்சியும் வெற்றியடைய முடியாது. 

வியாபாரத்தின் அரிச்சுவடியே இதுதான்.

அடிப்படை வசதிகளோ நீண்டகால திட்டங்களோ ஏதுமின்றி  அவசர அவசரமாக  விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டு இன்னும் ஒருவருடமும் பூர்த்தியாகாத நிலையில், இலாப நட்டக் கணக்கு பார்ப்பது விதையைப் போட்டதும் கள்ளு குடிக்க பிழாவோடு நிற்பதற்குச் சமன்.😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.